Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எங்களுடன் சேர்ந்ததாக கருணா கூறுகிறார் சேர்ந்து விட்டதாக நாம் கூறவில்லை'

Featured Replies


 
 
'எங்களுடன் சேர்ந்ததாக கருணா கூறுகிறார் சேர்ந்து விட்டதாக நாம் கூறவில்லை'
 
 

article_1445856843-sdf.jpgஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறியிருக்கின்றாரேயொழிய, சேர்ந்து விட்டதாகவோ சேர்ந்து செயல்படுகின்றோம் என்றோ கூறவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஊடகங்களுக்கு இன்று (26) அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது.

அவர் தன்னுடைய விருப்பத்தை மாத்திரம்தான் தெரிவித்துள்ளார். அவர் எங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பும், நம்பிக்கையுமாகும். அதனை நான் வரவேற்கின்றேன்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை படிப்படியாகக் குன்றி வருகின்றது. அவர்களின் ஆதரவாளர்களே ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டுமென விரும்புகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதென்று இதுவரை காலமும் கூறிவந்த இரா. சம்பந்தன், திடீரென நிலைமையை மாற்றி அதனை தாங்களே உருவாக்கியதாகவும், விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனவும் கூறியுள்ளார்.

சம்பந்தனின் இந்த மனமாற்றம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது. ஆனால், அதைவைத்து மக்களை ஏமாற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியை முற்றாக அழிக்க முற்பட்டதையும் விரைவில் ஒத்துக்கொள்வார் என நம்புகின்றேன்.

இன்றைய காலத்தின் தேவை மக்கள் விருப்பப்படி ஒரு புதிய அணியை உருவாக்கி அவர்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் அநேகரின் விருப்பப்படி ஒரு புது அணியை பல்வேறு கட்சிகளுடன் கலந்தாலோசித்து உருவாக்க உத்தேசித்துள்ளேன்.

 பல்வேறு கட்சிகளுடன் இதுசம்பந்தமாக பேசியும் உள்ளேன். அதனடிப்படையில் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.  அதேபோன்று வேறு பலரும் புதிய அணியொன்று உருவாகினால் அதில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதான் உண்மை. ஆனால் இதுசம்பந்தமாக வெளியாகிய பல்வேறு கருத்துக்கள் அத்தனையும் உண்மைக்கு புறம்பானவையாகும்.  தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது மக்களுக்கு அறியத்தருவோம்; என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

- See more at: http://www.tamilmirror.lk/157526/-எங-கள-டன-ச-ர-ந-தத-க-கர-ண-க-ற-க-ற-ர-ச-ர-ந-த-வ-ட-டத-க-ந-ம-க-றவ-ல-ல-#sthash.IIqvyiEJ.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

article_1445856843-sdf.jpg

அவர் தன்னுடைய விருப்பத்தை மாத்திரம்தான் தெரிவித்துள்ளார். அவர் எங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பும், நம்பிக்கையுமாகும். அதனை நான் வரவேற்கின்றேன்.

"இனம் இனத்தோடு சேரும்" 

 

 

Edited by நியானி
இழிவு செய்யும் வகையில் இணைத்த படம் நீக்கப்பட்டுள்ளது.

சங்கரியின் லொள்ளு தாங்கமுடியல, உருப்படியா மாகாணசபை தேர்தலில் வெல்லமுடியல.......அதுக்கவேற புதியகட்சியாம்.

இது ஒரு இயற்கையான கூட்டுத்தானே அதுக்கேன் சங்கரியார் சுளிச்சிகிறார்? 

எது எப்பிடியோ இவர்கள் இருவரையும் வேறு எவரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் டங்கிலஸ் விலகலாக.

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையாகுமா கர்ணல் கருணாவின் நிலை.

 

புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கர்ணல் கருணா என்கின்ற முரளிதரன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியினால் சன்மானமாக வழங்கப்பட்ட உபதலைவர் பதவியைத் தமிழ் மக்களின் நலனுக்காக துறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பான தனது அறிவிப்பில் „ தமிழ் மக்களின் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளப்போவதாகவும், இனிமேல் சிங்களக் கட்சிகளுடன் இணைந்திருக்கப்போவதில்லை' என்றும் அறிவித்துள்ளார். 

கர்ணல் கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தான் வகிக்கும் பதவிகளுக்கு இராஜனாமா கடிதத்தைத்தையும் வழங்கியுள்ளார். இராஜனாமா தொடர்பில் அததெரணவிற்கு கருத்துரைத்த முன்னாள் கர்ணல் „சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எனக்கும் எந்த பிணக்கும் கிடையாது. என்னுடைய சொந்த அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார். 

எது எவ்வாறாயினும் முன்னாள் கர்ணல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையவிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கர்ணலை இணைத்துக்கொள்வது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கருணாவை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக்கொள்வதாக ஆனந்தசங்கரி ஒப்புதல் வழங்கியுள்ளபோதும் கட்சியின் புலம்பெயர் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளுர் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கரியின் முடிவினை எதிர்த்து வருவததாக அறியக்கிடைக்கின்றது. 

இந்நிலைமை முன்னாள் கர்ணலை அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு இட்டுச்செல்லுமா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது சங்கரியின் தனிச்சொத்தாக மாறியுள்ள நிலையில் கர்ணல் கைவிடப்படமாட்டார் என்றே நம்பப்படுகின்றது. 

 

 

www.ilankainet.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.