Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் தினக் கணக்கு விபரம், நினைவு கூரலுக்கான விலை, அவலத்தில் போராளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப் பேரினவாத அரசினால் தெருவில் விடப்பட்டு சமூகத்தால் வெறுத்து தனிமைப்படுத்தப்பட்ட போராளிகளின் சுய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க இத் தொகை போதுமானது, கடந்த ஆறு வருடங்களை இத் தொகைக்கு அண்ணளவாகக் கணக்குப் போட்டால் அரை மில்லியன் பவுண்ஸ்களுக்கும் அதிகமானது.

இத் தொகை மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்குப் போதுமானது.

இத் தொகையில் பெரும் பகுதி அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அது நமது போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படுத்தலுக்குப் பயன்படவில்லை. போராட்டத்தின் நியாயத்தை உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்குக் கூறுவதற்குப் பயன்படவில்லை. புதிய அரசியல் திட்டத்தை வகுத்துக்கொள்ளப் பயன்படவில்லை. இலங்கை அரசையோ அன்றி அதன் பின்னணியில் செயற்படும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களையோ எதிர்கொள்ளப் பயன்படவில்லை. மாறாக பெரும் வர்த்தக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் மண்டபத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவும், அடையாளப் பொருட்களை வாங்கவுமே பயன்பட்டுள்ளது.

எதற்காக இவயெல்லாம், இவற்றின் விளை பலன்கள் என்ன? இவ்வளவு விலை செலுத்தப்படும் அஞ்சலிகளால் பயனடவைவது யார்?

இங்கு வீடியோவில் கூறப்படுவது போல் இக் கணக்குகள் இதுவரை…. யான கணக்குகள் மட்டுமே. மண்டபத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் பூ போன்றவற்றை விற்பனை செய்த பணம் இங்கு சேர்த்துக்கொள்ளபடவில்லை.

ஆக, இவ்வளவு பணம் ஊதாரித்தனமாக விரையமாக்கப்பட்ட பின்னரும் மாவீரர் வியாபாரம் இலாபத்தில் இயங்கவில்லை என வீடியோவில் கூறப்படுகிறது. தேசியக் கணக்குப் பிள்ளைகளுக்கே இது வெளிச்சம்!

(புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டாலும், இக் கணக்கு விபரம் பிரித்தானியாவிற்கானது மட்டுமே.)

Share this:

www.inioru.com

 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேறை வேலை இல்லையா? ஏதோ ஒருவகையில் மாவீரர் நாள் தொடங்கும் மாதத்தில் வந்துவிடுவீர்கள்...இதற்கு சிங்களவன் தாற காசும்  சாராயமும் உங்களுக்கு வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ பாவங்கள் கடனிலை நடத்தி முடிச்சிருக்குதுகள் அதைப் பாராட்டத்தானே வேணும். <_<

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்நாள் புலத்தில் மட்டுமல்ல  தாயகத்திலும் செய்யப்படணும்

 

அதேநேரம் செலவுகள் குறைக்கப்படணும்  என்பதற்கும்

இதனூடாகவும் பணம் மீதப்படுத்தப்பட்டு தாயக உறவுகளுக்கு உதவணும் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது

மைதானங்கள் மலிவாக எடுக்கலாம் சிலவேளை இலவசமாகவும் எடுக்கலாம்

அதேநேரம்  புலம் பெயர் தேசங்களில் கடும் குளிர் மற்றும் குளிருடன் மழை போன்றவற்றுக்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்

மேலே எழுதியவற்றை தொடர்ந்து அவர்களிடம் நேரில் வலியுறுத்தி வருகின்றேன்.

மற்றவர்களும் செய்யணும் என்பதே எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகின்றேன்  விசுகு...ஆனால் மாவீரர் நாள் நெருங்க நெருங்க சிலபுல்லுருவிகளுக்கு இதுதான் புராணம் ..அதாவது மாவீரர்நாள் ஏன் கொண்டாடவேணும் என்ற கருத்துப்படிதான் எழுதுகிறார்கள்...டங்கிக்க்கு வால்பிடித்தவன்கூட பெர்யமனுசன்மாதிரியும்...புலிக்கு அனுதாபப்படுபவன் பொல நிகழ்வை அறவே இல்லாமல் செய்வதற்கு ஊசி ஏத்துவார்கள்...இதையே நான் வெறுக்கிறேன்....இந்த யாழிலேயே இதேனிலை...தினமும் தண்ணிப்பாட்டிகளுக்கும்...கொண்டாட்டன்களுக்கும் போய் வாறவைகூட ...மாவீரர் என்றால் வேப்பங்காய் கடித்துபோல வாந்திஎடுப்பினம்...மாவீரர் மறக்கப்படமுடியாதவர்கள்...பெரியதாய் ஒன்றுகூடுவதன்மூலமே .....எமது உணர்வை பிரதிபலிக்கமுடியும்... செலவை குறைத்து செய்வது வரவேற்கத்தக்கதே....ஆனால் நாம் வாழும் நாட்டு காலநிலை ஒத்துழைக்குமா  என்பது சந்தேகமே...கனடாவில் மைதானம் ஒன்றில்தான் நடைபெறுகின்றது....மக்களின் பங்களிப்பின் வீதம் உயர்ந்துகொண்டே போவதனால் ...செலவை கட்டுப்படுத்துவதும் கஸ்டமானதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் கொண்டாட்டங்களின் செலவுகள் மட்டுப்படுத்தவேண்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளின் காலநிலை குறித்தும் பலர் சிந்திக்க வேண்டும். திறந்தவெளியில் செய்யக்கூடிய காலநிலை இங்கில்லை.
அத்துடன் மாவீரர் தினத்திற்கு வருபவர்கள் சில வேளை!!!! 200/300/400 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலிருந்து வருபவர்கள். அவர்களின் சில்லறை சிரமங்களையும் கவனத்தில் எடுக்க வேண்டியது ஏற்பாட்டாளர்களின் கடமையே.
100 பேர் வரும் இடத்திற்கு கூட மலசலகூடவசதி சிறப்பானதாக இருக்க வேண்டும். அப்படியான நாடுகளில்தான் வாழுகின்றோம். தீ பிடித்தால் தப்பி ஓடுவதற்கான வழிகள் ஒழுங்கானதாக இருக்க வேண்டும். ஏதாவது நடந்து...விசாரணை என்று வரும் போது பதில் யார் சொல்வது???????

நாட்டிலும் மாவீரர் தினம் நடைபெறவேண்டும் என்பதுதான் பலரின் அவா ,

ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் நடத்தும் களியாட்ட விழாவாக அல்ல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.