Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க.வின் புலிகளுக்கெதிரான தீவிர பிரச்சாரம்

Featured Replies

வெடிபொருட்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நுழைந்தது எப்படி? ஜெயலலிதா கேள்வி

[Friday January 26 2007 01:44:52 PM GMT] [pathma]

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம்.

நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி எடுத்துச் சென்றார்கள்? விடுதலைப் புலிகள் எப்படி வந்தார்கள்? என பல கேள்விகள் எழுகின்றன. விசாரணையும் பலமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் நம்மைப் பொறுத்த வரையில் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற தி.மு.க. ஆட்சியில் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுப் பிரிவு முற்று லுமாக கெட்டு விட்டது. வெடி பொருட்கள் கட தல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகள்ஊடுருவல் மட்டு மல்ல, கோடம்பாக்கம் பகுதி யில் ஒருவரது வீட்டில் குண்டு வெடித்திருக்கிறது.

அந்த வீட்டுக்குரியவர் மீது மதுரைத் தேர்தலில் குண்டு வீசிய வழக்கும் இருக்கிறது. இவையெல்லாம் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு உதாரணங்களாக இருக்க முடியாது.

எனது ஆட்சிக் காலத்தில் கோவையில் தீவிரவாதிகள் பிடிபட்டார்கள். அவர்கள மீது கடும் நடவடிக்கை எடுத்தோம். தீவிரவாத இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தோம். எனது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள், பயங்கர வாதிகள், தீவிரவாதிகள் தமிழ் நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவே அஞ்சினார்கள்.

அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் இருந்து பயங்கர வாதிகளையும் தீவிரவா திகளையும் விரட்டியடித்தோம். காவல்துறை என்பது எனது ஆட்சியில் கட்டுக் கோப்பாக இருந்தது. பயங்கர வாதம், தீவிரவாதம் என் பது கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

இன்று நிலைமை என்னப காவல்துறை என்பது நிலை குலைந்து, ரவுடிகளின் முன்னே கைகட்டி நிற்கிறது. பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். விடுத லைப்புலிகள் மீண்டும் ஊடு ருவி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். மக்கள் இந்த சூழ் நிலையை கவலையுடன் கவ னிக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஒருவர், சீருடை தைத்துக் கொடுத்த ஒருவர், இன்று மத்திய அமைச்சராகவே ஆகிவிட்ட பின் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கத் தான் செய்யும்.

மக்களை காக்க வேண்டிய அரசு, பயங்கர வாதிகளையும், தீவிரவாதிகளையும், ரவுடி களையும் பாதுகாப்பது தான் இன்றைய ஆட்சியின் அவலம். மக்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

maalaimalar.com

jeya tvயிலும் கடுமையான பிரச்சாரம் நடக்கிறது

Edited by இராவணன்

  • தொடங்கியவர்

தயவு செய்து யாராவது தலைப்பை சரி செய்து விடுங்கள்.

Edited by விது

இவ்வளவு கேள்வியையும் கடற்படையின் ஆய்தங்கள் பிடிபட்ட போது கேட்டாரா ஜெயலலிதா

இதற்கு என்ன சொல்கிறார் வை.கோபாலசாமி எல்லாம் அரசியலா???

இவ்வளவு கேள்வியையும் கடற்படையின் ஆய்தங்கள் பிடிபட்ட போது கேட்டாரா ஜெயலலிதா

இதற்கு என்ன சொல்கிறார் வை.கோபாலசாமி எல்லாம் அரசியலா???

இது இப்பமட்டுமல்ல அம்மையார் ஆட்சியிலும் நடந்தது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். இப்பதான் பிடிபட்டிருக்கு. இதுக்கு விசாரணையெல்லாம் இருக்கு. இதுவெடிபொருளல்ல வெறும் சயிக்கிள் பால்ஸ் தானே உண்மையான நீதி விசாரணைக்கு இலங்கை துணைத்தூதுவர் கம்ஸாவும் விசாரணை செய்யப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் எந்த உலகில் இருக்கிறீர்கள்.. வை.கோவிற்கு காற்றை புடுங்கி கனகாலம் ஆகிட்டுது.. நீங்கள் வேறை...! ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காம இன்பத்தின் தேர்ந்த நுணுக்கங்கள் பட்டை தீட்டியதால் வந்த வாழ்வு அல்லவா இந்த அதிகாரம்,

மானத்தையே வாழ்வாய்க் கொண்டதமிழனின் முதுகில் அவமானம் செய்யும் சவாரி அல்லவா அந்த ஆட்சி

யோவ் கிசான் ஈழவன் என் கூப்பிடுதூரதிலே...ஈழவன் கர்ஜித்தால் ஆயிரம் அர்த்தம்கள் இருக்கும். ஆனாலும் எனக்கு தமிழ் எழுத கற்றுத்தந்த குரு நீர் பக்தியினை நினைத்து காரசார வசனங்களை தவிர்த்து விடை பெறுகிறேன். :unsure:

விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்களை கைது செய்ததோடு, அந்தச் செய்தியை வெளியிட்ட கலைஞர் அரசுதான் இதற்கு பொறுப்பு!

அ.தி.மு.க தமது பிரச்சாரப் பீரங்கி ஜெயா டீவி யிலும் மிக நீண்ட காலமகவே புலிகளை வசைபாடிக்கொண்டுதான் வருகின்றார்கள். எதிர் காலத்திலும் இதைவிட மோசமாக வசைபாடத்தான் போகின்றார்கள். நாய் வாலை ஒருபொழுதும் நிமிர்த்த முடியாது. இதற்குப்போய் அழுதுகொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.

விருப்பமானால், காசு கொடுத்து வெளிநாடிகளில் ஜெயா டீவி பார்த்து மகிழ்வதை இனி நிறுத்திக் கொள்ளுங்கள்!

அதுதான் யாரோ புலவர் சபித்துவிட்டுச் சென்றாரே: அ.டித்தும் தி.ருத்த மு.டியாத க.ழுதைகள் என்று!

அ.தி.மு.க தமது பிரச்சாரப் பீரங்கி ஜெயா டீவி யிலும் மிக நீண்ட காலமகவே புலிகளை வசைபாடிக்கொண்டுதான் வருகின்றார்கள். எதிர் காலத்திலும் இதைவிட மோசமாக வசைபாடத்தான் போகின்றார்கள். நாய் வாலை ஒருபொழுதும் நிமிர்த்த முடியாது. இதற்குப்போய் அழுதுகொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.

விருப்பமானால், காசு கொடுத்து வெளிநாடிகளில் ஜெயா டீவி பார்த்து மகிழ்வதை இனி நிறுத்திக் கொள்ளுங்கள்!

அதுதான் யாரோ புலவர் சபித்துவிட்டுச் சென்றாரே: அ.டித்தும் தி.ருத்த மு.டியாத க.ழுதைகள் என்று!

அப்ப திமுக திருத்த முடியாத கழுதையா?????? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்களை கைது செய்ததோடு, அந்தச் செய்தியை வெளியிட்ட கலைஞர் அரசுதான் இதற்கு பொறுப்பு!

ஏன் சபேசன்,

அம்மா(சும்மா) ஈழத்தமிழர்களுக்கு இளைக்கும் பாவத்தின் ஒரு துளிக்கு ஈடாகுமா கலைஞரின் நடவடிக்கைகள்.

அவர் இன்னும் அதிகமாகவே செய்ய வேண்டும் என்பது எமது அவா. தவிர இப்படியா அம்மாவின் குற்றங்களை தாங்க முயற்சி செய்வது.

புலம் பெயர்ந்த கழிப்பறைகளே முதலில் சன் தொலைக்காட்சி, யெயா தொலைக்காட்சி பார்ப்பதை அங்கத்துவ பணம் கட்டுவதை நிறுத்துங்கள். பிறகு தி.மு.க அ.தி.மு.க கட்சி பற்றி விமர்சிப்போம்.

ஒட்டு மொத்தமாய் பார்த்தால் ஜெயா ஈழத்தமிழர் மத்தியில் திமுகவுக்காக ஆதரவை பெருக்கத்தான் செய்கிறார்...!

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த கழிப்பறைகளே முதலில் சன் தொலைக்காட்சி, யெயா தொலைக்காட்சி பார்ப்பதை அங்கத்துவ பணம் கட்டுவதை நிறுத்துங்கள். பிறகு தி.மு.க அ.தி.மு.க கட்சி பற்றி விமர்சிப்போம்.

சரியாகச் சொன்னீர்கள். புலத்தில் எங்கள் மக்களின் பணங்களில் ஒரு பகுதி இத் தொலைக்காட்சிகளுக்கே போகிறது. இத்தொலைக்காட்சிகளில் எங்களுக்கு ஆதாரவான செய்திகள் வருவது குறைவு. குறிப்பாக ஜெயாத் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செய்திகள் வருகிறது. புலிகளுக்கு எதிரான செய்திகள் தரும் தொலைக்காட்சிகளினை புலம் பெயர்ந்த நாடுகளில் உலாவ நாங்களே பணம் குடுக்கலாமா?

சன்-கேரிவி-ஜெயா எதுவானாலும் செய்மதி தொலைக்காட்சிகளைப் பணம் கட்டித்தான் பார்க்கவேண்டுமென்று யார் சொன்னார்கள். விஞ்ஞானம் முன்னேறிட்டது எலே.

தொலைக்காட்சி மட்டுமா? தென்னிந்திய திரைப்படங்களை தவிர்த்தாலே எமது பலம் என்ன என்று தமிழ் நாட்டுக்காரர்களுக்கு உணர்த்தலாம். குறிப்பிடத்தக்கவர்களை தவிர யார ்தான் நமக்காக அறிக்கை விடிகிறார்கள் குறிப்பாக முன்னணி நடிகர்கள்!!!

இனியாவது விழித்தெழுவோம் தோழர்களே...

சன்-கேரிவி-ஜெயா எதுவானாலும் செய்மதி தொலைக்காட்சிகளைப் பணம் கட்டித்தான் பார்க்கவேண்டுமென்று யார் சொன்னார்கள். விஞ்ஞானம் முன்னேறிட்டது எலே.

எலே அதை எமக்கும் சொல்லுறதுலே? :rolleyes::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.