Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இதுவே சர்வதேச நியதி” : ஜனாதிபதி

Featured Replies

“இதுவே சர்வதேச நியதி” : ஜனாதிபதி

 

my3.jpg

ஒரு இனம் எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும் அரச கருமங்களை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக இருப்பதுடன் சர்வதேச நியதியாகவும் அது உள்ளது என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெரிவித்தார். 

கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/12666

  • தொடங்கியவர்
வடக்கில் சிங்களம் தெற்கில் தமிழ் கற்பிக்கவுள்ளாராம் ஜனாதிபதி
வடக்கில் சிங்களம் தெற்கில் தமிழ் கற்பிக்கவுள்ளாராம் ஜனாதிபதி
வடக்கு பிள்ளைகளுக்கு சிங்களத்தையும் தெற்கு பிள்ளைகளுக்கு தமிழையும் கற்றுக்கொடு க்கும் தேசிய பணியை நிறைவேற்ற தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
கல்வியமைச்சு நடத்தும் தமிழ் தினப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
tamil-day-9.jpg
கண்டி தர்மராஜ கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்த வைபவம் இன்று நடைபெற்றது.
 
மொழி என்பது விஞ்ஞானம், கலை போன்று பாரம்பரி பாடம். சகல துறைகளிலும் மொழியை கற்க வேண்டும்.உலகில் பல நாடுகளில் மொழியை அடிப்படையாக கொண்டு மோதல்கள் ஏற்பட்டுள்ளன.துரதிஷ்டவசமாக அந்த கசப்பான அனுபவத்தை நமது நாடும் எதிர்கொண்டது.
 
மொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே. மொழி தொடர்பில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/19314



 
 
 
 
'இரு மொழிகளையும் கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'
 
 

article_1477230356-aaaaaaaaa.jpg-மொஹொமட் ஆஸிக்

“தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சினூடாக துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், இன்று கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் விருதுகளையும் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“கேட்டல் திறன், பேச்சுத் திறன், வாசிப்புத்திறன், எழுத்துத்திறன் ஆகிய 4 பண்புகளைக் கொண்டதே மொழியாகும். இதில் பொதுவாக பேச்சு என்பது மொழிக்கு மிக முக்கிய கூறாகவும் உள்ளது. பேச்சுக்கு ஒலி வடிவம் மிக முக்கியமானதாகும். மொழிகள் பற்றிய ஆய்வுகளில் தமிழ் மொழி பல்லாயிரம் வருடங்கள் தொன்மையானது என்று கூறப்பட்டாலும் மொழிகளைப் பொறுத்த வரை காலங்கள் எதனையும் உறுதிபடக்கூற முடியாதுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு பிரகடனங்களை நிறைவேற்றியுள்ளன. அதில் முக்கிய மாக ஒரு நாட்டில் எந்த மொழியை மக்கள் பேசுகின்றனரோ அந்த மொழியில் அவர்கள் கல்வி கற்ற வசதிசெய்யப்பட வேண்டும். அதேநேரம் அம்மொழியிலே அவர்கள் தமது பணியை நிறைவேற்றவும் வகை செய்யவேண்டும் என்பதாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஹிந்தி பிரதான மொழியாக இருந்தாலும் தமிழ் மொழியில் காவியங்களும் காப்பியங்களும் இலக்கியத் தொகுப்புக்களும் உள்ளன. ஒருவரது அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான் அவரது மொழியாகும். எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஒருவரது மொழியில் எல்லாவற்றிலும் சம வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/184532/-இர-ம-ழ-கள-ய-ம-கற-ற-க-க-ட-ப-பதற-க-நடவட-க-க-எட-க-கப-பட-ம-

 
 
 
 
விருது வழங்கும் நிகழ்வு...

 

article_1477205555-6.jpg

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், ஆகில இலங்கை தமிழ் மொழித் தின விருது வழங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.                                  (படபிடிப்பு: எஸ்.தியாகு)

article_1477205578-2.jpgarticle_1477205643-7.jpg

article_1477205700-5.jpg

article_1477205722-777777777777777.jpg

http://www.tamilmirror.lk/184514/வ-ர-த-வழங-க-ம-ந-கழ-வ-

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டமண் ஒட்டாது.  தமிழையும் சிங்களத்தையும் இனி ஒட்டவைக்க முடியாது. 1956 ம் ஆண்டிற்கு முன்பாக இவ்விரு இனங்களும் கூடிவாழ்ந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் சிதைத்து, அவர்கள்  பதவிகளுக்காக, ஏற்படுத்தப்பட்ட இனவாதம் என்னும் நெருப்பைச் சிங்கள அரசுகள் அணைக்க முயலாது, ஊதி ஊதி வளர்த்து, இனங்களைச் சுட்டுவிட்டு, இப்போது அதனை ஒட்டுவதற்கு முயன்றால் அது முடியாத காரியம். ஆனாலும்! சுட்ட மண்ணான செங்கல்லை சிமிட்டியினால் இணைத்து உறுதியான சுவரை எழுப்பிக்கொள்வதுபோல், இரு இனங்களும் தங்களைத் தாங்களே ஆழும் நிலமையை ஏற்படுத்தினால்! அந்த ஆழும் உரிமைமூலம் இரு இனங்களும் இணைந்து, உறுதியான நாடாக எங்கள் நாட்டை உருவாக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. 
 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலையை வடபகுதியில் வைத்துக்கொண்டு போவது போல் பிள்ளையார் சிலையை தெற்கில் வைத்துக்கொண்டு போனால் என்னாகும் மைத்திரி அவர்களே??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

புத்தர் சிலையை வடபகுதியில் வைத்துக்கொண்டு போவது போல் பிள்ளையார் சிலையை தெற்கில் வைத்துக்கொண்டு போனால் என்னாகும் மைத்திரி அவர்களே??

புத்தருக்கு பட்டையை பூசுவோம்,பிள்ளையாருக்கு மொட்டை அடித்து காவி உடுப்போம்...tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.