Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்ட சில பேராசிரியர்களை இடைநிறுத்தியுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பெண்களின் குரலமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்ட சில பேராசிரியர்களை இடைநிறுத்தியுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பெண்களின் குரலமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

   

அவர் மேலும் உரையாற்றுகையில், பல்கலைக்கழக மாணவிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை நாம் எடுத்தோம். ஆனால் இச்செயற்பாடு தொடர்பாக ஆரம்பத்திலேயே பெண்கள் தெரிவித்திருந்தால் இப்பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். பெண்கள் துணிச்சல் மிக்கவராக தமக்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்க கூடியவர்களாக இருக்க வேண்டும். தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிரானதும் சிறுவர்களுக்கு எதிரானதுமான வன்முறைகள் அதிகரிக்க காரணம் பிள்ளைகள் மீதான பெற்றோரின் கவனயீனமாகும்.

தாய்மார்களே பிள்ளைகள் தொடர்பான கவனிப்பை மேற்கொள்ள வேண்டும். எனவே பிள்ளைகளது நடத்தைகள் அவர்களிடம் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பாக அவதானித்து அவர்களது எதிர்காலத்தை பெற்றோர்கள் வளப்படுத்த வேண்டும். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு பெண்களும் ஒரு காரணமே. ஏனெனில் பெண்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுடன் ஒத்து செல்வதாகும். இச்செயற்பாடு மாற்றமடைய வேண்டும். பெண்கள் தமக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பிழைகளை தட்டிக் கேட்க கூடியவர்களாக தைரியம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்கால சமுதாயம் பெண்களின் கையிலேயே உள்ளது. எனவே நாம் மற்றவரை குறை கூறுவதை விடுத்து நாம் சரியான வழியில் நடக்கவேண்டும் அப்போது தான் சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

 

women-day-jaffna-220316-seithy%20(1).jpg

 

 

women-day-jaffna-220316-seithy%20(2).jpg

 

 

women-day-jaffna-220316-seithy%20(3).jpg

 

 

women-day-jaffna-220316-seithy%20(4).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=153941&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய விடயம். தான் விரும்பாத, தன் விருப்பத்துக்கு இணங்காத ஆசிரியர்மீது ஒரு மாணவி பொய்யான புகார் சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.:shocked:  

23 hours ago, Paanch said:

இது மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய விடயம். தான் விரும்பாத, தன் விருப்பத்துக்கு இணங்காத ஆசிரியர்மீது ஒரு மாணவி பொய்யான புகார் சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.:shocked:  

உங்கள் பதற்றத்தை பார்த்தால் நீங்களும் ஓர் பேராசிரியர்தானோ என்று எண்ணுகின்றேன். :grin::grin::grin:

 

On ‎22‎/‎03‎/‎2016 at 6:00 AM, தமிழரசு said:

இலையான் கலைக்கிற மாதிரி கிடக்கு

மண்டபத்தை கூட கூட்டத்திற்கு முன் சுத்தம் செய்யவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கலைஞன் said:

உங்கள் பதற்றத்தை பார்த்தால் நீங்களும் ஓர் பேராசிரியர்தானோ என்று எண்ணுகின்றேன். :grin::grin::grin:

 

'ஈன்று புறம்தருதல் எந்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' 

தந்தைமார் அனைவரும் பேராசிரியர்கள் அல்ல கலைஞரே!. :)

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வந்தியதேவன் said:

இலையான் கலைக்கிற மாதிரி கிடக்கு

மண்டபத்தை கூட கூட்டத்திற்கு முன் சுத்தம் செய்யவில்லையா?

அது கூட்டம் ஆரம்பித்த பிறகு கொறித்த கச்சான் கோதுகளாக இருக்கும்!tw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2016 at 5:31 AM, Paanch said:

இது மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய விடயம். தான் விரும்பாத, தன் விருப்பத்துக்கு இணங்காத ஆசிரியர்மீது ஒரு மாணவி பொய்யான புகார் சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.:shocked:  

இப்படிப் பல நடந்துள்ளது.பெண்கள் ஒன்றும் புனிதர்கள் கிடையாது. அதனையும் கவனத்தில் எடுக்கனும் என்பது நீதியானது தான். tw_blush:

2 hours ago, புங்கையூரன் said:

அது கூட்டம் ஆரம்பித்த பிறகு கொறித்த கச்சான் கோதுகளாக இருக்கும்!tw_cookie:

அவை போட்ட மாலையில் இருந்து உதிர்ந்த பூவிதழ்கள். tw_blush:

கூட்டத்தில் ஆட்களை விட வெற்றுக் கதிரைகள் அதிகம் பங்கெடுத்துள்ளன. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அவை போட்ட மாலையில் இருந்து உதிர்ந்த பூவிதழ்கள். :grin:

கூட்டத்தில் ஆட்களை விட வெற்றுக் கதிரைகள் அதிகம் பங்கெடுத்துள்ளன. :rolleyes:

இங்கு மேலைநாடுகளில் தமிழர்களும் நிகழ்வில் பங்குகொண்டார்கள் என்பதை உணர்த்தும் புனிதப் பொருட்கள்தான் அவை.:)

வெற்றுக் கதிரைகளுக்கு உரியவர்கள் எங்கே என்று தேடவேண்டாம்.....! திரியின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்தால் விளங்கிவிடும்,:grin:  

7 hours ago, Paanch said:

'ஈன்று புறம்தருதல் எந்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' 

தந்தைமார் அனைவரும் பேராசிரியர்கள் அல்ல கலைஞரே!. :)

புலவரே பொழிப்புரையை இன்னும் சற்று தெளிவாகச்சொல்லுங்களேன். கூகிழில் தேடிப்பார்த்தேன், விளங்கவில்லை. புறநானூற்று பாடல் என்று மட்டும் தெரிகின்றது. நீங்கள் ஓர் தந்தை மட்டுமே பேராசிரியர் அல்ல என்று கூறுகின்றீர்களா? :wub:

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

 

4 hours ago, nedukkalapoovan said:

அவை போட்ட மாலையில் இருந்து உதிர்ந்த பூவிதழ்கள். tw_blush:

ஆகா, இங்கே ஒருவருக்கு மட்டும் கண்கள் தெளிவாகத் தெரிகின்றன. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டினவங்களுக்கு அது கச்சான்கோதுகளாய்த்தான் தெரியும் கட்டாத காளைகளுக்குத்தான் அது கோதல்ல கோதையர் குழலில் சூடிய மலரென்று தெரியும்.

துணைவேந்தரும் தனக்கு பிடிக்காத பேராசிரியர்களை இந்தச் சாட்டோடு கட்டம் கட்டலாமே.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் செய்திகள் ஆரோக்கியமாகப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 24.3.2016 at 1:31 PM, கலைஞன் said:

புலவரே பொழிப்புரையை இன்னும் சற்று தெளிவாகச்சொல்லுங்களேன். கூகிழில் தேடிப்பார்த்தேன், விளங்கவில்லை. புறநானூற்று பாடல் என்று மட்டும் தெரிகின்றது. நீங்கள் ஓர் தந்தை மட்டுமே பேராசிரியர் அல்ல என்று கூறுகின்றீர்களா? :wub:

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

 

ஆகா, இங்கே ஒருவருக்கு மட்டும் கண்கள் தெளிவாகத் தெரிகின்றன. :grin:

கல்விக் கலைகளில் ஒன்றையேனும் ஐயம்திரிபறக் கற்று போதிக்கும் திறனால் பேராசிரியர் என்று பட்டம் பெற்றாலும், அத்திறன் ஒரு தந்தையிடமும் உள்ளதாகத் தெரிவித்த பாடல்வரிகள் நினைவுக்கு வந்ததால் எழுதினேன். அதனை விரிவாக்கம் செய்த தங்களுக்கு நன்றி!!. 
நான் தந்தை மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.