Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்'

Featured Replies


'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்'
 
 

article_1466834774-bbbbbbbbbbbbb.jpg

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியை தெளிவூட்டும் அவசர சந்திப்பொன்று இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அருண்காந்தால் புனித பகவத் கீதை நூல் ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இங்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் கூறுகையில்,

“நாம் என்றுமே இந்து மதம் விதந்துரைத்துள்ள அஹிம்சை கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றோம். இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் எமது அஹிம்சை கொள்கையை பலவீனமாக கருதி பல்வேறு மதப்பிரிவினர் எமது ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்றுவது மட்டுமல்லாது அவ்விடங்களில் அநாவசியமாக சிலைகளையும் நிறுவி வருகின்றனர்.

ஏன் அஹிம்சையை மதிக்கின்ற, பின்பற்றுகின்ற எங்கள் மக்களுக்கு மட்டும் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது? நாம் இந்த நாட்டில் சமய நல்லிணக்கத்தை வேண்டுகின்றவர்கள். அதனால் தான் பௌத்த இந்து மாநாடுகளை நடாத்தி வருகின்றோம். இதன் மூலம்  பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வருகின்றது.

எனினும், எங்களால் இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க முடியாததற்கு காரணம் இவ்விரண்டு பிரச்சினைகளிலுமே அரசியல்வாதிகள் பின்புலமாக இருந்து அவரவர் மக்களை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர்.

எனவே, இந்துக்களின் ஆத்மாவாக விளங்கும் திருக்கேதீஸ்வர வளாகத்தினை காப்பாற்றித் தாருங்கள்” என்றார்.

இதனை  செவிமடுத்த ஜனாதிபதி  தமது பதிலுரையில் கூறியதாவது,“

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்.

இந்து பௌத்த சமயங்களில் சொல்லப்படுகின்ற மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காத மனிதத்துவத்தை, பசுவதையில் ஈடுபடாமை போன்ற விடயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனினும், மற்றைய மதத்தினர் அவரவர் மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அவர்கள் பின்பற்றுவதை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

நான் உங்களுடைய புனித பிரதேசமான திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பாகவும், மட்டகளப்பு காசிலிங்கேஸ்வரர் ஆலய தொல்பொருள் பிரதேசம் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுவதற்காகவும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் உடனடியாக அழைத்துப் பேசுவேன்.

நீங்கள் என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கலாம். நீங்கள் எனக்கு வழங்கிய பகவத்கீதையை நான் ஒரு உயர்ந்த பொக்கிஷமாகவும் தினம் வாசிக்கும்படியும் பத்திரப்படுத்துவேன்” என்றார்.

இந்தச் சந்திப்பில் இந்து சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

article_1466834784-cccccccccccccccc.jpg

- See more at: http://www.tamilmirror.lk/175517/-இந-த-க-கள-ன-நல-ல-ண-ணங-கள-மத-க-க-ன-ற-ன-#sthash.sxPLUMvG.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நவீனன் said:

உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில்

அப்ப அயோத்தியில் ராமர் கோவில் அமைத்தமை

5 minutes ago, putthan said:

அப்ப அயோத்தியில் ராமர் கோவில் அமைத்தமை

அங்கு முன்னர் இருந்த ராமர் கோவிலை மீண்டும் ஸ்தாபித்துள்ளார்கள். அவ்வளவு தான். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு வரவில்லை.

இப்படி சொல்வது அங்குள்ளவர்கள்.

1 hour ago, நவீனன் said:

இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை.

இது உண்மையே!
வலிந்து தாக்குதல் நடத்தும் குணம் இந்துக்களிடம் இல்லை. இதை மற்றவர்கள், சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் உட்பட, துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் அரசியல் என்று சொல்வது ........
நேர போய் ஆப்பை இறுக்கினால் ஜனாதிபதிக்கும் வேறு வழியில்லை 
இப்படித்தான் பேசி ஆகணும்.

சமய தலீவர் அள்வுக்கு கூட அரசியல் தலீவர்கள் செய்யவில்லை.
எஜமானுக்கு காக்கா பிடிப்பதில் காலம் கழிகிறது. 

1 hour ago, போல் said:

அங்கு முன்னர் இருந்த ராமர் கோவிலை மீண்டும் ஸ்தாபித்துள்ளார்கள். அவ்வளவு தான். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு வரவில்லை.

இப்படி சொல்வது அங்குள்ளவர்கள்.

இது உண்மையே!
வலிந்து தாக்குதல் நடத்தும் குணம் இந்துக்களிடம் இல்லை. இதை மற்றவர்கள், சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் உட்பட, துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

ராமர் கோவில் பூமியை பிச்சுக்கொண்டு மேல் எழுந்தா ?
அதுவும் ஆரிய ஆக்கிரமிப்பால்தான் வந்தது.

பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த பாமர் மஸூதியை இடிப்பது என்பது 
இந்து வெறி வேறு ஒன்றுமில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

   

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியை தெளிவூட்டும் அவசர சந்திப்பொன்று இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு புனித பகவத் கீதை நூல் ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இங்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் கூறுகையில், “நாம் என்றுமே இந்து மதம் விதந்துரைத்துள்ள அஹிம்சை கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றோம். இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் எமது அஹிம்சை கொள்கையை பலவீனமாக கருதி பல்வேறு மதப்பிரிவினர் எமது ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்றுவது மட்டுமல்லாது அவ்விடங்களில் அநாவசியமாக சிலைகளையும் நிறுவி வருகின்றனர்.

ஏன் அஹிம்சையை மதிக்கின்ற, பின்பற்றுகின்ற எங்கள் மக்களுக்கு மட்டும் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது? நாம் இந்த நாட்டில் சமய நல்லிணக்கத்தை வேண்டுகின்றவர்கள். அதனால் தான் பௌத்த இந்து மாநாடுகளை நடாத்தி வருகின்றோம். இதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வருகின்றது. எனினும், எங்களால் இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க முடியாததற்கு காரணம் இவ்விரண்டு பிரச்சினைகளிலுமே அரசியல்வாதிகள் பின்புலமாக இருந்து அவரவர் மக்களை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர். எனவே, இந்துக்களின் ஆத்மாவாக விளங்கும் திருக்கேதீஸ்வர வளாகத்தினை காப்பாற்றித் தாருங்கள்” என்றார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி தமது பதிலுரையில் கூறியதாவது,“ “நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன். இந்து பௌத்த சமயங்களில் சொல்லப்படுகின்ற மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காத மனிதத்துவத்தை, பசுவதையில் ஈடுபடாமை போன்ற விடயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனினும், மற்றைய மதத்தினர் அவரவர் மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அவர்கள் பின்பற்றுவதை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

நான் உங்களுடைய புனித பிரதேசமான திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பாகவும், மட்டகளப்பு காசிலிங்கேஸ்வரர் ஆலய தொல்பொருள் பிரதேசம் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுவதற்காகவும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் உடனடியாக அழைத்துப் பேசுவேன். நீங்கள் என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கலாம். நீங்கள் எனக்கு வழங்கிய பகவத்கீதையை நான் ஒரு உயர்ந்த பொக்கிஷமாகவும் தினம் வாசிக்கும்படியும் பத்திரப்படுத்துவேன்” என்றார். இந்தச் சந்திப்பில் இந்து சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=160236&category=TamilNews&language=tamil

3 hours ago, Maruthankerny said:

இதைத்தான் அரசியல் என்று சொல்வது ........
நேர போய் ஆப்பை இறுக்கினால் ஜனாதிபதிக்கும் வேறு வழியில்லை 
இப்படித்தான் பேசி ஆகணும்.

சமய தலீவர் அள்வுக்கு கூட அரசியல் தலீவர்கள் செய்யவில்லை.
எஜமானுக்கு காக்கா பிடிப்பதில் காலம் கழிகிறது. 

ராமர் கோவில் பூமியை பிச்சுக்கொண்டு மேல் எழுந்தா ?
அதுவும் ஆரிய ஆக்கிரமிப்பால்தான் வந்தது.

பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த பாமர் மஸூதியை இடிப்பது என்பது 
இந்து வெறி வேறு ஒன்றுமில்லை.  

எந்த வெறியிலிருந்து எந்த வெறி ஆரம்பித்தது என்று அடிமுடி தேடி ஒரு ஆராய்ச்சி செய்து எழுதினால் நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பலத்துடன் அதிகாரத்தில் உள்ளவனின் வெறி வெற்றியடிகிறது ...சரித்திரம் ஆகிறது

3 hours ago, putthan said:

ஆயுத பலத்துடன் அதிகாரத்தில் உள்ளவனின் வெறி வெற்றியடிகிறது ...சரித்திரம் ஆகிறது

100% உண்மை!

பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!!! - என்று சொல்வார்கள்.

அவருடைய சிங்கள-பௌத்த இனமதவெறிக் கும்பலே தமிழர்களின் காணியை கொள்ளையடித்து ஆக்கிரமிப்பு சிலைகளை வைக்கும் போது, திருக்கேதீஸ்வரத்தில் காடையர்களால் போலி வரலாற்றை புனைந்து சில ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் காணியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, இரவுடன் இரவாக சிலை வைக்கும் சர்வதேச மாபியாக்களை எப்படி அவர் கட்டுப்படுத்துவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.