Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கதான் அதாவது என்னைப்போன்ற ஒவ்வொருவரும் எங்களை கொஞ்சம் தயார் படுத்தவேணும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.இந்த தலைப்பில் எந்த சந்தேகமுமில்லை இந்த உண்மையை பல வருடங்களின் முன்பே அமெரிக்கா அறிந்திருந்ததினால் தான் ஸ்ரீலங்காவுக்கு உதவ முண்டியடித்துக் கொண்டிருக்கிறது

இருந்தாலும் இன்று அமெரிக்கா இந்த கருத்தை சொல்வதில் தான் சந்தேகம் அதிகரிக்கிறது. உலகத்திலே ஏதாவது ஒரு நாடோ அல்லது விடுதலை அமைப்புகளோ சற்று பலம் பெற்றுவிட்டால் அங்கே தான் அமெரிக்காவின் பிரசன்னம் ஆரம்பிக்கிறது.

இன்று எமது பிரச்சினையில் அமெரிக்கா தனது வேஷத்தை மாற்றி நடிக்க முயற்சிக்கிறமாதிரி தோன்றுகிறது.

அதாவது ஸ்ரீலங்காவை கண்டிக்கிறமாதிரியும் தான் ஒரு நடுநிலை வாதியென்று காட்டிக்கொள்ள எத்தனிக்கிறது. இதை நிஷப்படுத்துகிறமாதிரி பிரிட்டிஷ்காரனின் நடவடிக்கையும் ஒத்துப்போகிறது. இவங்க இரண்டு பேரின் கடந்த கால நடவடிக்கைகளை சற்று நோக்கினீங்க என்றால் உண்மை புரியும்.

அதாவது இந்த இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முரண்பட்டதே கிடையாது. இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்று மட்டும் புரிகிறது என்னவென்றால் நாங்க ஏதோ அமைதியாக இருந்து சாதிக்க நினைப்பதை இவங்க முறியடிக்க திட்டம் போடுறாங்க. எத்தனையோ வழியிலை சொறிந்து எங்களை வம்புக்கு இழுத்தாங்க நாங்க மசியல்ல அதாவது அமைதி முயற்சியிலை இருந்து பின்வாங்கவில்லை. இப்போ இறங்கி வாறமாதிரி வந்து வம்பிலை மாட்டப்போகிறாங்க அது தான் உண்மை. இதைப்போல எத்தனை பேரை எங்க தலைவர் சந்தித்தவர். இருந்தாலும் நாங்கதான் அதாவது என்னைப்போன்ற ஒவ்வொருவரும் எங்களை கொஞ்சம் தயார் படுத்தவேணும். அதிதீவிரமாக சிந்தித்து தலைவரின் பின்னால் திரண்டோமானால் எத்தனை அமெரிக்கா வந்தாலும் எங்க தேசிய விடுலைப்போராட்டத்தை யாராலும் சிதைக்க முடியாது என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்மைதான் வல்வைமைந்தா இதோபாரும்இவரின் கருத்தை

இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்க தூதுவர்

ஜவெள்ளிக்கிழமைஇ 2 மார்ச் 2007இ 05:00 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாடானது கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தாக்குதலின் மூலம் மாற்றமடையப் போதில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றோபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய பின்னர் இரு நாட்களில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வர்த்தக நிர்வாக முதுமாணிப் பிரிவினரின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

"தாக்குதலின் பின்னர் கெல உறுமயவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்கத் தூதுவர் இத்தாக்குதலின் மூலம் பாடம் கற்க வேண்டும் எனவும்இ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ஒரே வழி இராணுவத்தீர்வு தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது ஒரு வழியல்லஇ இராணுவத் தீர்வு இதற்கு வழியாகாது. இரு தரப்புக்களும் ஒன்றாக இணைந்து அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும் அரசு அதன் அதிகாரங்களை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமாக பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தர வேண்டும்.

அமைதியை ஏற்படுத்த வேண்டிய அதிகாரம் சிறிலங்காவிடம் உண்டு எனவே அவர்கள் பாரம்பரிய எல்லைக்கோடுகளைத் தாண்டி அதை அடைய வேண்டும். அமைதி முயற்சிகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசிற்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை அடைவதற்கு இரு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் தேவை என்பதை சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும் அரசு உணர வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்க வேண்டும்" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=30947

இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்க தூதுவர்

அமைதியை ஏற்படுத்த வேண்டிய அதிகாரம் சிறிலங்காவிடம் உண்டு எனவே அவர்கள் பாரம்பரிய எல்லைக்கோடுகளைத் தாண்டி அதை அடைய வேண்டும். அமைதி முயற்சிகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசிற்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை அடைவதற்கு இரு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் தேவை என்பதை சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும் அரசு உணர வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்க வேண்டும்" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=30947

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்க விரும்பும் எந்தச் சிங்களத் தலைமையும்

அதற்கு இடமளிக்கப் போவதில்லை. இதுவரையில் ஸ்ரீ லங்கா அரசிற்குக் கொடுக்

கப்பட்ட எந்த அழுத்தத்திற்கும் அது பணியவில்லை. செயற்பாடற்ற கோரிக்கை

களினாலும் வேண்டுதல்களாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

அமெரிக்கா சிறீ லங்காப் பிரச்சனையைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளனாக இல்லை, நேரடியாகவும் மறைமுகமாக பல வேலைத்திட்டங்களில் சிறீ லங்கா அரசுடன் பணியாற்றி வருகின்றது. தாம் செய்யும், செய்யப்போகும் திட்டங்களுக்கு நியாயம் கற்பிக்க இவ்வாறு மாதத்திற்கு மாதம் அறிக்கைகளை விட வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது! ஆனால் நாம் வெறும் அறிக்கைகளை வாசித்துவிட்டு குழம்புவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. நாம் விரும்பியோ, விரும்பாமலோ தான் நினைத்ததை அமெரிக்கா இப்போது செய்கிறது! எதிர்காலத்திலும் செய்யும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன் அவர்களே,

சிந்திக்க வேண்டிய நேரத்தோடு நாம் செயலாற்ற வேண்டிய கடமையையும் உணர்த்துகின்றீர்கள்.

'ஆண்டவன் சந்நிதியில் இருந்து சொன்ன மாதிரி 'அமெரிக்கா ஸ்ரீலங்காவிற்கு உதவிக் கொண்டுதானிருக்கின்றது. திலீபன் அண்ணா சொன்னது போல் 'ஒரு குட்டி வியட்னாம்' அமெரிக்கனை எதிர்த்து வெல்லவில்லையா? ஆக நாம் ஒன்றாக ஒரே குடையில் கீழ் நின்றாக வேண்டியதைத்தான் எப்போதும் எங்கள் அண்ணா வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றார். எங்கள் பலம் எங்களின்ஒற்றுமையே என்பதை நாம் நிச்சயம் சர்வதேசத்திற்கு உணர்த்தியாக வேண்டும் அந்தக்காலமும் நேரமும் கிட்டிவிட்டது என்பது நிதர்சனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ பாருங்கள் அமெரிக்காவின் நிலையை http://www.dinamalar.com/

அதிதீவிரமாக சிந்தித்து தலைவரின் பின்னால் திரண்டோமானால் எத்தனை அமெரிக்கா வந்தாலும் எங்க தேசிய விடுலைப்போராட்டத்தை யாராலும் சிதைக்க முடியாது என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"

"நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"

வால் என்று ஒன்று இருந்தா ஆடத்தனே செய்யும், அமரிக்காவும் தாங்க இருக்கினம் என்று அடிக்கடி அறிக்கை விட்டு காட்டினம்

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காலை விட்டு எடுக்க முடியாமல் முழிபிதுங்கிக் கிடக்க வாலை ஈரானில் ஆட்ட எத்தனிக்கின்றது. நன்றாகத் தெரியும் வாலில் தீமூட்டப்படுமென்று. இப்படி இருக்க நாளை ஈழத்தின் போர் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கும் என அச்சொட்டாக அறிந்து வைத்துள்ள அமெரிக்கன் இங்கே ஆக்கிரமிப்பின் உதவிக்கு எதை நுழைக்க காலையா? வாலைய? ஆகவே இப்போதே பேரினத்திற்கு எச்சரிக்கை விடுகின்றது. நான் உனக்கு உதவிக்கு வரமாட்டேன் நீ பேசாமல் உன் பிரச்சனையை மேஜையில் பேசித் தீர் . இராணுவத் தீர்வுக்குப் போய் அடிவாங்காதே என்று. :lol:

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நாட்டுப்பிரச்சனையில் அமெரிக்கா இப்படி அறிக்கைகள் மாத்திரமே விட முடியும். அல்லது மறைமுகமாக ஆயுத உதவிகள் வழங்கலாம். ஆனால் நேரடியாக இவர்களால் எமது பிரச்சனைக்குள் வர முடியாது. இது அவர்களே அவர்களின் அளிவைத்தேடும் வழி.

அமெரிக்கா இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக தலையிடுவதாக இருந்தால் அதனை இந்தியா ஒரு பொழுதும் அனுமதிக்காது. ஈழத்தமிழர்கள் மீது உள்ள அன்பினால் அல்ல, அவர்களின் வல்லரசு என்ற பெயருக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயம். அமெரிக்கத்தூதுவர் காயப்படாமல் இறந்திருந்தாலும் அமெரிக்காவால் ஈழத்தில் கால் வைக்கு முடியாது. ஏற்கனவே இவர்கள் ஆசிய கண்டத்தில் நிறையா நாடுகளின் எதிர்ப்பை சந்தித்துவிட்டனர். இன்றும் இவர்கள் வடகொரியாவிற்கு பயப்பிடுகிறார்கள். ஆப்கானிகள் பழி தீர்பத்தற்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள

அனைத்து EU நாட்டிலும் தழிர்கள் வாழ்கிறார்கள். எனவே நாடுகளிற்கு எதிர்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

எப்படியான எதிர்ப்பு....

இவ்வளவுகாலமும் செய்வதுபோலவா..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியான எதிர்ப்பு....

இவ்வளவுகாலமும் செய்வதுபோலவா..... :lol:

செய்யததாலா தலைவரே நன்றி சென்னவர்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி சொல்லமுடியாது ஏன்னென்றாள் அமெரிக்கனுக்கு இலங்கைமீது நீன்டகால ஒரு ஆசை அதாவது திருகோணமலை துறைமுகம்யார்வசம்இருக்கின்

....அமெரிக்கா எமது விடயத்தில் நேரடியாக தலையிட்டால் அது அடுத்த உலகப்போராகத் தான் உருவெடுக்கும்.

வைத்தியர் வடிவேலு அவர்களால் அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை உதாசீனம் செய்யாது, அமெரிக்கா பொறுப்புடன் செயற்பட்டு 3ஆம் உலகப்போரை தடுக்க முன்வரவேண்டும்!

அட உலகப் போராவது மண்ணாங்கட்டியாவது. வல்லரசுகள் குத்து வெட்டில்லாமல் தமது பங்குகளை பிரித்துக் கொண்டு விடும். இந்தப் பிலாக் கொட்டைக்கு உலகம் அடித்துக் கொள்ளும் என்பது வேடிக்கையான கதை. கிழக்கின் வடக்குப் பக்கம் எனக்கு கிழக்குப் பக்கம் உனக்கு மேற்குப்பக்கம் அவனுக்கு. இந்த வல்லரசுக்களுக்குத் தேவையெல்லாம் எந்த நாட்டையாவது தமது பொருளாதார மேன்மைக்காக சுரண்டிக் கொண்டிருப்பதே. வெட்டுக் குத்துப் பட்ட சீனனும் அமெரிக்கனும் இன்று பொருளாதார ஒப்பந்தங்கள் செய்யவில்லையா கைகுலுக்கிக் கொள்ளவில்லையா? தனது மக்களை அடித்து விரட்டி ஆக்கிரமித்த சீனனுடன் இன்று இந்தியா எதற்காக கைகுலுக்குகின்றது?

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து EU நாட்டிலும் தழிர்கள் வாழ்கிறார்கள். எனவே நாடுகளிற்கு எதிர்ப்புக்கள் அதிகமாக இருக்கும். ..

கனடாவில் லட்சக்கணக்கான லெபானியர் உள்ளனர்(கடந்த வருடம் இசுரேல் தாக்கிய்போது லெபனானில் மட்டும் 40,000 கனேடியப்பிரஜாவுரிமை பெற்ற லெபானியர் இருந்தனர்.) இருந்தும் இசுரேலின் லெபனான் மீதான அழிவுத் தாக்குதலை கனடா மூர்க்கமாக ஆதரித்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் லட்சக்கணக்கான லெபானியர் உள்ளனர்(கடந்த வருடம் இசுரேல் தாக்கிய்போது லெபனானில் மட்டும் 40,000 கனேடியப்பிரஜாவுரிமை பெற்ற லெபானியர் இருந்தனர்.) இருந்தும் இசுரேலின் லெபனான் மீதான அழிவுத் தாக்குதலை கனடா மூர்க்கமாக ஆதரித்தது.

கனடாவில் வாழும் லெபனானியர்கள் வீட்டுக்குள் இருந்தார்களா அந்த நேரம்? தங்களுடைய எதிர்ப்பபை எப்படி தெரிவித்தார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் வாழும் லெபனானியர்கள் வீட்டுக்குள் இருந்தார்களா அந்த நேரம்? தங்களுடைய எதிர்ப்பபை எப்படி தெரிவித்தார்கள்?

நான் சொல்லாமல் விட்டது ...

கனடாவில் யூதர்களின் செல்வாக்கும் இருக்கிறது.

லட்சக்கணக்கான லெபானியர் வீதியில் இறங்கிப் போராடினர். இருந்தும் கனடா மசியவில்லை.

லெபனான் அரசு ஒரு பொம்மை அரசு. அவர்களிடம் போரிடக்கூடிய இராணுவம் இல்லை. இசுரேல் அடிக்கும் போது பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று. ஒருகதைக்கு லெபனானிடம் ஓரளவு பலமான இராணுவமிருந்து அவர்கள் இசுரேலை தாக்கியிருந்தால், உலக நாடுகள் சமாதானமாகப் போங்கள் என்ற ரீதியில் அட்வைஸ் செய்திருப்பார்கள்.

"மெலியாரை வலியார் வருத்தினால்

வலியாரைத் தெய்வம் வருத்தும்"

என்பது உண்மை தான்

அந்தத் தெய்வம் வேறு யாருமல்ல

எங்கள் தலைவன் தான்

தலைவனுடன் சேர்ந்து நிற்கும் நாங்களும் தான்

"இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்"

என்பது பொய்யல்ல புரிகிறதா?

எனவே

தலைவனுக்குத் தோள் கொடுப்போம்!

மெலியாரை வதைக்குக் வலியாரை வருத்துவோம்

இனிமேல்,

தேசியத்தையே மூச்செடுப்போம்

தேநீருடனும் தேசியத்தைத் தொட்டுக் குடிப்போம்

கனவிலும் தேசியத்தை கட்டித் தழுவுவோம்

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாங்க்கள் மனது வைத்தால்"!!

வல்வை மைந்தனின் கருத்துகளை மிக வரவேற்கிறேன். இது காலத்தின் கடமை.

இலங்கையரசின் உண்மையான முகத்தை உலகிற்கு விளங்கபடுத்தி அவர்கள் மூலம்

எமது விடுதலைக்கு இடையூரான தடைகள் உடைத்து எறிதல்.விடுதலை என்னும் பாதையில் குறுக்காய் இருக்கும் பெரும் பாறையை புலிகள் தமது உயிரை கொடுத்து

உடைத்து சிறு கற்துண்டுகளாய் மாற்றி வருகிறர்கள்.எமது கடமை கடைசி சிறு கற்களை(பொய் பிரச்சார அகற்ற உதவுதல். இதுவும் முக்கியபங்கு. எமது தமிழ் மக்கள் மிக அறிவானவர்கள்.ஆனால் ஒற்றுமை என்பது நமது முன்னோர்களது தவறான வழினடத்தல்களால் திசை மாறிவிட்டது. முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். எதிர்காலமவது இனிதாக இருக்கட்டும். நாம் ஒன்றினைந்து தமிழ்தாய் பிரசவிக்கவிருக்கும் ஈழம் என்னும் குழந்தைக்கும் தாய்க்கும் எதுவிதமான அழிவுகளும்

எதிரியால் ந்டவாமல் காப்பது நமது கடமை. எமக்கொரு நாடு எனப்பெருமை கொள்வோம். எமக்கு கொள்கையில் உறுதியான தலைவர் கிடைத்துள்ளார். இதுவே

இனவெறியர்களுக்கும் அவர்களின் ஆதரவு நாடுகளுக்கும் தமது பருப்பு எம்மில்

அவிக்கமுடியாது அவதிப்படுகிறார்கள். தொடரும்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை மைந்தன் அண்ணா..எந்த சந்தர்ப்பத்தில் என்ன கருத்தை கொடுக்கவேனுமோ

அதை மிகவும் தெளிவாகவும், அதிரடியாகவும், மற்றவர்களின் மனதை புண்படுத்தாமலும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்

உங்களுக்கு இந்த தங்கையின் பாராட்டுதலையும் நண்றியையும் தெரிவித்துக்கொண்டு எனது கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

நாம் தான் எங்க சுதந்திரத்தை பெற முயற்சிக்கவேண்டும், ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்க தானே? மற்ற நாடுகளிடம் இருந்து நாங்க ஆதரவை எதிர்பார்ப்பது தப்பில்லை, அதேமாதிரி அவங்க எங்களுக்கு உதவ பின்னடிப்பதிலையும் தப்பில்லை என்பது தான் என்னுடைய விவாதம். ஏனென்றால் அவங்க எங்களுக்கு ஆதரவு தர முன்வந்தால் அவங்களாலை பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்ற சுயநலவாதம் தான் காரணம் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Edited by eelanila

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.