Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகள் இனி என்ன செய்யும்?

Featured Replies

உலக நாடுகள் இனி என்ன செய்யும்?

இலங்கை அர­சி­ய­லில் கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அப்­பாற்பட்ட மாற்­றங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தான் நினைக்­கும்­போது ஆட்­சி­யைக் கவிழ்க்­கும் பலத்­தைப் பெற்­று­விட்­டேன் என்று முழக்­க­மிட் டுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்து சில ஆண்­டு­களே ஆகி­யி­ருக்­கும் நிலை­யில் மீண்­டெ­ழுந்து வந்து இந்த முழக்­கத்தை அவர் நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார்.

கடந்த மே தினத்­தில் தலை­ந­கர் கொழும்­பின் காலி முகத்­தி­ட­லில் கூடிய தனது ஆத­ர­வா­ளர்­க­ளின் கூட்­டத்­தைப் பார்த்த பின்­னரே மகிந்த இப்­படி ஆர்ப்­ப­ரித்­தி­ருக்­கி­றார். சிங்­கள, பௌத்த மக்­கள் மத்­தி­யில் தான் இன்னமும் செல்­வாக்­கி­ழந்­து­வி­ட­வில்லை என்­பதை நிரூ­பித்­து­விட்­ட­தன் மூலம் தனது ஆத­ர­வா­ளர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் விதத்­தில் மகிந்­த­வின் ஆர்ப்­ப­ரிப்பு நிகழ்ந்­தி­ருக்­கி­றது.

சிங்­கள, பௌத்த சமூ­கத்­தின் மத்­தி­யில் மதிப்­பி­ழந்­து­வி­டாத மகிந்­த­வின் செல்­வாக்கு, பல தரப்­பி­ன­ருக்­கும் ஆச்­ச­ரி­யத்­தை­யும், சிறி­ய­ள­வி­லான எச்­ச­ரிக்­கை­யை­யும் கொடுத்­தி­ருக்­கும் என்­ப­தில் மாற்­றுக் கருத்து இல்லை. குறிப்­பாக மகிந்­தவை இலங்­கை­யின் அதி­கா­ரத்­தில் இருந்து அகற்­று­வ­தற்கு மறை­முக உத­வி­களை வழங்­கிய நாடு­க­ளுக்கு இது ஒரு சங்­க­ட­மான நிலை­தான்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஒரு தடவை குறிப்­பிட்­டி­ருந்தார், இலங்­கை­யில் இனப்­பி­ரச்­சி­னையை இரா­ஜ­தந்­திர முறை­க­ளுக் கூ­டா­ கத் தீர்ப்­ப­தன் மூலம் அதனை ஒரு சாத்­தி­ய­மான முன்­னு­தா­ர­ண­ மா­கக் காட்ட உல­கம் விரும்­பு­கின்­றது என்று. அது உண்­மை­யும்­கூட.

2000ஆம் ஆண்­டி­லி­ருந்தே இலங்­கையைத் தமக்­கான ஒரு பரீட்­சார்த்த கள­மா­கத்­தான் உலக நாடு­கள் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன. அப்­போ­தி­ருந்த புலி­கள், இலங்கை அரசு என்ற இரண்டு தரப்­பு­க­ளை­யும் வைத்து பிரச்­சி­னையை முடி­வுக்­குக் கொண்­டு­வர அவை முயன்­றன. அது முடி­யா­த­போது சம்­பந்­தப்­பட்ட இரு தரப்­பு­க­ளில் ஒன்றை முற்­றாக அகற்­று­வ­தன் மூலம் முடிவை எட்ட முயன்­றன. அதற்­கா­கவே போரை அவை முழு மூச்­சாக ஆத­ரித்­தன. கொழும்பு அர­சுக்­கும் வேண்­டிய உத­வி­கள் அனைத்­தை­யும் வழங்­கின.

இந்­தப் பரி­சோ­தனை முயற்­சி­யில் அந்த நாடு­க­ளால் புலி­களை அழித்து அந்த இயக்­கத்தைக் களத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தில் வெற்றி பெற முடிந்­தது. ஆனால் மறு­த­ரப்­பான மகிந்­த­வைக் கொண்டு பிரச்­சி­னைக்கு முடி­வு­கட்ட முடி­யா­மல் போய்­விட்­டது. இத­னால் மீண்­டும் தமது பரி­சோ­த­னையை அவை முன்­னெ­டுத்­தன. இந்­தத் தட­வை­போ­ரில் தொடர்­பு­பட்­டி­ருந்த இரண்­டா­வது தரப்­பை­யும் களத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தன் மூலம் தீர்வை எட்­டும் முயற்­சி­யாக இருந்­தது.

இரண்­டா­வது தரப்பை அதி­கா­ரத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தி­லும் உலக நாடு­கள் வெற்­றி­ய­டைந்­தன என்­றா­லும் இன்ன மும் இறுதி வெற்­றி­யைப் பெற­வில்லை. பரி­சோ­தனை முயற்சி தொடர்­கி­றது. மைத்­திரி ரணில் கூட்டு அர­சினை அரி­யணை ஏற்­றி­ய­தன் மூல­மா­வது தீர்வை அடைந்து தனது முயற்­சி­யில் வென்­று­வி­டத் துடிக்­கும் உலக நாடு­க­ளுக்கு மகிந்­த­வின் இந்த முழக்­க­மும் எழுச்­சி­யும் நிச்­ச­யம் சவால்­தான். இறு­தித் தீர்வை நோக்­கிப் பய­ணிக்­கும் அவற்­றின் பாதை­யில் உறு­தி­யாக அமர்ந்­தி­ருக்­கும் பாறாங்­கல்­லாக மகிந்த இப்­போது உரு­மா­றி­விட்­டார்.

இனி இந்­தப் பாறாங்­கல்­லைப் பாதை­யில் இருந்து அகற்­று­வ­தில் அல்­லது அத­னைச் சுக்­கு­நூ­றாக்­கச் செய்­வ­தில் அவை தமது சக்­தி­யைச் செல­விட்­டாக வேண்­டும். இந்த நிலை வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தால்­தான் இந்­தக் கூட்டு அர­சைப் பாது­காக்­க­வேண்­டும் என்று அவை ஆரம்­பம் முதலே சொல்­லி­வந்­தன; செய­லி­லும் காட்டி வந்­தன.

அவற்­றை­யெல்­லாம் மீறி மகிந்த மிகக் குறு­கிய காலத்­திற்­குள்­ளேயே எழுச்சி பெற்று மிரட்­டத் தொடங்­கி­யி­ருப்­பது வெறு­மனே உலக நாடு­க­ளின் பல­வீ­னத்­தால் மட்­டு­மல்ல, கூட்டு அர­சின் தோல்­வி­யா­லும்­தான். சொந்த நலன்­க­ளுக்­காக எதி­ரியை வள­ர­விட்டு வேடிக்கை பார்த்­த­தன் விளை­வையே அது இப்­போது அறு­வடை செய்­கி­றது. இந்த நிலை­யில் உலக நாடு­கள் என்ன செய்­யப்­போ­கின்­றன என்­ப­தில்­தான் அடுத்த கட்ட அர­சி­யல் தங்­கி­யி­ருக்­கி­றது.

http://uthayandaily.com/story/1796.html

  • கருத்துக்கள உறவுகள்

11885083_1608128932774904_31040247575870

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் எப்படி கவிழ்க்க முடியும் ?

சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஐதேக யிலும் பார்க்க 11 குறைவு. 

ஐதேக க்கு பெரும்பான்மை பலத்துக்கான 117 பெற 10 குறைவு.

ஜேவிபி, மகிந்தரை ஆதரிக்காது. ததேகூ, முஸ்லீம் கட்சிகளும் அதே நிலைப்பாடுதான்.

தவிர, இவரை மைத்திரி ஒருபோதும் பிரதமராக்க மாட்டார். அது மைத்திரி இருப்புக்கே ஆபத்து. மேலும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆதரவு தராது. 

இவர் தனது குடும்பம் மீதான வழக்குகளில் இருந்து தப்பவும், யுத்தகுற்ற விசாரனைகளை தடுப்பதற்கான அழுத்தங்கள் தரவுமே அரசியலில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் என்பவருக்கு  tna உருவாக்கும் நேரம் அவரின் பைலை புலிகள் நிராகரித்தனர் என்ற ஒரு தகுதி மட்டுமே உண்டு வேறு எதுவும் சொல்லிகொள்கிறது போல் இல்லை .

தமிழர்களிடமிருக்கும் மிகப் பெரிய தவறு மற்றவர்கள் எங்களுக்கு என்ன செய்வார்கள் என எதிபார்ப்பதுதான் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. இக் காலகட்டத்திலாவது தமிழர்கள் அடுத்தகட்ட நகர்வாக என்ன செய்யவேண்டுமென்பதற்கான திட்டங்களை தமிழ் தலைமைகள் தயார்படுத்தவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Suguthar said:

தமிழர்களிடமிருக்கும் மிகப் பெரிய தவறு மற்றவர்கள் எங்களுக்கு என்ன செய்வார்கள் என எதிபார்ப்பதுதான் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. இக் காலகட்டத்திலாவது தமிழர்கள் அடுத்தகட்ட நகர்வாக என்ன செய்யவேண்டுமென்பதற்கான திட்டங்களை தமிழ் தலைமைகள் தயார்படுத்தவேண்டும்.  

அரசாங்கத்துடன் சேர்ந்து செல்லுவோமா என்ன??

அரசாங்கத்துடன் சேர்ந்து செல்லவேண்டுமாக இருந்தால் 1956ம் ஆண்டிலிருந்து 2017 வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Suguthar said:

தமிழர்களிடமிருக்கும் மிகப் பெரிய தவறு மற்றவர்கள் எங்களுக்கு என்ன செய்வார்கள் என எதிபார்ப்பதுதான் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. இக் காலகட்டத்திலாவது தமிழர்கள் அடுத்தகட்ட நகர்வாக என்ன செய்யவேண்டுமென்பதற்கான திட்டங்களை தமிழ் தலைமைகள் தயார்படுத்தவேண்டும்.  

உதாரணத்துக்கு தமிழ்தலை ஒருத்தரின்ரை பெயரை சொல்லுங்கோ பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உதாரணத்துக்கு தமிழ்தலை ஒருத்தரின்ரை பெயரை சொல்லுங்கோ பாப்பம்?

அதானே யாரை சொல்லுறது ??

7 hours ago, Suguthar said:

அரசாங்கத்துடன் சேர்ந்து செல்லவேண்டுமாக இருந்தால் 1956ம் ஆண்டிலிருந்து 2017 வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.

 

இதனால் தாங்கள் பெற்றுக்கொண்டது  ( காத்திருப்பால்)

1956 லே பாஸ் தனி சிங்கள மசோதாவுக்கான சத்தியாக்கிர போராட்ட நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கு   காலி முகத்திடலில் என்ன நடந்தது கொஞ்சம் விரிவா சொல்லுங்கோவன்  சுகுதர் சார் 1956

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.