Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்கு வீடு வாசல் படி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருங்கோ கெதியா வெளிக்கிடுங்கோ கல்யாணத்துக்கு நேரம் போகிறது நான் என்ன சீலையோ உடுக்கிறதோ இல்ல‌ முகத்துக்கு பெயிண்டா அடிக்கிறது உனக்குத்தான் நேரம் போகும் எனக்கு வேட்டிய சுத்தி கட்டினனா ஒரு சேட்டை போட்டனா வேலை முடிஞ்சுது நீ தான் வெளிக்கிட மூணு மணித்தியாலம் எடுக்கும் இந்த பேச்சுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வாரன் புள்ளய பார்த்துக்கங்க சரி நீ கெதியா வா. ம்கும் கெதியா வாரதுகளா என்று ஒரு படத்தை பார்த்து முடிக்கலாம் இவள் வார வரைக்கும் என்று டீவியை தொறந்தால் விஜய் டீவில‌ ஒரு புறோக்கிரம் கோபிநாத் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார் ஒரு புள்ள கெலிகொப்ட்ர கேட்கிறது இன்னொன்று 50 பவுண் கேட்கிறது இன்னொன்று நல்ல வீடு கேட்கிறது இதுகளை ஏன் பெத்து இருக்கு என்று  மனதுக்கு தோன்றினாலும் தங்கட பெண்பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அனுப்ப வேண்டியது தாய் தகப்பனின் கடமை தானே நாமளும் அப்படித்தானே அப்படித்தானே வாழுறம் என்ற நினைப்பு மனதுக்குள் பிரண்டடித்து ஓடுகிறது.

சரி ஒரு மாதிரியாக காலை ஏழு மணிக்கு போனவள் ஒன்பது மணிக்கு வெளியில் வந்தாள் மகனும் வெளிக்கிட்டு வந்தவன் போற நேரத்தில் கொஞ்சம் நில்லுங்கோ அவங்க நம்ம கல்யாணத்துக்கு எவ்வளவு வச்சி இருக்காங்கோ என்று பார்க்கிறேன் என்று கொப்பியை பிரட்டி ஏதோ கணக்கு வழக்குகள் போல் பிரட்டி பார்த்து காசை என்பலப்புக்குள் வைத்து வரும் போது அம்மா கக்கா வருது என்றான் மகன் நம்ம பையன் ஆச்சே உடனே மனிசி நீங்க தான் கூட்டிக்கொண்டு போங்கோ அப்பனுக்கு மகன் தப்பாம பொரந்திருக்கு என்றாள் மனிசி அவனை கொண்டு இறக்குமதி ஏற்றுமதி வியாபாரம் செய்துவிட்டு  கதவு யன்னல்களை பூட்டி வெளியே வந்து காரில் ஏறினால் கொஞ்சம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு போய் கதவை இழுத்தும் தள்ளியும் பார்க்கிறாள் மனைவி ஏனென்றால் நான் சரியாக கதவு பூட்டிருக்க மாட்டேனாம்.(இந்த‌ பொம்புளைங்க‌ இப்ப‌டித்தானா??)


ஒரு மாதிரியாக‌ க‌ல்யாண‌ வீட்டை அடைந்து விட்டோம்  அங்கே போன‌போது ந‌ண்ப‌ர்க‌ள் மூவ‌ரைக்காண‌ என‌க்கு ந‌ல்ல‌ ச‌ந்தோஷ‌ம் ஆகா ந‌ம்ம‌ கூட்டாளிக‌ள் வேற‌ வ‌ந்திருக்கிறானுக‌ள் என்ற‌ சிந்த‌னையில் நிற்க‌ ந‌ம்ம‌ வீட்டுக்காரியோ எங்கேயும் போக கூடாது என் ப‌க்க‌த்தில் நிற்க‌ வேணும் என்றாள் நானும் மார்கேட் மாடு போல‌ தலையை ஆட்டிக்கொண்டு இங்க‌ பாருங்க‌ என்ற‌ சாறி மாதிரி யாரும் க‌ட்டியிருக்கிறாங்க‌ளா ?? அதுக்குள்ள‌ கேள்வி இல்லையே இந்த‌ சாறி வாங்குன‌ க‌தை என‌க்கு ம‌ட்டும் தானே தெரியும் என்று பெரு மூச்சை இழுத்து விட்டேன் மூச்சில் ப‌ல‌ க‌டைக‌ள் க‌டைக்கார‌ர்க‌ள் கொந்த‌ளித்த‌து சுறாவளி வ‌ந்து போன‌ நினைவுக‌ளை த‌ர‌ இல்லை யாரிமும் இந்த‌ சாறி இல்லை என்று சொல்ல‌ ஒரு கெத்து ம‌னிசிக்கு

ந‌ட‌ந்து மேடைக்கு அருகில் செல்ல‌ ஒருவ‌ன் க‌ண்டு விட்டான் (ந‌ண்ப‌ன் ) டேய் ம‌ச்சி எங்க‌டா க‌ண்டு க‌ன‌கால‌ம் ஆச்சி வாவ‌ன் ந‌ம்ம‌ கோப‌னும் ,ந‌ந்த‌னும் நிற்கிறானுக‌ள் பார்த்துட்டு வ‌ருவம் என்றன் காந்த‌ன் ச‌ரி நீ போ நான் வாற‌ன் இல்ல மச்சி நீ வா என்றான்  ச‌ரி நீங்க‌ போயிட்டு குயிக்கா வாங்க‌ என்றாள் மனிசி ச‌ரி நான் வார‌ன் என்று அங்கே போனால் என்ன‌ ம‌ச்சான் நீ உன்ற‌ பொண்ணாட்டி முந்தானையில் தொங்கிற‌ ஓம் டா நீங்க‌ள் இதுவும் சொல்லுவிய‌ள் இன்ன‌மும் சொல்லுவிய‌ள் என்ற‌ நில‌மை அப்ப‌டி என்ன‌ ம‌ச்சான் க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்திருக்க‌ம் சாப்பாட்டு முன் ஏதாவ‌து பார்ப்ப‌மா அப்ப‌தான்டா சாப்பாடு இற‌ங்கும் போங்க‌டா டேய் என்னை தெருவில‌ நிற்க‌ வைக்க‌ போறிய‌ள் என்ன‌ இல்ல‌ ம‌ச்சான் சும்மா பிய‌ர் தானே ச‌ரி பிய‌ர்ம‌ட்டும் தான் என்று போட்டு காரில் போய் பிய‌ரை  வாங்கி அடித்து கொண்டிருக்கும் போது அத‌ற்குள் மிக்ஸ்ஸிங்கை ஒருத்த‌ன் சேர்த்திருக்கிறான் என்று என‌க்கு தெரியாது என்ன‌ ம‌ச்சான் நாலு பிய‌ர் இன்னுமா முடிய‌ல இதோட‌ முடியிது முடியிது  என்று அடிச்சா ந‌ல்லா வெறி யோடு ம‌ண‌ மேடைக்கு வ‌ந்தோம் நாலு பேரும் அவ‌ர் அவ‌ர்க‌ள்   த‌ங்க‌ள் ம‌னைவியிட‌ம் செல்ல‌ என் ம‌னைவிக்கோ நான் அடிச்சுட்டு  வ‌ந்த‌து தெரிய‌ சிரித்து முறைக்கிறாள் (அப்ப‌ என‌க்கு தெரிந்த‌து நாலு நாளைக்கு வெளியில‌ தான் ப‌டுக்கை என்று)

ஒரு மாதிரியாக‌ உடுப்புக‌க‌டையில் வைத்த‌  பொம்மை போல‌ இருந்துக‌ல்யாண‌ நிக‌ழ்வை க‌ண்டு க‌ழித்து விட்டு சாப்பாட்டுக்கு சென்றோம் அப்ப‌டியே அந்த‌ நாலு பேரும் வ‌ந்து அவ‌ர‌வ‌ர் ம‌னிசியுட‌ன்  சாப்பிட்ட‌ பின்பு ம‌ச்சான் நாம் நாலு பேரும் பிர‌ண்டு நாலு பேரும் ஒருமிக்க‌ தான் கிவ்டோ ப‌ரிசோ கொடுக்க‌ வேணும் என்ன‌ ச‌ரி ம‌ச்சான் என்றோம் ஆளாளுக்குள்  ஒரு மாதிரி ப‌ந்தி முடிந்த‌ கையோடு நானும் போய் இவ‌னுக‌ளுக்காய் காத்துக்கொண்டிருக்க‌ ம‌னிசி வேற‌ அடிக்க‌டி பார்வையை திருப்பி கொண்டிருக்க‌ எங்க‌ இவ‌னுக‌ளை காண‌ல‌ என்று தேடிக்கொண்டு வ‌ருவ‌ம் என்று போன‌ போது

ஒருத்த‌ன் ம‌ட்டையாகி இருந்தான் இன்னொருத்த‌ன் வாத்றூமை க‌ழுவிக்கொண்டிருந்தான் அவனும் ம‌னைவியும் அடியும் விழுற‌ ச‌த்த‌ம் கேட்குது ஆஹா ந‌ம்ம‌ளை  போல‌வும் ஒரு  அடிமையோ என‌ எட்டிப்பார்க்க‌ அவ‌ன்ற‌ ம‌னிசி என்னைக் க‌ண்டு விட‌  சாப்பாடு ச‌ரி இல்லை போல‌ அவ‌ருக்கு ச‌த்தி எடுக்கிற‌து என்றால் எடுக்காதா பின்ன (என‌து உள் ம‌ன‌து சொல்ல‌) அதை க‌ல‌ந்த‌ காந்த‌ன் ம‌ட்டும் ந‌ல்ல‌ பிள்ளை போல‌ வ‌ந்தான் டேய் என்ன‌த்த‌டா க‌ல‌ந்த‌ அதுவா ம‌ச்சி அதோட‌ கொஞ்ச‌ம்  வேற‌ ச‌ர‌க்கையும் க‌ல‌ந்த‌ன் என்றான் ஏண்டா அங்கே பாரு ஒருத்த‌னால‌ இய‌லா இன்னொருத்த‌ன் அங்க‌ ச‌த்தி எடுத்துக்கொண்டிருக்கிறான் அவ‌னுக‌ள்  கிட‌க்குறானுக‌ள் நீ வா கிவ்டை கொடுத்துட்டு போவோம் என்றான் ச‌ரியாடா இது. வேற‌ ஒரு இட‌த்துல‌ சேர்ந்து இன்னொருக்கா அடிச்சா ச‌ரியாகிடும் வா என்றான் ச‌ரி நேர‌ம் வேற‌ போக‌ கிவ்டை கொடுத்த் விட்டு நானும் ம‌னிசியும் வீட்ட‌ போய் இற‌ங்க‌ ம‌னிசி சொன்னாள் ஏங்க‌ அந்த‌ பொண்ணும்  பெரிசா வடிவில்லை ஆழும் கொஞ்சம் கொட்டான் , சாப்பாடும் ச‌ரி இல்லை மேக்க‌ப் வேற‌ ஓவ‌ர் என்ன‌ ( ந‌ம்ம‌ளுக்கு எத்த‌னை பேர் சொல்லியிருப்பார்க‌ளோ ம‌ன‌துக்குள் ஓடுகிற‌து )வீட்டுக்கு வீடு வாச‌ல் ப‌டிடி க‌த‌வை திற‌டி என்று போய் ப‌டுத்து உற‌ங்கி விட்டேன் .

 

ஒரு கல்யாண வீட்டில் நடந்த சம்பவம் நகைச்சுவை கதையாக‌

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்பனுக்கு மகன் தப்பாம பொரந்திருக்கு

அடிக்கடி காதில் விழும்,

என்ன டீசன்டாக "அப்பாக்கு" என்று 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு. கலியாண வீட்டுக்குப் போனாலும் ந்ண்பர்களுடன் சேர்ந்து பக்கத்தில உள் "பப்" புக்கு போய் தாலிகட்ட முன்னர் மண்டபத்திற்குப் போவது ஒரு பழக்கமாகத்தான் இருக்கு.. கலந்து மட்டையாக்கிற நண்பர்களுடன் இப்போதெல்லாம் கூட்டு வைப்பதில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில அடிக்கடி திருமண வீடுகளில் தானே நட்புக்களையும் சந்திக்கிறீங்கள் முனி.அதுவும் ஒரு பழக்க தோசம் தான்.?மற்றப்படி இந்த எக்ஸ்பிறஸ் எழுத்திற்கு அடிக்கடி நிறுத்த புள்ளி போட்டால் நன்று.குறையாக சொல்லவில்லை.மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

இல்ல‌ ம‌ச்சான் சும்மா பிய‌ர் தானே ச‌ரி பிய‌ர்ம‌ட்டும் தான் என்று போட்டு காரில் போய் பிய‌ரை  வாங்கி அடித்து கொண்டிருக்கும் போது அத‌ற்குள் மிக்ஸ்ஸிங்கை ஒருத்த‌ன் சேர்த்திருக்கிறான் என்று என‌க்கு தெரியாது என்ன‌ ம‌ச்சான் நாலு பிய‌ர் இன்னுமா முடிய‌ல இதோட‌ முடியிது முடியிது  என்று அடிச்சா ந‌ல்லா வெறி யோடு ம‌ண‌ மேடைக்கு வ‌ந்தோம்

ஆட்களுக்கு தெரியாமல்,  மிக்சிங் கலக்குறவங்களை... கூட்டு சேர்க்கப் படாது.
உதாலை கன  பின் விளைவுகள்... பல இடங்களில் ஏற்பட்டிருக்கு. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

அடிக்கடி காதில் விழும்,

என்ன டீசன்டாக "அப்பாக்கு" என்று 

ஹாஹா நான் சும்ம கற்பனைக்கு அள்ளி விட்டது மீரா ஆனால் அப்ப இந்த வார்த்தையை கேட்டு  இருக்கிறன் tw_blush:

20 hours ago, கிருபன் said:

கதை நல்லாயிருக்கு. கலியாண வீட்டுக்குப் போனாலும் ந்ண்பர்களுடன் சேர்ந்து பக்கத்தில உள் "பப்" புக்கு போய் தாலிகட்ட முன்னர் மண்டபத்திற்குப் போவது ஒரு பழக்கமாகத்தான் இருக்கு.. கலந்து மட்டையாக்கிற நண்பர்களுடன் இப்போதெல்லாம் கூட்டு வைப்பதில்லை!!

அதென்னவோ உன்மைதான் போல் கிடக்கிறது கல்யாண வீட்டில் சில நண்பர்கள் சேர்ந்த்தால் கொண்டாட்டம் தான் நன்றி உங்கள் கருத்திற்கு கிருபன் அண்ண

புது பழக்கம் அதனால் மட்டையாவது சிலரின்  வழமை  

18 hours ago, யாயினி said:

ஊரில அடிக்கடி திருமண வீடுகளில் தானே நட்புக்களையும் சந்திக்கிறீங்கள் முனி.அதுவும் ஒரு பழக்க தோசம் தான்.?மற்றப்படி இந்த எக்ஸ்பிறஸ் எழுத்திற்கு அடிக்கடி நிறுத்த புள்ளி போட்டால் நன்று.குறையாக சொல்லவில்லை.மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.?

என்ன செய்யுற இவனுகளை சமாளிச்சு போக வேண்டியதா இருக்கிறது நான்  அவனுகளுக்கு சம்பல் தான் கன இடங்களில்  நினைப்பேன் முற்றுப்புள்ளி இட வேண்டும் என்று ஆனால் மறந்து போய் விடுவேன் ஒரு முசுப்பாத்திக்கு எழுதியது யாயினி  நன்றி

13 hours ago, தமிழ் சிறி said:

ஆட்களுக்கு தெரியாமல்,  மிக்சிங் கலக்குறவங்களை... கூட்டு சேர்க்கப் படாது.
உதாலை கன  பின் விளைவுகள்... பல இடங்களில் ஏற்பட்டிருக்கு. :grin:

ஓம் சிறி அண்ணை நானே கன பேரை அள்ளிக்கொண்டு அவங்க  வீட்டில ஏச்சு வேண்டி இறக்கியிருக்கிறேன் நான் இது வரைக்கும் குடித்தது இல்லை பாருங்கோ இவனுகளா ஆவங்க மனிசிமாருட்ட எனக்கு கெட்ட பேரு  ஏதோ நான் ஊத்திக்கொடுக்கிற மாதிரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.