Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9/11 நினைவு தினத்தன்று, சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

650x366

9/11 நினைவு தினத்தன்று சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது!

ஜெட்டா: புனித மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பது அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் ஆகும்.

சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனம்தான் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் விஸ்தரிப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. அங்கு ஒரே சமயத்தில் 20 லட்சம் பேரை அனுமதிக்கும் அளவுக்கு இடவசதி விஸ்தரிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம்தான் சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் கிரேன்தான் நேற்று முன்தினம் திடீரென சம்பந்தமே இல்லாமல் கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தி 107 உயிர்களைப் பலி கொண்டது.

நன்றி தற்ஸ் தமிழ். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிறுவனத்தின் கிரேன்தான் நேற்று முன்தினம் திடீரென சம்பந்தமே இல்லாமல் கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தி 107 உயிர்களைப் பலி கொண்டது.

பலத்த மணல்காற்றும் மழையும் பெய்தமையால் விழுந்தது என பிரபல ஊடகங்கள் சொல்லுகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகளின் வேலையாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகளின் வேலையாயிருக்கும்.

ஆள் பத்திரமா இருக்கெண்டு ஒரு கதை உலாவுது....!

நீங்களென்டால் ஆவி....எண்டு...!tw_grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலத்த மணல்காற்றும் மழையும் பெய்தமையால் விழுந்தது என பிரபல ஊடகங்கள் சொல்லுகின்றன..

மெக்காவில் நடந்த விபத்து கடவுளின் செயல்.. சொல்கிறார் சவுதி என்ஜீனியர்.
மெக்கா: மெக்காவில் நடந்த கிரேன் விபத்து மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகும். இது கடவுளின் செயல் என சவுதி அரேபியாவைச் சேர்ந்த என்ஜீனியர் ஒருவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மெக்காவில் உள்ள புனித மசூதி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் திடீரென உடைந்து விழுந்ததில் 2 இந்தியர்கள் உள்பட 107 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதற்கு பலத்த காற்றுதான் காரணம் என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இது கடவுளின் செயல் என்றும், மனி சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்றும் ஒரு என்ஜீனியர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரேன் விழவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் சவுதி பின்லாடின் குழுமத்தைச் சேர்ந்த அந்த என்ஜீனியர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், நிச்சயம் இது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது அல்ல. தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இல்லை. கிரேன் நல்ல நிலையில்தான் இருந்தது. 

நடந்திருப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இது கடவுளின் செயல். எனக்குத் தெரிந்தவரை மனிதத் தவறு எதுவும் நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். 
மேலும் அவர் கூறுகையில், யாருக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் கிரேனை நிறுத்தியிருந்தோம். லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்வதால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதையும் மீறி விபத்து நடந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார். 

பெரிய மசூதி வளாகத்தில் ஒரே சமயத்தில் 20 லட்சம் பேரை அனுமதிக்கக் கூடிய வகையில் அந்த இடத்தில் விஸ்தரிப்புப் பணிகள் நடந்து வரும் சமயத்தில்தான் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. இந்த சம்பவத்திற்குக் காரணம் மனிதத் தவறு அல்ல, மாறாக கடவுளின் செயல் இது என்று என்ஜீனியர் ஒருவர் கூறியிருப்பது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை.. இரட்டைக் கோபுரத்தில் மோதினதும் கடவுள் செயல் என்று சொல்லாமல் விட்டாரே.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை.. இரட்டைக் கோபுரத்தில் மோதினதும் கடவுள் செயல் என்று சொல்லாமல் விட்டாரே.. tw_blush:

 

இரட்டைக்கோபுரத்தை தாக்கும் போதும் இறுதி கணங்களில்

இன்சா அல்லா என்று தானே சொல்லியிருப்பார்கள்...

அப்போ அவன் செயல் தானே..... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.