Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அல்லி மலரோடு நான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல்லி மலரோடு நான்

250pxnymphaea2albagy8.jpg

தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி

அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை

மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி

கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி

என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி

அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி

தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி

கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி

அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி

தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி

மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை

வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி

பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி

அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி

போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி

விளையாட்டிலே நான் ஒரு கில்லி

வார்த்தையாலே அடிப்பேன் சொல்லி

பல்லி சொல்வதை நானும் கேட்டிடுவேன் தள்ளி

லல்லி க்காக காத்திருக்கிறேன் நானும்

அல்லி மலரோடு இங்கே..........

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை உணர்வுடன் கூடிய கவி. அது சரி எனக்கு ஒரு சந்தேகம் யாராவது

உஙகளுக்கு அனுப்பியதை இங்கு பதிந்து விட்டீர்களோ என்று. :lol::lol:

அட இது நம்ம கறுப்பியக்கவா எழுதியது..சும் மாபடு..அசத்தல்..

ஆமா அவாவுக்கு சிங்களமும் தொயுமாக்கும்.. கூட விஜ படமும் பார்ப்ப போல

சல்லி....கில்லி..மல்லி... ஆகா..அசத்தல்..பாராட்டுக்கள்..

நகைச்சுவை கவி தந்தமைக்கு..கறுப்டபியக்கா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை உணர்வுடன் கூடிய கவி. அது சரி எனக்கு ஒரு சந்தேகம் யாராவது

உஙகளுக்கு அனுப்பியதை இங்கு பதிந்து விட்டீர்களோ என்று. :lol::lol:

உங்க சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன். இங்கு யாருக்காவது பிரயோசனப்படுமோ எண்டு தான் எழுதியது :lol::lol:

அட இது நம்ம கறுப்பியக்கவா எழுதியது..சும் மாபடு..அசத்தல்..

ஆமா அவாவுக்கு சிங்களமும் தொயுமாக்கும்.. கூட விஜ படமும் பார்ப்ப போல

சல்லி....கில்லி..மல்லி... ஆகா..அசத்தல்..பாராட்டுக்கள்..

நகைச்சுவை கவி தந்தமைக்கு..கறுப்டபியக்கா..

நன்றி வன்னி தந்த வன்னி மைந்தா :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி கவிதை அசத்தல் ......எனக்கே மில்லி அடிச்ச உணர்வு வருதுங்கோ தொடரட்டும் ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி கவிதை அசத்தல் ......எனக்கே மில்லி அடிச்ச உணர்வு வருதுங்கோ தொடரட்டும் ......

பாத்து மில்லி அடிச்சு கறுப்பி கறுப்பி னு உளரிடாதீங்க :lol::lol:

சுவர்மேல் பல்லி சொல்லி

யாழ்மேல் விழி உலவி..

படித்தேன் கபிக்கவி

லல்லி வீட்டில்

இரண்டு லீ..

மாமி வில்லி..

தடியாய் மல்லி..

வெறுப்புற்று அடித்த மில்லி..

க..பிக்கு கவிதை சொல்லி

அடடா..என்ன ஒரு முயற்சி..

மில்லி தொடர..

ஸாரி

கவிதை தொடர வாழ்த்துக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மில்லி தொடர.......... எண்டு கவுத்திட்டிங்களே விகடகவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியக்கா உங்கள் கவிதை அழகு.

உங்களை ஆணாக கற்பனை செய்து எழுதியிருக்கிறீர்கள். ஆண்கள்தான் பெண்களை வருணிக்கிறார்கள் என்றால் நீங்களுமா?

வார இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள் ஆண்களுக்கான இதழ்களிலும் பெண்களின் படங்களைத்தான் அட்டையில் போட்டிருப்பார்கள். பெண்களுக்கான இதழ்களிலும் பெண்களின் படங்களைத்தான் அட்டையில் போட்டிருப்பார்கள்.

ஆண்களை வருணித்து பெண்கள் கவிதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது தங்களின் எழுத்துக்களை ரசிக்கும் அடியேனின் தாழ்மையான கருத்து

வரப்பு மேலே தடம் பதிச்சு

இடுப்பு வளைய குடம் பொதிஞ்சு

கடுகடுக்கும் வெயில் தாண்டி

விடுவிடுத்து வர்ற பெண்ணே

இரட்டை மாடு சேத்துக்கட்டி

ராட்டை போல சில்லுப் பூட்டி

சாட்டை போட்டா பாயும் வண்டி

ரோட்டைப் பாத்து ஓட்டு மச்சான்

சந்தை போயி சரக்கை வித்தா

கத்தையாக நோட்டு கிடைக்கும்

வித்தை காட்ட ஓடி வருவேன்

அத்தை மவளே காத்திருப்பே

வந்த வழிக்கு மறந்திடாமை

கொத்து மல்லி வாங்கி வாயேன்

மத்த வேலை பாத்து உடனே

மொத்தமாக செஞ்சு வைப்பேன்

பத்திரமா பணத்தையெண்ணி

பத்து முழமா வாங்கி வாறேன்

முத்து முத்தா சிரிக்க போறே

சொத்து சுகமா சேர்க்க போறேன்

மீசை வைச்ச ஆசை மச்சான்

காசை பாத்து செலவு செஞ்சி

வீச்சு ரொட்டி மூணு திண்ணு

அஞ்சு மில்லி அடிச்சுவா நீ

அந்தி பொழுது ஆயிபோனா

ஏங்கி நின்னு காத்திராமே

வசதியாக கட்டில் போட்டு

அசதி தீர தூங்கப் போநீ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா உங்கள் கவிதை அழகு.

உங்களை ஆணாக கற்பனை செய்து எழுதியிருக்கிறீர்கள். ஆண்கள்தான் பெண்களை வருணிக்கிறார்கள் என்றால் நீங்களுமா?

வார இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள் ஆண்களுக்கான இதழ்களிலும் பெண்களின் படங்களைத்தான் அட்டையில் போட்டிருப்பார்கள். பெண்களுக்கான இதழ்களிலும் பெண்களின் படங்களைத்தான் அட்டையில் போட்டிருப்பார்கள்.

ஆண்களை வருணித்து பெண்கள் கவிதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது தங்களின் எழுத்துக்களை ரசிக்கும் அடியேனின் தாழ்மையான கருத்து

நீங்க சொல்வது உண்மைதான் எங்கும் அழகான பெண்களை வர்ணித்துத்தான் கவிதை எழுதுவாங்க.

ஆண்களை வர்ணித்து கவிதை வாசித்ததே குறைவு. அதுவும் சினிமாப் பாடல்களை பார்த்தால் அதிலும் ஒரிரு பாடல்கள் தான் இருக்கின்றது.

ஏங்க நான் ஆண்களை வர்ணித்து கவிதை எழுத இங்கிருக்கும் ஆண்கவிஞர்கள் எல்லாம் என்னை சொல்லாலே அடிக்க ரெடியா இருப்பாங்களே

வரப்பு மேலே தடம் பதிச்சு

இடுப்பு வளைய குடம் பொதிஞ்சு

கடுகடுக்கும் வெயில் தாண்டி

விடுவிடுத்து வர்ற பெண்ணே

இரட்டை மாடு சேத்துக்கட்டி

ராட்டை போல சில்லுப் பூட்டி

சாட்டை போட்டா பாயும் வண்டி

ரோட்டைப் பாத்து ஓட்டு மச்சான்

சந்தை போயி சரக்கை வித்தா

கத்தையாக நோட்டு கிடைக்கும்

வித்தை காட்ட ஓடி வருவேன்

அத்தை மவளே காத்திருப்பே

வந்த வழிக்கு மறந்திடாமை

கொத்து மல்லி வாங்கி வாயேன்

மத்த வேலை பாத்து உடனே

மொத்தமாக செஞ்சு வைப்பேன்

பத்திரமா பணத்தையெண்ணி

பத்து முழமா வாங்கி வாறேன்

முத்து முத்தா சிரிக்க போறே

சொத்து சுகமா சேர்க்க போறேன்

மீசை வைச்ச ஆசை மச்சான்

காசை பாத்து செலவு செஞ்சி

வீச்சு ரொட்டி மூணு திண்ணு

அஞ்சு மில்லி அடிச்சுவா நீ

அந்தி பொழுது ஆயிபோனா

ஏங்கி நின்னு காத்திராமே

வசதியாக கட்டில் போட்டு

அசதி தீர தூங்கப் போநீ.

உங்க கவிதை அழகு நோர்வே சார்.

என்னை திட்டுறிங்களா :lol:

எங்கே... எங்கே... என ஏக்கத்துடன்

வழியொன்றைத் தேடும் விழிகள்

செக்கிலிட்ட எள்ளெனப் பாகாகும் மனித இதயங்கள்

ஓய்வின்றி எருதுகள் செக்கைச் சுற்றிச் சுழன்று வருகின்றன

எள்ளுக்கும் எருதுக்கும் என்ன தொடர்பு

பார்வைக்குத்தானா இது பகல்

வெளிச்சம் வந்து விட்டது ஆனால் ஏனோ இருள் அகலவில்லை

விட்டில் பூச்சிகள் விட்டுச் சென்ற செய்தி என்ன

இனிமேல் தூண்டாமணி விளக்கைக் கொளுத்துங்கள்

எமது குத்து விளக்குகள் களவுபோய்விட்டன

பருந்துகளுக்கு கோழிக்குஞ்களின்மேல் பாசமா

பதுங்கிப் பறந்து பாய்ந்து பிடித்துப் பசியாறும் எதிரிகள்

அவை பயமறியா கன்றுகள்

ஆமாம் ஒரு பூனைக்குத் தான் மணிகட்டவேண்டும்

அதற்காக கோபுரத்து மணியையா கேட்பார்கள்

எமது எரிமலைக்குள்ளே எதிரி எட்டிப்பார்க்கிறானே

நீண்ட நாளாக அது குமுறவில்லை என்பதாலா பொறு பொறு

தீம்பிழம்பு வான்வரை எழும் ஆறாக அடிவாரம் வரை ஓடும்

அது அணை தாண்டிப் பாயும் சுட்டெரிக்கும் சுடர்விடும் அனல் கக்கும்

அப்போது வாருங்கள் பூனையை மணியில் கட்டுவோம்

Edited by Norwegian

அல்லி மலரோடு நான்

250pxnymphaea2albagy8.jpg

தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி

அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை

மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி

கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி

என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி

அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி

தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி

கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி

அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி

தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி

மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை

வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி

பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி

அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி

போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி

விளையாட்டிலே நான் ஒரு கில்லி

வார்த்தையாலே அடிப்பேன் சொல்லி

பல்லி சொல்வதை நானும் கேட்டிடுவேன் தள்ளி

லல்லி க்காக காத்திருக்கிறேன் நானும்

அல்லி மலரோடு இங்கே..........

அடடா கறுப்பியின் கவிதை வாசித்ததும் ஒரு மில்லி அடித்தமாதிரி இருந்தது பாராட்டுக்கள்

அல்லி மலரோடு நான் என்று உங்களை ஆணாக கற்பனை செய்து அசத்தலாக எழுதி இருக்கிறியள் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டியவர்களுக்கு ரொம்ப நன்றி

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிமலர் கவிதை அருமையாக இருந்தது பாரட்டுக்கள் சகோதரி, கவிதை எழுததெரியவிட்டாலும் ரசிப்பேன்

அல்லி மலரோடு நான்

250pxnymphaea2albagy8.jpg

தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி

அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை

மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி

கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி

என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி

அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி

தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி

கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி

அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி

தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி

மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை

வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி

பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி

அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி

போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி

விளையாட்டிலே நான் ஒரு கில்லி

வார்த்தையாலே அடிப்பேன் சொல்லி

பல்லி சொல்வதை நானும் கேட்டிடுவேன் தள்ளி

லல்லி க்காக காத்திருக்கிறேன் நானும்

அல்லி மலரோடு இங்கே..........

அல்லிமலர் கவிதை அருமையாக இருந்தது பாரட்டுக்கள் கறுப்பி!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லிமலர் கவிதை அருமையாக இருந்தது பாரட்டுக்கள் சகோதரி, கவிதை எழுததெரியவிட்டாலும் ரசிப்பேன்

கவிதையை ரசித்தமைக்கு நன்றி பரத்

நகைச்சுவயுடன் கூடிய வரிகள் T.R ரசிகையா நீங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவயுடன் கூடிய வரிகள் T.R ரசிகையா நீங்கள்

T.R ன் ரசிகையா அந்த லேவலுக்கு எல்லால் ஏங்க போகனும். ஒரு இலக்கியன், விகடகவி, கெளரிபாலன், நோர்வே, yaal_ahaththiyan இவர்களின் ரசிகையா இருந்து விட்டுப் போறன்

கறுப்பி அக்கா எத்தனை மில்லி அடிச்சிடு மப்பில கிளறினீங்க இந்த பள்ளி பாடலை...?ம்ம்ம் மப்பிலை கிளறினாலும் நல்லத்தான் இருக்கு, வாழ்த்துக்கள் சொறிப்பி சாறி கறுப்பி ஆன்டி :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மில்லி அடிக்காமலே கவிதை நல்லாயிருக்கு எண்டு சொல்லிட்டிங்க .

உண்மையில மில்லி அடிச்சிட்டு பாடினா எப்படி இருக்கும் :o

அதுதானாக்கும் சின்னப்பு அடிச்சிட்டு கவிதையே எழுதுறது இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.