Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 கோடி ரூபாய் கப்பம் கோரி ஜாக்சனுக்கு மிரட்டல்

Featured Replies

10544.jpg

வவுனியாவைச் சேர்ந்த தமிழ ரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப் பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.

இளம் கண்டுபிடிப்பாளரான ஜாக்சன் இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்புரிக்கு மேலும் தெரிவிக்கையில்,

என்னிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரியவர்கள் தொடர் பாக  பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன்.
இவ்வாறு கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இனந்தெரியாத மாற்று குழுக்களை அடக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக இதில் தலையிட்டு மாற்று குழுக்களை இலங் கையில் முற்றாக ஒழிக்க வேண்டும்.

 ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை வலம்புரிப் பத்திரிகை ஊடாக முன்வைக்கின்றேன்.
என்னைப் போன்றவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள் ளது. அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் என்னை அச்சுறுத்துபவர்கள் இலங்கையன் என்று வேண்டாம். என்னை அச்சுறுத்துப வர்கள் நான் தங்கள் இனத்தவன் என்றாவது சிந்தித்து செயற்பட்டார்களா ? அதுவும் இல்லை. தங்கள் மாகாணத்தவன் என்றாவது சிந்தித்தார்களா? அதுவும் இல்லை.

உதவிதான் செய்ய வில்லை சரி, உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே. மாற்று குழுக்கள் இன்னும் திருந்த வில்லை. கொள்கை களை விட்டு விலக வில்லை. உடனடியாக மாற்று குழுக்கள் அனைத்தையும் தடைசெய்ய ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானம் ஒன்றை எடுத்து செயற்பட வேண்டும்.

இல்லாவிட்டால் இவர்கள் வன்முறை மனப்பாங்குடன் இவ்வாறு கப்பம் கோரு வது, அச்சுறுத்துவது போன்ற ரவுடித் தனத்தைக் தொடர்ந்தும் காண்பிப்பர் என மேலும் குற்றஞ்சாட்டினார். 

வவுனியாவைச் சேர்ந்த ஜாக்சன், தான் கண்டுபிடித்த இரண்டு பொருட்களுக்கான உரிமையை 200 கோடி ரூபாவிற்கு  விற்று அனைவரது கவனத்தையும் குறுகிய காலத்திற்குள் தன்பக்கம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10544&ctype=news

இந்த விடயத்தில் உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தை நாடி விசாரணையை முன்னெடுக்கலாம், தேவையான பாதுகாப்பை பெறலாம். மேலும் முன்னெச்சரிக்கையாக இருப்பதுவும் அவசியம்.  

இதை விட்டுவிட்டு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. தமிழர் செய்யும் பெரும் தவறுகளில் ஒன்று இது. உரிய சட்ட நடவடிக்கைகளை தகைமை உள்ளவர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்க வேண்டும்.

சிங்கள போலிசை நம்புகிறோமோ இல்லையோ எமது கடமைகளை செய்ய வேண்டும். அறிக்கைகளை விட்டுவிட்டு யாராவது வந்து உதவ வேண்டும் என்று நினைக்கும் கீழ்தர மனநிலை, பெரும்பாலான பிரபல தமிழ் அரசியல்வாதிகள் முதல் பெரும்பாலான தமிழர்கள் வரை சகல தரப்பினரிடமும் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு.

நீங்கள் அறிக்கைகள் விட, ஒப்பாரி வைக்க,  புலம்ப யாரோ வந்து எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெரும்பாலான தமிழர்களின் கீழ்த்தர மனநிலை மாறினால் தான் விடிவுண்டு.  

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Athavan CH said:

கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இனந்தெரியாத மாற்று குழுக்களை அடக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக இதில் தலையிட்டு மாற்று குழுக்களை இலங் கையில் முற்றாக ஒழிக்க வேண்டும்.

 ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை வலம்புரிப் பத்திரிகை ஊடாக முன்வைக்கின்றேன்.
என்னைப் போன்றவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள் ளது. அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் என்னை அச்சுறுத்துபவர்கள் இலங்கையன் என்று வேண்டாம். என்னை அச்சுறுத்துப வர்கள் நான் தங்கள் இனத்தவன் என்றாவது சிந்தித்து செயற்பட்டார்களா ? அதுவும் இல்லை. தங்கள் மாகாணத்தவன் என்றாவது சிந்தித்தார்களா? அதுவும் இல்லை.

அவர்கள் கப்பம் கேட்டே வாழ்ந்து பழகிவிட்டார்கள். 35 வருசமா சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து.. சுட்டுக்கொன்று.. அதில் கப்பம் வாங்கி வாழ்ந்தவர்களுக்கு அந்தப் பழக்கம் லேசில போகாது. இவர்களுக்கு வாக்குப் போட்டு அரசியல்வியாதிகளாக... மாற்றி வைச்சிருக்கும் மக்களின் மந்தை தனமும் இதற்கு ஒரு காரணம்.

எல்லாம்.. சித்தார்த்தனையும் டக்கியையும் அரவணைக்கிறவைக்கு தான் வெளிச்சம். சிங்கள ஜனாதிபதி இந்தக் கும்பல்களை அவ்வளவு லேசில் கட்டுப்படுத்தமாட்டார். ஏனெனில் இவர்களின் ஊழியம் அவர்களுக்கு இன்னும் தமிழ் இன அழிப்புக்குத் தேவை... சிங்கள இனப்பரம்பலுக்கு அவசியம். tw_blush:

நீங்க.. அந்த நாட்டை விட்டு வெளியேறி ஒரு பாதுகாப்பான நாட்டுக்கு வருவது நல்லம். முதலீட்டாளர் விசாவில் நிரந்தர வதிவிடம் தந்து வரவேற்பார்கள். அவர்களுக்கு வாழத் தெரியும். எம்மவருக்கு உள்ளதைக் கெடுக்கவும் தட்டிப்பறிக்கவும் தான் தெரியும். 

10 hours ago, Athavan CH said:

உதவிதான் செய்ய வில்லை சரி, உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே. மாற்று குழுக்கள் இன்னும் திருந்த வில்லை. கொள்கை களை விட்டு விலக வில்லை. உடனடியாக மாற்று குழுக்கள் அனைத்தையும் தடைசெய்ய ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானம் ஒன்றை எடுத்து செயற்பட வேண்டும்

மாற்றுக்குழுக்கள்.. அதாவது ஒட்டுக்குழுக்கள்... திருந்த வாய்ப்பே இல்லை. அதுகள் திருந்துங்கள் என்று எதிர்பார்ப்பது வீண் விரயம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இதன் பின்னால் பெரிய கைகள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Athavan CH said:

10544.jpg

வவுனியாவைச் சேர்ந்த தமிழ ரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப் பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.

--------

உதவிதான் செய்ய வில்லை சரி, உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே. மாற்று குழுக்கள் இன்னும் திருந்த வில்லை. கொள்கை களை விட்டு விலக வில்லை. 

.-------

வவுனியாவைச் சேர்ந்த ஜாக்சன், தான் கண்டுபிடித்த இரண்டு பொருட்களுக்கான உரிமையை 200 கோடி ரூபாவிற்கு  விற்று அனைவரது கவனத்தையும் குறுகிய காலத்திற்குள் தன்பக்கம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

அந்த ஈழத் தமிழ் விஞ்ஞானிக்கு  தலை வணங்குகின்றேன்.
முதலில்.... அந்த முகத்தில், உள்ள ஏமாற்றத்தையும், விரக்தியையும் கவனியுங்கள்....
ஒரு பொருளை கண்டு பிடிக்க... அவன் தன் வாழ்நாளில், எத்தனை இன்பமான பொழுதுகளை துறந்து இருப்பான்.

இப்ப... அதனை, கண்டு பிடித்தவுடன்....
யார்... யாரிடம், 100 கோடி ரூபாய்  கப்பம்  கேட்பது?
வெட்கம் கெட்ட இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு பெறாத முன்னாள் புலி என்று சொல்லி உள்ள கொண்டு போய் வைச்சு மொத்தக் காசையும் சிங்களவனே பறிச்சாலும் பறிக்கலாம். அப்படியான நாடு சொறீலங்கா. :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.