Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளை ஒன்றிணைக்கும் நவராத்திரி!

Featured Replies

உறவுகளை ஒன்றிணைக்கும் நவராத்திரி!

 

maithili.jpgதீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப்போலவே நவராத்திரி விழாவையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அதாவது, அக்டோபர் மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து,  விஜயதசமி வரை ஒன்பது நாட்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் பலதரப்பட்ட 'தீம்'களில் கொலுவைத்து கொண்டாட்டம் நடக்கிறது. வட மாநிலங்களில் துர்கா பூஜை என்கிற பெயரிலும், தென் மாநிலங்களில் நவராத்திரி என்கிற பெயரிலும் இந்த கொலுவானது வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை, நங்கநல்லூரில் இருக்கும் நித்யானந்த் - மைதிலி தம்பதியரின் வீட்டில் மூன்று தலைமுறையாக நவராத்திரிக்கு தொடந்து கொலு வைத்து கொண்டாடி வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

''நவராத்திரியைப் பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வரை கொலு வைத்து பூஜை செய்து வருவோம். பத்தாவது நாள் பூஜை செய்து கொலுப் பொம்மைகளை எடுத்து விடுவோம். அதாவது ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் சிறப்பு உண்டு. முதல் மூன்று நாட்கள் சக்திக்கும், இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உகந்த நாளாகக் கருதி அந்த நாட்களில் அவர்களுக்கு பூஜைகளை செய்வோம். எப்பொழுதும் கொலு வைக்கும்போதும், 1, 3, 7, 9 என ஒற்றைப்படையாகத் தான் வைக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் ஒரு மரப்பாச்சி பொம்மை வைத்து அதற்கு முன்பு கலசம் வைப்போம். அந்த கலசத்தில் அரிசி, வெற்றிலை, பாக்கு என பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து வழிபடுவோம்.

maithili01.jpg

மேற்சொன்னப்படி, ஒற்றைப்படையில் படிகளை அமைத்து முதல் படியில் அதாவது மேல் வரிசையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். முதல்படியில் ஒவ்வொருவரும் விஷ்ணு, சிவன், பெருமாள், லட்சுமி, முருகன், விநாயகர் என விருப்பக்கடவுள் பொம்மைகளை தேர்வு செய்து வைக்கலாம். முதல் இரண்டு அல்லது மூன்று படிகளில் இப்படி கடவுள் பொம்மைகளை வைத்துவிட்டு, அடுத்தடுத்தப் படிகளில், மனிதன், விலங்கு, காடு, செடி, கொடிகள், எனவும், நீங்கள் உருவாக்கும் 'தீம்'மையும் வைக்கலாம். ஒரு வீட்டில் எத்தனை கொலு 'தீம்'களையும் அமைக்கலாம். இந்த கொலு பொம்மைகளுக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளும் பூஜைகள் செய்ய வேண்டும். மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த கொலுவுக்கான படிகளை அமைப்பதற்கு முன்பு அந்த படிகளில் வெள்ளைத்துணியை பயன்படுத்தலாம். பத்தாவது நாளில் பூஜையை முடித்த பின்பு, அனைத்து கொலுவுக்கும் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் 'மரப்பாச்சி' பொம்மையை படுக்கவைத்து (பொம்மையின் தலை மேற்குத்திசையிலும், கால்கள் கிழக்குத்திசையிலும் இருக்கவேண்டும்) கொலு பொம்மைகளை எடுத்துவிடலாம்.

maithili02.jpg

மேலே குறிப்பிட்டுள்ளபடி கடவுள் பொம்மைகளை முதல்படியில் வைத்து, அதற்குப்பிறகு மனிதன் மற்றும் மற்ற உருவங்களை வைக்கவும் காரணம் உண்டு. இப்பிறவியில் எல்லா நன்மைகளையும் செய்து மேலே இருக்கும் இறைவனின் அடியைச் சென்று சேர வேண்டும் என்பதே...! - கொலு வைத்த பின்பு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைக்க வேண்டும். வருபவர்களை வெறும் கையோடு அனுப்பாமல், வெற்றிலைப்பாக்கு மற்றும் நீங்கள் கொடுக்க நினைக்கும் பொருட்களையும் அவர்கள் கையில் கொடுத்து அனுப்பலாம். அதேபோல, உங்கள் வீட்டு கொலுவை பார்க்க வருபவர்களுக்கு நீங்கள் அமைத்திருக்கும் 'தீம்' பற்றி விளக்கி, வந்திருப்பவர்களில் ஆட, பாடத் தெரிந்தவர்களுக்கு அதை செய்ய சொல்லலாம். இதன்மூலம் அவர்களின் திறமை வெளிப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கொலு அமைப்பதற்கு வித்தியாசமான ஐடியாக்கள் கிடைக்கிறது. உங்கள் மனம் அதை மட்டுமே நினைத்து சாந்தம் அடைகிறது. கொலுவின் மூலம் உங்கள் பாரம்பரியத்தை சொல்கிறீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அதில் ஈடுபட வைக்கிறீர்கள். எனவே, அவர்களும் அதிகமாக கற்றுக்கொள்கிறார்கள், தெரிந்துகொள்கிறார்கள். எங்கள் வீட்டுக் கொலுவை பார்க்க வருபவர்களுக்கு கையில் காய்கறி விதைகளை கொடுத்து அனுப்புவோம்.

maithili03.jpg

இந்த வருடம் மூன்று அறைகளில் கொலு வைத்திருக்கிறோம்.

அறை 1: படிகட்டுகளில் கடவுள் பொம்மைகள் மற்றும் அஷ்டலட்சுமி பொம்மைகள் வைத்து அமைத்திருக்கிறோம்.

அறை 2: உலகின் ஒவ்வொரு இடங்களையும் அடைவதற்கு நதியே மூலமாக இருக்கிறது என்பதை வைத்து நயகரா ஃபால்ஸ் - நயகரா ரிவல், புளூக்ளின் பிரிட்ஜ் - ஹட்சன் ரிவர், டவர் பிரிட்ஜ் - தேம்ஸ் ரிவர், ஈஃபில் டவர் - செயின் ரிவர், ஈஜிப்த் - நைல் ரிவர், தாஜ்மஹால்- யமுனா ரிவர், மலேசியா முருகன் கோயில் - பெட்ரோனாஸ் டவர் - கெலாங் ரிவர், ஜப்பான் - சுமிதா ரிவர், கடைசியாக அண்டார்ட்டிகா - ஓனிக்ஸ் ரிவர்,  இதுக்கு நடுவுல இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டையும் அமைத்திருக்கிறோம்

அறை 3: அன்றைய பாண்டிய நாடு மற்றும் இன்றைய பாண்டிய நாடு எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் விதமாக ஒரு கொலு 'தீம்'மையும் அமைத்திருக்கிறோம்.

maithili04.jpg

எங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமி சிலையை இரண்டணாவோ, மூன்றணாவோ கொடுத்து வாங்கியதாக எங்கள் வீட்டில் சொல்வார்கள். அதேபோல, தசாவதாரப் பொம்மை 50 ரூபாய்க்கு வாங்கியது, இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு விற்கிறது.

மூன்று அறைகளிலும் சேர்த்து சுமார் 1,000 கொலு பொம்மைகள் இருக்கும். எப்போ வைத்தாலும் கண்டிப்பாக ஹாலில் ஒரு கொலுவை அமைக்க வேண்டும். நாங்க அமைக்கிற கொலுவுக்கு என் 9 வயது மகன் பிரணவ் ரொம்ப ஆர்வம் எடுத்துப்பான். என்னதான் வேலைப்பளு இருந்தாலும் என் மனைவி மைதிலி
இதுக்கென தனியே  நேரத்தை ஒதுக்கிவிடுவார்.  நவராத்திரி கடவுளுக்காக மட்டும் என்று நினைக்காமல் நம் உறவுகளை ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது என்பதே உண்மை.

http://www.vikatan.com/news/article.php?aid=53890

  • கருத்துக்கள உறவுகள்

கொலு அழகாய் இருக்கின்றது...!

  • கருத்துக்கள உறவுகள்

குமர குருபர சுவாமிகள் இயற்றிய...வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளையுள்ளத்... தன்டாமரைக்குத் தகாது கொலோ..சகமேழுமழித்து ... உண்டானுறங்க ஒழித்தான் வித்தாக்க உண்டாகும் வண்ணம்.. கண்டாஞ் சுவை கொள் கரும்பே சகலவலா வல்லியே..!

ஏறத்தாழ இருபது வருஷங்களுக்குப் பிறகு.. பாடலை நினைத்துப் பார்த்தேன்..!

அப்படியே இன்னும் நினைவில் உள்ளதே...!

அது மட்டுமல்ல அந்த அவலும்... சுண்டலும் கூடத் தான்!:rolleyes:

 

 

குமர குருபர சுவாமிகள் இயற்றிய...வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளையுள்ளத்... தன்டாமரைக்குத் தகாது கொலோ..சகமேழுமழித்து ... உண்டானுறங்க ஒழித்தான் வித்தாக்க உண்டாகும் வண்ணம்.. கண்டாஞ் சுவை கொள் கரும்பே சகலவலா வல்லியே..!

ஏறத்தாழ இருபது வருஷங்களுக்குப் பிறகு.. பாடலை நினைத்துப் பார்த்தேன்..!

அப்படியே இன்னும் நினைவில் உள்ளதே...!

அது மட்டுமல்ல அந்த அவலும்... சுண்டலும் கூடத் தான்!:rolleyes:

 

 

எனக்கும்தான் ஞாபகம் வருது. ஆனாலும் கொலு என்ற பேரில டோணியையும் கோலியையும் வைப்பதுதான் புரியவே மாட்டேங்குதே.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான் ஞாபகம் வருது. ஆனாலும் கொலு என்ற பேரில டோணியையும் கோலியையும் வைப்பதுதான் புரியவே மாட்டேங்குதே.

திராவிடனை அழித்தவனையே.. தெய்வமென்று கும்பிடப் பண்ணிப் போட்டாங்கள்! (இராமனைச் சொல்கிறேன்..! )

அவருக்குத் துணை போனவருக்கு..இணுவையில் பெரிய சிலை...!

நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட தமிழனை நினைத்து விட்டால்....!

அஞ்சியஞ்சிச் சாவார்... இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.