Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகரில் பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு

Featured Replies

யாழ். மாநகரில் பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு
 
 
யாழ். மாநகரில்  பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு
பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும்  பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமையவும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நடவடிக்கையில் சகலரும் இணைந்து கொள்ளவேண்டும். நாளாந்த பாவனையின் பின்னர் கழிவாக வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்  ஆகியவையே பெருமளவில் திரண்டு மாநகர கழிவகற்றலில் சவால்களையும் சூழலுக்குப் பெரும் தீங்கையும் ஏற்படுத்துவனவாயுள்ளன. 
 
குடிதண்ணீர் விற்பனையாகும் பிளாஸ்ரின் போத்தல்கள், ஒருநாள்  பாவனை பிளாஸ்ரிக் குவளைகள், மதிய உணவு பொதியிடும் பொலித்தீன்கள், பொருள்கள் வாங்கும் இலகு பொலித்தீன் பைகள் போன்றவை இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 
 
உணவுச்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் தங்கள் வியாபார நடவடிக்கையின்போது சாப்பாட்டுத் தட்டங்களைக் கொதிநீரில் கழுவி, சுத்தமான தட்டங்களில் வாழை இலைகளை இட்டுச் சுத்தமான கண்ணாடி அல்லது  சில்வர் குவளைகளைப் பாவித்துக் குடிதண்ணீரை வழங்கலாம். உணவுப் பொதியிடுகையில் வாழை இலைகளைப் பாவித்து குளிர்களியையும் பழங்களின் கலவையையும் சுத்தமான சில்வர் ஏந்திகளில் வழங்கி இந்த முயற்சிக்கு வலுச் சேர்க்க முடியும்.
 
பூமி தினத்தில் தடை செய்யப்படும் பொலித்தீன் மற்றும்  பிளாஸ்ரிக் கழிவுகள் தங்கள் இடங்களில் சேரும் திண்மக் கழிவுகளில் காணப்படுமாயின் யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவினரால் குறித்த இடத்துக்கான  கழிவகற்றல் சேவை நிறுத்தப்படும். இவற்றை எரிப்பதால் உண்டாகும் விளைவுகள் மனிதருக்குத் தீங்கை ஏற்படுத்தும். மாநகர எல்லையினுள் குப்பை களுக்கு எரியூட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும் என்றுள்ளது.        

http://www.onlineuthayan.com/news/25719

  • கருத்துக்கள உறவுகள்

      Image result for palmyrah products  Image result for palmyrah products Image result for palmyrah products

கடகத்தில் இடியப்பம்,சுளகில் சோறு,கூடையில் மீன்,இறைச்சி, மரக்கறி...போன்றவற்றை பாவிக்க பயன்படுத்தலாம் ..இப்படி நான் புலத்திலிருந்து சொல்லலாம்...தாயகமக்கள் விரும்புவார்களா?

தாயக மக்கள் கேட்பார்கள் நீங்கள் மட்டும் ஸ்டைலா பொலித்தீன் பாவிக்கிறீயள் நாங்கள் பாவிக்க கூடாதோ....:10_wink:

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, putthan said:

      Image result for palmyrah products  Image result for palmyrah products Image result for palmyrah products

கடகத்தில் இடியப்பம்,சுளகில் சோறு,கூடையில் மீன்,இறைச்சி, மரக்கறி...போன்றவற்றை பாவிக்க பயன்படுத்தலாம் ..இப்படி நான் புலத்திலிருந்து சொல்லலாம்...தாயகமக்கள் விரும்புவார்களா?

தாயக மக்கள் கேட்பார்கள் நீங்கள் மட்டும் ஸ்டைலா பொலித்தீன் பாவிக்கிறீயள் நாங்கள் பாவிக்க கூடாதோ....:10_wink:

நாங்கள் ஒரு நாளும் சொல்லக்கூடாது.பிறகு அங்காலை வேறைவிதமாய் பிரச்சனையள் வரும்.....
வெள்ளையள் சொன்னால் கேப்பினம் எண்டு நான் நினைக்கிறன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது..... விழித்துக் கொண்ட,  யாழ். மாநகர சபைக்கு....  பாராட்டுக்கள்.
"யாழ்.களம் 19´வது  அகவை"  பகுதியில்....  
நொச்சியின் பதிவு,  முற் கூட்டியே தெரிவித்தது... எமக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல விடயம் ஆனால் நடைமுறைக்கு கொண்டுவருதல் மிக கஸ்ரமான ஒன்று பாருங்கள்  பொலி த்தினால்  எதிர்க்காலத்தில் பாரிய பி ரச்சினைகள் எழலாம்  அதை தடுப்பதே நல்லது துணிப்பைகள் சாக்குப்பைகள் பேப்பர் பைகள் என்பனவற்றை நடை முறையில் கொண்டு வரலாம் 

4 hours ago, putthan said:

கடகத்தில் இடியப்பம்,சுளகில் சோறு,கூடையில் மீன்,இறைச்சி, மரக்கறி...போன்றவற்றை பாவிக்க பயன்படுத்தலாம் ..இப்படி நான் புலத்திலிருந்து சொல்லலாம்...தாயகமக்கள் விரும்புவார்களா?

தாயக மக்கள் கேட்பார்கள் நீங்கள் மட்டும் ஸ்டைலா பொலித்தீன் பாவிக்கிறீயள் நாங்கள் பாவிக்க கூடாதோ....:10_wink:

ம் அதே நாங்கள் கேட்போம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.