Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல்

Featured Replies

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல்
2016-09-04 20:39:41

18999Ibrahim-ansar---Sri-Lanka-High-commமலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு  சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார்.


இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை  வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18999#sthash.O85xNsTD.dpuf
  • தொடங்கியவர்

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி வெளியானது..!

 

 

 

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

 

 

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.   

 இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகமானது உள்நாட்டு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் மிகவும் வன்மையான முறையில் கண்டிக்கின்றது. 

http://www.virakesari.lk/article/10990

  • தொடங்கியவர்

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் தாக்குதல் ; ஐவர் கைது

 

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

thumb_Sri-Lankan-High-Commissioner-in-Ma

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை  தாக்குதல் மேற்கொண்டனர்.

 

 

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/10998

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இன்றையிலையில் புலம் பெயர் தமிழர் என்ன செய்யணும். தமிழக தமிழர்கள் என்ன செய்யணும் தாயக தமிழர் என்ன செய்யணும்? என்பதில் தெளிவாக இருக்கணும் என்பது எனது ஒரு கனவு. அதன்படி மலேசியாவில் ( புலம் பெயர் மற்றும் தமிழக உறவுகள் ஒன்று சேர்ந்து) சரியான முன்னதாரணத்தை காட்டியுள்ளனர். தாயக தமிழருக்கு நாங்கள் இருக்கின்றோம். அவர்களை தவிர்த்து இலங்கையில் எதையும் சாதித்துவிடமுடியாது. தமிழருக்கு தீர்வில்லாது நரித்தந்திரங்கள் மூலம் அவர்களை ஆள முயன்றால் உங்களால் வெளியில் வரவே முடியாது என்னும் நிலையை நாம் கொண்டு வரணும். இதை 2009 இலேயே நாம் செய்திருக்கணும். இது இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் தற்பொழுதும் தேவைப்படுகிறது. நன்றி உறவுகளே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழரின் இன்றையிலையில் புலம் பெயர் தமிழர் என்ன செய்யணும். தமிழக தமிழர்கள் என்ன செய்யணும் தாயக தமிழர் என்ன செய்யணும்? என்பதில் தெளிவாக இருக்கணும் என்பது எனது ஒரு கனவு. அதன்படி மலேசியாவில் ( புலம் பெயர் மற்றும் தமிழக உறவுகள் ஒன்று சேர்ந்து) சரியான முன்னதாரணத்தை காட்டியுள்ளனர். தாயக தமிழருக்கு நாங்கள் இருக்கின்றோம். அவர்களை தவிர்த்து இலங்கையில் எதையும் சாதித்துவிடமுடியாது. தமிழருக்கு தீர்வில்லாது நரித்தந்திரங்கள் மூலம் அவர்களை ஆள முயன்றால் உங்களால் வெளியில் வரவே முடியாது என்னும் நிலையை நாம் கொண்டு வரணும். இதை 2009 இலேயே நாம் செய்திருக்கணும். இது இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் தற்பொழுதும் தேவைப்படுகிறது. நன்றி உறவுகளே.

2009 இல் செய்திருந்தால் புலி இன்னும் மிச்சம் இருக்கு என்று பிரச்சினையை திசை திருப்பி இருப்பார்கள் விசுகு அண்ணா.. கால ஓட்டம்தான் எல்லாவற்றுக்குமான சூழ்நிலைகளை அமைத்துத் தருகிறது.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தமிழரின் இன்றையிலையில் புலம் பெயர் தமிழர் என்ன செய்யணும். தமிழக தமிழர்கள் என்ன செய்யணும் தாயக தமிழர் என்ன செய்யணும்? என்பதில் தெளிவாக இருக்கணும் என்பது எனது ஒரு கனவு. அதன்படி மலேசியாவில் ( புலம் பெயர் மற்றும் தமிழக உறவுகள் ஒன்று சேர்ந்து) சரியான முன்னதாரணத்தை காட்டியுள்ளனர். தாயக தமிழருக்கு நாங்கள் இருக்கின்றோம். அவர்களை தவிர்த்து இலங்கையில் எதையும் சாதித்துவிடமுடியாது. தமிழருக்கு தீர்வில்லாது நரித்தந்திரங்கள் மூலம் அவர்களை ஆள முயன்றால் உங்களால் வெளியில் வரவே முடியாது என்னும் நிலையை நாம் கொண்டு வரணும். இதை 2009 இலேயே நாம் செய்திருக்கணும். இது இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் தற்பொழுதும் தேவைப்படுகிறது. நன்றி உறவுகளே.

 

இப்படி ஒருவரை போட்டு அடிப்பதா சிற‌ந்த முன்னுதாரணம்.
மிகவும் கேவலமான கன்டனத்துக்குறிய செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, colomban said:

இப்படி ஒருவரை போட்டு அடிப்பதா சிற‌ந்த முன்னுதாரணம்.
மிகவும் கேவலமான கன்டனத்துக்குறிய செயல்.

லட்சம் மக்களை

ஆயிரக்கணக்கான அங்கவீனர்களை

அரை உயிரோடு

போட்டு புதைக்கும் தேசத்தின் தூதுவரை

அடிப்பதை கண்டிக்கும் முன்

அவர்கள் செய்த அநியாயங்களை கண்டியுங்கள் பார்ப்போம்

அங்கிருந்து தொடங்கலாம் உங்கள் மனிதாபிமானப்பணிகளை...

  • கருத்துக்கள உறவுகள்

தூதுவரை அடிப்பதால் என்ன நடக்க போகிறது ஒன்றும் இல்லையே தமிழர்கள் செய்வது கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம்  
:unsure:

பல இலட்சம்  தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் ஏஜென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இவர்கள் சிங்களவர்களாகவும் அவர்கள் இலங்கையில் ஹிந்திய தூதுவரை இதேபாணியில் தாக்கியிருந்தால் தாக்கியவர்களுக்கு பலத்த பாராட்டுக்களும், அமைச்சு பதவிகளும் கிடைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

பல இலட்சம்  தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் ஏஜென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அவர்களை கைது செய்ததாக தற்போது செய்திகள் வந்துள்ளதே போல் அண்ணை

2 minutes ago, முனிவர் ஜீ said:

அவர்களை கைது செய்ததாக தற்போது செய்திகள் வந்துள்ளதே போல் அண்ணை

நீதிக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவது உலகெங்கும் காலம் காலமாக நடப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது.

ஆக்கிரமிப்பாளர்களை, கொலைகாரர்களை கொன்றவர்கள் கூட உடன் சிறைக்கு சென்றாலும்  பிற்காலத்தில் வீரர்களாக போற்றப்படுவதும் உலகெங்கும் காலம் காலமாக நடப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது.

அறிந்திருந்தால் இந்த வீரர்களை நிச்சயம் உடனடியாகவே பாராடியிருப்பீர்கள் - இல்லையா முனிவர்ஜி?

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

தூதுவரை அடிப்பதால் என்ன நடக்க போகிறது ஒன்றும் இல்லையே தமிழர்கள் செய்வது கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம்  
:unsure:

அப்போ

சிங்களவர்கள் மட்டும் ஏன் தொடர்ந்து தமிழரை தாக்குகிறார்கள்??

3 minutes ago, முனிவர் ஜீ said:

அவர்களை கைது செய்ததாக தற்போது செய்திகள் வந்துள்ளதே போல் அண்ணை

அண்மையில் கதிர்காமத்துக்கருகில்  தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களை

பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களை

கைது   செய்தார்களா ராசா???

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, போல் said:

நீதிக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவது உலகெங்கும் காலம் காலமாக நடப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது.

ஆக்கிரமிப்பாளர்களை, கொலைகாரர்களை கொன்றவர்கள் கூட உடன் சிறைக்கு சென்றாலும்  பிற்காலத்தில் வீரர்களாக போற்றப்படுவதும் உலகெங்கும் காலம் காலமாக நடப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது.

அறிந்திருந்தால் இந்த வீரர்களை நிச்சயம் உடனடியாகவே பாராடியிருப்பீர்கள் - இல்லையா முனிவர்ஜி?

 

போராடுபவர்களை  கைதும் சிறையும் நான் அறிந்ததே 

போல் அண்ணை அன்சாரியை அடிப்பதால் என்ன நடந்திரபோகிறது மகிந்த தானே வந்தார்  அவருக்குதானே அடித்திருக்க வேண்டும்    எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் ஆகிவிட்டது போருக்கும் அன்சாரிக்கும் சம்பந்தம் இருக்கிறதா ம்கிந்த தானே குற்றவாளி 

பாராட்ட தோன்றவில்லை இதன் எதிரொலி இலங்கையில் ஒலிக்காவிட்டால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

அப்போ

சிங்களவர்கள் மட்டும் ஏன் தொடர்ந்து தமிழரை தாக்குகிறார்கள்??

அண்மையில் கதிர்காமத்துக்கருகில்  தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களை

பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களை

கைது   செய்தார்களா ராசா???

இலங்கையில் போர் முடிந்த பிறகு இங்கே உள்ள தமிழர்கள் அடிமைபோலவே பார்க்கப்படுகிறார்கள்  காரணம் நீங்கள் அறீவீர்கள் போரில் தோற்றவர்கள் அடிமைகள்  போலவே 

அவர்கள் தாக்கிவிட்டு அங்கே இருந்துருவார்கள் இங்கே நீங்கள் சொல்வது போல் ஏன் தாக்குறார்கள் என்று தெரியாமல் நாங்களே  முளித்துக்கொண்டு இருக்குறம்  இது இன்னும் அதிகரிக்க கூடாது என்பதற்க்காகவே  அந்த கருத்து 

கருத்து எழுதலாம் ஆனால்  அது எங்கோ இருக்கும்  (இலங்கையில் )  ஒருவனை பதம் பார்க்கா விட்டால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

இலங்கையில் போர் முடிந்த பிறகு இங்கே உள்ள தமிழர்கள் அடிமைபோலவே பார்க்கப்படுகிறார்கள்  காரணம் நீங்கள் அறீவீர்கள் போரில் தோற்றவர்கள் அடிமைகள்  போலவே 

அவர்கள் தாக்கிவிட்டு அங்கே இருந்துருவார்கள் இங்கே நீங்கள் சொல்வது போல் ஏன் தாக்குறார்கள் என்று தெரியாமல் நாங்களே  முளித்துக்கொண்டு இருக்குறம்  இது இன்னும் அதிகரிக்க கூடாது என்பதற்க்காகவே  அந்த கருத்து 

கருத்து எழுதலாம் ஆனால்  அது எங்கோ இருக்கும்  (இலங்கையில் )  ஒருவனை பதம் பார்க்கா விட்டால் சரி 

அது தான்  தாயகத்திலுள்ளவர்கள் அமைதியாக 

ராஐதந்திர ரீதியில் ஏதாவது பெற பாருங்கள்

உங்களை ஏமாற்றக்கூடாது

நீங்கள் அனாதைகள் அல்ல என்று மட்டுமே சொல்கின்றோம்...

  • தொடங்கியவர்

மலேசியாவுக்கான இலங்கை தூதர் தாக்கப்பட்டது தொடர்பாக 5 சந்தேக நபர்கள் கைது

 

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராஹிம் அன்சார், ஞாயிற்றுகிழமையன்று தாக்கப்பட்டது தொடர்பாக, 5 சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

 
 

ஓர் அமைச்சருடன், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை விட்டு இப்ராஹிம் அன்சார் வெளியேறிய போது, அங்கு தமிழில் கோஷமிட்டவாறு வந்த ஒரு குழுவால் தாக்கப்பட்டார்.

மலேசியாவுக்கு நாடாளுமன்ற குழுவொன்றுடன் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மலேசியா வந்துள்ள இச்சமயத்தில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சில தமிழ் ஆதரவு குழுக்கள், மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கோலாலம்பூரில் இலங்கையை சேர்ந்த ஒரு புத்த மத துறவி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தூதர் மீது நடந்த தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

இப்ராஹிம் அன்சரை தாக்கியவர்கள் , 'ராஜபக்ஷ', 'இலங்கை தூதர்' ஆகியவர்கள் குறித்து கோஷமிட்டது தெளிவாக கேட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்காக, இப்ராஹிம் அன்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மலேசிய தமிழர்கள் என்று பிபிசி சிங்கள சேவையிடம், மலேசிய போலீஸ் துறையை சேர்ந்த ஒரு ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களில் யாரும் இலங்கையை சேர்ந்தவர்களோ, இந்தியர்களோ இல்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும், அதனால் தாங்கள் சினம் அடைந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, மலேசிய போலீசின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ராணுவ ரீதியாக இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மலேசிய தமிழர்கள் சிலர் மத்தியில் பலத்த ஆதரவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று கோலாலம்பூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மலேசிய போலீஸ் தலைவர், மலேசியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/09/160905_malaysia_sl

  • தொடங்கியவர்

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதலுக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சு வருத்தம்

 

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதலுக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சு வருத்தம்



மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.


கடந்த 4ம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிலர், இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய  சம்பவத்தில்  அவர்  சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.


இந்த தாக்குதல் சம்பவம் வருத்தமளிப்பதாகவும் அன்சாரிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மலேசிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135643/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் ;சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

 

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் நாளை புதன்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

asda.jpg

குறித்த ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

 

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/11034

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.