Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டமாகச் சப்பாத்தி சுடாததால்,  கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சப்பாத்தி

வட்டமாகச் சப்பாத்தி சுடாததால்,  கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்!

வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

வட்டமாக வராத சப்பாத்தி:  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு சப்பாத்தி வட்டமாக வராதாம்.

தகராறு செய்த கணவன்: இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவும் சப்பாத்தி வட்டமாக இல்லை என சிம்ரனிடம் அவரது கணவர் சண்டை போட்டுள்ளார்.

காப்பாற்ற முயன்ற மகள்:  மேலும் கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் வயிற்றிலேயே எட்டி உதைத்துள்ளார். இதில் வலி பொறுக்க முடியாமல் கதறிய சிம்ரனை, அவரது நான்கு வயது மகள் காப்பாற்ற முயன்றுள்ளார்.

வெறிதீர அடித்த கணவன்:  அப்போது மகளையும் அடித்துத் துன்புறுத்திய சிம்ரனின் கணவர் அவரை இழுத்துச்சென்று தனியறையில் பூட்டியுள்ளார். பின்னர் மீண்டும் வந்து சிம்ரனை வெறித்தீர அடித்த அவர் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சகோதரர்:  இதையடுத்து வீட்டிலிருந்து அவர் தப்பியோடிவிட்டார். காலை 4 மணியளவில் சிம்ரனின் சகோதரர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தை தனியறையில் பூட்டப்பட்டிருப்பதையும் தங்கை மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்ட அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஏற்கனவே இறந்துவிட்டார்:  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிம்ரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிம்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அப்பாதான் அடித்துக் கொன்றார்:  காப்பாற்றப்பட்ட குழந்தையிடம் விசாரித்ததில் தனது தந்தைதான் தாயை அடித்துக் கொன்றதாக குழந்தை வாக்குமூலம் அளித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான சிம்ரனின் கணவரை தேடி வருகின்றனர்.

வேலைக்குப் போகச்சொன்ன ஆத்திரம்:  தொழில் நஷ்டம் அடைந்ததால், தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும்படி கடந்த 2 ஆண்டுகளாக சிம்ரன் தனது கணவரை வற்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கோபத்தை மனதில் வைத்தே சிம்ரனை அவர் கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

தற்ஸ்  தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனையெல்லாம் சாகும்வரை தலைகீழாக கட்டித்தொங்கவிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இவனையெல்லாம் சாகும்வரை தலைகீழாக கட்டித்தொங்கவிடவேண்டும்.

இப்படியென்றால் எங்க பாட்டன்  ஒப்பாட்டான் எல்லோரையும் ஆயுள் பூராகவும்  தான் கட்டி வைத்திருந்திருக்கவேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விசுகு said:

இப்படியென்றால் எங்க பாட்டன்  ஒப்பாட்டான் எல்லோரையும் ஆயுள் பூராகவும்  தான் கட்டி வைத்திருந்திருக்கவேணும்

அடி உதைகள் இருந்தாலும் ......கர்ப்பிணி  வயித்தில் உதைப்பது என்பது???????:(

Edited by குமாரசாமி
கர்ப்பிணி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அடி உதைகள் இருந்தாலும் ......கர்ப்பிணி  வயித்தில் உதைப்பது என்பது???????:(

உண்மைதான்

முன்னேறாத  கிராமங்கள்  இன்றும்.....????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ விரும்பாமலோ எவ்வளவு விஷயங்களுக்கு உன்னுடன் ஒத்துப்போன மனைவியை இப்படியா செய்வாய் நாசமாய்ப்போனவனே ....

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2017 at 10:30 AM, குமாரசாமி said:

அடி உதைகள் இருந்தாலும் ......கர்ப்பிணி  வயித்தில் உதைப்பது என்பது???????:(

மனிதன் தவிர வேறு எந்த உயிரினமும்.. தன் எதிர்ப்பாலை துன்புறுத்துவதில்லை.  ஆனால் மனிதனுக்கு ஆறறிவு என்று சொல்லிக்கிறாங்க. அந்த ஆறாம் அறிவு சிலருக்கு இப்படி வக்கிரமாக அமைந்து விடுகுதோ என்னவோ..?! இந்தப் பூமியில் மனிதன் தான் மிகக் கொடிய மிருகமாக மாறி இருக்கான். 

பாவம் அந்த அப்பாவி. இவனுக்கெல்லாம்.. வெட்டி வீசிற பொண்ணுங்க வாய்க்கனும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.