Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்? - சி. சிவமோகன் கேள்வி

Featured Replies

தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்? - சி. சிவமோகன் கேள்வி

[ Saturday,31 October 2015, 10:11:16 ] video1.png  
sivamohan.jpg

எந்த தவறும் செய்யாத தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று சனிக்கிழமை வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நான் வன்னி மண்ணில் வாழ்ந்தவன். எமது பிரதேசத்தில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அரசபடைகள் அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கி வந்தது. இதற்கு உறுதுணையாக அரச அதிகாரிகளும் அரச இயந்திரமும் துணை நின்றது. இது வெளிப்படையான விடயம்.

ரிசாட் பதியுதீன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தடங்கலாக உள்ளதாக கூறுகின்றார். இதில் உண்மையில்லை.

விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் முஸ்லீம் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு துணை நின்றதில்லை. இன்று அவர்களின் காணிகளை பாதுகாத்து அவர்கள் மீள்குடியேறுவதற்கு விடுதலைப்புலிகள் உதவியிருந்தார்கள் என்பதே உண்மை.

துரதிஸ்டவசமான ஒரு சூழலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட அனுமதிக்கமுடியாத நிலையிலேயே முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்படவேண்டி இருந்தது.

இருப்பினும் முஸ்லிம் மக்களின் காணிகளை தமிழ் மக்கள் அபகரிக்க என்றும் விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. 

விடுதலைப்புலிகள் தூரநோக்கில் செயற்பட்டதால் தான் இன்று எவ்வித தங்கு தடையும் இன்றி முஸ்லிம் மக்கள் தமது காணிகளில் முல்லைமாவட்டத்தில் குடியேறி வண்ணாங்குளம் என்ற இடத்தில் ஒற்றுமையாக வாழ்கின்றனர். 

அந்தவகையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் இடமளிக்கப்போவதில்லை.

முஸ்லிம் மக்களை இனசுத்திகரிப்பு செய்யும் நோக்கில் விடுதலைப்புலிகள் நோக்காக இருக்கவில்லை. அவர்கள் விடுதலைப்போரில் தமது உயிரை தியாகம் செய்தார்கள். சுகபோகத்திற்காக இருந்தவர்கள் அல்ல. அதனால் தான் அவர்கள் இவ் விடயத்தில் நீண்ட நோக்குடன் செயற்பட்டார்கள்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இந்த மானிலத்தில் இடம்பெற்றதே இல்லை. விடுதலைப்போராட்டத்தின் இருப்புக்காக ஒரு சில நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் எடுத்திருந்தது உண்மை.

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால போராட்டத்தில் முஸ்லீம் இளைஞர்களும் முக்கிய பங்கு வகித்தனர். வடகிழக்கு மாகாணம் முஸ்லீம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் மொழி பேசும் மாகாணமாக இந்தமாகாணம் விளங்க வேண்டும். 

ஆனால் இங்கு பிரிவினையை ஏற்படுத்த ஒரு சில தமிழ் முஸ்லீம் இனவாதிகளால் செயற்படுகின்றார்கள். அதற்கு நாம் ஒரு போதும் துணைபோகப்போவதில்லை.

 

அத்துடன் நாம் ஒவ்வொருவரும் முஸ்லீம் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித தவறும் நடக்காத மண்ணில் நாம் வாழ்ந்தோம். இந்த மண்ணில் வாழ்ந்தவர்களுக்கு தான் இங்கு நடந்தவைகள் தெரியும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் முஸ்லீம்களுக்கு எந்த தவறையும் செய்யவில்லை என அவர் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

 

http://ibctamil.com/news/index/12364

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பேச்சு
யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது.
எமது விடுதலை போராளிகளை அவமதிக்க யாரையும் அனுமதிக்க முடியாது.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால்  1990ஆம் ஆண்டு செப்ரெம்பரில் வெளியேற்றப்பட்டனர். திடீர் அறிவிப்போடு முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது அவர்கள் பட்ட வேதனை கொஞ்சமல்ல.
தங்களின் தேட்டம் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையோடு வெளியேறுவதென்பது எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

இவ்வாறு முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழ் மக்கள் அழுதனர். இருந்தும் காடேகும் இராமபிரானை தடுத்து நிறுத்த முடியாத அயோத்தி மக்கள் போலவே அன்று  நாமும் இருந்தோம். இது எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்கு தெரியும்.
அதேநேரம் முடிந்தளவு முஸ்லிம்களின் சொத்துக்களைப் பாதுகாத்து அவர்களிடம் மீளவும் ஒப்படைத்த தமிழர்கள் இந்த மண்ணில் இருக்கின்றனர் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூருவர்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களை பாதுகாத்தால் அதற்கான தண்டனை என்ன? என்பதை தெரிந்திருந்தும் தமிழ் மக்கள் முஸ்லிம் சகோதரர்களின் சொத்துக்களை பாதுகாத்தனர் என்றால் அதற்குள் இருக்கக்கூடிய தியாகம் கொஞ்சமல்ல.   

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளி யேற்றப்பட்ட போது அதனை உடனடியாகக் கண்டித்தவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். அவரின் கண்டனம் தினகரன் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
எனினும் அந்தக் கண்டனம் தொடர்பில் பேராசிரியர் சிவத்தம்பிக்கு அழுத்தம் ஏற்பட, அப்படி ஒரு கண்டனத்தை தான் வெளியிடவில்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி மறுப்புத் தெரிவிக்க அந்த மறுப்பும் தினகரனில் வெளிவந்தது.

ஆக, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, அதனைத் தடுத்து நிறுத்தும் திராணி தமிழர் எவரிடமும் இருக்கவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.  
விடுதலைப் போராட்டம் மிக உச்சமாக நடந்து கொண்டிருந்த நேரம். 1990 ஓகஸ்ட் மாதத்தில் தீவகத்தை இராணுவம் முழுமையாக கைப்பற்றியிருந்தது. 
கோட்டையில் அடைபட்ட இராணுவத்தை மீட்டெடுத்த இராணுவம் தீவகத்தில் அப்பாவிப் பொது மக்க ளைக் கொன்று தள்ளியது. இதனிடையே புலிகளின் முகாம்கள் மற்றும் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது விமானக்குண்டு வீச்சுக்களும் செல் தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. 
மிகப் பயங்கரமான நிலைமையில் யாழ்.குடா நாடு தத்தளித்த போது, சாவகச்சேரியில் உள்ள முஸ்லிம் ஒருவர் படையினருக்குத் தகவல் கொடுத்ததாகவும் அதனாலேயே இலக்குத் தவறாமல் தாக்குதல் இடம்பெறுவதாகவும் புலிகள் கூறினர்.

முஸ்லிம்கள் ஒரு சிலரிடம் படையினர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளதாகவும் புலிகளின் குற்றச்சாட்டு நீள்கிறது. 
இந்நிலையில் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத் தில் இருந்து வெளியேற்றுவது என்று விடுதலைப் புலி கள் தீர்மானிக்கின்றனர். இந்தத் தீர்மானத்தில் சாமானிய தமிழ் மக்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது. 
முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் கண்டு தமிழ் மக்கள் அழுதனர். இது இறைவன் அறிந்த உண்மை. இப்போது சொல்லுங்கள் முஸ்லிம்களை வெளியேற் றுவது தவறு என்று எந்தத் தமிழ் மகனாவது விடுத லைப் புலிகளிடம் கூற முடியுமா? அல்லது கூறியிருந்தால் கூறியவர் உயிரோடு இருந்திருக்கத்தான் முடியுமா?
சூழ்நிலை இதுவாக இருக்க, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் 25 ஆவது ஆண்டு நினைவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் அரசியல்வாதி ஒருவர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்காக தமிழ் மக்கள் தலை குனிய வேண்டும் என்று கூறியதுடன் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வெளியேற்றத்தைத் தடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அன்புக்குரிய முஸ்லிம் சகோதரர்களே! 1995ஆம் ஆண்டில் புலிகளின் உத்தரவால் நாங்களும் யாழ்ப் பாணத்தை விட்டு வெளியேறினோம் என்றால், உங் கள் விடயத்தில் தமிழ் மக்கள் தவறிழைக்கவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம் புகிறோம். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=7736&ctype=news

காலா காலமாக வாழ்ந்த மண்ணை விட்டு, முஸ்லீங்களில் சிலர் செய்த தவறுக்காக, முழு சமூகத்தையும் பழி போடுவது போல் வெளியேற்றப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது! ... அதில் இரண்டாம் கருத்தென்பது இல்லை!

ஆனால் ...

84 இறுதி, 85ம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய முஸ்லீம் காங்கரஸ் தலைவர் அஸ்ரப். ஜே.ஆருடன் இணைந்து முஸ்லீம் ஊர்காவல் படை எனும் கூலிப்படைகளை அமைத்து, அக்கூலிப்படைகள் கிழக்கில் கிராமம் கிராமமாக தமிழ் மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்த முற்றாக எரித்து அழித்து, பல தமிழ் மக்களை படுகொலை செய்து, பெண்களை பாலியல் சித்திரவதைகளை செய்ததை ... இன்றுவரை எம் அரசியல் தலைவர்கள் ... கிழக்கு தந்த சம்பந்தர் முதல் ... வாய் திறக்க வெட்கப்படுகிறார்கள்! ... இன்று முஸ்லீங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சுமந்திரனுக்கு கிழக்கு அழிவுகள் நடந்ததாக நினைவில்லையா??/ அழிக்கப்பட்ட கிராமங்களில் தமிழ் மக்கள் முற்றாக குடியேறி விட்டார்களா??? இன்றுவரை ஏதாவது முஸ்லீங்களின் தலைமை, அக்கோர நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கோரியதா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பழுக்கில்லாத ஆணித்தர அரசியல்பேச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

காலா காலமாக வாழ்ந்த மண்ணை விட்டு, முஸ்லீங்களில் சிலர் செய்த தவறுக்காக, முழு சமூகத்தையும் பழி போடுவது போல் வெளியேற்றப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது! ... அதில் இரண்டாம் கருத்தென்பது இல்லை!

ஆனால் ...

84 இறுதி, 85ம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய முஸ்லீம் காங்கரஸ் தலைவர் அஸ்ரப். ஜே.ஆருடன் இணைந்து முஸ்லீம் ஊர்காவல் படை எனும் கூலிப்படைகளை அமைத்து, அக்கூலிப்படைகள் கிழக்கில் கிராமம் கிராமமாக தமிழ் மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்த முற்றாக எரித்து அழித்து, பல தமிழ் மக்களை படுகொலை செய்து, பெண்களை பாலியல் சித்திரவதைகளை செய்ததை ... இன்றுவரை எம் அரசியல் தலைவர்கள் ... கிழக்கு தந்த சம்பந்தர் முதல் ... வாய் திறக்க வெட்கப்படுகிறார்கள்! ... இன்று முஸ்லீங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சுமந்திரனுக்கு கிழக்கு அழிவுகள் நடந்ததாக நினைவில்லையா??/ அழிக்கப்பட்ட கிராமங்களில் தமிழ் மக்கள் முற்றாக குடியேறி விட்டார்களா??? இன்றுவரை ஏதாவது முஸ்லீங்களின் தலைமை, அக்கோர நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கோரியதா???

ஐயா பெரியவரே 
இப்போது மற்றைய நான்கு விரல்களும் உங்களை சுட்டவில்லையா .....? 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பெரியவரே 
இப்போது மற்றைய நான்கு விரல்களும் உங்களை சுட்டவில்லையா .....? 

சுட்டுவிரல் தத்துவம் அம்பு வில்லுக் காலத்தைச் சேர்ந்தது. அது துப்பாக்கிகள் பற்றி அறியாதகாலம். அதிலும் தவறு என்று சுட்டுவிரல் ஒருவனைச் சுட்டும்போது ஏனைய நான்குவிரல்களும் சுட்டுபவனைச் சுட்டுவதில்லை மூன்று விரல்களே சுட்டுகின்றன. அதுவும் கட்டைவிரலின் அடக்குமுறைக்கு உட்பட்டே இரண்டுவிரல்கள் சுட்டுகின்றன. அடக்குமுறையை நீக்கிவிட்டுப் பாருங்கள் கட்டைவிரல் நிமிர்ந்தவுடன் இன்றைய காலத்திற்கேற்ப அக்கிரமங்களைச் சுட்டு  அழித்துவிடு என்ற புதிய தத்துவத்தைக் கையானது காணவைக்கும்.

முசுலீம்கள் தமிழருக்குச் செய்த அக்கிரமங்களைப் படித்தோ, கேட்டோ அறிந்துகொண்டதில்லை. இன்று முற்று முழுதாக சிங்களவர்வசமாகிவிட்ட அநுராதபுரத்தில், நேரில் கண்டு அநுபவித்தவன்.  

 

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுவிரல் தத்துவம் அம்பு வில்லுக் காலத்தைச் சேர்ந்தது. அது துப்பாக்கிகள் பற்றி அறியாதகாலம். அதிலும் தவறு என்று சுட்டுவிரல் ஒருவனைச் சுட்டும்போது ஏனைய நான்குவிரல்களும் சுட்டுபவனைச் சுட்டுவதில்லை மூன்று விரல்களே சுட்டுகின்றன. அதுவும் கட்டைவிரலின் அடக்குமுறைக்கு உட்பட்டே இரண்டுவிரல்கள் சுட்டுகின்றன. அடக்குமுறையை நீக்கிவிட்டுப் பாருங்கள் கட்டைவிரல் நிமிர்ந்தவுடன் இன்றைய காலத்திற்கேற்ப அக்கிரமங்களைச் சுட்டு  அழித்துவிடு என்ற புதிய தத்துவத்தைக் கையானது காணவைக்கும்.

முசுலீம்கள் தமிழருக்குச் செய்த அக்கிரமங்களைப் படித்தோ, கேட்டோ அறிந்துகொண்டதில்லை. இன்று முற்று முழுதாக சிங்களவர்வசமாகிவிட்ட அநுராதபுரத்தில், நேரில் கண்டு அநுபவித்தவன்.  

 

பாஞ் ஜீ 
ஏன் சம்மன் இல்லாமல் ஆஜராகுகிறீர்கள் ........நீங்கள் அநுராதபுரத்தில் அனுபவித்ததை போன்று நானும் கிழக்கு மாகாணத்தில் அனுபவித்து ,அனுபவித்துக்கொண்டு இருப்பவன் நான் ....மேலே உள்ள Fire Zone பெரியவர் நான் வேறொரு திரியில் நான் இதே விடயத்தை குறிப்பிடும் போது ஏன் மீண்டும் கிண்டுகிறீர்கள் ....விரல்கள் நான்கும் உங்களை சுட்டவில்லையா என்று கேட்டவர் ....இப்போது அவரே அந்த விடையத்தை பற்றி பேச திரும்ப அவரிடம்  கேட்கவேண்டும் போல் தோன்றியது ....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்கள் நிலத்தையும் போராட்டத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து பாதுக்காக்கப் போராடிய போது முஸ்லீம்கள் அதே நிலத்தை தாயகமாகக் கொண்டதாக இன்று சொல்லிக் கொண்டாலும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து பாதுக்காப்பதற்குப் பதில் தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க வெளிக்கிட்டார்கள். அதன் பலாபலன்.. சில பாதுகாப்பான தற்காலிக வெளியேற்றங்கள். இதே அமெரிக்கனுக்கு அடிக்கப் போய் இப்ப இலட்சக்கணக்கில் அமெரிக்கனின் குண்டுக்கு செத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் அப்படி ஒன்றும் செய்யவில்லையே என்று சந்தோசப்படுவதோடு தமிழர்களின் உயரிய எண்ணத்தைப் புரிந்து கொண்டு சகோதரத்துவத்துடன் பொது எதிரிகளை சந்திக்க முனைவதே முஸ்லீம்களுக்கு நன்மை பயக்கும். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.