Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

Featured Replies

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
 
 
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ்நாட்டில்   வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் 11 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். 
 
சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது மகள் கீர்த்திகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் 11 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னே ஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் இடம்பெ ற்றது.
 
யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட போராசிரியர் புஸ்பரட்ணம் மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வேலணை மத்திய கல்லுாரி மாணவிக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து உள்ளுராட்சி ஆணையாளரின் பன்முக ப்பட்ட நிதி மூலம் பருத்தித்துறை பிரதேசசபைக்கு மலக்கழிவு ஏற்றும் புதிய வண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/17020

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள், நல்லதொரு  எடுத்துக்காட்டான முன்மாதிரி.

இப்படி தாயகம் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பமும் வடமாகாணசபை ஊடாக இவ்வாறான உதவிகளையாவது செய்திருந்தால்  

இன்று எமது மக்கள் தன்னிறைவு கண்டிருப்பர்.

கோயிலுக்கும்

கூல் ரிங்சுக்கும் கொட்டியதில் ஒரு  சிறு தொகை தான் இதுவும்..

இனியாவது.......???

யாழ் கள உறவுகளாவது இதை பின் பற்றலாமே....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பாராட்டுக்கள், நல்லதொரு  எடுத்துக்காட்டான முன்மாதிரி.

இப்படி தாயகம் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பமும் வடமாகாணசபை ஊடாக இவ்வாறான உதவிகளையாவது செய்திருந்தால்  

இன்று எமது மக்கள் தன்னிறைவு கண்டிருப்பர்.

கோயிலுக்கும்

கூல் ரிங்சுக்கும் கொட்டியதில் ஒரு  சிறு தொகை தான் இதுவும்..

இனியாவது.......???

யாழ் கள உறவுகளாவது இதை பின் பற்றலாமே....

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

நல்லவிடயங்களுக்கு

நாலு  பேருக்கு போய்ச்சேருவதற்கு விளம்பரமும் வேண்டும்

அதை விளங்காதவர் போல் முட்டையில் மயிர் புடுங்குவோர் பற்றிய ஆதங்கம் எம்மை மேலும் மேலும் பின் தங்கி

அவர்களுக்கு விளம்பரம் தந்துவிடும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, வாத்தியார் said:

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

வாத்தியார்! 
தற்போதைய ஊர் நிலவரங்களை பார்க்கும் போது இப்படியான செய்திகளுக்கு கட்டாயம் விளம்பரம் தேவைப்படுகின்றது.
புலம் பெயர்ந்தவர்களில் 80 வீதமானோர் தாயகத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே இருக்கின்றார்கள். பலர் நம்பகத்தன்மையான வழிகள் தெரியாமலே இருக்கின்றார்கள். அதற்காகவாவது  விளம்பரம் அவசியம்.

அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் எம்மக்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும். அவர்களுக்கான சொந்த தொழில்வசதிகளை இலகுவாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


ஈழத்து புலம்பெயர் தேச மக்கள் போரை விரும்பியவர்களில்லை என்பதை இங்குள்ள/அங்குள்ள வெள்ளாந்திகளுக்கு புரிய வைக்க வேண்டும்.  

போரை சிங்களமே எம்மவர் மீது திணித்தது என்பதையும் நாம் புரிய வைக்க வேண்டும்:)

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் 

நிட்சயமாக அரசியல் வாதிகளை நம்ப வேண்டாம் உதவி செய்ய விரும்புவர்கள் ஊரில் உள்ள கிராம சேவகரை அணுகி அவர் மூலமாக வறிய குடும்பங்களை கண்டறித்து உதவலாம் அவரிடம்சகல குடும்பங்களின் விபரங்கள் உண்டு  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.