Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அல்லைப்பிட்டியில் இராணுவத்தால் கைதான 600 பேருடன் கொண்டு செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளை காணவில்லை

Featured Replies

அல்லைப்பிட்டியில் இராணுவத்தால் கைதான 600 பேருடன் கொண்டு செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளை காணவில்லை

அல்லைப்பிட்டியில் இராணுவத்தால் கைதான  600 பேருடன் கொண்டு செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளை காணவில்லை:

 

 

அல்லைப்பிட்டி சுற்றிவளைப்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 600 பேருடன் கொண்டு சென்ற எமது மூன்று மகன்களை காணவில்லை என பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர்.
 
மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
அல்லைப்பிட்டியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 8ம் மாதம் 25ம் திகதி எமது பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து எம்மை ஒருஇடத்திற்கு அழைத்து சென்று அனைவரையும் ஒன்றாக கூட்டினர்.
 
அங்கு 14 வயது முதல் 45 வயது வரையிலான அனைவரையும் வேறாக நிற்குமாறு கூறி அவர்களை வேறு படுத்தி அவர்களில் 600 பேரை இராணுவத்தினர் அழைத்து சென்றனர்.
 
எம்மை மண்கும்பான் பாடசாலையில் தங்க வைத்தனர். அவ்வாறு அழைத்து சென்றவர்களில் எமது மூத்த மகனை தவிர ஏனைய இரு மகன்மார்களை விடுவித்தனர். மூத்த மகன் எங்கே என கேட்ட போது அவர் இராணுவத்தில் வேலைக்கு இணைந்துள்ளார் என கூறினார்கள்.
 
பின்னர் ஒரு நாள் எங்கள் அனைவரையும் அல்லைப்பிட்டியில் ஒன்று கூடுமாறு அழைத்து அங்கே இராணுவ தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ உங்கள் அனைவரின் பிள்ளைகளையும் உங்கள் தலைவர் விரைவில் விடுவிப்பார் என கூறினார். நாம் யார் எங்கள் தலைவர் என கேட்ட போது டக்ளஸ் தேவானந்தா என கூறினார். 
 
பின்னர் ஒரு நாள் டக்ளஸ் தேவானந்தா , கொப்பேக்கடுவ ஆகியோர் கூட்டம் கூடி இனி இராணுவ சுற்றிவளைப்பின் போது எமது ஆட்களும் இராணுவத்தினருடன் இணைந்து வருவார்கள் என டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
 
அவர் அவ்வாறு கூறி சென்று ஒன்பதாவது நாள் மீண்டும் எமது கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. அந்த சுற்றிவளைப்பில் எனது இரு மகன் மாரையும் இராணுவத்தினர் கொண்டு சென்றனர்.
 
கொழும்பில் 91ம் ஆண்டு 6ம் மாத கால பகுதியில் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து எமது மூன்று மகன் மாரையும் விடுதலை செய்ய கோரினோம். அதற்கு அவர் விரைவில் விடுதலை செய்வோம் என கூறினார்.
 
பின்னர் ஒரு நாள் திருகோணமலையில் இராணுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் ஒருவர் நாவற்குழி பகுதியில் வசிப்பதாக அறிந்து அவரிடம் சென்று விசாரித்தோம். அதன் போது அவர் கூறினார் நீங்கள் சொல்லும் கால பகுதியில் யாழ்ப்பணத்தில் இருந்து 80 பேரை பச்சை கலர் ரி.சேர்ட் மற்றும் பச்சை கலர் அரைக் காற்சட்டை ஆகியவற்றுடன் அழைத்து வந்து எமது திருகோணமலை முகாமில் ஒரு நாள் இரவு தங்கவைத்து உணவு கொடுத்து விட்டு மறுநாள் காலை கொழும்புக்கு கப்பல் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். என கூறினார்.
 
உடனே நாம் எமது பிள்ளைகளின் படத்தை காட்டி இவர்களை அதில் கண்டீர்களா என கேட்ட போது இவர்கள் தான் என உறுதியாக சொல்ல மாட்டேன் இவர்ககள் வயதை ஒத்தவர்கள் தான் அழைத்து வரப்பட்டனர் என கூறி எமது வீட்டு விலாசத்தில் எழுதி வாங்கி தமக்கு மேலதிக தகவல் தெரிந்தால் அறிவிப்பதாக கூறினார்.
 
அதன் பின்னர் அவர் ஒரு நாள் கடிதம் அனுப்பி இருந்தார். அன்றைய தினம் திருகோணமலை முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பெயர் விபரம் உள்ளடக்கி அதில் எனது மூன்று மகனும் சகோதரியின் மூன்று மகனுடைய பெயர்களும் காணப்பட்டன.
 
அதன் பிறகு சந்திரிக்கா ஜனாதிபதி ஆனவுடன் காணமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என ஒரு குழுவை அமைத்து இருந்தார். 
 
அந்த குழுவின் முன்பாக சாட்சியம் அளித்து திருகோணமலை முகாமில் ஒரு நாள் இரவு தங்க வைத்து இருந்தவர்களின் பெயர் விபரத்தை கொடுத்தோம். அதனை பார்த்து விட்டு அந்த குழுவினர்கள் கூறினார்கள் உங்கள் பிள்ளைகளை டக்ளஸ் தேவானந்தா தான் பிடித்து வைத்து உள்ளார். என கூறினார்கள்.
 
அதன் பின்னர் 2001ம் ஆண்டு 6ம் மாத கால பகுதியில் ஈ.பி.டி.பி.யை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதம் அவர்களை சந்தித்து பிள்ளைகளை பற்றி கேட்டோம். அதற்கு அவர் கூறினார் தீவகத்தில் அக் கால பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இராணுவத்தில் வேலைக்கு இணைந்து உள்ளதாகவும் சில தமது அமைப்பில் இணைந்து உள்ளதாகவும் கூறினார். 
 
ஆனால் உங்கள் பிள்ளைகளை பற்றிய தகவல் இல்லை எனவும் தான் தலைவருடன் கதைத்து விட்டு கூறுகின்றேன் என கூறினார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை அதன் பின்னர் மகன்மார் பற்றிய எந்த தகவலும் இல்லை என தெரிவித்தனர்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக டக்கிளசை அவருக்கு உபயம் அளித்த அம்மையார் சந்திரிக்காவை விசாரிப்பதே மேல். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nedukkalapoovan said:

இது தொடர்பாக டக்கிளசை அவருக்கு உபயம் அளித்த அம்மையார் சந்திரிக்காவை விசாரிப்பதே மேல். tw_warning:

கேட்க வேண்டிய/ தகுதியுள்ள/வாக்களித்து அனுப்பப்பட்ட ஆக்கள் சந்திரிக்கா கோஷ்டியோடை இதயத்தால் ஒன்றாகி விட்டினம். இனி ஒண்டும் செய்யேலாது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

கேட்க வேண்டிய/ தகுதியுள்ள/வாக்களித்து அனுப்பப்பட்ட ஆக்கள் சந்திரிக்கா கோஷ்டியோடை இதயத்தால் ஒன்றாகி விட்டினம். இனி ஒண்டும் செய்யேலாது. :cool:

 

இதுபோன்ற பலவற்றிற்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் காணாமல்ப் போய்விட்டார்கள் என்றுதான் பதில் வரப்போகிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பை சிங்களம் ஒருபோதுமே வெளிக்கொணரப் போவதுமில்லை, சாட்சியங்களை வைத்திருக்கப் போவதுமில்லை.

சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் கருவியாகப் பயன்படுத்தப்படும் சிங்கள ராணுவம் இன்றுவரை எந்தத் தடையுமின்றி இயங்கும் அனுமதிப் பத்திரத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பதை நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, ragunathan said:

 

இதுபோன்ற பலவற்றிற்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் காணாமல்ப் போய்விட்டார்கள் என்றுதான் பதில் வரப்போகிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பை சிங்களம் ஒருபோதுமே வெளிக்கொணரப் போவதுமில்லை, சாட்சியங்களை வைத்திருக்கப் போவதுமில்லை.

சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் கருவியாகப் பயன்படுத்தப்படும் சிங்கள ராணுவம் இன்றுவரை எந்தத் தடையுமின்றி இயங்கும் அனுமதிப் பத்திரத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பதை நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.

மைத்திரியரும் மகிந்தவின்ரை இராணுவத்துக்கு பயப்பிடுறார் எண்டு சொல்லவாறியள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

மைத்திரியரும் மகிந்தவின்ரை இராணுவத்துக்கு பயப்பிடுறார் எண்டு சொல்லவாறியள்.

 

மைத்திரியார் உண்மையாகவே தமிழருக்குத் தீர்வொன்றை தரவிரும்புகிறார் என்றால், அவரும் சிங்கள ராணுவ இயந்திரத்துக்குப் பயந்தே ஆகவேண்டும். ஆனால் அவர் உண்மையாகவே தரவிரும்புகிறாரா அல்லது தர விரும்புவதுபோல நடிக்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.