Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் 
[Saturday 2017-05-06 18:00]
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

  

காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச பேசும்போது, "நாட்டுக்கு ஆபத்தான அரசமைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கமாட்டேன்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் அரசு உரிய வேகத்தில் செயற்படவில்லை.

இந்தப் பேரணியை அரசும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதனால் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் அரசு பின்வாங்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஞா.ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=181882&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கும் உறுதிமொழிகளை அவரால் நிறைவேற்ற இன்றுவரை முடிந்ததில்லை. ஆனாலும் அவரைக் காப்பாற்ற ஏதாவது காரணிகள் அவருக்குக் கிடைத்து விடுகிறது. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.5.2017 at 1:50 AM, nochchi said:

மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன்

Bildergebnis für sampanthan magintha

பேசிப்பேசியே இன்னும் மலர்மாலைகள் பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபகாரனும் புலிகளும் விட்டுகொடாமல் 
அகங்காரமாக இருந்ததாலேயே .........

மாண்புமிகு சிறீலங்கா ஜனாதிபதிகளும் 
கவுரவமிக்க இந்திய பிரதமர்களும் .....
தமிழர்களுக்கு விடிவை கொடுக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-7 at 9:50 AM, nochchi said:

"அந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச பேசும்போது, "நாட்டுக்கு ஆபத்தான அரசமைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கமாட்டேன்" என்று கூறியுள்ளார்"

இது ஒன்றும் புதுக்கதையில்லைத்தானே ஐயா...நீங்களே உங்களது வாழ்க்கையில் இப்படி எத்தனையோ கண்டனீங்கள்.

நீங்கள் சொன்னால் அரசியல் சாணக்கியம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஜனாதிபதி ஆக முடியாது. பிரதமருகே அதிகாரம் என்று அரசியல் அமைப்பு மாறாமல் மகிந்த மீண்டும் பதவிக்கு வர முடியாது. 

மகிந்தவை பதவிக்கு வர விடாமல் தடுக்க இந்தியா இருக்கிறது.

நீங்கள் சும்மா பயம் காட்டாமல், சாட்டு சொல்லாமல் இருந்தாலே போதும்.

19 வது திருத்த சட்டம், MP கள் கவனிக்காமல் (படித்து இருந்தால் தானே) கையை தூக்கி விட்டனர். இப்போது பார்த்தால் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பதவிக்கு வரமுடியாது என்ற விதி உள்ளதாம்.

கோதாவுக்கு ஆப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für sampanthan magintha

பேசிப்பேசியே இன்னும் மலர்மாலைகள் பெற வாழ்த்துக்கள்.

அது என்ன சம்சுங் அவர்களுக்கு சரமாரியாக மாலைகள்! எங்களுக்கு ஒன்று இரண்டு தானா!! என்று மாலைகள் செலவுக்குப் பங்களித்த பங்காளிகள் விசனப்பட்டதாகச் செய்திகள் இன்னமும் வரவில்லை.... ??  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.