Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்?

Featured Replies

அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்? பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை

ஜ புதன்கிழமைஇ 28 பெப்ரவரி 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

அதி உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்திருப்பதும் ஜனாதிபதியின் வாசஸ்தலமாகப் பேணப்பட்டு வருவதுமான அலரி மாளிகைக்கு அண்மையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றைக் கடந்த வாரம் விலைக்கு வாங்கியுள்ளவர்கள் கருணா குழுவினர் எனவும் இவ்வாறான நிலைமை அலரி மாளிகையின் பாதுகாப்புக்குக் குந்தகமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து இது பற்றி சிங்கள பாதுகாப்புத் துறையினர் பரந்த அளவிலான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அலரி மாளிகைக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவமுள்ள பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றையே மேற்படி சர்ச்சைக்குரிய நபர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் பற்றி ஞாயிறு லங்காதீபவுக்குத் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப, இவ்வாறு அலரி மாளிகைக்கு வெகுதூரமில்லாத பகுதியில் 100 பேர்ச் நிலப்பரப்புக்கு மேற்பட்ட விஸ்தீரணத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை கருணா குழுவினர் கடந்த வாரம் விலைக்கு வாங்கிவிட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விமர்சகர்கள் தெரிவிக்கையில்; மேற்படி கட்டிடம் தலைநகரின் பாதுகாப்பு என்ற முறையில் பார்க்கும் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரகசிய நிலையமாகக் கருதப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த கட்டிடம் எந்த அளவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி பாதுகாப்பு விமர்சகர்கள் குறிப்பிடுகையில்; தற்போது பாவனையிலிருக்கும் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட "எலெக்ரோனிக் ஈவ்ஸ் ட்றொப்பின்" எனப்படும் தொலை அவதானிப்பு உபகரணம் ஒன்றை மேற்படி கட்டிடத்திலிருந்து ஏற்ற முறையில் செயற்படுத்தப்படுமானால் அதன் மூலம் குறித்த கட்டிடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள அலரி மாளிகையில் நடத்தப்படும் பாதுகாப்பு சபைக் கூட்ட நிகழ்வுகள், அமைச்சரவைக் கூட்ட நிகழ்வுகள் போன்ற இரகசிய பேச்சுவார்த்தைகளின்போது பேசப்படும் விவகாரங்களை இரகசியமாகவும் தெளிவாகவும் ஒட்டுக் கேட்க முடியுமெனவும் எடுத்துக் காட்டியுள்ளனர். இவை தவிர மேற்படி கட்டடத்திலிருந்து அலரி மாளிகை அமைந்திருக்கும் பகுதியில் எந்தவொரு நிலையத்தை நோக்கியும் இலக்கு எடுக்க முடியுமெனவும் குறித்த பாதுகாப்பு விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மேற்படி சர்ச்சைக்குரியவர்களாகக் கருதப்படும் குழுவினர் அந்தக் கட்டிடத்தை கொள்வனவு செய்துள்ளது சம்பந்தமாக மேலும் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப அவர்கள் அதனை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ரூபா 100 மில்லியன் பணத்தொகை கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டு குறித்த கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

கிழக்கில் மக்கள் ஒரு நேர கஞ்சிக்கு வசதியில்லாத நிலையில் கொழும்பில் கருணா குழுவால் வாங்கபட்ட 4வது வீடு இதுவாகம

நிதர்சனம்

100 பேர்ச்ஸ் கொள்ளுப்பிட்டியில் எண்டால் ஒன்று 30 லட்சம் படி 30 கோடி காணிக்கு கருணா கொழும்பில செயத வெள்ளைவான் பிஸினஸ் ஓகோ என போகுது போல

தாங்களே கட்டடத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போது தாங்களே கட்டடம் எப்படி கிடைத்தது என்று கேட்டு விசாரணையும் செய்யுறாங்களாம்! :huh::huh::huh::lol:

அவன் எங்க வாங்கிறது. தானே இருக்கிறது நிச்சயம் இல்லை என்று அவனுக்கு தெரியும். அவனுக்கு கொழும்பு எந்த பக்கம் எண்டு தெரியாது.

நோர்வேக்கு வரேக்க தமிழ்ச்சனம் அவனுக்கு கோட் சூட் எல்லாம் வாங்கிஅன்பளிப்பு கொடுத்தவை. மோதிரமும் போட்டவை இப்ப அதுகலை போட்டு கொண்டு எந்த ஆமிக்காம்புக்குள்ள இருக்கிறாரோ

தாங்களே கட்டடத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போது தாங்களே கட்டடம் எப்படி கிடைத்தது என்று கேட்டு விசாரணையும் செய்யுறாங்களாம்! :blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

அப்ப அலரிமாளிகைக்குள்ளை போறதுக்கு இன்னும் கனக்க தூரமில்லை எண்டு சொல்றியள்.

கிட்ட வந்திட்டம் அது தான் எங்களுக்கு முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடசியா கருணா தான் அலரிமாளிகைக்குள்ள குண்டு போடப்போறானோ தெரியா. கருணா விடயத்தில் எனக்கு இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. அரசாங்கத்தை நம்ப வச்சு கழுத்தறுக்கிற திட்டாமகவும் இந்த "கருணா" நடவடிக்கை இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் கருணா தேசத்துரோகியாக தான் வாழ்ந்து இறக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பைக் காட்டிலும் யாழப்பாணம் கொழும்புக்குத் தூரத்தில இருக்குது. ஆனா வெளி நாட்டுக்கு வாறதுக்காக அல்லது படலையைக் கடக்க முதல் முதல் செருப்புப் போட்டவை எங்கிலும் கனபேர் இருக்கினம். உந்தக் கிணத்துத்தவளையளாலதான் பிரதேசவாதம் மிச்சம் அதிகமாகினது பாருங்கோ. தலைவரைப்போல சிறந்த குணநலன்களோட எல்லாரும் இருக்கேலாதுதான். ஆனால் தேசியத்திர நலன் கருதி எல்லாரையும் அணைச்சுக்கொண்டு போகக்கூடிய திறமை உந்த கிணத்துத் தவளையளுக்கு இல்லாமப் போனதுதான் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

கடசியா கருணா தான் அலரிமாளிகைக்குள்ள குண்டு போடப்போறானோ தெரியா. கருணா விடயத்தில் எனக்கு இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. அரசாங்கத்தை நம்ப வச்சு கழுத்தறுக்கிற திட்டாமகவும் இந்த "கருணா" நடவடிக்கை இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் கருணா தேசத்துரோகியாக தான் வாழ்ந்து இறக்க வேண்டும்

அப்ப அலரிமாளிகைக்குள்ளை போறதுக்கு இன்னும் கனக்க தூரமில்லை எண்டு சொல்றியள்.

கிட்ட வந்திட்டம் அது தான் எங்களுக்கு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட இருந்தே குழி பறிப்பான் கருணா

"கிழக்கின் விடிவெள்ளியின்"(?), கொழும்பு சொகுசு பங்களாக்களால் பீதியில் சிங்கள அரசு!

tmvpcf7.png

கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் பணத்திற்காக ஆட்கடத்தல்கள், வாகனக் கொள்ளைகள், பட்டப்பகலிலேயே வீடுகளில் வாகனங்களில் சென்று கொள்ளை அடித்தல் என்று தொடரும் "கிழக்கு விடிவெள்ளியின்(?)" போராட்டம், கொழும்பில் தமிழ் வர்த்தகர்களையும், வெளிநாடுகளிலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்களையும் கடத்தி கப்பம் பெறும் பாரிய போராட்டம் வரை விரிவடைந்து இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் ஆதரவுடன் நடந்து வரும் இவ்வேளையில், கொழும்பில் "கிழக்கின் விடிவெள்ளியின்(?)" சொகுசு வாழ்வுக்கு பாரிய பங்களாக்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது. இந்த ஒட்டுக்குழுக்களின் செயற்பாடு "வேலியில் நின்ற ஓணானை, மடியில் தூக்கிப் போட்ட கதையாக" இலங்கை அரசை பீதி கொள்ளச் செய்திருக்கிறது. ....

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

கருணா குழுவில் உண்மையில் சிறீலங்காவிற்கு சந்தேகம் இருக்கும் என்றால் அது பற்றி ஊடகங்களில் எழுதி பரகசியமாக்கி எந்தப் பயனும் சிறீலங்காவிற்கு கிடைக்கப் போவதில்லை. உண்மையான சந்தேகத்தை இரகசியமாகத்தான் விசாரிப்பார்கள் அதன் அடிப்படையில் ஏற்ற தற்பாதுகப்பு முன்னகர்வுகளை அமுல்படுத்துவார்கள்.

இந்த விடையத்திற்கு ஏதாவது உண்மைத் தன்மை இருந்தால் அதை investigative journalism மூலம் கண்டு பிடித்து வெளியுலகிற்கு ஒரு தமிழ் ஊடகம் கொண்டு வந்திருந்தால் சிறீலங்காவிற்கு பாதகமாக இருப்பதற்கான பின்னணியைக் கொண்டிருக்கும். அல்லது தமிழர் தரப்பு உளவியல் யுத்தத்தில் இப்படி ஒரு புரளியை தாமாக கிளப்பியிருந்தால் அதுவும் முதல் முதலில் தமிழர் சார்பு அல்லது ஆதரவு ஊடகம் ஒன்றினால் தான் வெளிவந்திருக்கும்.

இந்த விடையம் முதலில் வெளிவந்ததும் தொடர்ந்து அதை செய்தியாக தவழ விடுவதில் முனைப்பு காட்டுவதும் சிறீலங்கா தரப்பு ஊடகங்கள் தான். இதை விளங்காது நாம் ஏன் தூக்கிப் பிடிக்கிறோம்? அவர்கள் திட்டத்திற்கு பலம் சேர்க்கிறோம்?

கருணா குழு என்ற முகமூடியை வைத்து சிறீலங்கா தீட்டும் ஆபத்தான் திட்டங்கள் குறைத்து மதிப்பிடவும் அது பற்றி நாம் எந்த கவனமும் கொள்ளாது இருக்கவும் அதை ஒரு அதிர்ச்சியாக தமிழர் தரப்பிற்கு தரவும் தான் சிறீலங்கா தானே வலிந்து கருணா குழுவிற்கும் தனக்கும் விரிசல்கள் என்று பிரச்சாரப்படுத்த முனைகிறதா?

tmvpcf7.png

படத்தில் சிவப்பாகத் தொங்குவது என்ன? கருநாய் கட்டும் சாரம் தோய்த்து காயவிடப்பட்டுள்ளதா அல்லது இது பத்துமினி கட்டும் உள்பாவாடையா? :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.