Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன்

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன்

 

தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.

சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் பரவலாக நிலவிவந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் சி வி விக்னேஸ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவுவதாக முன்பே வெளிவந்த செய்திகள் இத்தகைய சந்தேகத்துக்கும் சர்ச்சைக்கும் அடிப்படையாக அமைந்திருந்தன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி வி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையிலும் இடம்பிடித்திருந்தது இந்த சந்தேகம் மற்றும் சர்ச்சையை அதிகரிக்கச் செய்திருந்தது.

இந்த பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சி வி விக்னேஸ்வரன் இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தனியாக சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்புக்கு பின்னர் பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சி வி விக்னேஸ்வரன் தமக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை குறைந்து புரிந்துணர்வு மேம்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதே சந்திப்பு குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த இரா சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனநாயக அமைப்பு என்றும் அதில் கருத்து மாறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும் அதை பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறினார்.

தமிழ் மக்கள் பேரவையை அமைப்பதும் செயற்படுவதும் ஜனநாயக உரிமையின்பாற்பட்ட செயற்பாடுகள் என்று தெரிவித்த சம்பந்தன், அந்தப் பேரவையில் இருப்பவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி வி விக்னேஸ்வரன் தவிர்த்த மற்ற தலைவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.

அதேசமயம் அவர்கள் அனைவருக்கும் தமது கருத்துக்களை சொல்வதற்கு போதிய உரிமைகள் இருப்பதை தாம் மறுக்கவில்லை என்று கூறிய சம்பந்தன், இந்தப் பேரவையின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பது அத்தியாவசியம் என்று தாம் நம்புவதாகவும், அதற்கு மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயல்களுக்கு (இவர்களால்) குந்தகம் ஏற்படுமாக இருந்தால் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதாகவே அமையும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151226_tnasambandhan

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன்

 

தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.

சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் பரவலாக நிலவிவந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் சி வி விக்னேஸ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவுவதாக முன்பே வெளிவந்த செய்திகள் இத்தகைய சந்தேகத்துக்கும் சர்ச்சைக்கும் அடிப்படையாக அமைந்திருந்தன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி வி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையிலும் இடம்பிடித்திருந்தது இந்த சந்தேகம் மற்றும் சர்ச்சையை அதிகரிக்கச் செய்திருந்தது.

இந்த பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சி வி விக்னேஸ்வரன் இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தனியாக சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்புக்கு பின்னர் பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சி வி விக்னேஸ்வரன் தமக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை குறைந்து புரிந்துணர்வு மேம்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதே சந்திப்பு குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த இரா சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனநாயக அமைப்பு என்றும் அதில் கருத்து மாறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும் அதை பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறினார்.

தமிழ் மக்கள் பேரவையை அமைப்பதும் செயற்படுவதும் ஜனநாயக உரிமையின்பாற்பட்ட செயற்பாடுகள் என்று தெரிவித்த சம்பந்தன், அந்தப் பேரவையில் இருப்பவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி வி விக்னேஸ்வரன் தவிர்த்த மற்ற தலைவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.

அதேசமயம் அவர்கள் அனைவருக்கும் தமது கருத்துக்களை சொல்வதற்கு போதிய உரிமைகள் இருப்பதை தாம் மறுக்கவில்லை என்று கூறிய சம்பந்தன், இந்தப் பேரவையின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பது அத்தியாவசியம் என்று தாம் நம்புவதாகவும், அதற்கு மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயல்களுக்கு (இவர்களால்) குந்தகம் ஏற்படுமாக இருந்தால் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதாகவே அமையும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151226_tnasambandhan

சம்பந்தர் நிதானமாக காய்களை நகர்த்துகின்றார்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சனநாயக வாதியான சம்.. திருகோணமலையில் இன்னொருவரை நிறுத்திட்டு தமிழ் மக்களின் முன் வேறு பகுதியில் தேர்தலில் நிற்கட்டும் பார்க்கலாம். அதுவும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகளின் அடையாளத்தை சுமக்காமல். அப்படி நின்று வென்று காட்டிட்டு இவர் உதைச் சொல்லனும்.. மற்றவையைப் பார்த்து.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகளின் அடையாளப்படுத்தலுக்குள் பதுங்கி கிடந்து கொண்டு மக்கள் அதுக்குத்தான் வாக்குப் போடுவினம் என்று தெரிந்து அதுக்குள்ள கிடந்து கொண்டு.. வெட்டி வீரம் பேசுவதால்.. உங்களுக்கெல்லாம் மக்களின் ஏகோபித்த அங்கீகாரம் இருக்கென்று அர்த்தமில்லை மிஸ்டர் சம்பந்தன்.

ஏனெனில்.. புலி என்ற அடையாளத்தோடு.. கூட்டமைப்பில் நின்றவர்கள் உங்களைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் பெற்று அமோக மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கினம். இதுக்கு உங்க பதில் என்ன மிஸ்டர் சம். tw_blush:

எலும்பில்லாத நாக்கால்.. எதுவும் பேசலாம் சம். யதார்த்தம் என்பது உங்கள் வார்த்தையில் இல்லை. அதுதான் உங்களின் அரசியல் கவலைக்கிடமான நிலையை அடையக்காரணம். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகளின் அடையாளத்தை சுமக்காமல். அப்படி நின்று வென்று காட்டிட்டு இவர் உதைச் சொல்லனும்.. மற்றவையைப் பார்த்து.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகளின் அடையாளப்படுத்தலுக்குள் பதுங்கி கிடந்து கொண்டு மக்கள் அதுக்குத்தான் வாக்குப் போடுவினம் என்று தெரிந்து அதுக்குள்ள கிடந்து கொண்டு..

கஜேந்திரகுமார் தேர்தல்களில் தொடர்ந்தும் தோற்று வருவது இந்த "புலிகளின் அடையாள படுத்துதல்" கிடைக்காத காரணத்தால் என்று சொல்கிறீர்களா? 

அப்படியானால் இனிமேல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களுக்கு "புலிகள்" என்றாகி விட்டதா?

இந்த வளமாக போனால் ... இனி தமிழ் தேசிய தலைவராக இலங்கையின் எதிர்கட்சி தலைவர் ....

அப்படியானால் எப்படி நாங்கள் இவரிடம் ஜனநாயகத்தை எதிர் பார்க்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Jude said:

கஜேந்திரகுமார் தேர்தல்களில் தொடர்ந்தும் தோற்று வருவது இந்த "புலிகளின் அடையாள படுத்துதல்" கிடைக்காத காரணத்தால் என்று சொல்கிறீர்களா? 

அப்படியானால் இனிமேல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களுக்கு "புலிகள்" என்றாகி விட்டதா?

இந்த வளமாக போனால் ... இனி தமிழ் தேசிய தலைவராக இலங்கையின் எதிர்கட்சி தலைவர் ....

அப்படியானால் எப்படி நாங்கள் இவரிடம் ஜனநாயகத்தை எதிர் பார்க்க முடியும்? 

ஆம் கஜேந்திரகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் மீண்டும் தெரிவாவார். தாயக மக்களைப் பொறுத்த வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகள் இனத்தை பலப்படுத்த தோற்றுவித்த ஒரு அரசியல் கட்டமைப்பாக இனங்கண்டு அதற்கு வாக்களித்துப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை சிதைக்க.. பலவீனப்படுத்த.. அதில் இருந்து பிரிந்து நிற்க.. எவர் முனைந்தாலும் அவர்கள் மக்களால் கண்டுகொள்ளப்படமாட்டார்கள் என்பது தான் மக்களின் நிலைப்பாடு. அது தெரிந்து தான் சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிழலில்.. தமிழரசுக் கட்சி என்ற அடையாளத்தில் அரசியல் செய்து வருகிறார். அவர் தமிழ் மக்களின் மனவோட்டம் என்ன என்று தெளிவாக தெரிந்து வைச்சுக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுங்கிக் கிடக்கிறார். ஆனால் கஜேந்திரகுமார் போன்றவர்கள்.. சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியாக தவறாக வழிநடத்துவதை இனங்காட்ட மக்களுக்கு உணர்த்த தன் பதவிகளை.. எதிர்கால அரசியலை தாரை வார்த்த ஒருவர்.

சம்பந்தனுக்கு திருமலையில் வீழும் வாக்குகள் வீழ்ச்சி என்பது.. சம்பந்தனை மக்கள் அடையாளம் காண முற்படுவதையும்.. புலி அடையாளத்தோடு கூட்டமைப்பில் நிற்பவர்கள் பெருமளவு வாக்குகளை மக்களிடம் வாங்கிக் குவிப்பதையும் பார்க்கும் போது மக்கள் எத்தகைய உணர்வோடு கூட்டமைப்புக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவு.

அதில் சம்பந்தன் கூறும் யதார்த்தம் என்பது வேறு. கூட்டமைப்பில் சங்கரிய நிறுத்தி சம்பந்தன் விளையாட்டுக் காட்டின போது மக்கள் அவரை நிராகரித்து அனந்திக்கு பெருமளவு வாக்கை போட்டு ஒன்றை இனங்காட்டினர். அது என்னென்பது சம்பந்தனுக்கு தெரியும். அதுதான் அவரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிழலுக்கு அப்பால் தன்னால் தமிழ் மக்களிடம் அரசியலை கொண்டு செல்ல முடியாது என்ற இயலாமையை இனங்காட்டி நிற்கிறது. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.