Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ; மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ; மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

[ Wednesday,13 April 2016, 05:01:30 ] 
arest.gif

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார், இராணுவ சிவில் நிர்வாகத்தின் முல்லைத்தீவுப் படையணியில் பணிபுரிந்துவந்தவர் என்றும் குறிப்பிட்டனர்.

குறித்த தொப்பியை இவர்கள் இருவரும் கூரியர் சேவை ஊடாக லண்டனுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் கேகாலை – கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/22034

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கறுப்பி said:

இதேவேளை இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் கேகாலை – கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட தொப்பிகளை வைச்சு.. வியாபாரம் பண்ணுறாங்கள். இதில புலி புத்துயிர்ப்பு கதை சிங்கள அரசியல்வாதிகளுக்கு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்களும் அதன் விளைவாகக்  கைதுகளும்  தொடர்ந்தால் தானே சிங்கள ராணுவம் தமிழர் பிரதேசத்தில் நிலைத்து நிற்கலாம். சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கறுப்பி said:

புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ; மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

[ Wednesday,13 April 2016, 05:01:30 ] 
arest.gif

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

 

இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார், இராணுவ சிவில் நிர்வாகத்தின் முல்லைத்தீவுப் படையணியில் பணிபுரிந்துவந்தவர் என்றும் குறிப்பிட்டனர்.

 

குறித்த தொப்பியை இவர்கள் இருவரும் கூரியர் சேவை ஊடாக லண்டனுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

இதேவேளை இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் கேகாலை – கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/22034

கிட்டத்தட்ட 80ம் ஆண்டுகளிலை நடந்தெல்லாம்....திரும்ப நடக்க வெளிக்கிட்டுது போலை கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட 80ம் ஆண்டுகளிலை நடந்தெல்லாம்....திரும்ப நடக்க வெளிக்கிட்டுது போலை கிடக்கு....

80களில் சுன்னாகச் சந்தையில மீன் விற்ற ஆச்சியை சுட்டுபோட்டு பயங்கரவாதி என்று  சொன்ன  உத்தம‌ர்கள் அல்லோ''''

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

80களில் சுன்னாகச் சந்தையில மீன் விற்ற ஆச்சியை சுட்டுபோட்டு பயங்கரவாதி என்று  சொன்ன  உத்தம‌ர்கள் அல்லோ''''

சிங்களம் மாறுமா??

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

சிங்களம் மாறுமா??

 

மாறும் என்று நம்புவர்களும் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

மாறும் என்று நம்புவர்களும் உண்டு 

இன்றும் 

கி.மு. ஆன திருமணங்களை நம்புபவர்கள் உண்டா???

அப்படித்தான் சிங்களவர்கள் தமிழரை ஒன்றாக வைத்திருக்க நினைப்பதும்.....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இன்றும் 

கி.மு. ஆன திருமணங்களை நம்புபவர்கள் உண்டா???tw_tounge_wink:

அப்படித்தான் சிங்களவர்கள் தமிழரை ஒன்றாக வைத்திருக்க நினைப்பதும்.....

அது மாத்திரமன்றி, எமக்கே உரித்தான எமது பாரம்பரியங்களோடு தனித்துவமான சமூகங்களாக சித்திரை புத்தாண்டை கொண்டாடும் நாம், சித்திரைப் புத்தாண்டானது தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் இணைக்கும் ஒரு பண்டிகையாக மட்டுமன்றி நம்மிரு சமூகங்களும் சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகையா என்பதையும் பெருமையோடே நினைவில் கொள்ள வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

'எனவே, மலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டில், கடந்த காலங்களிலேயே பல்வேறு சம்பவங்களின் நிமித்தம் சிதைந்துபோயுள்ள சமூகங்களுக்குமிடையேயான நல்லுறவை கட்டியொழுப்ப அனைவரும் முன்வரவேண்டும்' என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்

tw_tounge_wink:tw_tounge_wink:tw_tounge_wink:சம்பந்தன் ஐயாவின் புத்தாண்டுச்செய்தி,,,,,,,இனி என்ன ஐயா சொல்லி போட்டார் நாங்கள் கட்டிபிடிச்சுயெழுப்ப வேண்டியதுதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க இருக்கிற எங்கட ஆக்கள் கள்ளவேலையல் செய்யேல்ல உத்தமர்கள் பொலிஸ் ஏதோ வில்லங்கத்துக்கு கைது செய்யுது என்டதுதான் இங்கினை இருக்கிறவைக்கு நினைப்பு. ஊரில் இப்ப காசுக்காக எங்கட ஆக்கள் எவ்ளா கோல்மால் செய்யினம் என்டு போய்பாத்தாத்தான் தெரியும்.பொலிஸ் நடவடிக்கை எடுக்காட்டியும் பொங்குவார்கள் எடுத்தாலும் பொங்குவார்கள் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள்.கையக்கட்டி பொலிஸ் வேடிக்கை பார்க்கணும் எண்டு நினைக்கினம் போல குற்றசெயல்களுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

சிங்களம் மாறுமா??

 

மாற்றம் என்பது பெருன்பான்மையினரிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்!

சிறுபான்மையினரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என.. நினைப்பது சரியானதல்ல! 

ஏனெனில்...எல்லாமே அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கப் படுதல் தொடர்ந்து நடக்கின்றது!

எனவே சம்பந்தன் ஐயாவின் வாழ்த்துச் செய்தி.. சிங்கள மக்களை நோக்கியே இருக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.