Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கான உதவிகளை சர்வதேசம் நிறுத்த வேண்டும்-ஜேர்மன் அமைச்சர் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா யாழ் கள ராஜ...ராஜ..ராஜ மார்த்தாண்ட..மந்திரிகளே... தந்திரிகளே...கப்பல் தமிழீழக் கடற்பரப்புக்குள் வந்து அதன் கடல் இறையாண்மைக்குள் நடத்தப்பட வேண்டிய வகையில் நடத்தப்பட்டு..கப்பல் பணியாளர்களும் வீடு போய்ச் சேர்ந்தாச்சு...! தமிழீழக் கடலிறையாண்மை பற்றி சொல்லி முடிக்கிறத்துக்கிடையில ஜேர்மனி தடை போட்டிட்டுது. அது கூட புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தில் பலாபலன் என்பதை பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து லிங் கொடுத்து சொல்ல வேணும்..! அப்பதான் தமிழ் தேசிய விசுவாச வேசத்துக்கு வலுச்சேர்க்கும்..! :huh::lol:

சிங்களவன் வெறுவாய் சப்பிறதுதான் தாக்க முடியல்ல என்றால்..இங்க கொஞ்சம் ராஜதந்திரம் பேசுறது சதத்திற்கும் பிரயோசனமாப் படேல்ல..! வேற தலைப்புக் கிடைக்கல்லப் போல...! சமாதானம் மாட்டுப் பட்டிருக்கிறார்..மிளகாய் அரைப்புக்கு..! பாவம்...அந்தாள் என்ன சொன்னாலும்..வேண்டாப் பொண்டாட்டிக் கதைதான்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா யாழ் கள ராஜ...ராஜ..ராஜ மார்த்தாண்ட..மந்திரிகளே... தந்திரிகளே...கப்பல் தமிழீழக் கடற்பரப்புக்குள் வந்து அதன் கடல் இறையாண்மைக்குள் நடத்தப்பட வேண்டிய வகையில் நடத்தப்பட்டு..கப்பல் பணியாளர்களும் வீடு போய்ச் சேர்ந்தாச்சு...! தமிழீழக் கடலிறையாண்மை பற்றி சொல்லி முடிக்கிறத்துக்கிடையில ஜேர்மனி தடை போட்டிட்டுது. அது கூட புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தில் பலாபலன் என்பதை பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து லிங் கொடுத்து சொல்ல வேணும்..! அப்பதான் தமிழ் தேசிய விசுவாச வேசத்துக்கு வலுச்சேர்க்கும்..! :huh::lol:

சிங்களவன் வெறுவாய் சப்பிறதுதான் தாக்க முடியல்ல என்றால்..இங்க கொஞ்சம் ராஜதந்திரம் பேசுறது சதத்திற்கும் பிரயோசனமாப் படேல்ல..! வேற தலைப்புக் கிடைக்கல்லப் போல...! சமாதானம் மாட்டுப் பட்டிருக்கிறார்..மிளகாய் அரைப்புக்கு..! பாவம்...அந்தாள் என்ன சொன்னாலும்..வேண்டாப் பொண்டாட்டிக் கதைதான்..! :lol::lol:

சொல்லுங்கோ நெடுக்கு நீங்க சொன்னாலும் சமாதானம் சொன்ன மாதிரித்தானே.

அது என்ன சாணக்கியமும், நீங்களும் தான் இந்த களத்தில் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனாவாதிகள் போல் இருக்கே எமதனைவரது அறிவுக்கும் எட்டாத விடயங்கள் உங்கள் இருவர் அறிவுக்கும் தான் எட்டுகிறதே.

அதன் இரகசியம் தான் என்னவோ?

பணத்துக்கு வடியும் வீணிகள் எம்முதுகில் மிளகாய் அரைக்க ஆசைப்படலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அட சாணக்கியம்; உங்கட அபிப்பிராயத்தைக் கேட்பதற்கு யாழ்களம் ஒன்றும் உங்கள் வாசல்-படியில் வந்து பழிகிடக்கவில்லை.

யார் பதிவு, யாருக்கு குப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றது. என்று அறியமுடியாமைக்கு நாம் ஒன்றும் பாலர் பராயத்தவரும் அல்ல.

உமது பதிவுகளின் ஆரம்பத்திலேயே அதன் தவறான நடத்தைபற்றிய எனது கருத்துக்களை அப்போதே தந்திருந்தேன். பதிலை தனிமடலிலேயே நீர் அனுப்பி இருந்தீர்.

குருவிகளை அறிய; 20,000 க்கும் அதிகமான பதிவுகள் தேவையாய் இருந்தது களத்துக்கு அதன் குணம் அறிய,

ஆனால் அதன் ஒரு சில கருத்துக்களிலேயே களவாசகர்கள் புரிந்திருப்பர் அதன் அடிமனதின் வஞ்சங்கள் என்ன என்று அறிவதற்கு.

என்னடா ராசா சமாதானத்தின் துன்பங்கள் உமதென்று பாவித்து வக்காலத்துக்கு வருகிறதோ உமது மனிதாபிமானம்.

சமாதனத்தின் பதிவுகளின் வஞ்சகத்தனம் யாவராலும் புரிந்து கொள்ள இலகுவாக இருந்தும்,

சாணக்கியத்துக்கோ, நெடுக்குக்கோ புரியமுடியாமையின் இரகசியம் என்னவாம்?

அந்தக்கருத்துவாதம் தான், உங்கள் மனங்களுக்கு பிடித்தமானவையோ?

தன்மானத்தின் வாழ்வு செருப்பாகிப் போனாலும், உயிரை வயிற்றுக்குள்ளே வைத்து காக்கின்ற அந்த இரகசியம் தானோ?

தேவன்..நீங்கள் ஒரு கருத்தாளரை வெறுக்கிறீர்கள் சினக்கிறீர்கள் என்பதற்காக அடுத்தவரும் அப்படிச் செய்ய வேண்டும் என்பது ஒன்றும் இங்கு சட்டமில்லை. சமாதானத்துக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். அது தலைவரின் உரை தொடர்பிலும் இருக்கலாம் சம காலத்தில் ஈழத்தில் நிகழும் இராணுவ அரசியல் நிலவரங்களின் போக்கில் தொடர்பிலும் இருக்கலாம். வாகரையில் இருந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைத் தேடி வருகின்றனர் எங்கிறது அரசு. கண்காணிப்புக் குழுவோ மக்கள் சுதந்திரமாக இடம்பெயர அனுமதிக்க வேண்டும் எங்கிறது. புலிகளோ வாகரையைக் கைப்பற்ற நினைத்தால் பதிலடி எங்கின்றனர். மக்கள் இடம்பெயர்வு தொடர்பில் அண்மைய நாட்களாக புலிகள் எதுவும் சொல்வதில்லை...அல்லது மறைக்கப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் இந்த ஒரு விடயத்திலேயே பல முரண்பாட்டுக் கோணங்கள் இருக்கும் போது அதைப் பற்றி எழும் சந்தேகங்களை வினவுவதும் விடை தேடுவதும் சுட்டிக்காட்டுவதும் தவறாக கருத்தியல் சுதந்திர எல்லைக்கு அப்பாலானதாக நாமெல்லாம் பார்க்கவில்லை. பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கடத்தலில் கூட பல முரண்பாட்டுத் தகவல்கள்..??! இவை மக்கள் விடயங்கள் தொடர்பில் சந்தேகப் பார்வை பார்க்கத் தூண்டுமா இல்லையா? சந்தேகிக்கும் படி நடந்து கொண்டு என்ன சந்தேகிக்கிறாய்..உனக்கு சந்தேகப்புத்தி என்று திட்டுவது போல இருக்கிறது சிலரின் செயற்பாடுகள். சிலர் தங்களின் செயற்பாடுகள் சந்தேகத்தின் மூலம் கண்டறிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் சந்தேகத்தைக் குற்றமாகவும் கண்டு புலம்புகின்றனர். அப்படிப் புலம்புவர்கள் மீதே நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் செயற்பாடு சந்தேகிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக நீ சந்தேகப் பேர்வழி என்பது மன்மதன் படத்திலும் அழகாகக் காட்டி இருந்தனர். அந்த நிலையில் பலர் இங்கும் அரசியல் தளத்திலும் உள்ளனர்..! சந்தேகம் ஏற்படாத வகையில் வெளிப்படையாக நடந்து கொண்டால் மக்கள் ஏன் சந்தேகிக்கப் போகின்றனர். ஏன் சந்தேகிப்பவர்களைக் கடிய வேண்டும்..!

உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ளலாம். உங்களால் என்ன இங்குள்ள எந்தப் பயில்வானாலும் தனி மனிதர்களை எடை போட முடியாது. உங்களுக்கு உங்கள் கருத்தைச் சொல்ல அனுமதி உள்ளது போல் அவர்களும் தங்கள் உரிமைகளைப் பாவித்துக் கொள்கின்றனர். தமிழ் தேசிய ஆதரவு என்பது கண்மூடித்தனமானதாக இருக்க வேண்டும் என்பதிலும் சம கால அரசியல் இராணுவ நகர்வுகள் தமிழ் தேசிய அடிப்படைக்கு அப்பால் வைக்கப்பட்டு கலந்துரையாடப்படுவதே மக்கள் மத்தியில் எழும் எதிர்வினைக் கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கும்.

வெறுமனவே செய்திகளைத் தொகுத்து நான்கு தமிழ் சொல்லுக்கு (தெளிவான தமிழ் சொல்லிருக்க அநாவசியத்துக்கு ஆங்கிலத்தில் சொல்லெழுதி அதைக் கட்டுரை என்று போட என்ன ஆழமான கட்டுரை என்று வெறும் வார்த்தைகளால் புளுகித் தள்ளிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்காதீர்கள். புறக்கணிப்போம் சிறீலங்கா என்ற தலைப்பு இங்கு இடப்பட்டு காலாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. ஆனால் நடைமுறை உலகில் அதன் தாக்கம் என்பது யாழ் கள ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது. இதிலிருந்தே யாழ் களமும் அதன் கருத்தியலும் பல சந்தர்ப்பங்களில் நடைமுறை உலகினின்றும் விலகி உள்ளது அல்லது அதில் தாக்கம் செய்ய முடியாதுள்ளது என்பதைச் சுட்டி நிற்கிறது. இந்த நிலை மாற வேண்டின்..யாழ் களம் பன்முகக் கருத்தியலையும் முரண்பாடுகளுக்கும் அவற்றிற்கான தீர்வுகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். புறக்கணிப்பு சிறீலங்கா பற்றி பலருக்கு பல முரண்பாடுகள் இருந்தும் அவர்கள் அதை இங்கு குறிப்பிட்டால் தமிழ் தேசியத் துரோகிகள் ஆக்கப்பட்டு விடுவரோ என்ற எண்ணத்தில் மெளனிகளாக திட்டங்களினின்றும் விலகி இருந்து கொள்கின்றனர். இதனால் கிடைப்பது என்ன...??! திட்டங்கள் செயற்பாடுகள் இன்றி கிடப்பில் கிடக்க சிலர் அதை வைத்து சுயவிளம்பரம் செய்து கொள்கின்றனர்..அவ்வளவே. இதனால் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் தான் ஏதும் கிடைத்தது உண்டா..??!

யாழ் களம் இன்று தனிநபர்களின் கருத்துக்களுக்கான விளக்க களமாக அன்றி சிலரின் சில விடயங்களை அல்லது முயற்சிகளை விளம்பரப்படுத்தும் இடமாக மட்டுமே தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சமாதானம் போல பல சந்தேகங்களுடன் பலர் தமிழர்கள் மத்தியில் இருக்கின்றனர். இவர்களில் புத்திஜீவிகள் தொடங்கி மாற்றுக் கருத்தாளர்கள் உள்ளடங்க பாமரன் வரைக்கும் உள்ளனர்.

குருவிகள் சாணக்கியன் சமாதானம் பற்றிய உங்களின் மதிப்பீட்டையே நாம் செய்ய வேண்டும் என்ற நிலையில்லை. அவர்களுக்கு உள்ள சுயத்தையும் கருத்தியல் சுதந்திரத்தையும் நாம் மதிக்கின்றோம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்கள் எழுப்பவும் பதில் தேடவும் அவர்கள் கருத்துக்களத்தைப் பாவிக்க முயல்கின்றனர். அதற்காக அவர்கள் மாற்றுக் கருத்தாளர்கள் என்ற அடைமொழியிடப்படுதலும்..நக்கு.. எலும்பு பொறுக்கிகள் என்பதுவும்...ஒன்றும் ஆரோக்கியமான கருத்துக்களத்தின் கருத்துக்கள் அல்ல. ஜனநாயக உலகில் அனைவருக்கும் தத்தமது கருத்துக்களை வெளியிடவும் பரப்பவும் வழி உண்டு. மக்களுக்கு பாதிப்பு இல்லாத எல்லை வரை அது அனுமதிக்கப்படும். ஜனநாய கருத்தியல் பல விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமுண்டு. சோசலிசத்துக்கு ஒரு ஜனநாயகம் போல ஈழத்து அரசியலிலும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். அதை வெளியிடுவது தவறன்று. ஆனால் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமான கருத்து சுதந்திரப் பறிப்பே ஆபத்தானதுடன் மக்களை எதிர்வினை நோக்கி சிந்திக்கவும் தூண்டுகிறது.

ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழீழம் தான் தீர்வு என்பது ஒரு சாராரது நிலைப்பாடு. இல்லை தமிழீழம் சாத்தியப்படாது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரமுள்ள ஒரு தீர்வையே காண முடியும் என்பது இன்னொரு சாராரின் நிலைப்பாடு. இல்லை..சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்குவதன் மூலமும் புலிகளை அழிப்பதன் மூலமுமே பிரச்சனைக்குத் தீர்வு என்பது டக்கிளஸ் கருணா ஆனந்த சங்கரி போன்றவர்களினதும் அவர்கள் சார்ந்தோரினதும் நிலைப்பாடு. குறித்த நிலைப்பாடுகளில் அவரவற்கு தெளிவு அல்லது ஊக்கம் கிடைக்கலாம். மக்களைப் பொறுத்தவரை நீடித்த நிம்மதியான அமைதியான உரிமை மதிப்புள்ள வாழ்வு என்பதுவே நிலைப்பாடு. இவை ஒன்றும் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டில்லையே.

பெண்கள் ஆண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளை கீழ்த்தரமான சிந்தனை வடிவில் கூட பேச வேண்டும்..ஓரினச் சேர்க்கை என்பது சாதாரண மனித நடைமுறை..மதங்கள் என்பது தூசணத்தைப் போதிக்கின்றன...பெரியார் என்பவர் எல்லோருக்கும் பகுத்தறிவு புகட்டிய பெரியவர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய முடியும் என்றால்..ஏன் அரசியலில் மாற்று நிலைபாடுள்ளவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லக் கூடாது...???! ஆக தமிழர்களின் சிந்தனை என்பது கூட தமிழ் தேசியம் விடுதலைப் புலிகள் சார்ந்து இருக்க வேண்டும் இன்றேல் அது ஏற்புடைய சிந்தனையல்ல என்ற நிலைப்பாட்டை இங்கு நிறுவ நினைப்பதுவே நியாயம் என்ற காட்டல் எம்மைப் பொறுத்தவரை ஏற்புடையதாக இல்லை.

ஜனநாயக அரசியல் என்பது பல கட்சி சார்ந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் சில தனித்துவமான கொள்கைகள் இருக்கும். அந்த வகையில் முரண்பாடுகள் இருக்கும். தமிழ் தேசியம் என்பதன் அடிப்படையை பொதுவாக மாற்றுக் கருத்தாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அண்மையில் இந்திய பிஜேபி இள கணேசன் கூறுகையில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதில் எனக்கு முரண்பாடில்லை ஆனால் அது பெறப்படும் முறையில் விடுதலைப்புலிகளின் வன்முறை ரீதியான சில அணுகுமுறைகளின் இருந்து முரண்படுகின்றேன் என்றார். மற்றும் படி விடுதலைப் புலிகளின் ஈழத்தமிழர் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டைத் தானும் ஆதரிப்பதாகக் கூறி இருந்தார். உங்கள் சிலரின் கருத்துப்படி இள கணேசன் தமிழ் துரோகி என்று கோஷிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவரும் ஈழ ஆதரவாளர்..விடுதலைப் புலிகள் ஆதரவாளர்தான். இப்படி ஈழத்தமிழர்கள் மத்தியிலும் சில அணுகுமுறைகள் தொடர்பில் சந்தேகங்கள் முரண்பாட்டு நிலைப்பாடுகள் எழுவது சகஜம். ஆனால் அதை இங்கு டக்கிளஸ் கருணா செய்யும் துரோக அரசியலுக்கு நிகராக்கி அப்படியான நெகிழ்வுப் போக்குள்ள கருத்தாளர்களையும் துரோகிகள் ஆக்குவது எம்மைப் பொறுத்தவரை மிகவும் அபாண்டமான செயல். அதுமட்டுமன்றி தமிழ் தேசிய நேரடி ஆதரவு என்ற நிலைப்பாடுள்ள பலரும் பொய்யர்கள் போலி வேசக்காரர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.

அந்த வகையில் உங்கள் கருத்தை வைத்து உங்களை எடைபோட நாம் தயார் இல்லை. ஆனால் வைக்கப்படும் கருத்தில் நாம் முரண்பட்டால் ஏன் எதற்கு என்ன நோக்கம் வேண்டி முரண்படுகின்றோம் என்பதைச் சொல்லத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அந்த அளவுக்குப் பொறுமையுள்ள கருத்தாளர்கள் வெகு சிலரே இங்குண்டு. சிலர் தங்களை தமிழ் தேசிய ஆதரவுத் தளத்துக்குள் வைத்துக்கொண்டு தாம் சொல்வதெல்லாம் விடுதலைப்புலிகளாலும் தமிழீழத்தின் தேசியத்தாலும் அங்கீகரிப்பட்ட கருத்துக்கள் போல தோற்றம் காட்ட விளைகின்றனர். இந்த ஆபத்துப் பேர்வழிகளைக் காட்டிலும் சமாதானம் சாணக்கியம் குருவிகள் போன்ற நேரடியாக தங்கள் எண்ணங்களை அல்லது சந்தேகங்களை அல்லது தமக்குள் தோன்றும் விளக்கங்களை கருத்துக்களாகப் பதிந்து அவற்றிற்கு கருத்துக் கேட்பதை நாம் கருத்தியல் உற்சாகமுள்ள நிலையாகக் கருதுகின்றோம். அவற்றை ஆதரிக்கவும் செய்கின்றோம். அதேபோல் நேரடியான அவசியமான தமிழ் தேசிய ஆதரவுக் கருத்துக்களையும் வரவேற்கின்றோம். அதற்காக அக்கருத்துக்களை வைப்பவர்களை தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்று முத்திரையிட பந்தா பண்ண அவர்களுக்கு வால் பிடிக்க நாம் தயார் இல்லை. இது கருத்துக்களம்..கருத்துப் பற்றிப் பேசும் களம்..ஆட்களை அடையாளம் காண்பதற்கு அமைந்த சரியான களமுமல்ல...இது முறையும் அல்ல. :huh::lol:

Edited by nedukkalapoovan

நெடுக்கால் போவான் அவர்களே, உங்கள் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகின்றேன். விரிவாக எழுதியமைக்கு நன்றி.

திரு தேவன் அவர்களே,

குருவிகள் என்பவரை மாற்றுக் கருத்து (உங்கள் கருத்திற்கு எதிரான கருத்து) எழுதியதற்காக துரத்தியதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் நீங்களே, பின்னர்...

அது என்ன சாணக்கியமும், நீங்களும் தான் இந்த களத்தில் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனாவாதிகள் போல் இருக்கே எமதனைவரது அறிவுக்கும் எட்டாத விடயங்கள் உங்கள் இருவர் அறிவுக்கும் தான் எட்டுகிறதே
என்று வேறு சொல்கிறீர்கள்!

நீங்கள் கருத்தொன்றை கூற

அதற்கு ஒருவர் "ஆமாம் அது சரி" என்றும்,

மற்றயவர் "அது மிகவும் சரியானதொன்று" எனவும்

இன்னொருவர் "yes, you are absolutely right!" என்றும்

மற்றுமொருவர் " :huh: " என்றும் கூறும் சிறிய வட்டத்தை தானா "எமதனைவரது அறிவுக்கும்" என்று குறிப்பிடுகின்றீர்கள்?

இவ்வாறானதோரு நிலமை கருத்துக்களத்திற்கு(?) ஆரோக்கியமானதா?

இதைவிட உங்கள் பின்வரும் சில கருத்தாளம் மிக்க பதிவுகளுக்கு என்னால் பதில் தர முடியாமைக்கு வருந்துகின்றேன்.

...பணத்துக்கு வடியும் வீணிகள் எம்முதுகில் மிளகாய் அரைக்க...

...உங்கட அபிப்பிராயத்தைக் கேட்பதற்கு யாழ்களம் ஒன்றும் உங்கள் வாசல்-படியில் வந்து பழிகிடக்கவில்லை...

...தன்மானத்தின் வாழ்வு செருப்பாகிப் போனாலும், உயிரை வயிற்றுக்குள்ளே வைத்து காக்கின்ற அந்த இரகசியம் தானோ?...

நீங்கள் கூறியபடியே "யாருடையது பதிவு. யார் குப்பை கொட்டுவது" என்பதை வாசகர்களே தீர்மாணிக்கட்டும்.

Edited by saanakiyan

  • தொடங்கியவர்

பிபிசிக்கும் இங்கிலீசு சரியாத்தெரியாது போல தலைப்பை இப்படிப் போட்டிருக்காங்கள். எல்லோருக்கும் தெரிவது உங்கள் சிலருக்கு மட்டும் ஏன் வேறாகத் தெரியுது என்று தேவன் கேட்டத்தில், எல்லோருக்கும் என்பதில் பிபிசியும் அடங்கும்.

தலைப்பை பற்றிக் கதைக்காம ஏன் ஆளாளுக்கு முதுகு சொறியிறியள்.உங்களுக்குச் சொறின்ச்சாத் தான் மாறி மாறிச் சொறிவியள் போல. நீங்கள் மாறி மாறி சொறின்ச்சா அது கருத்தாடல். தலைப்புக்கும் எழுதுபவற்றிற்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

Germany suspends Sri Lankan aid

More than 3,000 people have died in the conflict this year

A German minister has said the country has frozen aid to Sri Lanka because of the continuing violence between the government and Tamil Tiger rebels

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6208517.stm

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியபடியே "யாருடையது பதிவு. யார் குப்பை கொட்டுவது" என்பதை வாசகர்களே தீர்மாணிக்கட்டும்.

அதுதானே... ஏன் அங்கலாய்ப்படுவான்... ஏன் கச்சை கட்டவேண்டும்??

விரும்பினால் ஒரு வாக்கெடுப்பு போட்டுப் பார்க்கிறதுதானே!! ஒருவரே பல வாக்குகள் போட வசதி இல்லையா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே... ஏன் அங்கலாய்ப்படுவான்... ஏன் கச்சை கட்டவேண்டும்??

விரும்பினால் ஒரு வாக்கெடுப்பு போட்டுப் பார்க்கிறதுதானே!! ஒருவரே பல வாக்குகள் போட வசதி இல்லையா என்ன?

தலைப்பை பற்றிக் கதைக்காம ஏன் ஆளாளுக்கு முதுகு சொறியிறியள்.உங்களுக்குச் சொறின்ச்சாத் தான் மாறி மாறிச் சொறிவியள் போல. நீங்கள் மாறி மாறி சொறின்ச்சா அது கருத்தாடல். தலைப்புக்கும் எழுதுபவற்றிற்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

இப்படியான இரண்டும் கெட்டான் கருத்துக்கள் தான் தேவன் போன்றவர்கள்...குருவி காக்கா பல்லி என்று கொண்டு தனிநபர்களைப் பற்றி தலைப்போடு கருத்துப் பகர அறிவு வளர்க்குதாக்கும்..!

பிபிசிக்கும் இங்கிலீஸ் படிப்பிக்கப் போயினம்..என்பது சுவாரசியமாகத்தான் இருக்குது. சில பேருக்கு நினைப்பு அப்படி...இதுகளை எல்லாம் பிபிசி தூசுக்கும் மதிக்குமோ தெரியல்ல...! :huh::lol:

சமாதானத்துக்கு ஒரு ? ஓ போடவேணும்... அருமையா அவிக்கிறார்... பாப்பம் எவ்வளவு காலம் எண்டு...!

தனிநபர்களை பற்றி யாரப்பா இங்கை சும்மா இழுக்கிறது...??? வாக்கெடுப்பு நடத்தி போட்டு வேற பேரில வாறவை எண்டு சொன்னால் என்க்கு வெக்கமாய் இருக்காதா..??

நான் இங்கை குறுக்கால, நெடுக்கால எல்லாம் போகாமல்.. :huh: . நேரடியா இல்லாவிட்டாலும் வளைஞ்சு நெளிஞ்சு "வயித்தால போவானாய்" வந்து கருத்து சொல்லலாம் எண்டு இருக்கிறன்...!

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியின் வார்த்தை பிரயோகங்கள் எப்படி இருந்தாலும், ஜேர்மன் அமைச்சரின் இந்த அறிக்கை ஸ்ரீலங்கா அரசுக்கு பாதகமானது தான். இராஜதந்திர சம்பிரதாயங்களை கருத்தில் கொண்டு ஒரு அரசுக்கு எதிரான ஆரம்ப அறிக்கைகள் ஒரு soft warning உடன் தான் வெளிவிடப்படும்.

ஸ்ரீலங்காவிற்கான 19 மில்லியன் Euro இந்தோனேசியாவிற்கு திருப்பி விடப்பட்டு இருக்கிறது என்று ஜேர்மன் உத்தியோக பூர்வமாக அறிவித்திருப்பது, ஸ்ரீலங்கா அரசிற்கு பல்வேறு மட்டங்களில் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஜேர்மனின் பொருளாதார உதவிகள் இடைநிறுத்தத்தை தடுக்க மகிந்தர் தன் நேரடி தூதர்களை அனுப்பி ஜேர்மன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையிலும், ஜேர்மனின் இந்த முடிவு, மகிந்தரின்

இராஜதந்திர சறுக்கல் தான்.

ஜேர்மன் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே Highest GDP கொண்ட பொருளாதார வல்லரசு. ஜேர்மனின் இந்த முடிவு நிச்சயம் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே சில தாக்கங்களை ஏற்படுத்தும். அதை அடுத்து வரும் மாதங்கள் நிரூபிக்கும்

ஆழிப் பேரலை அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்புக்கான ஐநா விசேட பிரதிநிதி முன்னாள் அமெரிக்க அதிபர் கிலிங்டன் தமிழ்நாட்டில் வைத்து தெளிவாகத்தானே சொன்னார். சிறீலங்கா அரசு ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்தைச் சரிவரக் கையாளவில்லை என்றும் குறிப்பாக தமிழர் பகுதிகள் பல நிவாரண நடவடிக்கைகளுக்கு சரிவர முகங்கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு சிறீலங்காவுக்கான விஜயத்தை ரத்துச் செய்திருந்தார். அந்த வகையில் ஜேர்மனியின் முடிவு சர்வதேச அவதானங்களின் படி அமைந்திருக்கிறது. ஆக சிறீலங்கா அரசின் பாரபட்சமான அணுகுமுறையை சர்வதேசம் விளங்கிக் கொள்ள முனைந்திருக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புக்களையும் வன்முறைத் தணிப்பையும் அது எதிர்பார்க்கிறது. ஏலவே புலிகள் மீது தடை போட்டு விட்டதால் எனியும் தடை போட முடியாது. ஆனால் அழுத்தங்கள் இரு பக்கமும் வரும்..என்பதைப் புறக்கணிக்க முடியாது. உதாசீனம் செய்யவும் முடியாது..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்..நீங்கள் ஒரு கருத்தாளரை வெறுக்கிறீர்கள் சினக்கிறீர்கள் என்பதற்காக அடுத்தவரும் அப்படிச் செய்ய வேண்டும் என்பது ஒன்றும் இங்கு சட்டமில்லை. சமாதானத்துக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். அது தலைவரின் உரை தொடர்பிலும் இருக்கலாம் சம காலத்தில் ஈழத்தில் நிகழும் இராணுவ அரசியல் நிலவரங்களின் போக்கில் தொடர்பிலும் இருக்கலாம். வாகரையில் இருந்த மக்கள் இராணுவக் தவறாக

................................................................

கருத்தாளரில் வெறுப்பு ஏன்?

அவர் எட்டப்பவாதப் பாணியில் தம் கருத்துக்களின் நடத்தையை வெளிப்படுத்தியமைதானே காரணம்.

இதை தெளிவதற்கு அதி புலமை ஒன்றும் வேண்டாமையினாலேயே அனைவராலும் அத்தகைய பதிவுகள் இலகுவாக இனங்காணப் படுகிறது.

சமாதானம் விற்க விரும்பும் சந்தேகங்கள் என்ன?

புலிகளின் செயற்பாடுகளை மக்கள்அறிவு சந்தேகக் கண்கொண்டே பாற்க்க வேண்டும்,

இல்லை என்றால் எமது போராட்டம் தவறான வழிக்கு கொண்டு செல்லப்படும் என்பதா?

வாகரை விவகாரங்கள் சந்தைக்கு வரமுதலே சமாதானத்தின் நடத்தை என்ன என்பதை களம் படித்துவிட்டதே.

சம்பவங்களை சந்தேக அறிவால் நெறுப்பது குற்றம் எனப்படுகிறதா?

அல்ல அரச உளவியல்போர்; தரகர்களால் விற்கப் படும் சந்தேகங்கள் அபத்தமானவை எனப்படுகிறாதா?

புறக்கணிப்போம் சிறீலங்காவை என்ற தலைப்பு காலாண்டாக என்னத்தைக் கிழித்துக் கொண்டிருக்கிறது களத்தில்.

கையால் பிடித்தமாதிரி வருத்தைதை குணமாக்க, யாழ்களம் மருந்து, மாத்திரை ஒன்றும் எவருக்கும் கொடுக்க வில்லையே,

இது ஒரு நீண்டகாலத்துக்குரிய வைத்திய முறை, அதன் பலன்களும் மெதுவாகத்தான் வளர்ந்து செல்லும் ஐயா!

சோத்துக்கு தன்னையே அடைமானம் வைப்பவனின் கருத்து, தேசநலனுக்கு சோறுபோடும் என்று சொல்கிறதா ஜனனாயகம்?

எட்டப்பவாதம் ஒன்றின் ஜனனாயகப் புலம்பல் எப்படி இருக்குமோ அப்படியேதான் களத்துக்கு வரும் சில பதிவாளரின் புலம்பல்கள் இருக்கும் போது, அதை இன்ங்காணுவதற்கு சாமானிய அறிவே போதுமானது.

கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருந்தால், உலகம்; உரிமை மதிப்பான வாழ்க்கையை ஒரு இனத்துக்கு வாங்கிக் கொடுத்துவிடுமா?

குட்டையை குளப்பி நலன்களை கொத்தக் காத்திருக்கும் இன்றய உலகப் போக்குக்கு, இப்படி ஒரு முகமூடி கொடுக்கிறீர்களா நியாயமானதா இது?

அனைத்து கருத்தாளர்களயும் நான் மூன்று வகுப்புக்குள் வகைப்படுத்துகிறேன்.

புலி ஆதரவாளர் தளம்

ஆதரவின் காரணம் தேசமீட்ப்புக்கு தம்மை முற்றாக அர்ப்பணித்தவர்கள் என்ற நம்பிக்கை.

காலச் சோதனைகள் அவர்கள் இலட்சியப் பற்றை சந்தேகக் கழும்பின்றி நிரூபித்து விட்டதாக நம்புபவர்கள்.

அரசவாதத்தில், நம்பிக்கைகள்; வெறும் காகிதச்சடங்கு வரைக்கும் தான் வளரும் பின் எல்லாம் கிழித்தெறியப்படும். அப்போது, ‘’கண்டிக்கிறோம்’’ என்ற சொல்லைக்கூட உபயோகிக்காமல், உலகம்; ‘’வருந்துகிறோம்’’ என்றே சொல்லப் போகிறது.

புலிகள் இல்லை என்றால், முழு உலகமும் ஆளாளுக்கு தமிழனுக்கு முழங்கை காட்டும், என்பதை ஆணித்தரமாகவே நம்புங்கூட்டம்.

புலி எதிர்ப்பாளர் தளம்

இவர்களில் புலிவாதத்தால் தண்டனை பெற்றவர்கள், துரோக நடத்தைகளால் உறவுகளை இழந்த குடும்பங்கள்.

பொதுநன்மைகளுக்கு துளிவியர்வை சிந்த உடன்பாடில்லா கூட்டம்.

அரசவாதத்தின் எலும்புத் துண்டுகளுக்கு தவம் கிடக்கின்ற பிழைப்புக்கள்.

இவர்களின் திருவாய்கள் எல்லாம் அரசியல் பேச துவங்கினால், எப்படி ஐயா அரசியல் நாற்றமெடுக்கும், இந்த இழவுகளை எல்லாம் கூடவா விளங்கிக் கொள்ள முடியாத அளவு உங்கள் புத்திக்கு அறிவுப் பஞ்சம்?

தமிழ் தேசிய நலன் விரும்பிகள் தளம்.

இவர்களுக்கு புலிகளை பிடிக்காது என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி என்றால் அரசவாதம் தமிழர்களுக்கு நியாயத்தை வளங்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்களா?

இல்லை உலகம் நியாயத்தை தட்டிக்கேட்க்கும், இல்லை என்றால் பறித்துக் கொடுக்கும் என்ற கனவில் மிதப்பவர்களா?

புலிகளின் கொள்கைகளில் எங்கே பிடிப்பில்லை?

கருத்து சுதந்திரம் அவர்கள் அதிகாரத்துக்குள் மட்டமானது என்று அங்கலாய்க்கிறார்களா?

இதைப் பற்றி எங்கள் அரசவாதம் கூட அல்லவா கவலைப்படுகிறது. கிராமங்காளின் மீது படுகொலையை கட்டவிள்த்து விடும்போது வராத அந்தக்கவலைகள் புலிகளின் நடவடிக்கைகளின் மீது மட்டும் சினக்கிறதே?

நீலன்வாதத்தின் நீலித்தனமான கவலைகள் போல் தெரியவில்லையா ஐயா இவைகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசிக்கும் இங்கிலீஸ் படிப்பிக்கப் போயினம்..என்பது சுவாரசியமாகத்தான் இருக்குது. சில பேருக்கு நினைப்பு அப்படி...இதுகளை எல்லாம் பிபிசி தூசுக்கும் மதிக்குமோ தெரியல்ல...! :huh::lol:

CNN, BBC யிடம் மதிப்பு வாங்குவதுதானோ போராட்டத்தின் இலட்சியம்.

அரசு என்றால் அதுக்கு எது, எது முடியும் என்று நீங்களா எங்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

எல்லா ஊடகங்களும் தத்தம் தேசிய நலன்களுக்கே குப்பை கொட்டிக் கொண்டுருக்கின்றன,

வெறும் விளம்பரங்களில் மட்டும்தான் அவைகளின் மனிதாபிமானம் வாழ்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜேமனுக்கெதிரான போரில் BBC யின் நடத்தை நாறிப் போய் இருக்கவில்லையா?

ஆமாம் புஸ் அங்கிளுக்கும், அவருக்கு கால் பிடித்துவிடும் ரொனி அங்கிளுக்கும் எம்மதிப்பு தூசாகிப் போனால் எம் பிழைப்பு நாறித்தான் போகுமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் , கருணாவின் வீர பிரதாபங்களை புலம்புகின்றார் போலும். வாழ்க உங்களின் நாச தொண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இது கருத்துக்களம்..கருத்துப் பற்றிப் பேசும் களம்..ஆட்களை அடையாளம் காண்பதற்கு அமைந்த சரியான களமுமல்ல...இது முறையும் அல்ல.

கருத்துக் களத்தில் வருபவர்களை யாரென்று இனங்காண வேண்டியதில்லை; எனினும் எழுதும் கருத்துக்கள் ஒருவரின் பின்புலத்தையும் நோக்கத்தையும் காட்டிக் கொடுத்துவிடும்..

சந்தேகங்கள், விவாதங்கள் ஆரோகியமானதே. ஆனால் பட்டிமன்றப் பாணியில் ஒருவர் தன்னுடைய கருத்துத்தான் சரியானது, அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ரீதியில் எழுதுவதும் சரியல்ல. மேலும் தங்களை யாரென்று இனக்காட்டத் தவறுபவர்கள் அறிவுரைகள் சொல்லும் தகுதியற்றவர்கள்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் களத்தில் வருபவர்களை யாரென்று இனங்காண வேண்டியதில்லை; எனினும் எழுதும் கருத்துக்கள் ஒருவரின் பின்புலத்தையும் நோக்கத்தையும் காட்டிக் கொடுத்துவிடும்..

சந்தேகங்கள், விவாதங்கள் ஆரோகியமானதே. ஆனால் பட்டிமன்றப் பாணியில் ஒருவர் தன்னுடைய கருத்துத்தான் சரியானது, அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ரீதியில் எழுதுவதும் சரியல்ல. மேலும் தங்களை யாரென்று இனக்காட்டத் தவறுபவர்கள் அறிவுரைகள் சொல்லும் தகுதியற்றவர்கள்.. :icon_idea:

கருத்துக்களத்தில் கருத்துக்களை வைத்து ஆட்களைக் கண்டுபிடிக்கும் திறன்..இங்கு களத்தில் உள்ள சில பேருக்கு மட்டுமே சாத்தியம். காரணம்..அவர்களுக்கு சில பேரை அப்படி அடையாளம் காட்டி விட வேண்டும் என்ற ஆதங்கம். அப்போதான் அவர்களை விரட்டி வேடிக்கை காட்டலாம். கருத்துக்களுக்கு கருத்தெழுத தெரியாதவர்களே இப்படி கற்பனையில் மிதக்கின்றனர்..! :icon_idea: :P

இங்கு யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லத் தகுதியற்றவர்களே. அவரவர் தங்கள் கருத்தை முன்வைக்க அடையாளம் இட வேண்டின் யாழ் களம் அடையாள அட்டையோடுதான் கருத்தாளர்களைக் கருத்தெழுத அனுமதிக்க வேண்டும்..! :lol:

புலி எதிர்ப்பு வாத தளங்களில் கருத்துக்கூறும் வசதியோ உரிமையோ கிடையாது. அப்படியே கருத்துக்கூற அநுமதித்தால் தளம் நாறிவிடும். அதனால்தான் இவர்கள் யாழ் தளத்தில் முகமூடியுடன் உலாவுகின்றனர்.

புலி எதிர்ப்பு வாத தளங்களில் கருத்துக்கூறும் வசதியோ உரிமையோ கிடையாது. அப்படியே கருத்துக்கூற அநுமதித்தால் தளம் நாறிவிடும்....

அவ்வாறே புதினம், சங்கதி என்பற்றிலும் கருத்துக்கூறும் வசதி கிடையாது..!!!

உங்களுக்கு மிகவும் ஆதங்கமாகவிருந்தால் http://www.lankanewspapers.com என்ற கருத்துக்களத்தில் சென்று முயற்சித்துப்பாருங்கள்.

குறிப்பு: இதனால் உங்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வாறே புதினம், சங்கதி என்பற்றிலும் கருத்துக்கூறும் வசதி கிடையாது..!!!

உங்களுக்கு மிகவும் ஆதங்கமாகவிருந்தால் http://www.lankanewspapers.com என்ற கருத்துக்களத்தில் சென்று முயற்சித்துப்பாருங்கள்.

குறிப்பு: இதனால் உங்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல.

அப்பு ராசா!! உங்கட விசுவாசத்தை புழுங்கவைத்து சாகடிக்கிறதோ? புதினம், சங்கதி போன்ற ஊடகங்கள்?

அரச ஊடகங்களின் புளுகுமூட்டையின் கனம் தெரியாதவர்களா நாங்கள்?

கொல்லப்பட்ட இராணுவ உடல்களே மலைபோல் குவிந்திருக்க, புலிகளை விரட்டிக்கொண்டிருக்கிறோம் என்று வாய்ப்பாட்டு பாடும் அரச ஊடகங்களின் யோக்கியத்தனத்தை ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா? எமது ஊடகங்களை குற்றங்காணத்துடிக்கும் உங்கள் நடுநிலைவாதப் போக்கு.

பாடசாலைகள், கோவில்கள், என்று தேடிக் குண்டு போடும் அரசவாதம், பயங்கரவாதத்தின் பாதக வயிற்றுக்குள் மக்கள் உரிமையைக் கொட்டிவிட்டு, மற்றவனை பயங்கரவாதத்தால் அளப்பதற்கு, என்னைய்யா யோக்கியம் அதற்கு.

அதற்கும் மேலே போய் உலகம் உங்களை பயங்கரவாதிகளாம் என்று கூத்தும் ஆடினால் நாம் என்னையா செய்யமுடியும் வேண்டும் என்றால் நீங்களும் சேர்ந்தே ஆடுங்கள் அவர்களோடு.

இலங்கை மோதல்கள் சுனாமி மீள்கட்டமைப்பிற்கு தடையாக இருக்கிறது - கோபி அன்னன்

gobianaance6.png

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் அங்கு சுனாமி மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு தடையாக இருப்பதாக தனது பதவிக்காலம் முடிந்து விலகிச் செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் கோபி அன்னன் அவர்கள் கூறி இருக்கிறார்.

சுனாமி அலைகளின் நிர்மூலத்தை எவரும் தடுக்க முடியாது ஆனால் இலங்கையை போரில் மூழ்கடிக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மோதல்களை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று சுனாமியின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு தனது அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

இரண்டு வருடத்துக்கு முன்னர் அந்த சுனாமியின் முதலாவது அலை தாக்கிய கணத்தை நினைவு கூரும் வகையில் இலங்கையில் இரு நிமிட மௌன அஞ்சலி செய்யப்பட்டது.

கோயில்களிலும் தேவாலயங்களிலும் மணி ஒலிக்க போக்குவரத்து அனைத்தும் அந்தக் கணம் தரித்து நின்றன.

இதற்கிடையே சுனாமி மீள்கட்டமைப்புப் பணிகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக இலங்கை அரசு மீது விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கள் மக்கள் புதிய வீடுகளில் மீள்குடியமர்த்தப்படும் நிலையில் தமிழ் மக்கள் தமது தற்காலிக குடியிருப்புகளில் இருந்து கூட விரட்டப்படுவதாக விடுதலைப் புலிகள் தமது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.

நன்றி பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எதுக்காக நெடுக் எழுதும் போது நான் என்றோ செய்தேன் என்றோ எழுதினேன் என்றோ கருதினேன் என்றோ எழுதாமல் நாம் செய்தோம் எழுதினோம் கருதினோம் என்று பன்மையில எழுதுறாராம்.. அவருக்கு பின்னாலை.. (முதுகில் அல்ல) பெரிய படையே இருக்குது எண்டு உணர்த்துறாரோ..

இன்று முதல் நாமும் அவ்வாறே எழுதுவதாக தீர்மானித்துள்ளோம்.. எமக்கான புரிதலில் கருத்தியலில் விஞ்ஞான நகர்வில் உலகின் போக்கில் பன்முகப்பரப்பில் பின்புலம் உள்ள கோட்பாடுகளின் தர்க்க முடிவில்....

போங்கோ என்ன சொல்ல வந்தம் எண்டதையே மறந்திட்டம். யோசிச்சு சொல்லுறம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எதுக்காக நெடுக் எழுதும் போது நான் என்றோ செய்தேன் என்றோ எழுதினேன் என்றோ கருதினேன் என்றோ எழுதாமல் நாம் செய்தோம் எழுதினோம் கருதினோம் என்று பன்மையில எழுதுறாராம்.. அவருக்கு பின்னாலை.. (முதுகில் அல்ல) பெரிய படையே இருக்குது எண்டு உணர்த்துறாரோ..

இன்று முதல் நாமும் அவ்வாறே எழுதுவதாக தீர்மானித்துள்ளோம்.. எமக்கான புரிதலில் கருத்தியலில் விஞ்ஞான நகர்வில் உலகின் போக்கில் பன்முகப்பரப்பில் பின்புலம் உள்ள கோட்பாடுகளின் தர்க்க முடிவில்....

போங்கோ என்ன சொல்ல வந்தம் எண்டதையே மறந்திட்டம். யோசிச்சு சொல்லுறம்

காவடி!!!

தங்களின் நக்கல், நயண்டைத் தனத்துக்கு, கொழுப்பு றொம்ப யாஸ்திதான்.

யோவ் காவடி பின்னீட்டீர்

...தர்க்க முடிவில் மானுடவியல் தழுவியதாக நவீனத்துவ கோட்பாடுகளோடு பிணைந்தாக கூறிக்கொள்ள விளைகிறோம்.

அது வேறு ஒன்றும் இல்லை. அவர் சொன்னா ஊரே சொன்ன மாதிரியாம். அது தான் பன்மையில புலம்பிறவர்.

நீங்கள் யோசிச்சு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை பரிசீலனை செய்கிறம் தேவை ஏற்படி பதில் அளிக்கப்படும் என்று கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்" தேனீ "அல்லது "அதிரடி " தளம் கூட இதே பாணி தான் ஒருவரும் தமது கருத்தினை கூற முடியாது கண்டீரோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.