Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூடு பிடிக்கும் ரவிராஜ் படுகொலை வழக்கு..! மேன்முறையீட்டுக்கு எதிராக மீண்டும் மேன்முறையீடு

Featured Replies

ரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு
 
 
ரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
 
குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுவித்து கொழும்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு சட்டவாளர் சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டது.
 
மேல் நீதிமன்றத்தில் வழக்கை, ஜூரிகள் இன்றி மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
 
இந்த மனு மீதான விசாரணை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது

http://onlineuthayan.com/news/22849

  • தொடங்கியவர்

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு: மேன்முறையீட்டு மனு தள்ளுபடி
 
19-01-2017 01:25 PM
Comments - 0       Views - 5

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/189978/ரவ-ர-ஜ-வழக-க-ன-த-ர-ப-ப-ம-ன-ம-ற-ய-ட-ட-மன-தள-ள-பட-#sthash.qldGjnw8.dpuf

இனி ஒரே தள்ளுபடி தான்!

  • கருத்துக்கள உறவுகள்

அதானே....

சிங்களவருக்கு ஆதரவா, சிங்கள ஜூரிமாரோட சேர்ந்து, சிங்கள நீதிபதி கொடுத்த தீர்வையை, சிங்கள அப்பீல் நீதிவானற்ற அப்பீல் பண்ணினா, தள்ளுபடி தானே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலை தொடர்பில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

குறித்த வழக்கின் தீர்ப்பு ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், ஜுரிகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ரவிராஜின் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையிலேயே, மேன்முறையீடு தள்ளுபடி செய்தமைக்கு எதிராக மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/special/01/132412?ref=home

மீண்டும் மீண்டும் கேலிக்கூத்தாகும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின விரோத நீதித்துறை இயந்திரம்.  

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் இனமதவெறிக் கறை படிந்த நீதித்துறையை தமிழர்கள் ஒருபோதும் நம்பவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கடந்த 60+ வருடங்களில்  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எவைக்கும் தேவையான முழுமையான நீதியை, நிவாரணத்தை பெற்றுக்கொடுத்த சரித்திரம் இல்லை.

மிக மிக நீண்ட காலமாக தமிழின விரோதமாகவும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் - கொலைகாரர்கள் - கொள்ளைக்காரர்கள் - பாலியல் வன்கொடுமையாளர்கள் சார்பாகவும் இயங்கி கறைகள் பல படிந்த இந்த (அ)நீதித்துறையை தமிழர்கள் இன்னொரு 60+ வருடங்களுக்கு நம்புவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அடிப்படைக் காரணங்கள் எதுவுமே இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மேன்முறையீட்டு நீதிமன்று மனுவை விசாரணைக்கு எடுத்த போது மனுதாரரான சசிகலா ரவிராஜோ அல்லது மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞரான சுமேந்திரனோ நீதிமன்றத்தில் இருக்காத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைக்கத் தக்கதாக அறிவிக்காமல் மனுவை விசாரணைக்கு எடுக்கும் திகதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இனி சுமேந்திரன் அறிக்கை விட்டு தான் நாம் அறிய முடியும்.

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலை வழக்கு குறித்த மேன்முறையீடு நிராகரிப்பு

=

raviraj-1.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை குறித்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த கொலை குறித்த வழக்கின் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களையும் ஜூரிகளின் பரிந்துரைக்கு அமைய கடந்த 24ம் திகதி உயர் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்திருந்தது.

இந்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த ரவிராஜின் மனைவி  ஜூரிகள் நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியும் தீர்ப்பினை ரத்து செய்யுமாறும் மேன்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார்.
மனுதாரர் அல்லது மனுதாரரை பிரதிநிதித்துவம் செய்ய எவரும் நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்ற அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஜூரிகள் நியமனம் குறித்து எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம் என பிரதிவாதிகளின் சார்பில்  முன்னிலையான  சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/14354

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Jude said:

மேன்முறையீட்டு நீதிமன்று மனுவை விசாரணைக்கு எடுத்த போது மனுதாரரான சசிகலா ரவிராஜோ அல்லது மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞரான சுமேந்திரனோ நீதிமன்றத்தில் இருக்காத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைக்கத் தக்கதாக அறிவிக்காமல் மனுவை விசாரணைக்கு எடுக்கும் திகதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இனி சுமேந்திரன் அறிக்கை விட்டு தான் நாம் அறிய முடியும்.

உங்களுக்கு இது எப்படி தெரியும்? ஆதாரம் இருக்கிறதா?

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள் விடுதலை: மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

 

ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள் விடுதலை: மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டமையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபானி விஜேசுந்தர மற்றும் லலித் ஜயசூரிய ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரான ரவிராஜின் மனைவியோ அல்லது அவர் சார்பான சட்டத்தரணியோ மன்றில் ஆஜராகாமையால் மனுவை நிராகரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் பிரதிவாதிகள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டதை ஆட்சேபித்து ரவிராஜின் மனைவி கடந்த 10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, ரவிராஜின் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபரால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://newsfirst.lk/tamil/2017/01/ரவிராஜ்-கொலை-பிரதிவாதி/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

உங்களுக்கு இது எப்படி தெரியும்? ஆதாரம் இருக்கிறதா?

https://www.newsradio.lk/appeals-court-dismisses-sasikala-ravirajs-petition/

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

01-24a14c6d05d104f9e91f4c491fe4155a025f1fc8.jpg

 

சட்­டத்­த­ர­ணிகள் எவரும் ஆஜ­ரா­காத நிலையில் மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் அறி­விப்பு; மீள இடை­யீட்டு மனு தாக்கல்-  

 (எம்.எப்.எம்.பஸீர்)

படுகொலை செய்­யப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் படு­கொலை வழக்கில் பிர­தி­வா­திகள் அனை­வரும் குற்­ற­மற்­ற­வர்கள் எனக் கருதி சிறப்­பு ஜூரிகள் சபை விடு­வித்­த­மைக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பாதிக்­கப்பட்ட தரப்­பான ரவிராஜின் மனைவி தாக்கல் செய்த மேன்முறை­யீட்டு மனுவை நேற்று நீதி­மன்றம் தள்­ளு­படி செய்­தது. 

இது தொடர்­பி­லான வழக்­கா­னது நேற்­றைய தினம் மேன்முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான லலித் ஜய­சூ­ரிய மற்றும் தீபாலி விஜே­சுந்­தர ஆகியோர் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்­ட­போதே குறித்த மனு இவ்­வாறு தள்­ளு­படி செய்­யப்பட்­டது. 

  நேற்­றைய விசா­ர­ணை­களின் போது மனு­தாரர் சார்பில் எவரும் ஆஜ­ரா­காத நிலையில், பிர­தி­வா­திகள் தரப்பின் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன, மனு­தாரர் சார்பில் எவரும் இல்­லா­ததால் மனுவை தள்­ளு­படி செய்ய வேண்டும் என கோரி­ய­தற்­க­மைய மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் மனுவை தள்­ளு­படி செய்­தது.

எவ்­வா­றா­யினும் நேற்று பிற்­பகல் பாதிக்­கப்பட்ட தரப்பின் சார்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றில் இடை­யீட்டு மனு­வொன்று தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது. சட்­டத்­த­ரணி பாலேந்­திரா ஊடாக இந்த இடை­யீட்டு மனு தககல் செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும், ரவி ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு தொடர்­பி­லான போதிய ஆவ­ணங்கள் தமக்கு கிடைக்­கா­மையை தாம் மனுவின் ஆரம்­பத்­தி­லேயே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்த நிலையில், தமது தரப்பு இல்­லாத சமயம் அதனை விசா­ர­ணைக்கு எடுத்­துக்கொண்டு தள்­ளு­படி செய்­த­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என குறிப்­பிட்டும் மீள அந்த மேன் முறை­யீடை விசா­ரணை செய்­யு­மாறும் கோரியே இந்த இடை­யீட்டு மனு தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது சாரதி ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.  இந்த கொலை குறித்த வழக்கு விசா­ர­ணைகள் நீண்ட காலம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்து கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என ஜுரிகளின் பரிந்துரைக்கு அமைய மேல் நீதிமன்றம் அவர்களை விடுவித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.