-
Tell a friend
-
Topics
-
Posts
-
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி இறுதியில் நுழைந்தது தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை நொக் - அவட் செய்து ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தகுதிபெற்றது. கடந்த வருடம் மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவின் வெற்றியில் அயாபொங்கா காக்காவின் துல்லிய பந்துவீச்சு, ஆன்எக் பொஷ் குவித்த அரைச் சதம், லோரா வுல்வார்டின் சிறந்த துடுப்பாட்டம் என்பன முக்கிய பங்காற்றின. தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தஸ்மின் ப்றிட்ஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.) ஆனால், லோரா வுல்வார்ட் ஆன்எக் பொஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 65 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். லோரா வுல்வார்ட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (121 - 2 விக்.) வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 14 ஓட்டங்களை ஆன்எக் பொஷ், க்ளோ ட்ரையொன் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். இப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஆன்எக் பொஷ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ளோ ட்ரையொன் ஆட்டம் இழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. க்றேஸ் ஹெரிஸ் (3), ஜோர்ஜியா வெயாஹாம் (5) ஆகிய இருவரினது விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது. பெத் மூனியும் பதில் அணித் தலைவி தஹிலா மெக்ராவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். தஹிலா மெக்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார். 16.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னரே அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. எலிஸ் பெரி 23 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். ஃபோப் லிச்ஃபீல்ட் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அயாபொங்கா காக்கா 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நொன்குலுலென்கோ 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஆன்எக் பொஷ் https://www.virakesari.lk/article/196539
-
அது தங்களுக்கு வாக்குப் போட்ட இடங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவினம் அண்ணை! வன்னியில் எவ்வளவோ வீட்டுத் திட்ட வீடுகளில் மக்கள் இல்லை. ஆனாலும் பலர் குடிசைகளில் வாழ்கிறார்கள்! ஏனெனில் பொருத்தமான திட்டங்கள் இல்லை. மக்கள் வாழக் கூடிய பகுதிகளில்/ வேலை வாய்ப்பு உள்ள இடங்களில் வீட்டுத்திட்டம் அமைவதில்லை. அரசு ஒரே இடத்தில் 50 வீடுகளைக் கட்டி வழங்கி மாதிரிக் கிராமம் என பெயர் சூட்டும்! ஆனால் பாதி வீடுகளில் மக்கள் வசிப்பதில்லை. மல்லாவி ஐயங்கன்குளம் என நினைக்கிறேன் சந்தைக்கென கட்டிய கட்டிடத்தில் மாடுகள் படுத்துறங்குகின்றன!
-
ஆறு மாதங்களுக்கு முன்னர் bbc யில் இந்த புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை வந்ததும் இதை வாங்கிப் படித்தேன். தமிழில் இப்போது வந்திருகின்றது என்று அறிகின்றேன். நல்ல புத்தகம்.
-
நன்றி அண்மையில் நான் ஒரு கட்டுரை ஒன்றை வாசித்தேன். Noyal நடேசன் எழுதியது. உங்கள் கேள்விக்கு அது பதிலாக அமையலாம். // சிங்கள மக்கள் விடயத்தில் உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது 2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை . அதேபோல் அவர்கள் தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது. அதையும் பொய் எனச் சொல்லமுடியாது. தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள். அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே. பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் . தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில் பணயக் கைதிகளாக முடியும். இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது. கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன. 75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட இலங்கையில் சமாதானம், இனங்களின் பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான் உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். தமிழர்களுக்கு, அரசியல்வாதிகளின் மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது. ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது. மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான் தொடரும் . இலங்கை மீதோ அல்லது சிங்கள மக்கள் மீதோ உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால், இலங்கையை ஒரு ஏமன் அல்லது சோமாலியாவாக்க முடியும்.//
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.