Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் கடும் சட்டம்! - குறைவான வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற முடிவு!

Featured Replies

இங்கிலாந்தின் Tier 2 (General) visa புதிய சட்டத்தால் வெளியேறும் மக்கள்!


சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன் படி 'Tier 2 (General) visa' விசாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஆண்டுக்கு 35 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு தங்க முடியும். இல்லாவிடில் குடியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 6–ந் திகதி முதல் குடியேறியவர்களுக்கு இப்புதிய சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 55,589 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் 31,058 பேர் இந்தியர்கள். இது அங்கிருந்து வெளியேற வேண்டிய வர்களில் 78 சதவீதமாகும்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130104/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

£35,000 காட்டுவது அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லையே !

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு படிப்பு முடித்து வேலைக்குள் நுழைய வசதியாக இருந்த ஒரு மார்க்கமும் அடைபடுகிறது. எனி மாணவர்களாக பிரிட்டனுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் குறையலாம். குறிப்பாக இந்திய மாணவர்கள். 

மாணவர்களாக வந்து அசைலம் அடிச்சால்.. எல்லாம் சுபம். கூடுதலான சொறீலங்கா தமிழர்கள் மாணவர் விசாவை அசைலத்துக்கான வழியாகப் பாவிக்க.. நேர்மையாக வந்து படித்து.. தமது புலமையை பிரித்தானியாவின் பொருண்மிய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் மாணவர்களை அடித்து விரட்டுவது என்பது.. பிரித்தானிய  அரசின் தூர நோக்கற்ற கொள்கையாகவே பல்கலைக்கழக மட்டங்களில் நோக்கப்படுகிறது. 

9 minutes ago, Nathamuni said:

£35,000 காட்டுவது அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லையே !

35,000 வங்கியில் காட்டுவதல்ல. வருமானமாகக் காட்ட வேண்டும். பி 60 சமர்ப்பிக்க வேண்டும். சில இந்திய நிறுவனங்கள் களவு செய்கின்றன தான்.. ஆனாலும் நேர்மையாக உள்ளவங்க கொஞ்சம் சிரமம். அண்மையில் தாதிகளுக்கும் இந்த கடும் விதி அமுலுக்கு வந்து.. பின் என் எச் எஸ் பிரதானியின் எச்சரிக்கையை அடுத்து தாதிகளுக்கு தளர்வு கொண்டு வரப்பட்டது. :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் செய்த அதேவேலையினை இந்திய IT நிறுவனங்கள் செய்கின்றன.

பிசினஸ் விசாவில் தமது uk அலுவகத்துக்கு ஆள் வரவழைக்கிறோம் என்று கூறி, client site வேலையில் அமர்த்துவது.

மேலும் அவ்வாறு வருபவர்களுக்கு, £35,000 குறையமால் சம்பளம் கொடுத்து, P60 கொடுப்பது.

இந்த முறை அமெரிகாவில் தடை செய்யப் பட்டு, அபராதமும் விதிக்கப் பட்டது.

பிசினஸ் விசா வேற, வேலை விசா வேற என்பது வரையறுக்கப் படும் வரை இது தொடரும். (வரை அறுக்கப் பட்டு உள்ளது, ஆனால் அவர்கள் மீறுவது தெரிய வரும் வரையில்)

உண்மையான விடயம் என்னெவெனில், cannibalism. அதாவது இந்திய IT பயிற்சி நிறுவனங்கள் பல, ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி நிலையங்களை திறந்து பலரை பயிற்று  வித்து பணம் பார்கின்றன. அவர்கள் இங்கே வந்து வேலையினை எடுத்து அழுத்தம் கொடுக்கின்றனர்.

அதுதான் இந்த நிலை வரக் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
uk_border.jpg
பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டினர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆண்டு தொடக்கத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டு அதை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்திருந்தனர்.

திறமையான வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் பிரித்தானியாவில் குடியிருக்க வேண்டும் எனில், 

*வேலை தரும் நிறுவனம் ஒன்று அவருக்கு 20,800 பவுண்டு ஊதியமாக வழங்க வேண்டும். 
*வங்கிக்கணக்கில் குறைந்தது 90 நாட்களுக்காவது 945 பவுண்டு சேமிப்பு இருக்க வேண்டும். 
*வேலை வழங்குபவர்களிடம் இருந்து Sponsorship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
*சுகாதார கட்டணமாக 200 பவுண்டு அளிக்க வேண்டும். 
*ஆங்கில மொழியில் திறமையை நிரூபிக்க வேண்டும்.

Tier - 2 இந்த விசா கைவசம் வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் முடிவில் புதிதாக மனு அளிக்க வேண்டும், இப்படி மனு அளிப்பவர்கள் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 35,000 பவுண்டுகள் வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தற்போது மருத்துவ தாதியர்களை மட்டும் தாற்காலிகமாக இந்த சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் தாதியர்களுக்கும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு இந்த புது சட்டத்தில் இருந்து விடுப்பு வழங்கப்படவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக குடியேறிவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டாது எனவும் கூறுகின்றனர்.

மேலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த புது சட்டம் பொருந்தாது, மட்டுமின்றி அவர்களுக்கு ஊதிய வரைமுறை கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் மாணவருக்கான விசாவில் இருப்பவர்கள் நேரிடையாக தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் புது வருவாய் வரைமுறை தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது.

பிரித்தானிய குடிமக்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்த புது சட்டம் பொருந்தாது.

இச் சட்டம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதாயின் 0300 123 2241 என்னும் இலக்கத்தில் தொடர்பினை ஏற்படுத்தலாம் என பிரித்தனைய குடியகல்வு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/show-RUmuyDSaSXmozC.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.