Jump to content

"யாழ் இணையத்தின்" பொது அறிவுக் களஞ்சியம் - கருத்துக்கள்


Recommended Posts

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்!

பொது அறிவுக் கேள்விக் கொத்து ஒன்றினை யாழ் இணையம் சார்பாக தயாரிக்க உள்ளோம். இந்தக் கேள்விக் கொத்து தொடர்ந்து விரிவுபடுத்தப்பட இருப்பதோடு, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்ச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்றவகையில் இதை உருவாக்க எண்ணியுள்ளோம். அந்த வகையில் இம்முயற்சியானது தனியொருவரால் மேற்கொள்ளப்படுவதாக அல்லாமல், பலரும் (குறிப்பாக யாழ்கள உறுப்பினர்கள்) இணைந்து பங்காற்றும் கூட்டு முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது அவா.

கேள்விகள், பதில்கள், சிறு குறிப்புகள், தகவல்கள் என இவை சேகரிக்கப்படவேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருத்தல் வேண்டும். புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்கள், அந்தந்த நாட்டு மொழிகளில் உள்ள பொது அறிவு சார்ந்த விடயங்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். சேகரிக்கும் தகவல்களை கேள்வி பதில் முறையில் தயாரித்து இணைத்தல் வேண்டும். அதேபோல் சேகரிக்கும் தகவல்கள் சரியானவையா (அ) உண்மையானவையா என ஆராய்ந்து உறுதிப்படுத்திவிட்டு இணைத்தல் இன்னும் சிறப்பு. தகவல்களை நூலகங்களில் இருந்தோ, இணையத்தில் இருந்தோ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் சேகரிக்கும் கேள்வி பதில்களை நீங்களும் உங்கள் கணினியில் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கேள்விகளாக இணைக்காமல், ஒரு முறையில் 25 (அ) 50கேள்விகள் என்ற கணக்கில் இணையுங்கள். அதேபோல் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கேள்விகளை குழுவாக்குங்கள். உதாரணம்: உதைப்பந்தாட்டம் (25 கேள்விகள்), நோபல் பரிசு (50 கேள்விகள்), கடலுணவுகள் (25 கேள்விகள்), சுனாமி இன்னும் பல. மொத்தம் 10000 கேள்விகள் என்பது தான் எமது முதல் இலக்கு. நீங்கள் சேகரிக்கும் அனைத்து கேள்விகளும் பின்னர் "விளையாட்டு, இயற்கை, தாயகம், விஞ்ஞானம் & தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல்" போன்ற பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் குறைந்தது 25 கேள்விகள் என்ற கணக்கில சேகரித்தால் நாம் விரைவில் 10000 என்பதை அடைந்துவிடலாம்.

வெறுமனே அரட்டையடிக்கும் களமாக இல்லாமல், ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யும் களமாகவும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களை மேற்கொள்ளும் களமாகவுமே யாழ்களத்தை நாம் பார்க்கிறோம் - அப்படித்தான் கொண்டு நடாத்துகிறோம்.

எனவே யாழ்கள உறவுகள் அனைவரும் இம்முயற்சியில் பங்குகொண்டு உதவுவீர்கள் என நம்புகிறோம். கேள்விகளை "யாழ்களத்தின் பொது அறிவுக் களஞ்சியம்" என்ற தலைப்பின் கீழ் இணையுங்கள். அவை தொடர்பான கருத்துக்களை இந்தத் தலைப்பில் பகிருங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி

நல்ல முயற்சி என்பதோடு நில்லாமல், உங்கள் பங்களிப்பினையும் செய்யுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி என்பதோடு நில்லாமல், உங்கள் பங்களிப்பினையும் செய்யுங்கள்.

நன்றி

இணைப்பிற்கு போக முடியவில்லையே

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

வலைஞன் அண்ணா,

உங்கள் கையெழுத்தில் உள்ள இணைப்புக்கள் வேலை செய்யவில்லை.

Link to comment
Share on other sites

களநிபந்தனை

களப்பிரிவு

இன்னமும் தொழிற்படவில்லை.

Link to comment
Share on other sites

கனடா என்ற தலைப்பின் கீழ் 25 கேள்வி பதில்கள் "யாழ் இணையத்தின்" பொது அறிவுக் களஞ்சியம் " என்ற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நன்றி இறைவன் மற்றும் சுட்டி.

அது பழைய இணைப்புகள் - நீக்கிவிட்டேன்!

கேள்வி பதில்களை இணைத்தமைக்கு

நன்றி சிநேகிதி மற்றும் யாழ்வினோ.

மற்றவர்களும் பங்கெடுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகத் தெரிகின்றது. கேள்வி-பதில்களாக இல்லாமல் கட்டுரையாக இணைப்பது நல்லதாகப் படவில்லை. கேள்விகள் ஒரு வரியிலும், பதில்கள் நாலைந்து வரிகளுக்குள்ளும் இருந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்..

பி.கு. கேள்வி - பதில் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளேன். விரைவில் எனது பங்களிப்பையும் செய்கின்றேன்..

Link to comment
Share on other sites

யாழ் வினோ,

ஒட்சிசன் கண்டுபிடிக்கப்பட்டது 1774 இல். இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் dephlogisticated air

Link to comment
Share on other sites

  • 1 month later...

"யாழ்களத்தின் பொது அறிவுக் களஞ்சியம்"

இப்படி ஒரு பக்கம் இருப்பதாக இங்கு யாருக்காவது தெரியுமா...........? நான் வந்ததிலிருந்து யாரையும் இந்த பக்கம் பாத்ததேயில்லை............... எமது யாழ்களத்திற்க்கு எல்லோரும் சேர்ந்துதான் உழைக்கனும்

Link to comment
Share on other sites

நல்ல பயனுள்ள தகவல்கள் வானவில்..

ஆரம்ப சிலவற்றை வாசித்தேன். டைம் கிடைக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கலாம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் போடாமல்..கிழமைக்கு சில நாட்கள் என்று போட்டால்

நாமும் தொடர்ந்து வாசித்து வரலாம் இல்லையா? :)

சாறி நான் தெரியாமல் இதில எழுதி விட்டேன். இனி மற்ற பகுதியில் எழுதுகிறேன்.

அப்புறம் இதை பொது அறிவென்று யாரும் நெச்சிடாதைங்கோ என்ன :lol::)

Link to comment
Share on other sites

சரி...எல்லாரும் கொஞ்சம் பிசி போல..

டைம் கிடைக்கும் போது வந்து போடுவார்கள் என்று நெக்குறன் :)

எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

இத பாருங்க! :lol: பறவால பலசாலி தான்..நாங்க தான் அதை ஏளனமா பார்க்குறது

Link to comment
Share on other sites

நல்ல பயனுள்ள தகவல்கள் வானவில்..

ஆரம்ப சிலவற்றை வாசித்தேன். டைம் கிடைக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கலாம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் போடாமல்..கிழமைக்கு சில நாட்கள் என்று போட்டால்

நாமும் தொடர்ந்து வாசித்து வரலாம் இல்லையா? :)

சாறி நான் தெரியாமல் இதில எழுதி விட்டேன். இனி மற்ற பகுதியில் எழுதுகிறேன்.

அப்புறம் இதை பொது அறிவென்று யாரும் நெச்சிடாதைங்கோ என்ன :):)

அடடடா சகி உங்க பொது அறிவெல்லாத்தையும் கூட்டுறீங்க போல இருக்கு :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3. குனடாவின் இரண்டாவது பெரிய மாகாணம் எது

ஒன்ராரியோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.