Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியல்வாதி தாத்தா ஒருவருக்கு வந்த பெரும் பிரச்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது கொழும்பு  ஆங்கில பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு. முடிந்தவரை... ரசிக்கக் கூடியவாறு மொழி பெயர்த்துளேன்

.New.jpg

 

கொழும்புக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றில் இருந்து தெரிவான நீடித்த அனுபவ முடைய ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்

இன்றைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும் இருக்கும் இந்த அரசியல்வாதியோ, பெண்கள் விசயத்தில் கில்லாடி என பெயர் எடுத்தவர்.

ஏனெனில், அழகிய பெண்களுடனான தொடர் சகவாசங்களினால், எப்போதும் அவரது 'சொத்தினை' கறல் பிடியாமல் வைத்திருந்தமையால், அவரது வயதுக்காரருக்கு வரக்கூடிய இயலாமை எல்லாம், நம்மாளுக்கு.... வர.... சான்சே இல்லை. 

அவ்வளவு பெரிய, பேர் போன கில்லாடிக்கு அண்மையில் பெரிய சோதனை வந்து விட்டது.

ஒரு வார இறுதி நாட்களை அமர்க்களமாக கொண்டாட, தாத்தா ஒரு சிவத்த அழகான இளம் பொம்பிளை ஒன்றை தள்ளிக் கொண்டு, ஹொலிடே இன் ஹோட்டல் ஒன்றினில் புகுந்து விட்டார். 

தண்ணிப் போத்தல் ஒன்றை இருவருமே சேர்ந்து காலி செய்த பின்னர், இரவாகி விடவே, கட்டில் ஏறினர் இருவரும்.

தாத்தாவின் வேகத்துக்கு முடிந்தவரை ஒத்துழைத்த பெண் களைத்து சோர்ந்து விட்டார். 

தாத்தாவோ சோர்வதாக இல்லை, அதற்கான அறிகுறிகளும் இல்லை. இன்னாட இது, இவருக்கு மட்டும் இப்படி, அது எப்படி என விசாரித்து, தாத்தா, 'வயாகரா' கஸ்டமர் என்று புரிந்த போது, ஓகோ, அதுவா தாத்தாவின் இந்த வேகத்தின் ரகசியம் என வியந்தார் அம்மணி.

ஒருவாறாக தாத்தா, போதும் என்று, பரிபூரண, நெஞ்சம் நிறைந்த திருப்தியுடன்  ஓய்ந்த போது.... நித்தரையும் வந்துவிட்டது.

சரி படுக்கலாம் என்று கட்டிலில் சாய்ந்தால்...... பெரிய......ய பிரச்சனை.. நித்திரை வரவே இல்லை. அதுக்கு காரணம் இருந்தது.

எது 'அண்ணாமலை' போல 'கம்பீரமாக' இருக்க வேண்டும் என்று தாத்தா விரும்பினாரோ, அது கம்பீரமாகவே தொடர்ந்து இருந்தது. 'வழக்கம்' ஆக நடப்பது போல 'பாயும் புலி',  'பதுங்கும் எலி' ஆக மறுத்தது.

நேரமோ இரவு 12:30. பிரச்சனை தீரும் அறிகுறிகளும் இல்லை. அரண்டு போன அரசாங்க அமைச்சரோ, பெரும் மனச் சங்கடத்துடன், பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த, இளம் அழகியை தட்டி எழுப்பினார்.

ஆகா, கில்லாடித் தாத்தா மீண்டும் ஒரு ரவுண்டுக்கு ரெடி போல என்று, நித்திரை போல நடித்த பெண்ணோ, தாத்தாவின், தொடர்ந்த உற்சாகமில்லா குரலால், ஏதோ பிரச்சனை போல் என்று எழுந்து, தாத்தாவின் பிரச்சனையை அறிந்து கொண்டார்.

விசாரித்த போது, தாத்தா, அழகிய பெண்ணைத் தள்ளிக் கொண்டு வந்த சந்தோசத்தில், மேலதிகமாக மாத்திரைகளை போட்டுத் தள்ளி (overdose) இருக்கிறார், நல்லா என்ஜாய் பண்ண வேண்டும் என்டு தான்.....

ஆனால் இப்படி ஒரு பிரச்சனை வரும் எண்டு தெரியாமல் போய் விட்டதே.

விபரமான அந்தப் பெண், நல்லது, இப்படியே யோசியாமல், டாக்டரிடம் போகலாம் என்று சொன்னார்.  'வெட்கக் கேடு, இப்படியே எப்படி போறது'.. என்றார், பெரும் கலக்கத்தில் இருந்த இலங்கை அரச அமைச்சர்.

'அதெல்லாம் பிரச்சனை இல்லை, நீங்கள், இந்த பிரச்சனையுடன் டவுசரைப் போட வேண்டாம், கஷ்டமாயிருக்கும். சாரத்துடனே வாருங்கள் போகலாம்' என்று அழைத்தார் அவர்.

சாரத்தினை மடித்து, ஆனால் கட்டாமல்  இரண்டு கைகளினாலும் கீழ் நுனிகளைக் பிடித்துக் கொண்டு, 'அடி வாங்கிக் கொண்டு, நடந்து வரும் நம்ம வடிவேலு போல' நடந்து போய், பெண்ணின் காரினுள் ஏறி அமர்ந்து கொண்டார்.

போகும் வழியெல்லாம், 'இப்ப எப்படி'... 'என்னைத்தை.. அப்படியே தான் இருக்குது... சனியன்'.... கதைதான்.

காரை, நாரகேன்பிட்டி பகுதியில் இருக்கும் தனியார் வைத்தியாசலைக்கு கொண்டு சென்று, ஒரு அறையினையும் புக் பண்ணி, 'நோயாளித் தாத்தாவையும்' படுக்க வைத்து விட்டார், அந்தப் பெண்.

சிறிது நேரத்தில் ஒரு இளம் வைத்தியர் தம்பி, தாத்தாவினைப் பார்த்து, ஊசி ஒன்றை அடித்து, 'அப்படியே படுத்திருங்கள், 20 நிமிடத்தில் வருகிறேன் என நகர, 'ஒரு நிமிசம்...' என்று அழைத்த தாத்தா, 'மகனே,  நான் யார் என்று உனக்கு இப்போது தெரிந்திருக்கும், உன் கையைக் காலாய் நினைத்துக் கொண்டு கேட்கிறேன், இந்தக் கருமாந்திரத்தை பத்தி மூச்சு விட்டுடாதே ராசா'.. என்று வேண்டிக் கொண்டார்.

ஆனாலும் தாத்தாவின் பிரச்சனை, 20 நிமிடங்களின் பின்னும் தீர்ந்த பாடாயில்லை. இளம் டாக்டர் தம்பி, இப்போது, அனுபவம் மிக்க, பெரிய டாக்டரை அழைத்தார் உதவிக்கு.

பெ..ரிய.. டாக்குத்தர்... ஐயா... பெ..ரிய.. ஊசியோட வந்து, மலை...யை குத்தி.... அங்கே, நீக்கமற நிறைந்து இருந்த இரத்தத்தினை வெளியே எடுத்த பின்னரே...'பாயும் புலி, பதுங்கும் எலியாகியது'.

எல்லாம், நோர்மல் ஆன பிறகு, அங்கே கோட்டலுக்கு வெளியே காய்ந்து கொண்டிருந்த  'செக்யூரிட்டி பசங்களைக் அழைத்து, எங்கப்பா, இருகிறீங்க, இங்க வாங்கப்பா' என்று கூப்பிட்டு தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் மீண்டார் அவர்.

ஆனாலும் தனது சாரத்தினை அங்கே மறந்து விட்டுச் செல்ல, வைத்தியசாலை 'இங்கே ஒரு பொருள் விடப் பட்டுள்ளது என்று அழைக்க', அதை எடுக்கப் போன செக்யூரிட்டி ஆசாமி, என்ன விசயம் என்று விசாரிக்க.... காதும், காதும் வைத்த மாதிரி இருக்க வேண்டிய விசயம், இப்ப, நான் எழுத, நீங்களும் வாசித்து சிரிக்க வேண்டிய விசயமாக போட்டுது.  :grin:

Edited by Nathamuni

ஹஹா அருமை நாதாமுனியர்:grin:

2 அல்லது  3 நாட்களுக்கு முன் இலங்கை தமிழ் இனணயம் ஒன்றில் இந்த படத்தை பார்த்தேன். அப்போது நினைத்தேன் இது ஒரு  வில்லங்கமான விடையமாகதான் இருக்கவேண்டும் என்றுtw_open_mouth:

  • கருத்துக்கள உறவுகள்

கம்பீரமான தாத்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம் வாட்டர் பம் வெடிச்சு சிதறுற அளவுக்கு வரேல்லை tw_yum:

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த அளவில் உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை ....
இதற்கு இதயமும் ஒத்துழைக்க வேண்டும்  வயாகரா மருந்தின் தொழில்பாடின் படி பார்த்தால் 
ஒரு பரபரப்பு மன நிலையில் இருக்கும்ஒருவருக்கு 
இப்படி நீண்ட நேரம் இருக்கும் என்பது நம்பும்படியாக இல்லை.

ஓவேர் டோஸ் ஆனால் இதய குழாய்களே பாதிப்பை கொடுக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.