Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை

mavai.jpg

அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் யாழ்; சிறைச்சாலைக்கு சென்று  அங்கு  தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணமாயிருந்த போதும்  தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முடியவில்லை எனத் தெரிவித்த அவர் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எந்தவித செயற்திறன் மிக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது, விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரையில் கைதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து கைதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாவை சேனாதிராசா அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நல்லாட்சி அரசுடன் பல தடவைகள் பேசியிருப்பதாகவும்  எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும்  மிக விரைவில், இறுக்கமான பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும், அதில், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் எனவும்  அந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமான பேச்சுவார்த்ததையாக இருக்குமென்றும்   நம்பிக்கையுடன் இருக்குமாறு அவர்  அரசியல் கைதிகளிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/24127

  • கருத்துக்கள உறவுகள்

ரைட்டா உடுப்பை போட்டுக் கொண்டு போய் பேசினால் இறுக்கமான பேச்சுவார்த்தை என்று நினைத்திட்டார் போல

  • தொடங்கியவர்
வெசாக் தினத்தில் எம்மை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் - கூட்டமைப்பு எம். பிக்களிடம் அரசியல் கைதிகள் வலியுறுத்து
 
 
வெசாக் தினத்தில் எம்மை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் - கூட்டமைப்பு எம். பிக்களிடம் அரசியல் கைதிகள் வலியுறுத்து
“உலக வெசாக் தினத்தை முன்­னிட்டு தம்­மைப் பொது மன்­னிப்­பில் விடு­தலை செய்­வ­தற்கு அரச தலை­வ­ருக்கு விரைந்து அழுத்­தம் கொடுங்­கள். அதற்­கான நட­வ­டிக்­கை­யைத் துரி­தப்­ப­டுத்­துங்கள்”
 
இவ்­வாறு கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் நேற்று வலி­யு­றுத்­தி­னர் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்.
 
 சித்திரைப் புதுவருட தினமான நேற்று யாழ்ப்பாண சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா நேரில் சென்று பார்வையிட்டார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.அதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு கோரினர் என்று தெரிவிக்கப்பட்டது.
 
“சிறப்புத் தினங்களின்போது அரச தலைவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அவ்வாறு எம்மையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக வெசாக் தினம் இலங்கையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுவதால், அதனை முன்னிட்டாவது எங்களைப் பொதுமன்னிப்பில் விடுவிக்க அரச தலைவருக்கு கடும் அழுத்தம் கொடுங்கள்” என்று கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கோரினர். 
 
கைதிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, அரச தலைவருடன் இது தொடர்பில் பேச்சு நடத்துவதாகக் குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
 “நாங்கள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு எதிரன சட்ட நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. அதனால் எங்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவாவது நடவடிக்கை எடுங்கள். அது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் பேசி நடவடிக்கையைத் துரிதப்படுத்துங்கள்” என்று அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் கோரினர்.
 
இந்த விடயம் தொடர்பில் தலைவர் சம்பந்தன் ஊடாக அரசுக்குக் கொண்டு செல்லப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. 

http://www.onlineuthayan.com/news/25577

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை

அப்ப இவ்வளவுகாலமும் என்னப்பா செய்து கொண்டிருந்தனியள்????? ஙே

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அப்ப இவ்வளவுகாலமும் என்னப்பா செய்து கொண்டிருந்தனியள்????? ஙே

சொகுசு வாகன இறக்குமதி 

4 hours ago, MEERA said:

ரைட்டா உடுப்பை போட்டுக் கொண்டு போய் பேசினால் இறுக்கமான பேச்சுவார்த்தை என்று நினைத்திட்டார் போல

???????

1 hour ago, குமாரசாமி said:

அப்ப இவ்வளவுகாலமும் என்னப்பா செய்து கொண்டிருந்தனியள்????? ஙே

என்ன பேசலாம் என்று பேசிக்கொண்டு இருந்தவை !!!!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்ப இவ்வளவுகாலமும் என்னப்பா செய்து கொண்டிருந்தனியள்????? ஙே

1977....????

தமிழகம் வரை வைச்சிருக்கிறம் அல்லே...

செய்யாமலா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.