Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை

Featured Replies

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை

 

appollloo.jpg

 


முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர், முதல்வர் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனைக்கே நேற்று மாலை சென்று, மருத்துவர்களிடம் விசாரித்தார். 

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதாக முன்னரே செய்திகள் வெளிவந்தன. 
தற்போது, அதனை உறுதி செய்யும் வகையில், செய்தி வெளியிட்டு இருக்கிறது அப்போலோ.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து தேறிவருகிறது. எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனிற்காக லண்டன் Guy's and St.Thomas மருத்துவமனையில் இருந்து சர்வதேச மருத்துவரான ரிச்சர்டு பீலேவிடம் ஆலோசணைகள் கேட்கப்பட்டது. அவர் கடந்த 30-ம் தேதி முதல் முதல்வரின் உடல்நிலையை பார்வையிட்டு வருகிறார். ரிச்சர்டு எல்லா மருத்துவ அறிக்கைகளையும் ஆராய்ந்து முதல்வரை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

முதல்வரின் தொற்று குணமாக அதற்கேற்ற மருந்துகளை ரிச்சர்டு மற்றும் சிறந்த மருத்துவர்களை வைத்து ஆலோசனை செய்து சிகிச்சை அளித்து வருகிறோம்.அவருக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு முதல்வரின் உடல் சிறப்பாக ஒத்துழைக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு முதல்வர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்

finals.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/69076-jayalalithaa-advised-to-be-in-apollo-for-few-more-days.art

  • தொடங்கியவர்

அப்பல்லோவில் தமிழக அமைச்சர்கள். டிஜிபி, மற்றும் பொலீஸ் ஆணையாளருடன் அவசர ஆலோசனை!

 

 

அப்பல்லோவில் தமிழக அமைச்சர்கள். டிஜிபி, மற்றும்  பொலீஸ் ஆணையாளருடன்  அவசர ஆலோசனை!




தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார்கள் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 4 செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் கூறி வருகிறது. என்றாலும் அவர் தொடர்ச்சியாக மருத்துவ மனையிலேயே இருக்கிறார்.


10வது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் பேசிவிட்டு சென்றார். இந்நிலையில், 11வது நாளான இன்று தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்து சென்றனர். ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, சிவிசண்முகம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவ மனையில் பிரசன்னமாகினர். இவர்களுடன்  டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும உடனிருந்தனர். அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனைக்குப் பின்னர் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் என்ன ஏது என்று கேட்டபோது யாரும் பதிலளிக்கவில்லை என தமிழக செய்திக் குறிப்புக்கள் கூறுகின்றன.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136566/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

சற்றே ரிலாக்ஸ் மோடில் அப்போலோ!  - முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை அப்டேட் 

appollo.jpg

ப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துவிட்டன. 'கடந்த நான்கு நாட்களாக நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கிறது!’ என உற்சாகப்படுகின்றனர் அப்போலோ வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று காரணமாக, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் லண்டனைச் சேர்ந்த செயிண்ட் தாமஸ் மருத்துமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவை இந்தியா வரவழைத்தனர். கடந்த மாதம் 30-ம் தேதி மருத்துவர் ரிச்சர்ட் ஜெயலலிதாவை பரிசோதித்துச் சென்றார். தொடர்ந்து ரிச்சர்ட் வழிகாட்டுதலின்பேரில், மருத்துவர் சிவக்குமார் சிகிச்சைகளை மேற்கொள்கிறார். நுரையீரலில் தங்கியுள்ள நீரின் மூலம் ஏற்பட்டுள்ள தொற்றை சரிசெய்வதற்கான அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து, தொற்றை குணப்படுத்துதற்கான சிகிச்சைகள் வேகமெடுத்தன. 

’’நேற்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வர் தங்கியிருக்கும் வார்டுக்கு வெளியில் இருந்து அவரைப் பார்த்தனர். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை முதல்வர் கண்திறந்து பார்க்கிறார். மருத்துவர் ரிச்சர்டு வருவதற்கு முன்புவரையில், தொடர் மருந்துகளின் விளைவால் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். தற்போது அந்த சிரமங்கள் குறைந்திருக்கிறது!’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கிய கார்டன் ஊழியர் ஒருவர், "முதல்வருக்கு உணவாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, வாய்வழியாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வலியால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். வெளிப்புறத்தில் இருந்து வருபவர்களால், எந்தவிதமான நோய்த் தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெடிக்கல் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் உள்ள கண்ணாடி சூழ்ந்த அறையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த அறைக்குள் மருத்துவர் உள்பட மருத்துவ பணியாளர்கள் அனைவரும், மருத்துவமனை அளிக்கும் ஆடையையே அணிந்து செல்ல வேண்டும். 

இதனால் சில முக்கிய வி.ஐ.பிக்களால் முதல்வரை நேரடியாக சந்திக்க முடியவில்லை. முதல்வர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சி.சி.யூ வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 பேரும், வேறு வார்டுகளுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது அவர்களில் 20 பேர் சி.சி.யூ வார்டுக்குத் திரும்பிவிட்டனர். முதல்வருக்கு பணிவிடை செய்யும் நர்சுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன. அதேவேளையில், மருத்துவமனையில் இருந்து செல்லும் அனைத்து செல்போன் கால்களும் ட்ரேஸ் செய்யப்படுகின்றன. முதல்வர் தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் யார் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்" என விவரித்தார். 

"தீவிர சிகிச்சையின் காரணமாக, முதல்வர் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதுவரையில், மருத்துவர் ரிச்சர்ட்டின் கண்காணிப்பில் முதல்வர் இருப்பார். 10 நாட்களுக்குப் பிறகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார்" என்கின்றனர் அப்போலோ வட்டாரத்தில். 

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்...! 

http://www.vikatan.com/news/tamilnadu/69092-apollo-hospital-turns-into-relax-mode-as-cm-is-recovering-well.art

  • தொடங்கியவர்

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை: திருமாவளவன்

 

19280_thumb.jpg

 

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை இன்று சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்றார். ஆனால், முதல்வர் சிகிச்சை பெறும் 2-வது தளத்துக்குச் சென்ற அவர், ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. மேலும் முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''முதல்வர் உடல்நலம் குறித்த ஆளுநர் அறிக்கையில் திருப்தி இல்லாததால் மருத்துவமனை சென்றேன். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் 2-வது தளத்துக்குச் சென்றேன். ஆனால், அவரை சந்திக்கவில்லை. முதல்வர் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும் அதிமுக நிர்வாகிகள் கூறினர். முதல்வர் வழக்கம்போல் அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் எந்த கெடுபிடியும் இல்லை'' என்றார்.

http://www.vikatan.com/news/flashnews/19280-did-not-meet-cm-jayalalithaa--thirumavalavan.art

  • கருத்துக்கள உறவுகள்

14500626_1032740656848735_1760261497245600342_o.jpg

:rolleyes: :grin: tw_blush:

  • தொடங்கியவர்

அப்பல்லோ மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை: திருமாவளவன்

 

 
அப்பல்லோ மருத்துவமனைக்கு பூங்கொத்துடன் வந்த திருமாவளவன் | படம்: ம.பிரபு
அப்பல்லோ மருத்துவமனைக்கு பூங்கொத்துடன் வந்த திருமாவளவன் | படம்: ம.பிரபு

அப்பல்லோ மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை. முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தளத்தில் பொதுமக்கள் இயல்பாக நடமாடுகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நலத்தை விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசிக சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தோம்.

அப்பல்லோ மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை. முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தளத்தில் பொதுமக்கள் இயல்பாக நடமாடுகிறார்கள். நான் அந்த இரண்டாவது தளத்துக்கு சென்றேன். அதிமுகவின் மூத்த தலைவர்கள் என்னை வரவேற்றார்கள். அவர்களோடு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன்.

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். ஒருசில நாட்களில் வீடுதிரும்புவார் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதி கூறினார்கள்.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறுவார் என்ற செய்தியை நேரில் வந்து அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதியை உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், தமாகா தலைவர் மூப்பனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் உடல்நலத்தை விசாரிக்க சந்தித்தேன்.

தமிழகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான முதல்வரை சந்திப்பது என் கடமை. அந்த அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும். வீடு திரும்பி, வழக்கம்போல் அரசியல் கடமைகளை ஆற்ற வேண்டும் மனமுவந்து வாழ்த்துகிறோம்'' என்று திருமாவளவன் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/அப்பல்லோ-மருத்துவமனையில்-எந்த-கெடுபிடியும்-இல்லை-திருமாவளவன்/article9180150.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் ஆலோசனையின்பேரில் திருமாவளவன் மலிவு அரசியல் செய்கிறார் என நினைக்கிறேன். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்றே ரிலாக்ஸ் மோடில் அப்போலோ!  - முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை அப்டேட்

:cool::27_sunglasses:tw_glasses:

சொன்னா கேளுங்கப்பா...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

14500626_1032740656848735_1760261497245600342_o.jpg

:rolleyes: :grin: tw_blush:

குசும்புக்கு அளவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

14516394_873065882825065_726289606118420

  • தொடங்கியவர்

அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர்..! லேட்டஸ்ட் நிலவரம்

 

jayalai.jpg

 

 முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 13 நாட்கள் ஆகிறது. அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு சுவாச உதவிக்காக வென்டிலேட்டர் பொருத்தியிருக்கிறார்கள். அதன் உதவியுடன்தான் சுவாசித்து வருகிறார் ஜெயலலிதா. அக்டோபர் 3-ம் தேதியன்று அப்போலோ ஆஸ்பத்திரி தரப்பில்  வெளியிட்ட ஜெயலலிதாவின் மருத்துவ ரிப்போர்ட்டில், முதன்முதலாக ஒரு விஷயத்தை அறிவித்தது. ஜெயலலிதாவின் உடலுக்கு தேவையான சுவாச உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது, வென்டிலேட்டர் போன்ற உபகரணங்களை கொண்டு செயற்கை சுவாச உதவி (respiratory support)  வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர். ஏன் இந்த வென்டிலேட்டர்? என்று பிரபல மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, 


'' நுரையீரலில் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு. பொதுவாகவே, மனித உடல் இயங்குவதற்கு தேவையான ஆக்ஸிஜனை பிரித்து அனுப்புவதுதான் நுரையீரல் வேலை. அதிலுள்ள தேன்கூடு போன்ற பைகள் சீராக செயல்பட்டால்தான், ரத்தம் சுத்திகரிக்கப்படும். இந்த செயல்பாட்டில் ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கு 'Alveoli '  என்று சொல்லுவோம். சளிப் பிரச்னை, கிருமி தொற்று ஆகியவற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். இந்தவகையில், ஜெயலலிதா சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இது எப்போது விலக்குவார்கள் என்று சொல்ல முடியாது. அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுப்பார்கள். எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், சுவாசம் வழக்கம்போல் இயங்கத்துவங்கிவிடும்" என்றார்.  

http://www.vikatan.com/news/tamilnadu/69180-jayalalithaa-on-respiratory-support.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கு நல்ல வைத்தியம் நடந்தால் அம்மாவும் நடந்தே வெளியில் வருவா ....!நடக்கவில்லையெனில் நடக்கவும் மாட்டா....! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.