Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் சிதைந்த கிளிநொச்சியிலும் 600லட்சத்தில் 99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்:-

Featured Replies

38 minutes ago, விசுகு said:

என்ன செய்வோம் கட்டினாலும் பிழை இடிச்சாலும் பிழை..

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, neervai baruki said:

nantri tamil elutha koncham uthavi seiungo,sulapamana muraijil

 

இதில் சென்று பாருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் அங்கை மக்கள் தொடர்ந்து வாழ அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, போல் said:

தமிழ் இனத்தின் நம்பிக்கை அச்சாணிகளாக, மனத் துன்பங்கள் போக்கும் உளவளத் துணை மையங்களாக கோவில்கள், சர்ச்சுக்கள்  இருந்து வருகின்றன என்பது வரலாறு.

எனவே மக்களின் நம்பிக்கை மையங்களை குறை சொல்வது நல்லதல்ல. அங்கு நடக்கும் வீண் செலவுகளை குறைப்பதில் தவறில்லை.

கோவில்களையும், சர்ச்சுக்களையும் அழித்துவிட்டால் தமிழர்களை அழித்ததற்கு சமனாகும்.

பள்ளிவாசல்கள விட்டுவிட்டீர்களே? காலமாகி விட்ட அப்துல் கலாம் தமிழன் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எதுக்கும் அங்கை மக்கள் தொடர்ந்து வாழ அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க பாருங்கோ.

விளம்பரமின்றி  பலர் செய்கின்றார்கள் .......ஆனால் கோவிலுக்கு அதிகமாக செய்கின்றனர் ....பயம் ,பக்தி ,புகழ் போன்றவை காரணமாக் இருக்கலாம்.....

8 minutes ago, Jude said:

பள்ளிவாசல்கள விட்டுவிட்டீர்களே? காலமாகி விட்ட அப்துல் கலாம் தமிழன் இல்லையா?

நாங்கள் அவரை வேணுமென்றால் தமிழன் என்று சொல்லலாம்....ஆனால் அவருடைய சமுகம் அவரை இஸ்லாமியர் என்று  அடையாளப்படுத்த தான் விரும்புவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

நாங்கள் அவரை வேணுமென்றால் தமிழன் என்று சொல்லலாம்....ஆனால் அவருடைய சமுகம் அவரை இஸ்லாமியர் என்று  அடையாளப்படுத்த தான் விரும்புவார்கள்

அவர் தன்னை தமிழன் என்று அடையாலப்படுத்தவில்லையா?

தமிழர்கள் தங்களை இந்துக்கள் அல்லது சைவர்கள் என்று அடையாளப்படுத்துவதை எப்போதாவது தமக்கு விருப்பமில்லாதது என்று கூறி இருக்கிறார்களா? ஏன் இஸ்லாமிய தமிழரான அப்துல் கலாம் போன்றவர்கள் மட்டும் தம்மை இஸ்லாமியர் என்று அடையாள படுத்துவதை விரும்பக்கூடாது? அப்படி அடையாள படுத்தினால் ஏன் அவர்களை தமிழர்கள் என்று ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்? அப்படியானால் தம்மை இந்துக்கள் அல்லது சைவர்கள் என்று அடையாளப்படுத்துவதை விரும்பிய ஆறுமுக நாவலர் போன்றவர்களை தமிழர்கள் என்று எப்படி ஏற்று கொள்வது?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Jude said:

அவர் தன்னை தமிழன் என்று அடையாலப்படுத்தவில்லையா?

தமிழர்கள் தங்களை இந்துக்கள் அல்லது சைவர்கள் என்று அடையாளப்படுத்துவதை எப்போதாவது தமக்கு விருப்பமில்லாதது என்று கூறி இருக்கிறார்களா? ஏன் இஸ்லாமிய தமிழரான அப்துல் கலாம் போன்றவர்கள் மட்டும் தம்மை இஸ்லாமியர் என்று அடையாள படுத்துவதை விரும்பக்கூடாது? அப்படி அடையாள படுத்தினால் ஏன் அவர்களை தமிழர்கள் என்று ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்? அப்படியானால் தம்மை இந்துக்கள் அல்லது சைவர்கள் என்று அடையாளப்படுத்துவதை விரும்பிய ஆறுமுக நாவலர் போன்றவர்களை தமிழர்கள் என்று எப்படி ஏற்று கொள்வது?

தமிழக இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள் ,அடையாளப்படுத்தி கொள்வார்கள் .....ஆனால் இலங்கை முஸ்லிம்கள் ஒரு பொழுதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் அவர்கள் தங்களை இஸ்லாமியர் என்ற அடையாளப்படுத்த தான் விரும்புகின்றார்கள் ,அதுமட்டுமல்ல தமிழர் என்ற அடையாளப்படுத்தினால் உடனே திருத்தி கொள்வார்கள் நாங்கள் இஸ்லாமியர்கள் என்று......

விபூதி பூசினவன் தமிழன் என்று  சிங்களவர்களும் ,இஸ்லாமியர்களும் அடையாளப்படுத்தியினம் , அவர்கள் சைவர்கள் என்றோ இந்துக்கள் என்றோ அடையாளப்படுத்துவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழக இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள் ,அடையாளப்படுத்தி கொள்வார்கள் .....ஆனால் இலங்கை முஸ்லிம்கள் ஒரு பொழுதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் அவர்கள் தங்களை இஸ்லாமியர் என்ற அடையாளப்படுத்த தான் விரும்புகின்றார்கள் ,

இங்கே தான் தெளிவு ஆரம்பமாகிறது. இலங்கையில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம்மை மூர்கள் (அராபிய வழித்தோன்றல்கள்) என்றே கருதுகிறார்கள். அராபியர்களை இழிவாக அழைக்கவே மூர் என்ற அடையாளத்தை போர்த்துக்கேயர் உருவாக்கினர். இன்று அதை இலங்கை மூர்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மொழி தமிழ் அல்ல - அரபி தமிழ். அரபி தமிழ் ஆங்கிலத்தில் அறவி (Arwi,  لسان الأروي ) என்று அழைக்கப்படும். இவர்கள் தவிர இசுலாமியரான தமிழர்கள் பெருமளவில் இலங்கையில் இருக்கிறார்கள். இவர்கள் அப்துல் கலாம் போலவே தமிழர்கள் - மூர்கள் அல்ல. அவர்கள் மதம் இஸ்லாம். ஆனால் அவர்களுக்கு குரல் தரவல்ல தலைவர்கள் இன்று இல்லை. தமது அரசியல் பலத்துக்காக இந்த தமிழர்களையும் தமது மக்கள் என்று அடாத்தாக உரிமை கொண்டாடி தமிழர் தொகையை குறைக்க முயலும் அறவி பேசும் மூர்களுக்கு நீங்களும் உடந்தையாக இருக்க கூடாது. 

விபூதி பூசினவன் தமிழன் என்று  சிங்களவர்களும் ,இஸ்லாமியர்களும் அடையாளப்படுத்தியினம் , அவர்கள் சைவர்கள் என்றோ இந்துக்கள் என்றோ அடையாளப்படுத்துவதில்லை

சிங்களவர்களும் ,இஸ்லாமியர்களும் தமது தலைவிதியையும் தமது அடையாளத்தையும் தீர்மானிக்க இலங்கை தமிழர்கள் விட்டு விட்டதால் தான் இந்த இனம் அழிவை நோக்கி போய்க்கொடிருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Jude said:

இங்கே தான் தெளிவு ஆரம்பமாகிறது. இலங்கையில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம்மை மூர்கள் (அராபிய வழித்தோன்றல்கள்) என்றே கருதுகிறார்கள். அராபியர்களை இழிவாக அழைக்கவே மூர் என்ற அடையாளத்தை போர்த்துக்கேயர் உருவாக்கினர். இன்று அதை இலங்கை மூர்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மொழி தமிழ் அல்ல - அரபி தமிழ். அரபி தமிழ் ஆங்கிலத்தில் அறவி (Arwi,  لسان الأروي ) என்று அழைக்கப்படும். இவர்கள் தவிர இசுலாமியரான தமிழர்கள் பெருமளவில் இலங்கையில் இருக்கிறார்கள். இவர்கள் அப்துல் கலாம் போலவே தமிழர்கள் - மூர்கள் அல்ல. அவர்கள் மதம் இஸ்லாம். ஆனால் அவர்களுக்கு குரல் தரவல்ல தலைவர்கள் இன்று இல்லை. தமது அரசியல் பலத்துக்காக இந்த தமிழர்களையும் தமது மக்கள் என்று அடாத்தாக உரிமை கொண்டாடி தமிழர் தொகையை குறைக்க முயலும் அறவி பேசும் மூர்களுக்கு நீங்களும் உடந்தையாக இருக்க கூடாது. 

சிங்களவர்களும் ,இஸ்லாமியர்களும் தமது தலைவிதியையும் தமது அடையாளத்தையும் தீர்மானிக்க இலங்கை தமிழர்கள் விட்டு விட்டதால் தான் இந்த இனம் அழிவை நோக்கி போய்க்கொடிருக்கிறது.

 

இதில் எங்கள் கையில் ஒன்றுமில்லை....நீங்கள் கூறும் " மூர்" விளக்கம் ஒரு நுண்ணறிவு விளக்கம் இதை புரிந்து கொள்ள கூடிய நிலையில் அந்த மக்கள்(தமிழ் இஸ்லாமியர்) இல்லை.அவர்களை பொறுத்தவரை பள்ளி வாசலுக்கு போறவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள் என்பதுதான்.....

எப்படி சைவர்கள் ,வைணவர்கள் எல்லாம் இந்துக்கள் என்ற அடையாளத்தினுள் வருகின்றார்களோ அதே போன்று இதுவும் ஒன்று....திருகோணமலையில் மிகப்பெரிய லட்சுமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது அதில உள்ள கடவுள்களில் அரைவாசி பெயர்கள் எனக்கு தெரியாது ...தற்பொழுதைய உலக பாகுபாட்டுக்கு இது தேவைப்படுகிறது ...இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம் ,பெளத்தம் இந்த வகையில் உலகை ஒழுங்கு படுத்த தான் உலக ஆட்சியாளர்கள் விரும்ப்கின்றார்கள்..

இந்த வகைப் பாகுபாட்டில்தான் பிரித்தானியா எல்லைகளை வகுத்துவிட்டு சென்றது அதை தொடர்ந்து  பாதுகாப்பத்தில் தொடர்ந்து பங்குபற்றுவினம்....

6 hours ago, Jude said:

பள்ளிவாசல்கள விட்டுவிட்டீர்களே? காலமாகி விட்ட அப்துல் கலாம் தமிழன் இல்லையா?

நெருப்பை அள்ளி மடியிலை கட்டிக்கொண்டு பிறகு சுடுகுது சுடுகுது என்று கத்த விருப்பம் என்றால் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு உலகத்தில் பல நூறு வரலாறுகள் உண்டு.

அப்துல்கலாம் ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகளை உதாரணமாக எடுப்பதில் அர்த்தம் இல்லை.

அப்துல்கலாமின் மூத்தோர் மன்னாரில் சைவர்களாக இருந்து,  இராமேஸ்வரத்தில் குடிகொண்டு, இராமநாத சிவன் கோவிலில் தொண்டுகள் செய்த பரம்பரை. ஒரு திருமணத்தால் அவரது பாட்டனார் முஸ்லிமாக மாறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

எமது தமிழ்பிரதேசங்கள் இன்றிருக்கும் இனமத அச்சுறுத்தல்களை கருத்திலெடுத்து பார்த்தால் கோவில்களும் பிரமாண்டங்களும் மிக அவசியமாகின்றது.
 தமிழ் பகுதிகளில்  தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க....... ஏனைய  மதங்களும் இனங்களும் அத்துமீறி தாண்டவம் ஆடும் போது யாருக்குமே சொல்லி அழ மனம் வராதது ஏனோ????

 மற்ற இனம் நோகாமல் சிந்திக்க, பேசக் கற்றுக்கொள்ள வேணும்.  மற்ற இனத்துக்கு இருக்கிற பிரச்சனையை முதலில் ஏற்றுக்கொள்ள வேணும். நமது அரசியல் தரகர்கள் சொல்லிப் போட்டார்கள். பிறகு எமது பிரச்சனைகளையும், அச்சுறுத்தல்களையும் சாவகாசமாய்ப் பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/16/2016 at 11:20 PM, Jude said:

அவர் தன்னை தமிழன் என்று அடையாலப்படுத்தவில்லையா?

தமிழர்கள் தங்களை இந்துக்கள் அல்லது சைவர்கள் என்று அடையாளப்படுத்துவதை எப்போதாவது தமக்கு விருப்பமில்லாதது என்று கூறி இருக்கிறார்களா? ஏன் இஸ்லாமிய தமிழரான அப்துல் கலாம் போன்றவர்கள் மட்டும் தம்மை இஸ்லாமியர் என்று அடையாள படுத்துவதை விரும்பக்கூடாது? அப்படி அடையாள படுத்தினால் ஏன் அவர்களை தமிழர்கள் என்று ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்? அப்படியானால் தம்மை இந்துக்கள் அல்லது சைவர்கள் என்று அடையாளப்படுத்துவதை விரும்பிய ஆறுமுக நாவலர் போன்றவர்களை தமிழர்கள் என்று எப்படி ஏற்று கொள்வது?

ஆறுமுகநாவலரை அப்துல்  கலாமுடன் ஒப்பிடும் உங்களின் அறிவை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Eppothum Thamizhan said:

ஆறுமுகநாவலரை அப்துல்  கலாமுடன் ஒப்பிடும் உங்களின் அறிவை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை.

அதை தெரிந்தவர்களிடம் விட்டு விடுங்கள். தெரியாத விடயங்களை பற்றி சிந்தித்து குழம்பி போய் விடாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அதை தெரிந்தவர்களிடம் விட்டு விடுங்கள். தெரியாத விடயங்களை பற்றி சிந்தித்து குழம்பி போய் விடாதீர்கள். 

அப்துல் கலாமை நாங்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவர் எமக்காக என்ன செய்தார்? அவரை ஒரு நல்ல அறிவாளியாக நல்ல  மனிதராக போற்றலாம். அவ்வளவே. ஒன்று தெரியாவிட்டால் மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Eppothum Thamizhan said:

அப்துல் கலாமை நாங்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? 

ஏன் கொண்டாடுகிறீர்கள்? நீங்கள் கொண்டாடிவிட்டு என்னிடம் இதை ஏன் கேட்கிறீர்கள்?

 

அவர் எமக்காக என்ன செய்தார்? 

நீங்கள் தான் சொல்ல வேண்டும். என்னிடம் ஏன் இதை கேட்கிறீர்கள்?

அவரை ஒரு நல்ல அறிவாளியாக நல்ல  மனிதராக போற்றலாம். 

அணுக்குண்டு செய்தவன் எல்லாம் நல்ல அறிவாளியும் நல்ல மனிதனுமா? கொத்து குண்டு போட்ட ராஜபக்செவையும் நல்ல மனிதன் நல்ல அறிவாளி என்று சொல்லக்கூடியவர் நீங்கள்.

 ஒன்று தெரியாவிட்டால் மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும், ஒன்றும் தெரியாத என்னிடம் இவ்வளவு கேள்விகள்!

அணுக்குண்டு செய்தவனை நல்ல அறிவாளி, நல்ல மனிதன் என்று நீங்கள் சொல்ல அதை நான் குழப்புகிறேன் என்று உங்களுக்கு கவலை. சரி, இனி குழப்பவில்லை. அணுக்குண்டு செய்தவன், கொத்து குண்டு போட்டவனுக்கு எல்லாம் சிலை வையுங்கள். பிறகு என்னிடம் வந்து கேளுங்கள் ஏன் நீங்கள் சிலை வைத்தீர்கள் என்று. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

ஏன் கொண்டாடுகிறீர்கள்? நீங்கள் கொண்டாடிவிட்டு என்னிடம் இதை ஏன் கேட்கிறீர்கள்?

 

நீங்கள் தான் சொல்ல வேண்டும். என்னிடம் ஏன் இதை கேட்கிறீர்கள்?

அணுக்குண்டு செய்தவன் எல்லாம் நல்ல அறிவாளியும் நல்ல மனிதனுமா? கொத்து குண்டு போட்ட ராஜபக்செவையும் நல்ல மனிதன் நல்ல அறிவாளி என்று சொல்லக்கூடியவர் நீங்கள்.

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும், ஒன்றும் தெரியாத என்னிடம் இவ்வளவு கேள்விகள்!

அணுக்குண்டு செய்தவனை நல்ல அறிவாளி, நல்ல மனிதன் என்று நீங்கள் சொல்ல அதை நான் குழப்புகிறேன் என்று உங்களுக்கு கவலை. சரி, இனி குழப்பவில்லை. அணுக்குண்டு செய்தவன், கொத்து குண்டு போட்டவனுக்கு எல்லாம் சிலை வையுங்கள். பிறகு என்னிடம் வந்து கேளுங்கள் ஏன் நீங்கள் சிலை வைத்தீர்கள் என்று. 

 

 

எனக்கு எந்த இந்தியனுக்கும் சிலை வைப்பதில் உடன்பாடும் இல்லை அதை நான் கொண்டாடவும் இல்லை. ஏனெனல் எமது இனத்தின் முதல் எதிரியே இந்தியாதான் என்று நினைப்பவன் நான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.