Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது

Featured Replies

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு  : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது

 

 

(ஆர்.யசி)

அம்பாந்தோட்டை மாகம்புர  துறைமுகத்தின்  15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு  குத்தகைக்கு வழங்கும்  இருநாட்டு  துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. 

china-srilanka.jpg

அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. 

இன்று காலை  10. 43 மணிக்கு  இலங்கையின் துறைமுக அதிகார சபையின்  தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர்  துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 

தென் இலங்கையின் பிரதானமான துறைமுகமான ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2011  ஆண்டில் இருந்து அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்க சீன அரசாங்கத்திடம் 193 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  இலங்கை அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடன் நெருக்கடிகள் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  99 ஆண்டுகால குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் இதில்  85 வீத பங்கு உரிமை சீனாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் என்ற உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள புதிய  உடன்படிக்கையின் பிரகாரம் 70 வீத இலாபம் சீனாவிற்கும் 30 வீத இலாபம் இலங்கைக்கும் என  உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22485

அம்பாந்தோட்டை மாகம்புர  துறைமுகத்தின்  15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு  குத்தகைக்கு வழங்கும்  இருநாட்டு  துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. 

அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. 

இன்று காலை  10. 43 மணிக்கு  இலங்கையின் துறைமுக அதிகார சபையின்  தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர்  துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 

தென் இலங்கையின் பிரதானமான துறைமுகமான ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2011  ஆண்டில் இருந்து அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்க சீன அரசாங்கத்திடம் 193 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  இலங்கை அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடன் நெருக்கடிகள் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  99 ஆண்டுகால குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் இதில்  85 வீத பங்கு உரிமை சீனாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் என்ற உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள புதிய  உடன்படிக்கையின் பிரகாரம் 70 வீத இலாபம் சீனாவிற்கும் 30 வீத இலாபம் இலங்கைக்கும் என  உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/22485

தமிழனிடம் இருந்து நாட்டை மீட்கிறோம் என்று தமிழரின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கு மீது போர் தொடுத்து சிங்கள தேசத்தின் இதய பூமியான ஹம்பாதோட்டையை பறிகொடுத்தான்   மோட்டு சிங்களவன்.

 

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

இன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ

mahintha-2.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

இன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தன அபகீர்த்தியான இந்திய இலங்கை உடன்படிக்கையை ஜூலை 29ம் திகதி கைச்சாத்திட்டதாகவும் அதேவிதமாக அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்கவும் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்காலையில் வைத்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பல தலைமுறைகள் கனவு கண்டதாகவும் அதிஸ்டவசமாக தமக்கு அந்தக் கனவை மெய்ப்படச் செய்ய முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய முகாமைத்துவத்தின் அடிப்படையில் லாபமீட்டக்கூடிய ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், நாட்டின் முக்கிய சொத்துக்களை நட்டமடையச் செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வழிமுறை ஒன்றை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/34728

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்று சொல்லிய சிங்கள இனவாதம் இன்று எந்த முகத்தை வைத்து உடன்படிக்கை செய்துள்ளது என்று தெரியவில்லை ?

ராஜபக்சாவின் அரசு தான் சைனாவுக்கு சார்பாக உள்ளது அதனாலே அகற்றபட்டது என்று நம்ம கனவு எழுத்தாளர்கள் இப்ப என்ன மாதிரி எழுதபோகினம் என்று வெகு ஆவலாக உள்ளன் .

தமிழரின் பூமியை ஆக்கிரமித்து இருக்கும் சிங்களவர்கள் இதை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுக்கும் உரிமையில்லை. இந்த சட்டவிரோத ஒப்பந்தம் செல்லாது.

5 hours ago, பெருமாள் said:

தமிழனுக்கு ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்று சொல்லிய சிங்கள இனவாதம் இன்று எந்த முகத்தை வைத்து உடன்படிக்கை செய்துள்ளது என்று தெரியவில்லை ?

ராஜபக்சாவின் அரசு தான் சைனாவுக்கு சார்பாக உள்ளது அதனாலே அகற்றபட்டது என்று நம்ம கனவு எழுத்தாளர்கள் இப்ப என்ன மாதிரி எழுதபோகினம் என்று வெகு ஆவலாக உள்ளன் .

இலங்கை அரசுக்கும் வேறு வழியில்லை, கிட்டதட்ட $64 பில்லியன் கடன், சீனாவின் வட்டி வீதம் கூட மிக அதிகம். 6%.  இதில் சீனாவின் மொத்த கடன் $8 பில்லியன். அப்படி பார்த்தால் வட்டி மட்டும் வருடம் $ 480 மில்லியன். இதை அவர்களிடம் கொடுத்தாவது கடனை குறைக்க முயலீனம்.

இனி எங்கட பத்தி எழுத்தாளர் எழுதுவீனம், புலிகளின் சொத்துக்களை இலங்கை அரசு கைபற்ற முயற்சி என்று !!!!!!!

இதில 2 பிரச்சனை உள்ளது 

1.புலிகள் பயங்கரவாதிகள் என்றால் எங்கு அந்த சொது உள்ளதோ அந்த நாட்டுக்கு தான் சொந்தம்

2.அதை விட எங்கட புலம்பெயர் புண்ணிய வான்களை தாண்டி அதில் கைவக்க முடியுமா என்ன ?

சொத்து முடக்கம் நீக்கபட்ட நிலையில் அதை கைபற்ற என்ன என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ ????????

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.