Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயல் வீட்டுப் பெண்ணிக் கத்திக்குத்துக்கு இலக்காகி 5 பிள்ளைகளின் தாய் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அயல் வீட்டுப் பெண்ணின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்றிரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என  பொலிஸார் தெரிவித்தனர். இந்த கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் நேற்று பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது.

அயல் வீட்டுப் பெண்ணின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்றிரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் நேற்று பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது.

   

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், சம்பூர்- சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை மீளச் செலுத்தாமையால் அதுதொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து, பக்கத்துவீட்டுப் பெண், ஒவ்வொரு நாளும் திட்டிக்கொண்டே இருந்துள்ளார். இந்நிலையே இவ்விருவருக்கும் இடையில் குரோதம் வளரக் காரணமானது. இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே, இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161524&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அடெங்கொக்கா மக்கா!

வட்டிக்கு காசும் வாங்கிக் கொடுத்து, கத்தியால குத்தும் வாங்க வேண்டியிருந்திருக்கு.

இதுக்குத்தான் சொல்லுறது: 'துனை போனாலும், பினை போகாத' என்று. tw_anguished:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

"கடன்.... உறவுக்கு, பகை" என்பது எவ்வளவு உண்மை.
வட்டிக் காசுக்கு  ஆசைப் பட்டு,  இப்ப... உயிரையும் பறி கொடுத்து, 5 பிள்ளைகளையும்  நடுத்தெருவில் விட்டாச்சு.
ஆகக் குறைந்தது..... அந்தப் பணத்தை, திருப்பித் தரக் கூடிய  நிலையில் உள்ள பண்பான ஆளா என்று பார்த்து தன்னும் கொடுத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தே பரிதாபம். கடன் வாங்கினவா மேல சொறீலங்கா பொலிஸ் ஒரு உருப்படியான நடவடிக்கையை துரிதமாக எடுத்திருந்தால்.. இந்தச் சம்பவத்தையே தவிர்த்திருக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அந்தே பரிதாபம். கடன் வாங்கினவா மேல சொறீலங்கா பொலிஸ் ஒரு உருப்படியான நடவடிக்கையை துரிதமாக எடுத்திருந்தால்.. இந்தச் சம்பவத்தையே தவிர்த்திருக்கலாம். :rolleyes:

வாங்க போது கெஞ்சி கூத்தாடி வாங்குறார்கள் கேட்டால்தான் பாஸ் பிரச்சனை 

நான் எனது லைசன்ஸ் காணாமல் போக பொலிஸ் ஸ்டேசனுக்கு போக நேர்ந்தது அப்போது இதேபோல்தான் ஒரு பெண் வந்து இருந்தா பொலிஸ் காரர் கேட்டது என்ககிட்டா கேட்டா நீ வட்டிகுகு பணம் கொடுத்தது  முதலில் உன்னை கைது செய்ய வேண்டும் என்றார். 

அதுவும் சரிதான் இப்போ வங்கியில் லோண் எடுத்து அதை வட்டிக்கு கொடுத்து அந்த நெருப்பு பணத்தில் வாழ ஆகிறது ஒரு கூட்டம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.