Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!
24-05-2016 03:34:00

625.70.560.350.160.300.053.800.100.160.8

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது.

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும் கல்வி கற்க கூடிய வகையில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.

சாதாரண தரப் பரீட்சையில் தேவையான பாடங்களில் சித்தியெய்தாத மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் இடை விலகுவதனை தவிர்க்க முடியும்.

இசை, விளையாட்டுத்துறை போன்றவற்றில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அந்தந்த துறைகளில் உயர்கல்வி தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப யுகமொன்று உருவாக உள்ளதனால் தகவல் தொழில்நுட்பத்துறைக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க்பபட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

- See more at: http://old.tamilwin.com/education/01/105453#sthash.WJS8Qwg2.dpuf

13 வருட கட்டாயக்கல்வி : இனி சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்.!

 

ranil%2009%2001%202015.jpg

நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் 13 வருட கட்டாயக்கல்வி வழங்கப்படுவதுடன் தேசிய கல்வி கொள்கையை புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

குறித்த புதிய கல்வி கொள்கை மூலம் சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும் உயர்தரத்தில் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

பம்பலப்பிட்டி முஸ்லீம் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/6763

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து O/level படித்து பாசாகும் வரை பள்ளியில் படித்து A/level செய்யப் போகலாம் என்றால் விளங்கும்.

இதென்ன, பெயிலானது, தொடர்ந்து A/level படிக்கலாம் என்டால் ? விளங்கின மாதிரி தான்... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு தொழிற்கல்வி ஊடான உயர்கல்வி வாய்ப்பளிப்பதே மாற்றுச் சந்தர்ப்பமாகவும் திறமைகளை அடையாளம் காணும் வகையிலும் அமையும். ஏலவே உயர்கல்வி கற்றுவிட்டு ரோட்டில் நிற்பவர்களோடு இவர்களையும் தயவுசெய்து நிறுத்த வேண்டாம். மூளையை விரிவாக்கி.. 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில்.. சிந்திக்கவும் சிங்களத் தலைவர்களே. tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் ...லூசுக்கூட்டங்களே 
முதலில் உயர்தரத்தில் நன்றாக படித்து பல்கலைகழகம் போகமுடியாத மாணவர்களுக்கு வழியை ஏற்படுத்துங்கள்...
இப்படி எல்லோரும் உயர்தரம் படிக்கலாம் என்றால் சாதாரண தரமே  தேவையில்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.