Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

(கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம்)

வாழ்நாள் முழுவதும்

கொசுக்களோடு போராடியவன்

கொசுக்கடியால் நோயுற்று

செத்தே போனான்.

சுருள்கள், வில்லைகள், திரவங்கள்,

மின்மட்டைகள் என்று

கொசுவுக்கு எதிராக அவன்

பிரயோகித்த ஆயுதங்கள்

முடிவுறாத அவனது போராட்டத்தின்

மௌன சாட்சிகளாக நிற்கின்றன.

அவன் மரணத்தை தொலைக்காட்சியில்

விவாதித்தவன் சொன்னான்,

கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில்

அவன் சட்டை அணிந்திருந்தால்

கொசு கடித்திருக்காதாம்!

 

 

(பருவங்களை உடுத்துபவள்)

சீரிய சுழற்சியில்

ஆடைகளை அவிழ்த்து

மாற்றி அணிகிறாள்.

அவள் வெய்யிலை உடுத்தியபோது

தவித்துப்போனேன்.

காற்றை உடுத்தியபோது

கலைந்துபோனேன்.

மழையை உடுத்தியபோது

மனம் கிறங்கிப்போனேன்

இப்போது அவள்

பனியை உடுத்துகையில்

போர்வைக்குள் பதுங்குகிறேன்

கவிதைக் கனவுகளோடு!

 

 

(காதலைச் சொல்வதற்கு...)

காதலைச் சொல்வதற்கு

சரியான இடம்

எதுவென்று வினவினான்.

கடற்கரை?

திருமண வீடு?

பூங்கா?

கல்லூரி வாசல்?

பேருந்து நிறுத்தம்?

பலரும் யோசனை சொன்னார்கள்.

காதலைச் சொல்வதற்கு

சரியான இடம்

மனதில்லையோ?

(நன்றி: குங்குமம் 2.9.16)

 

Edited by seyon yazhvaendhan

காதலை சொல்லக்கூடாது, வெளிப்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துமே அழகிய கவிதைகள், நண்ப !

 

இருந்தாலும் பின்வரும் கவிதையின் கடைசி மூன்று வரிகளைப் படித்ததும்.. கொஞ்சம் ஆடித் தான் போனேன்..!

அதில் புதைந்து கிடக்கும்... அர்த்தங்களோ..ஆயிரம்!

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

(பருவங்களை உடுத்துபவள்)

சீரிய சுழற்சியில்

ஆடைகளை அவிழ்த்து

மாற்றி அணிகிறாள்.

அவள் வெய்யிலை உடுத்தியபோது

தவித்துப்போனேன்.

காற்றை உடுத்தியபோது

கலைந்துபோனேன்.

மழையை உடுத்தியபோது

மனம் கிறங்கிப்போனேன்

இப்போது அவள்

பனியை உடுத்துகையில்

போர்வைக்குள் பதுங்குகிறேன்

கவிதைக் கனவுகளோடு!

 

வாழ்த்துக்கள்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, கரும்பு said:

காதலை சொல்லக்கூடாது, வெளிப்படுத்த வேண்டும். 

வெளிப்படுத்தலில் ஒரு வகை சொல்லுதல் தோழர்!

 

7 hours ago, புங்கையூரன் said:

அனைத்துமே அழகிய கவிதைகள், நண்ப !

 

இருந்தாலும் பின்வரும் கவிதையின் கடைசி மூன்று வரிகளைப் படித்ததும்.. கொஞ்சம் ஆடித் தான் போனேன்..!

அதில் புதைந்து கிடக்கும்... அர்த்தங்களோ..ஆயிரம்!

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

(பருவங்களை உடுத்துபவள்)

சீரிய சுழற்சியில்

ஆடைகளை அவிழ்த்து

மாற்றி அணிகிறாள்.

அவள் வெய்யிலை உடுத்தியபோது

தவித்துப்போனேன்.

காற்றை உடுத்தியபோது

கலைந்துபோனேன்.

மழையை உடுத்தியபோது

மனம் கிறங்கிப்போனேன்

இப்போது அவள்

பனியை உடுத்துகையில்

போர்வைக்குள் பதுங்குகிறேன்

கவிதைக் கனவுகளோடு!

 

வாழ்த்துக்கள்!

 

மிக்க நன்றி தோழரே!

 

4 hours ago, seyon yazhvaendhan said:

வெளிப்படுத்தலில் ஒரு வகை சொல்லுதல் தோழர்!

 

மிக்க நன்றி தோழரே!

 

காதலை வெளிப்படுத்துவதில் ஓர் வகை சொல்லுதல், ம், அதுவும் சரிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/30/2016 at 6:32 PM, கரும்பு said:

காதலை வெளிப்படுத்துவதில் ஓர் வகை சொல்லுதல், ம், அதுவும் சரிதான். 

வாழ்த்துக்கள் நண்பா

சொல்ல வ்போனால்  அடி முதல் நுனி வரை நடுங்குதப்பா  இதயம் வெளிய வந்து அடிக்குது ம்ம்ம்ம்tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன் யாழ்வேந்தன்!!

யாழ் கடந்தும் குங்குமம் தங்கள் கவித்துவத்தைத் துலங்க வைத்துள்ளது கண்டு மகிழ்ச்சி.

காதலைச் சொல்வதை, கேட்பதை விடவும் உணர்ந்துகொள்ளும் நிலைதான் தெய்வீகக் காதலோ.... :love:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/1/2016 at 5:58 PM, முனிவர் ஜீ said:

வாழ்த்துக்கள் நண்பா

சொல்ல வ்போனால்  அடி முதல் நுனி வரை நடுங்குதப்பா  இதயம் வெளிய வந்து அடிக்குது ம்ம்ம்ம்tw_dissapointed:

நன்றி தோழரே!

 

On 9/3/2016 at 0:13 PM, Paanch said:

வாழ்த்துக்கள் சேயோன் யாழ்வேந்தன்!!

யாழ் கடந்தும் குங்குமம் தங்கள் கவித்துவத்தைத் துலங்க வைத்துள்ளது கண்டு மகிழ்ச்சி.

காதலைச் சொல்வதை, கேட்பதை விடவும் உணர்ந்துகொள்ளும் நிலைதான் தெய்வீகக் காதலோ.... :love:

தங்களின் உளமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே!   யாழ் தளம் எனக்கு நல்லதொரு கவிதைக் களம் அமைத்துத் தந்திருக்கிறது.   நன்றி அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.