Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டம் என்ன சொல்லுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பர், 'கடைக்கு போனேன். இரண்டு லாட்டரி சீட்டுகள் வாங்கினேன். உனக்கு ஒன்று இந்தா. அதிஷ்டம் இருந்தால் வெல்லு' என்று சொல்கிறார்.

நீங்கள் காலைல சாப்பாடு வாங்கிக் கொடுத்தபடியால்.... லாட்டரி சீட்டுக்கான பணம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

உங்களுக்கு அதிஷ்டம் இருந்தது. ஒரு இலட்ச்சம் விழுந்து விட்டது. சும்மா இரகசியமா வைச்சிருக்காம, உடனே போனைப் போட்டு மச்சி விழுந்திடுது மச்சான்... வா... தண்ணி அடிச்சு கொண்டாடலாம் என்கிறீர்கள்..

ஒரு 5,000 நண்பருக்கு கொடுத்துவிடலாம் என்று மனதில் நினைக்கிறீர்கள்.

நல்ல தண்ணீல, மச்சான், நீ 5,000 எடு, மிகுதியை எனது பாங்குக்கு மாத்து என்று நண்பர் உறுதியாக, தெளிவாக சொல்கிறார்.

இப்ப என்ன செய்வது ?

( ஓ, கொஞ்சம் பொறுங்கோ... எனக்கு ஒண்டும் விலேல... நான் லாட்டரி பக்கம் போவதில்லை... இன்று வாசித்தது, சற்று ஆர்வத்தினை தூண்டியது, பகிரலாம் என்று நினைத்தேன்)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,நீங்கள் எழுதியது விளங்கவில்லை? 5000 என்ன காசு?லொட்டரி டிக்கெட் வேண்டிக் கொடுத்த காசா?... டிக்கெட் வேண்டிக் கொடுத்த காசைக் கேட்டால் பிறகு எப்படி அவரால் மற்றவர் வின் பண்ணின காசைக் கேட்க முடியும்?...அல்லது முழுக் காசையும் தான் உரிமை கோருகிறாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நாதமுனி,நீங்கள் எழுதியது விளங்கவில்லை? 5000 என்ன காசு?லொட்டரி டிக்கெட் வேண்டிக் கொடுத்த காசா?... டிக்கெட் வேண்டிக் கொடுத்த காசைக் கேட்டால் பிறகு எப்படி அவரால் மற்றவர் வின் பண்ணின காசைக் கேட்க முடியும்?...அல்லது முழுக் காசையும் தான் உரிமை கோருகிறாரோ?

ஐய்க்...

லாட்டரி ஒத்தை ரூபா.

விழுந்த காசு ஒரு இலட்ச்சம்.

அவர் என்ன ஒரு ரூபாவை கேட்டா இருப்பார்? 

விழாது என்று நினைத்தே தான் கொடுத்து இருப்பார். விழுந்து விட்டது.

இப்போது யாருக்கு விழுந்ததோ, அவர் பெரு மனதுடன் 5000 ரூபா கொடுக்கலாம் என்று நினைக்கிறார்.

டிக்கெட்டை கொடுத்தவரோ, 5000 தை வைத்து கொண்டு மீதி 95,000 எனது கணக்கில் போடு என்கிறார். அதாவது தான் கொடுத்த டிக்கெட்டில் விழுந்த பணத்தில், 5000 மட்டும் அவர் எடுப்பதே தனது பெரு மனதுடனான விருப்பம் என்று நினைக்கிறார்.

நிலைமை இப்படியே கோட்டுக்கு போனால், சட்டம் என்ன சொல்லும் ?

  • கருத்துக்கள உறவுகள்
முனியர் அன்பளிப்பாக கொடுத்த லொட்டரி சீட்டில் ரதிக்கு ஒரு லட்சம் பவுண்ஸ் விழுந்திட்டு என்டு வைப்போம்.மனட்சாட்சியின் படி பார்த்தால் அன்பளிப்பாக கொடுத்த பொருளை திருப்பிப் கேட்க கூடாது.அது ஞாயமும் இல்லை.ஆனால் முனி மாதிரி ஆட்களிட்ட அதை எதிர் பார்க்க முடியுமா?<_<

இங்கே காசு குடுத்து யார் கடையில லொட்டரி சீட்டு வாங்கினமோ அவையளுக்கு தான் அந்த முழுப் பணமும் சொந்தம்...முனியர் கடையில லொட்டரி வாங்கேக்குள்ள ரிசீட்டும் வாங்கி வைச்சிருந்தால் ரதியக்கா கோட்டுக்குப் போனாலும் தோத்துப் போயிடுவாtw_cry:.
 
ரதியக்கா இப்படியும் சொல்லலாம் நானும் உந்தக் கடையில தான் வாங்கினனான் ஆனால் ரிசீட்டை தொலைத்துப் போட்டேன்tw_astonished:,இல்லாட்டில் முனியரிட்டை ரிசிட் இருந்தாலும் அந்த ரிசிட்டுக்குரிய லொட்டரி தான் இது என்று முனியராலே பூரூப் பண்ணேலாது:102_point_up_2:
 
முனிக்கு,அரைவாசிக் காசு கொடுப்பம் என்டு நினைத்த ரதி  அக்காவுக்கு இப்ப முழுக் காசும் சொந்தம்.:mellow:
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2017 at 9:21 PM, Nathamuni said:

ஐய்க்...

லாட்டரி ஒத்தை ரூபா.

விழுந்த காசு ஒரு இலட்ச்சம்.

அவர் என்ன ஒரு ரூபாவை கேட்டா இருப்பார்? 

விழாது என்று நினைத்தே தான் கொடுத்து இருப்பார். விழுந்து விட்டது.

இப்போது யாருக்கு விழுந்ததோ, அவர் பெரு மனதுடன் 5000 ரூபா கொடுக்கலாம் என்று நினைக்கிறார்.

டிக்கெட்டை கொடுத்தவரோ, 5000 தை வைத்து கொண்டு மீதி 95,000 எனது கணக்கில் போடு என்கிறார். அதாவது தான் கொடுத்த டிக்கெட்டில் விழுந்த பணத்தில், 5000 மட்டும் அவர் எடுப்பதே தனது பெரு மனதுடனான விருப்பம் என்று நினைக்கிறார்.

நிலைமை இப்படியே கோட்டுக்கு போனால், சட்டம் என்ன சொல்லும் ?

டிக்கெட் கொடுத்தவருக்குதான் முழு உரிமையும் உள்ளது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-8 at 9:02 PM, ரதி said:
முனிக்கு,அரைவாசிக் காசு கொடுப்பம் என்டு நினைத்த ரதி  அக்காவுக்கு இப்ப முழுக் காசும் சொந்தம்.:mellow:

 

On 2017-5-8 at 11:19 PM, பெருமாள் said:

டிக்கெட் கொடுத்தவருக்குதான் முழு உரிமையும் உள்ளது 

நாம என்ன நினைத்தாலும், பேசினாலும், சட்டம் சொல்வது வேறு மாதிரி.

நீங்கள் வெல்லும் என்ன நினைத்திருந்தால், வேறு ஒருவருக்கு கொடுக்கப் போவதில்லை. 

அப்படி கொடுத்தாலும், வென்றால் எனக்கு இத்தனை வீதம் என்று சொல்வீர்கள். 

வாங்குபவரோ, நீயும் உனது சீட்டும்.... நீயே வைத்து வென்று கொள் என்பார்.

எனவே நீங்கள் கொடுக்கும் போதே.... 99.99% இது எங்க வெல்லப் போகுது என்ற மன நிலையுடன்..... முக்கியமாக... கிப்ட் அதாவது பரிசாக தான் கொடுக்கிறீர்கள்.

பரிசுப் பொருள் ஒன்று, கொடுக்கப் பட்ட, பின்னர் உரிமை கொணடாடப் பட முடியாது. 

அவ்வகையில் விழுந்த பரிசுத் தொகை முழுவதுமே, சீட்டு பரிசாக பெறுபவருக்கே சொந்தம்.

இன்னும் விளக்கமாக சொல்வதானால், தாய், தந்தையர், சொத்தை பிள்ளைகளுக்கு எழுதி கொடுக்கும் போது, தாம் உயிருடன் இருக்கும் வரை அங்கே வாழும், சீவன உரித்து சேர்த்துக் கொண்டே எழுதுவார்கள். காரணம், பரிசாக கொடுத்தது, கொடுத்தது தான்.  இல்லாவிடில், எழுதி வாங்கிக் கொண்ட மறு நாளே, அனாதை மடத்தில் விடப் படுவார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎/‎05‎/‎2017 at 11:32 AM, Nathamuni said:

 

நாம என்ன நினைத்தாலும், பேசினாலும், சட்டம் சொல்வது வேறு மாதிரி.

நீங்கள் வெல்லும் என்ன நினைத்திருந்தால், வேறு ஒருவருக்கு கொடுக்கப் போவதில்லை. 

அப்படி கொடுத்தாலும், வென்றால் எனக்கு இத்தனை வீதம் என்று சொல்வீர்கள். 

வாங்குபவரோ, நீயும் உனது சீட்டும்.... நீயே வைத்து வென்று கொள் என்பார்.

எனவே நீங்கள் கொடுக்கும் போதே.... 99.99% இது எங்க வெல்லப் போகுது என்ற மன நிலையுடன்..... முக்கியமாக... கிப்ட் அதாவது பரிசாக தான் கொடுக்கிறீர்கள்.

பரிசுப் பொருள் ஒன்று, கொடுக்கப் பட்ட, பின்னர் உரிமை கொணடாடப் பட முடியாது. 

அவ்வகையில் விழுந்த பரிசுத் தொகை முழுவதுமே, சீட்டு பரிசாக பெறுபவருக்கே சொந்தம்.

இன்னும் விளக்கமாக சொல்வதானால், தாய், தந்தையர், சொத்தை பிள்ளைகளுக்கு எழுதி கொடுக்கும் போது, தாம் உயிருடன் இருக்கும் வரை அங்கே வாழும், சீவன உரித்து சேர்த்துக் கொண்டே எழுதுவார்கள். காரணம், பரிசாக கொடுத்தது, கொடுத்தது தான்.  இல்லாவிடில், எழுதி வாங்கிக் கொண்ட மறு நாளே, அனாதை மடத்தில் விடப் படுவார்கள்.

 

நாதமுனி,அன்பளிப்பாக குடுத்ததிற்கு சாட்சி இல்லாமல் இருக்கலாம் அல்லது உங்களிடம் இருந்து களவெடுத்து இருக்கலாம் தானே:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

நாதமுனி,அன்பளிப்பாக குடுத்ததிற்கு சாட்சி இல்லாமல் இருக்கலாம் அல்லது உங்களிடம் இருந்து களவெடுத்து இருக்கலாம் தானே:mellow:

களவெடுத்து, பரிசினை வாங்க முடியுமா?

முதல் கேள்வியே, எங்கே வாங்கினீர்கள் என்பது தான்.

நீங்கள், தலையை சொறிந்து, ஆ, மறந்து போய் விட்டேன்... அனேகமா பக்கத்து நியூஸ் ஏஜென்ட் என்று சொல்ல, உங்கள் நண்பர் வாங்கியது  பெட்ரோல் ஸ்டேஷன் ஆக இருந்தால்.... ஒரு குண்டு மணியும் கிடையாது.

காப்புப் போட போலீஸ் தான் வரும்.

நீங்கள் சரியாக சொன்னாலும், கடை வீடியோ பதிவுகள் பார்த்தே (பெரும் தொகையாயின்) பணம் தருவார்கள்.

வாங்கியவருக்கு, எங்கே வாங்கினோம் என்பது நினைவில் இருக்கும் என்பதே அவர்களது நிலைப்பாடு.

ரோட்டில் கிடந்து எடுத்த சீட்டுகள் கூட, வென்றால் பணம் கிடைப்பதில்லை.

http://www.mirror.co.uk/news/uk-news/national-lottery-fraudsters-could-face-7256863

  • கருத்துக்கள உறவுகள்

சௌத்கரோ வில் குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கி விடபட்டவர் எப்போதும் அமைதியாகவே இருப்பார் அந்தபக்கம் போனால் அடிக்கடி காணுவதுண்டு ஆளை திடிரென காணவில்லை விசாரிக்க இப்ப குடும்பம் ஒன்றாகிவிட்டுது என்று கேள்வி என்று தகவல் வந்தது பெரும் தொகை லொற்றரியில் விழுந்து அதை பங்கு பிரிக்க பிரிந்த குடும்பம் ஒன்றாகி உள்ளது இப்பவும் மனுஷனுக்கு நிம்மதி இல்லை என்று அழுது அண்ணைய் என்று கடைக்கார பொடியன் காதை கடித்தான் போன வாரம் அதே தோல் ஜாக்கெட் உடன் நிறைவெறியில் அதே கடை வாசலில் காண மனது வெறுத்து போனது நம்மவருக்கு காசு நிர்வகிப்பதில் உள்ள குறைபாடு பெரும் சாபம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாரும் கதைக்கிறது அந்த பவுண் சீட்டைப்பற்றி இல்லைத்தானே? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

பவுண் சீட்டைப்பற்றி  :unsure:

அந்தக் கோதாரிக்கு, தனித்திரி எல்லோ தொடங்கோனும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.