Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் - சுமந்திரன் முரண்பாட்டை மக்கள் நலன் கருதி தீர்த்து வைக்க முன்வாருங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரனுக்குமான முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளந்து செயலிழக்க வைக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் இலங்கை தமிழ் மக்களுக்கு முக்கியமானவர்கள். 

திரு சுமேந்திரன் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்க அரசின் ஆதரவை பெற்ற துணிச்சல் மிக்க அரசியல்வாதி. கோத்தபாயவை சண்டே டைம்ஸ் வழக்கில் துணிச்சலுடன் கூண்டுக்கு அழைத்து குறுக்குவிசாரணை செய்யுமளவுக்கு துணிச்சல் கொண்டவர்.

திரு விக்னேஸ்வரன் மிகவும் நேர்மையான உண்மையான மக்கள் பிரதிநிதி. மக்களுக்காக இந்த வயதிலும் உழைக்க தயங்காதவர். இவரும் துணிச்சல் மிக்க அரசியல் தலைவர். 

இவர்கள் இருவரும் இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையானவர்கள். இவர்கள் ஒன்றுபட்டு உழைக்க யாழ் கள உறுப்பினர்கள், புலம் பெயர்ந்த தலைவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள மதத் தலைவர்கள், சமுக நலன்விரும்பிகள் ஆகியோர் முன்னின்று உழைக்க வேண்டும். நன்றி. 

இதில் சொல்லி கொள்வது போல செய்ய ஏதும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கும் , சுதந்திரக்கட்சிக்கும் ஏது நடந்ததோ அதுதான் கூட்டமைப்க்கும் நடக்கின்றது.

குள்ள நரி இரணில் இடம் இருந்து கூட்டமைப்பு தலைமையை விலக்கி  இருக்க வைக்க கடவுளாலும் முடியாது என்பதுதான் உண்மை.  சுய மரியாதையை இளக்க விக்கியர் தயாராக இருப்பார் என்றும் எண்ண தோன்றவில்லை .

இதுக்கு போய் அலட்டிக்கலாமா ,

காலம் நல்ல தீர்ப்பை கொண்டுவரும் அதற்கு முதல் நாம் அவசரப்படக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரை.... கட்சியை விட்டு நீக்கச் சொன்ன, 
உள்ளிருந்து கலகம் விளைவிக்கும், சுமந்திரனை கட்சியை விட்டு நீக்கினால் தான்....
கூட்டமைப்பில் முரண்பாடுகள் தோன்றாது. அதனை... உடனடியாக, மக்களின் நன்மை கருதி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியில் அறிக்கைகள் மூலம் வெளியிட்டு இருவரும் எதிரிக்கு கட்சியை உடைக்க வகை செய்யக்கூடாது, சுமந்திரன் தான் நேர்மையானவர் என காட்ட எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுகிறார் போலுள்ளது,உட்கட்சி பிரச்சனைகள் உண்மையில் கட்சிக்குள்ளேயே தீர்த்து வைக்கப்பட வேண்டும். விக்கினேஸ்வரன் கட்சிக்கு விரோதமாக செயற்படுகிறார் என்றால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு மட்டுமே அவரை நீக்க முடியும். செல்வம் அடைக்கலநாதன் சொன்னது போல் சுமந்திரன் தான் தோன்றித்தனமாக (என்ற கருத்துப்பட) செயற்பட முடியாது. தமிழ் கைதிகளை வெளியில் கொண்டுவர அவர் பாடுபடுவது தெரிகிறது. அத்தோடு விக்கினேஸ்வரன் அவர்களும் தனது கடமையை செய்து கொண்டு இருக்கிறார். இருவரும் பொறுப்பாக அறிக்கைகளை வெளியிடுவது தான் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரனுக்குமான முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளந்து செயலிழக்க வைக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் இலங்கை தமிழ் மக்களுக்கு முக்கியமானவர்கள். 

திரு சுமேந்திரன் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்க அரசின் ஆதரவை பெற்ற துணிச்சல் மிக்க அரசியல்வாதி. கோத்தபாயவை சண்டே டைம்ஸ் வழக்கில் துணிச்சலுடன் கூண்டுக்கு அழைத்து குறுக்குவிசாரணை செய்யுமளவுக்கு துணிச்சல் கொண்டவர்.

திரு விக்னேஸ்வரன் மிகவும் நேர்மையான உண்மையான மக்கள் பிரதிநிதி. மக்களுக்காக இந்த வயதிலும் உழைக்க தயங்காதவர். இவரும் துணிச்சல் மிக்க அரசியல் தலைவர். 

இவர்கள் இருவரும் இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையானவர்கள். இவர்கள் ஒன்றுபட்டு உழைக்க யாழ் கள உறுப்பினர்கள், புலம் பெயர்ந்த தலைவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள மதத் தலைவர்கள், சமுக நலன்விரும்பிகள் ஆகியோர் முன்னின்று உழைக்க வேண்டும். நன்றி. 

தமிழரிடம் எத்துணை வீரமுள்ளதோ அத்துணைக்குப் பணிவும் உள்ளது. தமிழருக்கென்று ஒரு அரசு இல்லாமல் இருப்பதே... பணிவை அடிமைத்தனமாக எதிரிகள் பார்ப்பதற்கும், அதனைத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குக் காரணமாகவும் அமைந்துள்ளது, 


ஒரு வீரன் இன்னொரு வீரனுக்குப் பணிந்துபோவது பெருமைக்குப் பங்கம் ஏற்படுத்தாது. ஆனால் ஒரு கோழை பணிந்துபோவது கேவலமானது. திரு சுமந்திரன் அரசியல் சாணக்கியம் மிக்கவர் என்பதை பல வழிகளில் புலப்படுத்தியுள்ளார். ஆனாலும் அருடைய செயற்பாடுகள், ஒரு அடிமை நிலையில், கோழைபோலிருந்து அந்தச் சாணக்கியத்தை செய்வதாக, தமிழர்களை ஆத்திரப்பட வைக்கிறது.

முதல்வர் விக்னேசுவரனின் ஆன்மீக அரசியல் இன்றைய உலக அரசியலோடு பொருந்துவதற்குப் பின்னின்றாலும், அவரது அரசியலில், நாங்கள் தமிழர் என்ற பெருமையும், வீராப்பும் ஓங்கிநிற்கிறது.

இந்தத் தலைவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் தமிழர்கள் தங்கள் தன்மானத்தை இழக்காது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, அவர்களால் செயற்பட முடியும்.  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.