Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்
[ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:57.46 AM GMT ]

ltte-flag.jpg

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் இலங்கைக்கு வருவதை தடை செய்து ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.
2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கல் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுக்குகுழி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தடைவிதிக்கப்பட்டதாக கடந்த அரசாங்கம் கூறியது.

தற்போது உயிருடன் இல்லாத நபர்களின் பெயர்களும் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளுக்கும் நபர்களுக்குமான தடை நீக்கப்பட்டுள்ளது.http://www.tamilwin.com/show-RUmtzBRVSWns4A.html

ஒரு வருடம் மெத்த  எல்லோரும் இலங்கைக்கு ஓடிப்போய் அரசின் காலில் விழ வரிசையில் நிற்கப்போகின்றார்கள்.

யார் முதலில் விழுவது யார் கூடுதலாக விழுவது என்பதற்கு வேறு அடிபட போகின்றார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

gazette-sl-400-seithy.JPG

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் மஹிந்த ராஜபக்ஸ அராசங்கத்தின் ஆட்சிக் காலத்தில், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடை செய்யும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது. முன்னைய வர்த்தமானியில் இருந்த பட்டியலை தற்போதைய அரசாங்கம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி 8 அமைப்புக்கள் மற்றும் 269 தனிநபர்களை அந்த பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

   

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் புலம்பெயர் அமைப்புக்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதி 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், 424 தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர். இதில், 16 தமிழ் அமைப்புக்களில் எட்டு அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்-

1. பிரித்தானிய தமிழர் பேரவை

2. கனேடிய தமிழர் பேரவை

3. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

4. உலகத் தமிழர் பேரவை

5. கனேடிய தமிழர் தேசிய அவை

6. தமிழ்த் தேசிய அவை

7. தமிழ் இளைஞர் அமைப்பு

8. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தடை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் விபரம்-

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

3. தமிழர் ஒருக்கிணைப்புக்குழு

4. உலகத் தமிழர் இயக்கம்

5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

6. உலகத் தமிழீழ மக்கள் அவை

7. உலகத் தமிழர் நிவாரண நிதியம்

8. தலைமையகக் குழு

2014ம் ஆண்டு 424 தனிப்பட்ட நபர்களை அப்போதைய அரசாங்கம் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்திருந்தது. எனினும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 424 பேரில் 269 பேருக்கு பிரயோகிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 155 பேருக்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

gazette-sl-211115-seithy.JPG

http://www.seithy.com/breifNews.php?newsID=145346&category=TamilNews&language=tamil

தமிழ் மக்களின் எத்தனையோ பிரட்சனைகள் இருக்க ... தீர்வை வாங்கித்தருகிறோம் என்று எமக்கு கூறி நிபந்தனையற்ற ஆதரவை மைத்திரி/ரணிலுக்கு கொடுத்தவர்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று! இதை கூட்டமைப்பின் சாதனை என்பதா? இல்லை தமிழரசுக்கட்சியின் சாதனை என்பதா? இல்லை "ஈழத்து சோசுப்பிரமணி சாமி" சுமந்திரனின் சாதனை என்பதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, no fire zone said:

தமிழ் மக்களின் எத்தனையோ பிரட்சனைகள் இருக்க ... தீர்வை வாங்கித்தருகிறோம் என்று எமக்கு கூறி நிபந்தனையற்ற ஆதரவை மைத்திரி/ரணிலுக்கு கொடுத்தவர்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று! இதை கூட்டமைப்பின் சாதனை என்பதா? இல்லை தமிழரசுக்கட்சியின் சாதனை என்பதா? இல்லை "ஈழத்து சோசுப்பிரமணி சாமி" சுமந்திரனின் சாதனை என்பதா?

சம்பந்தன் கோஷ்டிக்கு இப்ப ஈழத்தமிழன்ரை பிரச்சனை என்னவெண்டு மறந்தே போயிருக்கும். மரத்து போன விசயமெல்லோ

இனி என்ன பாதிரி மடுத்திருவிழாவிற்கும், மற்றவர்கள் நல்லூருக்கும், மற்ரவர்களுக்கு ஹபர் வியூ ஹொட்டேலும் ... திறந்து விடப்பட்டிருக்கின்றது!

... ம்ம்ம்... உந்த எட்டும் .. சிலவேலை உள்ளுக்குள்ளாளை ... சம்பந்தர் கூறியது போல் "2016இற்குள் தீர்வு" ... எடுத்து தரப்போகிறார்களா????

  • கருத்துக்கள உறவுகள்

போர போக்கை பார்த்தால் ஈழத்தை தவிர மற்ற எல்லாத்தையும் தமிழ் சனம் அனுபவிக்கும் போல கிடக்கு.....என்ன இருந்தாலும் புலத்தில் நாங்கள் அனுபவிப்பதில் அரைவாசியைத்தன் அவையள் அனுபவிக்க போயினம்....:unsure:

தடை நீக்கினது சம்பந்தன் கோஸ்ரிக்கு எதிர் கோஸ்ரியை பலப்படுத்தவாக்கும்...  நரித்தனத்திலை  இரணில் கருணாநிதிக்கும் அப்பன்..  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, காத்து said:

தடை நீக்கினது சம்பந்தன் கோஸ்ரிக்கு எதிர் கோஸ்ரியை பலப்படுத்தவாக்கும்...  நரித்தனத்திலை  இரணில் கருணாநிதிக்கும் அப்பன்..  

நரியை வென்ற (பரி)ஜெக்களும் உண்டு

19 hours ago, arjun said:

ஒரு வருடம் மெத்த  எல்லோரும் இலங்கைக்கு ஓடிப்போய் அரசின் காலில் விழ வரிசையில் நிற்கப்போகின்றார்கள்.

யார் முதலில் விழுவது யார் கூடுதலாக விழுவது என்பதற்கு வேறு அடிபட போகின்றார்கள் .

 

இலங்கை அரசின் காலில் விழுந்து அடிமையாக வாழவேண்டும்என்பது அவர்களின்  முன்னோடிகளான  தங்கள் விருப்பம் தானே.  

On 11/21/2015, 11:54:32, arjun said:

ஒரு வருடம் மெத்த  எல்லோரும் இலங்கைக்கு ஓடிப்போய் அரசின் காலில் விழ வரிசையில் நிற்கப்போகின்றார்கள்.

யார் முதலில் விழுவது யார் கூடுதலாக விழுவது என்பதற்கு வேறு அடிபட போகின்றார்கள் .

 

என்னப்பா முதலில் ஓடி வந்து விழ தயாராகி விட்டாரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அமைப்புக்கள் மீது தடை என்பதே எம்மவர்கள் போட்டுக்கொடுத்த போடுதான். இப்ப நீக்கம் என்பதும் எம்மவர்கள் தான்.

என்ன.. இதற்கு பிரதிஉபகாரமாக.. இம்முறை அவரவர் மாவீரர் நாளில்.. புலிக்கொடிக்கு பதில் சிங்கக் கொடி ஏத்தினாலும் ஆச்சரியமில்லை.

எங்கட சனத்தில காக்கவன்னிய கூட்டம் குறிப்பிடத்தக்க அளவு இன்னும் உயிர் வாழுது. tw_blush:

தாயக தமிழ் மக்களை பொருண்மிய ரீதியில் சமூக ரீதியில் அரசியல் ரீதியில் பலப்படுத்தக் கூடிய அமைப்புக்கள் மீதான தடைகள் தொடருது. மதில் மேல் பூனை அமைப்புக்கள் தடை நீக்கம். இளையோரின் உணர்வெழுச்சியை கட்டுப்படுத்த அவர்கள் மீதான தடை விலக்கல்.. ஒரு பரீட்சார்த்தம். சிங்களவன்.. சும்மா நகரல்ல..! சிங்களவன் செய்யிற.. எல்லாத்துக்கும் இப்ப நல்லெண்ணை.. சாரி நல்லெண்ணம் பேசுறதே எம்மவர்கள் வேலையாப் போச்சுது.:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.