Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவி நீக்கிவிட்டு ச.தொ.ச. விவகாரத்தை விசாரணை செய்யுங்கள் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் கோரிக்கை

Featured Replies

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி நீக்­கி­விட்டு ச.தொ.ச. விவ­கா­ரத்தை விசா­ரணை செய்­யுங்கள்

 

பொது­பல சேனா உள்­ளிட்ட அமைப்­புக்கள் கோரிக்கை

(க.கம­ல­நாதன்)

அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றால் அதன் பின்­பு­லத்தில் மிகப்­பெ­ரிய அர­சியல் சக்தி உள்­ளது என்­பதே வெளிப்­ப­டை­யா­கின்­றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி விலக்­கி­விட்டு ச.தொ.ச. நிறு­வ­னத்­திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாக­னத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட போதைப்­பொ­ருள் குறித்து விசா­ரணை நடத்­துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் ராஜகிரிய அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து பெருந்­தொகை போதைப்­பொ­ருள் மீட்­கப்­ப­டு­வ­தென்­பது பாரா­தூ­ர­மான விட­ய­மாகும். அதனால் இந்த விட­யத்தை மறைத்­து­வி­டாமல் இதன் பின்­பு­லத்தில் உள்­ள­வர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும். 

இன்று எமது நாடு போதை­ப்பொ­ருளை மற்­றைய நாடு­க­ளுக்கு பகிர்­ந்த­ளிக்­கின்ற ஒரு மத்­தி­யஸ்­தா­ன­மாக மாறி­யுள்­ளது. குறிப்­பாக சிலா­பத்­துறை, மன்னார் ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து கடல்­மார்க்­க­மா­கவே இந்த போதைப் பொருள் நாட்டின் உள்ளே வரு­கின்­றன.

இவ்­வ­ாறான செயற்­பா­டுகள் இடம்­பெறக் கூடும் என்­ப­தா­லேயே வில்­பத்து வனத்தை அழித்து அங்கு குடி­யி­ருப்­புக்­களை அமைக்க அனு­ம­திக்க வேண்டாம் என்று எமது அமைப்­புக்கள் கூறி­யி­ருந்­தன. இன்று பிரச்­சினை பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. இந்த குடி­யி­ருப்­புக்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஆயு­தக்­க­டத்­தல்­களும் கூட இடம்­பெ­றலாம் என்ற சந்­தேகம் எமக்கு உள்­ளது.

மேலும் இது­வ­ரையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட போதை­ப்பொ­ருளுக்கு என்ன ஆனது என் றும் அர­சாங்கம் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.

எவ்­வா­றா­யினும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் உடைய அமைச்சின் கீழ் ச.தொ.ச. நிறு­வனம் இருக்கும் வரையில் இந்த விசா­ர­ணைகள் நியா­ய­மாக இடம்­பெ­றாது. எனவே அவரை உட­ன­டி­யாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதனை விடுத்து பிரேசிலி லிருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்த வேண் டும் என்பது வேடிக்கையாகவுள்ளது. எனவே பிரேசிலிருந்து சீனி இறக்கு மதி செய்வதை தடுக்காமல் போதைப் பொருள் இறக் குமதி செய்யப்படுவதையே தடுக்க வேண் டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-22#page-2

  • கருத்துக்கள உறவுகள்

அயித்தானே...

கத அந்தமாதிரி பேத்திட்டு ஈக்கியா... என்னு சொல்லமாட்டன் வாப்பா.

இன்னிக்கு நேத்து இல்ல, நான் சென்னது. யாழ்ப்பாணம் பொம்மவெளில, லுங்கி பேத்திட்டு, தனியாளா, லோக்கல் யாவாரி கணக்கா மோப்பெற்ல, மத்தவனுக்கு வெளங்காம ஈக்க, கெல்மட் போட்டு, மூஞ்சிய மறேச்சு... போய்....., என்ன இந்தப்பக்கம் என்னு கேட்ட... பேப்பர்காரணுவன்கிட்ட மாட்டினோன்ன... மெக்கள் நிலம எப்பீன்னு பார்க இரவசியமா வந்தேன்னு கத உட்டப்பவே சென்னன், நானா வேற யாபாரம் பண்ணுறாரு என்னு. 

கெளம்புல கவர்மெண்ட் மினிஸ்டர் பாதுகாப்பே இல்லாம, ரகசியமா, தனியாளா, வராதுன்னா என்னா விசயம் என்னு சொல்லி வெளங்கப் படுத்த தேவையில்ல வாப்பா

பொறவு, கல்கமுவ பக்கமா, ஆவ்டி கார்லே சாமனத்தோட இவரோட ஆளுவ ரெண்டு பேர போலீசீல தூக்க... இவரு தான் போன் போட்டு தெப்ப வச்சாரு. இங்கீலீஸ் பேப்பர்ல கத வந்துச்சு தானே வாப்பா.

இப்ப பெரீசா... மாட்டீக்கு...

நல்ல சல்லீ கைல ஈக்குவாப்பா. நாடே அழிப்பாரு.... காடா பெரச்சனை?

கண்ணு படபோவுது. அல்லாட காவல்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அஷ்ரப்பின் வால் இவர். கிழக்கி அஷ்ரப்பின் வால்.. ஹிஸ்புல்லா. இருவரும்.... இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதத்தின் பயங்கரவாதச் சிந்தனையில் இருந்து செயற்பட்டு முஸ்லீம் மக்களை துருவமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

வடக்கில் அஷ்ரப்பின் வால் இவர். கிழக்கி அஷ்ரப்பின் வால்.. ஹிஸ்புல்லா. இருவரும்.... இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதத்தின் பயங்கரவாதச் சிந்தனையில் இருந்து செயற்பட்டு முஸ்லீம் மக்களை துருவமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். :rolleyes:

சவூதி இளவரசர் காத்தான்குடிக்கு விஜயம்

image_6ae5fbf637.jpg

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்,  காத்தான்குடிக்கு நாளை (23) விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகருக்கு வருகை தரும் சவூதி இளவரசர் தலைமையிலான தூதுக் குழுவினர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட அரச உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொண்டு இருதரப்பு மற்றும் முதலீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

சவூதி இளவரசர் காத்தான்குடிக்கு விஜயம்

மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்

உலகை  ஆளுதலுக்கு இன்னொரு இடம்தயாராகி  வருவதற்கு  

அடுத்த என்ன என்னவெல்லாம் செய்யலாம்  உதவலாம் என்ற சிந்தனை  மட்டுமே  ஓடியிருக்கும்

இந்த மண்ணின் மைந்தர்கள் பற்றி

இந்த மண்ணில் நடந்த அவலங்கள் பற்றி.....

மூச்சு........??

1 hour ago, விசுகு said:

மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்

உலகை  ஆளுதலுக்கு இன்னொரு இடம்தயாராகி  வருவதற்கு  

அடுத்த என்ன என்னவெல்லாம் செய்யலாம்  உதவலாம் என்ற சிந்தனை  மட்டுமே  ஓடியிருக்கும்

இந்த மண்ணின் மைந்தர்கள் பற்றி

இந்த மண்ணில் நடந்த அவலங்கள் பற்றி.....

மூச்சு........??

இனி அதெல்லாம் நடக்காது அதை இளையோர் முல்லைத்தீவு விவகாரத்தில் காட்டி விட்டனர்.

முஸ்லிம்கள் அரசியல் என்பது கம்பியில் நடப்பது போன்றது முலம் சாறுக்கினாலும் பாதாளம் தான்.

இனி சட்ட நடவடிக்கை மூலம் நிலங்களை கைபற்ற வேண்டும்.

உதாரணமாக வடக்கில் இவர்கள் பிடித்த நிலங்கள் அனைத்தும் சட்டத்துக்கு புரம்பானவை, அதற்கு சட்ட வல்லுனர்களை அமர்த்தி அதற்கு புலம் பெயர் அமைப்புக்கள் உதவலாமே !!!

 

 

2 hours ago, nedukkalapoovan said:

வடக்கில் அஷ்ரப்பின் வால் இவர். கிழக்கி அஷ்ரப்பின் வால்.. ஹிஸ்புல்லா. இருவரும்.... இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதத்தின் பயங்கரவாதச் சிந்தனையில் இருந்து செயற்பட்டு முஸ்லீம் மக்களை துருவமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். :rolleyes:

அஷ்ரப் அளவுக்கு இவருக்கு தீர்க்கதரிசனம் இல்லை, அஷ்ரப் அமைதியாக சத்தம் இல்லாமல் தமிழர் நிலத்தையும் பொருளாதாரத்தையும் அபரித்தார். 

ஆனால் இவருக்கு அந்த சம்யோசிதம் இல்லை, அடாவடியாக நடந்து எல்லவற்றையும் காட்டி கொடுத்து உறக்கத்தில் இருந்த்த தமிழனை தட்டி எழுப்பியது தான் மிச்சம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.