Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில்.

Featured Replies

தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில்.

 
தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில்.

யாழில்.மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது.

 

 
அந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . ஈழமக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , புளெட் அமைப்பின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் , வடமாகாண எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராசா , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து கருத்து தெரிவித்தனர்.
 
 
 ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் அழைக்கப்பட்டு இருந்த போதிலும் அவர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று வடமாகாண முதலமைச்சரும் தன்னால் தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து இருந்தார். 
 
தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் இருந்து தமது கருத்துக்களையும் தமது கட்சி சார் நிலமைகளையும் வெளிப்படுத்தினர்.
 
 
இதன் போது , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , மற்றும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் கருத்து தெரிவிக்கும் போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர்களின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்தும் , கேள்வி கேட்டனர். இதனால் நிகழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டன.
 
.
 

 

யாழில் இடம்பெற்ற ''இலங்கை அரசியல் யாப்பு'' நூல் வெளியீட்டு விழாவில் மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசியல்வாதிகள்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சீ

இது பிரான்சில நடக்குது  போல...

தமிழீழவிடுதலைப்புலிகள் கூட ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி என்பதை எதிர்த்தார்கள் என்பது அப்பட்டமான பொய்...

த.தே.கூ அன்றைய வெளிவிகாரகுழு 
செயலாளர் என்ற ரீதியில் இதற்கு நான் சாட்சி ...

மறைந்து விட்டார்கள் என்பதற்காக அனைத்தையும் பொய் கூறக்கூடாது..

- கஜேந்திரகுமார் -

சமஸ்டி  கவனிக்க  மக்களே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு பொதுமக்களையும் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும். அதற்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அமைதியாக பொறுமையாக பதிலளிக்க வேண்டியது அவர்கள் கடமை.

எழுபது ஆண்டுகால பிரச்சனையில் அமைதிகாத்து நல்லிணக்கங்களை முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே.....பொதுமக்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை.

ஒரு பொதுமகன் கேள்வி கேட்டால்....."தம்பி உமக்கு ஒண்டும் தெரியாது...பேசாமல் இரும்"  என சொல்லும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை எமக்கு விடிவில்லை.

4 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொரு பொதுமக்களையும் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும். அதற்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அமைதியாக பொறுமையாக பதிலளிக்க வேண்டியது அவர்கள் கடமை.

இந்த விடயத்திற்குத்தான் நானும் வெயிட்டிங்.

மேலைத்தேயநாடுகள் போன்று அமைதியாக ஆரவாரமில்லாமல் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் சமுதாயமாக நாமும் மாற வேண்டும். அதுவரையில் இது வெறும் பகற்கனவே.

  • தொடங்கியவர்
குழப்பகரமாக முடிவடைந்த நூல் வெளியீடு
குழப்பகரமாக முடிவடைந்த நூல் வெளியீடு
 தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் பார்வையாளர்களின் எதிர்க்கேள்விகளுமென மிகவும் குழப்பகரமாக நிறைவடைந்தது 
 மு. திருநாவுக்கரசு எழுதிய அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா.
 
இந்த நூல் வெளியீடு நேற்று (சனிக்கிழமை) யாழ்.நாச்சிமார் ஆலய பகுதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர்.க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரையினை பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம, வரவேற்புரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க. அருந்தாகரன், நூலாய்வினை சிரேஸ்ட ஊடகவியலாளர் வ.தேவராஜா சிறப்புரையினை எழுத்தாளர் நிலாந்தன் ஆகியோர் வழங்கினர்.

மேலும் சிறப்புரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரும் பிரதம விருந்தினர் உரையை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் வழங்க இருந்தார் எனினும் சில காரணங்களினால் அவர் வரமுடியாது போகவே அவருடைய உரையை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வாசித்து வைத்தார்.

அத்துடன் , வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், அஸ்மின் அயூப், சயந்தன் உட்பட அரசியல் பிரமுகர்கள், சமூகவியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

14550975_772654612873623_980762282_o.jpg
 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அரசியல்வாதிகள் பேசத் தொடங்கியதும் அவர்களிடம் தொடர்ச்சியாக எதிர்க்கேள்விகளை கேட்டவண்ணமிருந்தனர். விழா ஏற்பாட்டாளர்கள் அவர்களை அமைதி காக்குமாறு கோரியபோதிலும் அது முடியாமற் போனது. இறுதியில் நிகழ்விவிற்கு வந்த ஒரு சிலர் நிகழ்வு முடிவடையும் முன்னரேயே சென்றுவிட்டனர்.

நிறைவாக     மயிலங்கூடல் நடராஜன் மற்றும் அவரது பாரியார், பேராசிரியர் சிற்றம்பலம் இணைந்து நூலை வெளியிட்டு வைத்தனர்.

14536514_772654552873629_800099708_o.jpg

1475381675_kk.jpg

 

http://onlineuthayan.com/news/18380

துருவங்கள் சந்தித்த

On 1/10/2016 at 10:36 PM, நவீனன் said:

தமிழ் கட்சிகளின் "தலைமைகள்" ஒரே மேடையில்.

புத்தகத்தை எழுதியவரின் "பின்னணியில்" தாங்களும் தலைவர்கள் என்று நினைக்கும் பலர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தது, உண்மையான "தலைவன்" யார் என்பதை மீண்டும் கோடிட்டு காட்டியுள்ளது. 

சுமார் 5 வருடங்களின் முன்னர் மு திருநாவுக்கரசுவை சந்தித்த போது சில வரலாற்று நூல்கள் எழுதப்படும் போது கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் எதிர்க்கிறார்கள்,பாரிசிலும் எதிர்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலும் எதிர்க்கிறார்கள்.சிட்னியில் உருவர் சுமத்திரனைக் கேணள்வி கேட்ட பொழுது. இந்தக் கேள்விகளை அங்குள்ள மக்கள் கேட்க வேண்டும் என்று இப்ப அவங்களே கேட்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.