Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காயத்திற்கு மருந்துபோடப்படாமல் சித்திரவதை செய்யப்பட்டு பொய் கூறினேன் – வரதராஜா

Featured Replies

காயத்திற்கு மருந்துபோடப்படாமல் சித்திரவதை செய்யப்பட்டு பொய் கூறினேன் - வரதராஜா

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பின்னர் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்ததாக வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜா தெரிவித்திருக்கிறார்.

பசி மற்றும் பல வாரங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியமை காரணமாக பலவீனம் அடைந்திருந்த நிலையில் பதுங்குகுழிக்குள் இருந்து தண்ணீர் அருந்துவதற்காக வெளியே வந்தபோது இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் காயம் அடைந்து பின்னர் அவர்களிடம் சென்ற போது தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் தொடர்ந்து 10 நாட்கள் இரகசிய இடம் ஒன்றில் வைத்து எந்த விதமான வெளித்தொடர்புகளும் இன்றி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து அச்சுறுத்தி பொய்யான தகவல்களை வெளி உலகத்துக்கு வழங்குமாறு பலவந்தப்படுதியதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

பொஸ்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை நியூயோர்க் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தத கருத்தரங்கு ஒன்றில் ”திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை மற்றும் இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள்” எனும் தலைப்பில் உரை ஆற்றியபோதே வைத்திய கலாநிதி வரதராஜா இவ்வாறு தெரிவித்தார்.

சுமார் 1000 க்கும் அதிகமான அமெரிக்க மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர். சிரியா, சவூதி அரேபியா, ஈரான், திபெத் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இந்த கருத்தரங்கில் அந்த அந்த நாடுகளை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உரை ஆற்றினர்.

இந்த கருத்தரங்கின் முடிவில் அதில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதுவராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தினர். இதேபோன்று சிரியா, சீனா, ஈரான் , சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

4

வன்னியில் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்படாமலும் எறிகணை மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்கள் மூலம் எவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியும் வைத்திய கலாநிதி வரதராஜா தனது உரையில் எடுத்துக் கூறினார்.

யுத்த சூனிய வலயங்களை பிரகடனப்படுத்தி அங்கு சென்றால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டு பின்னர் இந்த யுத்த சூனிய வலயங்கள் மீது எறிகணை மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களை இலங்கை இராணுவம் செய்ததாக அவர் அங்கு கூறினார்.

வேண்டுமென்றே உணவு மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கை அரசாங்கம் யுத்த பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு அனுப்பவில்லை என்றும் கூறிய வைத்திய கலாநிதி வரதராஜா இதனை திட்டமிட்ட மனித உரிமை மீறல் என்று விபரித்தார்.

தனது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 3 மாதங்களுக்கு முறையான சிகிற்சை அளிக்கப்படாமல் தான் அச்சுறுத்தப்பட்டு யுத்தம் பற்றி பொய்யான தகவல்களை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் தற்போது அமைந்துள்ள அரசாங்கம் திருகோணமலையில் மாணவர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை தண்டிப்பதை இழுத்தடிப்பது மட்டுமன்றி இறுதி யுத்தத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதையும் இழுத்தடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கையின் சட்டங்களின் கீழ் திருகோணமலை மாணவர்களின் படுகொலை சம்பவம் தொடர்பில் வழக்கு நடத்தப்பட முடியும் என்றும் ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் அவ்வாறு எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கோடிட்டு காட்டிய வைத்திய கலாநிதி வரதராஜா திருகோணமலை படுகொலை உட்பட 25 வருட கால யுத்தத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலை சம்பவங்களை இலங்கையின் நீதித் துறை உள்ளடங்கலான சட்ட முறைமை விசாரணை செய்யாமல் தவிர்த்து வந்தமையே முள்ளிவாய்க்காலில் பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.

இலங்கையில் தண்டனையில் இருந்து தங்கள் விலக்களிக்கப்பட்டிருந்ததை 2009 இல் பொலிசாரும் இராணுவத்தினரும் நன்கு உணர்ந்திருந்ததாகவும் இதன் காரணமாக தாங்கள் உள்நாட்டு சட்டத்தில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று அவர்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையே 2009 ஆம் ஆண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பாரிய அளவில் படுகொலைகளையும் அழிவையும் மேற்கொள்வதற்கு உந்தியது என்றும் வைத்திய கலாநிதி வரதராஜா அங்கு எடுத்துரைத்தார்.

2

போரில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நீதிமன்றத்தை அமைப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் சபை பரிந்துரைத்திருக்கின்ற போதிலும் அதனை புதிய அரசாங்கம் நிராகரித்து உள்ளாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிமன்றமே அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய வைத்திய கலாநிதி வரதராஜா இதனை புரிந்து கொள்வதற்கு ராக்கட் விஞ்ஞான அறிவு ஒன்றும் தேவை இல்லை என்று கூறினார். ‘நாட்டின் அரசியல் மற்றும் சட்ட முறைமைகள் திருகோணமலையில் 5 மாணவர்களை கொலைசெய்தவர்களை பாதுகாக்க முடியுமானால் நிச்சயமாக யுத்த குற்றவாளிகள் கூட தப்ப முடியும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

GET ON THE BUS 2016 4

http://tamilleader.com/

 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் எவ்வளவு மோசமானது என்பதை அது ஏற்படுத்திய.. துன்பியலை.. இனப்படுகொலையை நேரில் தரிசித்தவர் சொல்லுறது போல்.. வேறு யாரும் சொல்ல முடியாது.

பல முன்னாள் போராளிகள் என்போரே உண்மைக்குப் புறம்பாகப் பேசி.. எழுதி... சுயலாபிகளாக வாழும் சூழலில்.. தான் சார்ந்த மக்களும் தானும் பட்ட துன்பத்தை கொடுமைகளை வெளிப்படையாக சர்வதேச அரங்கில் சொல்லும் இந்த டாக்டருக்கு தலைவணங்க வேண்டும்.. தமிழர்கள் அனைவரும். tw_warning:

Edited by nedukkalapoovan

இவ்வளவு அநியாயங்களும் சிங்களவன் செய்யவில்லை என்று எவரும் கூறவில்லை ஆனால் மற்ற பக்கமும் எங்களுக்கு தெரியும் அதுதான் வித்தியாசம் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எல்லாற்ற பக்கமும் தெரியும். இப்ப பேச வேண்டிய பக்கம் எம் மக்களுக்கு பெரும் இன அழிவை ஏற்படுத்தி அந்த மக்களை அடிமைப்படுத்தி வைச்சிருக்கிறவன் பற்றித்தான். கூலிக்கு.. காட்டிக்கொடுத்தவை... சிங்கள இராணுவத்துக்கு கூலி வேலை பார்த்தவை.. புலனாய்வு வேலை பார்த்தவை.. சித்திரவதை முகாம் நடத்தினவை எல்லாரும்.. சிங்களவன் தண்டிக்கப்படும் போது இயல்பாக தண்டனை வலயத்துக்குள் வருவினம். அம்னாஸ்ரி அறிக்கைகள் தெளிவாச் சொல்லுத்து யார் யார் என்ன பண்ணினவை என்று. அதுதான் சிலர் போர்க்குற்ற விசாரணை என்றதும் பம்முறது.  :rolleyes:tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, arjun said:

இவ்வளவு அநியாயங்களும் சிங்களவன் செய்யவில்லை என்று எவரும் கூறவில்லை ஆனால் மற்ற பக்கமும் எங்களுக்கு தெரியும் அதுதான் வித்தியாசம் .

அட...அண்னை இன்ரநெஷனல் லெவெல்லை நிக்கிறார். பன்கிமூன் தோற்றான் போங்க :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் எப்பவும் இப்படித்தானுங்கோ.... அவரு ராக்கெட்டு உலகத்திலை இருப்பவர்....அவருக்கு எம்மினத்தின் விடுதலையும் பிடிக்காது....இனத்தையும் பிடிக்காது.....யாழுக்கு மட்டும் தமிழ் பிடிக்கும்...ஏனென்றால் இங்குதான் புலிக் காச்சல் அடிக்கலாம்...உண்மையை தெரிந்த அனுபவித்த ஒருதன் இனத்தின் நன்மை கருதி வெளிநாட்டில் விளக்கும்போது கூட ..அண்ணனுக்கு பெரும்பான்மை சுகம் கேட் இதுதான் அணணை இனமானம் என்பதுவோ?..

Edited by alvayan
சேர்ப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, குமாரசாமி said:

அட...அண்னை இன்ரநெஷனல் லெவெல்லை நிக்கிறார். பன்கிமூன் தோற்றான் போங்க :cool:

பான் கிமூனிட்டயும் ஒருகாலத்தில கையேந்தின ஆக்கள்தான் நாங்கள்.கொஞ்சகாலம் ஆன எல்லத்தையும் அவ்ளா ஈசிய நாங்கமறந்திடுவமில்ல?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்களும் பாங்கியின் ஆளே ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, alvayan said:

அண்ணை நீங்களும் பாங்கியின் ஆளே ....

வரலாற்றை ம(ற)றைக்கேலுமோ?

Edited by Thirdeye

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்து வந்தாலும்  எங்களாலை கண்டுபிடிக்க முடியும் தானே அண்ணை..

ஒரு வைத்தியர்...கஸ்டமான சூழ்னிலையிலும் இனத்துக்கு சேவைசெய்தவர்....அவர் தன்னுடைய அனுபவத்தை வெளிநாட்டு (எங்கடை ஆட்ட்களுக்கு சொன்னால் உங்களைபோலதான் கதைப்பியள் என்பதற்காக)மாணவர்களிடம் சொல்லி வெற்றியும் கண்டிருக்கிறார்....இதக்கூட குதற்கம் கூறீ...சொர்க்கம் காணும் நீங்கள் ..மகா விசுவாசிகள் அண்ணா....

 

 

நல்ல விடயம். நாம் எமக்குள் கூட்டங்கள் போடுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதிலும் விட இது போன்ற நிகழ்வுகள் ஆயிரம் மடங்கு பலன் தரகூடியவை. இவரது சாட்சி முற்றுமுழுதாக ஆவண‌ப்படுத்த படவேண்டும். 

12 hours ago, arjun said:

இவ்வளவு அநியாயங்களும் சிங்களவன் செய்யவில்லை என்று எவரும் கூறவில்லை ஆனால் மற்ற பக்கமும் எங்களுக்கு தெரியும் அதுதான் வித்தியாசம் .

அது என்ன மற்ற பக்கம் ...தலையா பூவா ....ஒரு தமிழனாக இருக்க வேண்டும்...

8 hours ago, Thirdeye said:

வரலாற்றை ம(ற)றைக்கேலுமோ?

எனக்கொன்று நினைவில் வருகின்றது ......எதோ தானும் படாதாம் .....என்று ஒரு ஒரு பழமொழி .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.