Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்

Featured Replies

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்

 

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிளவுபட்டிருந்த, கிறிஸ்த மதத்தின் மேலைத்தேய மற்றும் கீழைத்தேய கிளைகளின் தலைவர்களின் சரித்திர முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்

 

 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்

றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிராஸிஸ், மற்றும் ரஷ்யாவின் மிகப்பழைய ஆர்த்தாடக்ஸ் (பழமைவாத கிறிஸ்தவ பிரிவு) திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில் ஆகியோருக்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படும் இந்த சந்திப்பு கியுபாவில் இடம்பெற்றது.

ஹவானா விமான நிலையத்தில், இவர்களிடையோன சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில், இரண்டு தலைவர்களும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.

மேற்கத்தேய மற்றும் கீழைத்தேய கிறிஸ்தவ கிளைகள், 11 ஆம் நூற்றாண்டில் பிரிந்துபோனது முதல், போப்பிற்கும் ரஷ்ய திருச்சபையின் தலைவர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இன்னல்களை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களை பாதுகாக்குமாறு, இரண்டு தலைவர்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டனர்.

உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றுபடுமாறும், இவர்கள் அறைகூவலும் விடுத்துள்ளனர்.

போப் பிரான்ஸிஸை சகோதரன் எனக் கூறிய ரஷ்யத் திருச்சபையின் தலைவர் பாட்ரியார்க் கிரில், போப்பை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

கலந்துரையாடல்கள் வெளிப்படையானதும் சகோதரத்துவமானதாகவும் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சகோதரத்துவத்துடன் இப்பேச்சுக்கள் நடைபெற்றதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். அனைவரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆயர்களே எனவும் கூறினார்.

http://www.bbc.com/tamil/global/2016/02/160213_christains

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.

சற்று யூதரின் வரலாற்றையும், அவர்கள் குறித்த தீர்கதரிகளின் முன்னறிவிப்புக்களையும் பார்த்தால்,

ரோம் மற்றும் மொஸ்கோ இரண்டும் இஸ்ரேலுடன் யுத்தம் செய்யப் போகும் இரண்டு நகரங்கள். அதாவது முன்றாம் உலகப்போரின் முக்கிய சமர்க்களமாக ஜெருசலேம் இருக்கப்போகின்றது. எசேக்கியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்தபடி (இஸ்ரேலுக்கு) வடதிசையில் இருந்த்து மாகோகு (மாஸ்கோ) வருவான். ரஸ்யாவுடன் பெர்சியா (இரான்), துபால் (துருக்கி), லிபியா, சுடான் போன்ற நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக வருவார்கள். இந்தப்படைகள் எருசலேமைக் கைப்பற்றிக் கொள்வார்கள். இறுதியில் யூதர்கள் கூட்டுப்படையணி வெல்லும்.

இங்கு இன்னுமொரு சுவாரிசியமான விடயத்தினைச் சொல்ல வேண்டும், அய்ஸிஸ் படைகளை அழிக்கும் நோக்குடன் ரஸ்யாவும் துருக்கியும் சிரியாவின் வேண்டுதலின் பேரில் சிரியாவுக்குள் வருவார்கள். அய்ஸிஸ் படைகள் அழிக்கப்பட்ட பின்னர், சிரியா தன்னுடைய பகுதி என்று சொல்லப்பட்ட கோலான் குன்று பகுதியை மீட்க கூட்டுப்படைகளுடன் போரினைத் தொடக்கும். இந்த கோலான் குன்றுப்பகுதி பழய யூத வரலாற்று நூல்களில் பாஷான் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது

 பின்னர் இஸ்ரேலுடன் கூட்டு அணியில் இருந்த ரோம் நகரில் இருந்து அந்திக்கிறிஸ்து (antichrist)வருவான். இந்த அந்திக்கிறிஸ்து யாரென்றால், யூதர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மேசியா மனுக்குலத்தின் பாவத்தினை சுமந்த்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியாக வந்தபோது யூதர்கள் அவரை ஏற்கவில்லை, இனி இரண்டாம் வருகையின் போது பாவங்களை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாக மேசியா வருவார்.  அதற்கு இடிக்கப்பட்ட எருசலேம் தேவாலயம் கட்டப்படல் வேண்டும். இந்த தேவாலயத்தைக் கட்ட ரோம் நகரில் இருக்கும் அந்திக்கிறிஸ்து உதவி செய்வான். அந்திக் கிறிஸ்த்துவின் ஆட்சி 7 வருடங்கள் இருக்கும். முதல் 3-1/2 ஆண்டுகள் யூதருடன் நல்ல உறவு இருப்பத்து போல இருக்கும், ஆனால் கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்துள் தானே மேசியா என சொல்லி தன்னை வணங்கும்படி யூதரை கட்டளையிடும்போதுதான் யூதருக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும் பிரச்சினை வரும். கடைசி 3-1/2 ஆண்டுகள் மகா உபத்திரவகாலமாக இருக்கும். ஈற்றில் மேசியா எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டாரோ அப்படியே இறங்கி வருவார். அந்திக்கிறிஸ்து அழிக்கப்படுவான்.

 இவை பற்றி இன்னும் அதிகம் எழுதலாம் .

எனவே 1000 வருடங்களுக்குப் பின்னர் இந்த இரு மதத்தலைவர்களும் சந்திப்பது என்பது நோக்குவதற்கு உரிய ஓரு விடயம்.

 

(இது வாலியின் தேடல்களில் இருந்து எழுதப்பட்டது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13.2.2016 at 5:12 PM, நவீனன் said:

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்

இதே மாதிரி முஸ்லீம் மத தலைவர்களையும் அன்புபாசத்தோடு சந்தித்து உலகில் நல்லிணக்கங்களை உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இதே மாதிரி முஸ்லீம் மத தலைவர்களையும் அன்புபாசத்தோடு சந்தித்து உலகில் நல்லிணக்கங்களை உருவாக்க வேண்டும்.

அண்ணோய், அவங்கள் அப்படியே இருக்கட்டும்!

உங்களுக்கும் நல்லது... உலகத்துக்கும் நல்லது!

இரண்டு பிரிவும் சேர்ந்தால்....உலகத்தின் ஒரே தெய்வம்... அல்லாவே அன்றி வேறில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, புங்கையூரன் said:

அண்ணோய், அவங்கள் அப்படியே இருக்கட்டும்!

உங்களுக்கும் நல்லது... உலகத்துக்கும் நல்லது!

இரண்டு பிரிவும் சேர்ந்தால்....உலகத்தின் ஒரே தெய்வம்... அல்லாவே அன்றி வேறில்லை!

இல்லை....வரலாற்று தவறுகள் நடந்திடக்கூடாது எண்ட நல்லெண்ண மனப்பான்மையிலைதான் அப்பிடியொரு வசனத்தை உதிர்த்தனான். :)

  • கருத்துக்கள உறவுகள்

மெசியா  
தீர்கதரிசனம் 
இஸ்ரேல் 

இதுகளின் கதைகளை வாசிக்க ....
மூன்றாம் உலக போர் என்ற அழிவை தடுக்க 
உலக மக்கள் கிறிஸ்தவ மதத்தை துடைத்து அழிப்பதுதான் 
ஒரே வழிபோல இருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.