Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தவின் பாரியார், மகன்களுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்

Featured Replies

மஹிந்­தவின் பாரியார், மகன்களுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தீவிரம்

p13-57a4f7295cf94612a05441493489d48bba38ac23.jpg

 

ஷிரந்தி,யோஷித்த சி.ஐ.டி.க்கு;ரோஹித்த எப்.சி.ஐ.டி.க்கு 
(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ மற்றும் அவர்­க­ளது புதல்­வர்­க­ளான யோஷித்த ராஜ­பக் ஷ, ரோஹித்த ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி இன்று மஹிந்­தவின் மனைவி ஷிராந்தி ராஜ­ப­க்ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவும், இளைய மக­னான ரோஹித்த ராஜ­ப­க்ஷ­விடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் விசா­ர­ணை­களை நடாத்­த­வுள்­ள­தா­கவும் நாளை இரண்­டா­வது மக­னான யோசித்த ராஜ­ப­க்ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை நடாத்­த­வுள்­ள­தா­கவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு கொலை விவ­கா­ரத்தில், ஷிரந்தி ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு வீரர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் ஜீப் வண்­டி­யொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும், அந்த ஜீப் வண்டி செஞ்­சி­லுவை சங்­கத்தால் சிரி­லிய சவிய அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டது எனவும், அந்த ஜீப் வண்டி வஸீமின் கொலைக்கு பின்னர் காரணம் இல்­லாமல் கறுப்பு நிற­மாக நிற­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­படும் நிலை­யி­லேயே ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வையும் யோஷித்த ராஜ­ப­க்ஷ­வையும் விசா­ரணை செய்ய குற்றப் புல­னா­யவுப் பிரிவு தீர்­மா­னித்­துள்­ளது.

டப்­ளியூ. பீ.கே.ஏ.0642 எனும் குறித்த ஜீப் வண்டி தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று இடம்­பெறும் நிலை­யி­லேயே அவர்கள் இரு­வ­ரி­டமும் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்ள தீர்­மா­னித்து பொலிஸார் இந்த விசா­ர­ணை­களை நடாத்­த­வுள்­ளனர்.

  இன்று ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வி­டமும் நாளை யோசித்த ராஜ­ப­க்ஷ­வி­டமும் குறித்த ஜீப் வண்டி தொடர்பில் விசா­ர­ணை­களை நடாத்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இத­னி­டையே மஹிந்த - ஷிரந்தி தம்­ப­தி­களின் கனிஷ்ட புதல்­வ­ரான ரோஹித்த ராஜ­ப­க்ஷ­விடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு இன்று சிறப்பு விசா­ர­ணை­களை நடாத்­த­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. சீனாவில் இருந்து விண்­ணுக்கு ஏவப்­பட்­ட­தாக கூறப்­படும் சுப்ரிம் செட் 1 எனும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்ட நிதி விவகாரங்கள் குறித்தும் இதன் போது ரோஹித்த ராஜபக்ஷவை விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-15#page-1

  • தொடங்கியவர்

வாக்குமூலமளித்து வெளியே வந்தார் ஷிரந்தி – சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள்!!

 
 
வாக்குமூலமளித்து வெளியே வந்தார் ஷிரந்தி – சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள்!!
 

முன்னாள் அரச தலைவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவிடம் 4 மணிநேரம் வாக்கு மூலமளித்துள்ளார்.

ஷிரந்திக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், விசாரணை முடிந்து வெளியே வரும் வரை காத்திருந்தது அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஷிரந்தி ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸவை பாதுகாப்புடன் அனுப்பினர்.

சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனம் றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலைக்காக பயன்படுத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பான விசாரணைகளுக்காகவே ஷிரந்தி ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் ஷிரந்தியிடம் 4 மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

http://newuthayan.com/story/19727.html

  • தொடங்கியவர்
‘அம்மாவை எங்களிடம் தா’
 

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  (சீ.ஐ.டி), வாக்குமூலமளிப்பதற்கு வந்திருந்த போது, அங்கு பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சீ.ஐ.டிக்கு செல்லும் பிரதான வீதியை மறித்தே, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், வாக்குமூலம் அளிப்பதற்காக, மஹிந்தவுடன் வருகைதந்திருந்த, ஷிரந்தி ராஜபக்ஷ பெரும் சிரமப்பட்டார்.

இருவரும் ஒரு காரிலும், புதல்வர்கள் மூவரும் மற்மொரு காரிலுமே, வருகைதந்திருந்தனர். அவர்களுடன், அவர்களின் சட்டத்தரணிகளும் வந்திருந்தனர். அங்கு, ஆதாரவாளர்கள் புடைச்சூழ்ந்து கொண்டமையால், காரிலிருந்து இறங்கி, திணைக்களத்துக்கு செல்வதற்கு, மஹிந்தவும் ஷிரந்தியும் பெரும் சிரமப்பட்டனர்.   

செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக, சிரிலிய சவிய வேலைத்திட்டத்துக்காக, வழங்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின், நிறத்தை மாற்றியமை தொடர்பிலேயே, ஷிரந்தியிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.   

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவுக்கு நேற்றுக் காலை 10:05க்கு வருகைதந்த அவர், 12:35க்கு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவருடைய பாரியாரும், திணைக்களத்துக்கு சென்று திரும்பும் வரையிலும், அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள், “அம்மாவை எங்களிடம் தா, மஹிந்த ஆட்சியே எமக்கு வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர்.   

அங்கு, பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், விசேட அதிரடிப்படையினர் உஷார் நிலையில் இருந்தனர். அத்துடன், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.   

இதேவேளை, மஹிந்த-ஷிரந்தியின் புதல்வர்களில் ஒருவரான ஒருவரான ரோஹித ராஜபக்ஷ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலும் (எப்.சீ.ஐ.டீ), நேற்று (15) ஆஜராகி, வாக்குமூலமளித்தார்.   

சீனாவின் சுப்ரீம் சட் 1 என்ற செய்மதி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கே ரோஹித அழைக்கப்பட்டிருந்தார். அவர், அங்கு பொறியியலாளராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலமளிப்பதற்கு, காலை 10 மணிக்கு சென்றிருந்த அவர், மாலை 3:45க்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கே, ஷிரந்தி ராஜபக்ஷ, சீ.ஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றும், இந்த விவகாரம் தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்கு அவர்களுடைய இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு. இன்று (16) அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/அம்மாவை-எங்களிடம்-தா/175-202434

  • தொடங்கியவர்

ஷிரந்தியிடம் 3 1/2 மணிநேரம் விசாரணை

p6-6b625852f5b10952ab9369f38300e6b1e804046d.jpg

 

யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை
(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­ப­க் ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று மூன்­றரை மணி நேரம் சிறப்பு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் முன்னாள் முதற் பெண்­மணி ஷிரந்தி ராஜ­ப­க் ஷவின் 'சிரி­லிய சவிய' அமைப்­புக்கு வழங்­கப்­பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களை முன்­னி­றுத்தி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட விசா­ரணைப் பிரிவு தீவிர விசா­ர­ணை­களை

முன்­னெ­டுத்­த­தா­கவும், இதன் போது விஷேட வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்த பின்னர் ஷிரந்தி ராஜ­ப­க்ஷவை அங்­கி­ருந்து வெளி­யேறிச் செல்ல அனு­ம­தித்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இந் நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் இன்­றைய தினம் ஷிரந்தி - மஹிந்த தம்­ப­தியின் இரண்­டா­வது புதல்­வ­ரான யோஷித்த ராஜ­ப­க்ஷவை விசா­ரணை செய்ய எதிர்ப்­பார்ப்­ப­தா­கவும், அது தொடர்பில் அவ­ருக்கு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

'சிரி­லிய சவிய' அமைப்பின் கீழ் பாவ­னை­யி­லி­ருந்த செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட டிபண்டர் வாகனம் தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுதத் நாக­ஹ­முல்ல, பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் விஷேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்க தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

 இந் நிலையில் நேற்று அது தொடர்பில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த 'சிரி­லிய சவிய' அமைப்பின் பொறுப்­பா­ள­ராக செயற்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜ­பக்ஷ குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டார்.

 குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அழைப்­புக்கு இணங்க அவர் நேற்று காலை 9.30 மணிக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரானார். தனது இளைய மகன் ரோஹித்த ராஜ­ப­க்ஷவை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜர் படுத்­திய பின்னர், தனது கணவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த வீர­சிங்க, மக­னான சட்­டத்­த­ரணி நாமல் ராஜ­பக்ஷ, சட்­டத்­த­ரணி பிரே­மநாத் தொல­வத்த ஆகியோர் சகிதம் ஷிரந்தி ராஜ­பக்ஷ குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கினார்.

ஆதா­ர­வாக ஆர்ப்­பாட்டம்

 இதன் போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­யகம் முன்­பாக ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் ஒன்று கூடினர். அவர்கள் ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வான கோஷங்­களை எழுப்பி, ஷிரந்­திக்கு எதி­ரான விசா­ர­ணைகள் அர­சியல் பழி வாழங்கல் என தெரி­வித்­தனர். இதனால் அப்­ப­கு­தியில் பர­ப­ரப்­பான சூழல் நேற்று முற்­பகல் முதல் பிற்­பகல் 1.30 மணி வரை நில­விய நிலையில், பிர­தே­சத்தின் பாதைகள் பல மூடப்­பட்டு, அவ­சர நிலை­மையை கையா­ளத்­தக்க வகையில் பொலி­ஸாரும் கல­க­ம­டக்கும் பொலி­ஸாரும் ஸ்தலத்தில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

 இந் நிலையில் அவ­சியம் ஏற்­படும் போது பயன்­ப­டுத்த பொலிஸ் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்­தி­ரமும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

' ஷிரந்தி மெடமை விட்­டு­விட்டு போக மாட்டோம்' எனவும், தற்­போ­தைய விகா­ர­ம­ஹா­தே­வி­யான ஷிரந்­தியை பழி வாங்­காதே எனவும் வலி­யு­றுத்தும் அங்கு கூடி­யி­ருந்தோர் கோஷங்­களை எழுப்­பினர்.

இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல, ஜீ.எல்.பீரிஸ்., பந்­துல குண­வர்­தன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ உள்­ளிட்டோர் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முன் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இந் நிலை­யி­லேயே நேற்று முற்­பகல் 9.30 மணி முதல் பிற்­பகல் 1.15 வரை ஷிராந்தி ராஜ­ப­க்ஷ­விடம் விசா­ரணை நடத்­தப்­பட்டு விஷேட வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணையில் உள்ள குறித்த டிபண்டர் வாகனம் தொடர்­பி­லான வழக்கில், இதற்கு முன்னர் செஞ்­சி­லுவை சங்க உயர் அதி­கா­ரிகள் பலரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது, குறித்த டிபண்டர் வாகனம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 'சிரி­லிய சவிய' எனும் அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவர்கள் அந்த வாக­னத்தை எதற்கு, எப்­படி பயன்­ப­டுத்­தினர் என்­பது தமக்கு தெரி­யாது என அவர்கள் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

 இந்த நிலையில் செஞ்­சி­லுவை சங்­கத்­தினர் வழங்கும் போது இருந்த நிறம் பின்னர் மாற்­றப்­பட்­டுள்­ள­மையைக் கண்­ட­றிந்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் அதற்­கான கார­ணத்­தையும் கண்­ட­றிய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

 இதன் போது, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணை பிரிவு முன்­னெ­டுக்கும் வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு தொடர்­பி­லான விசா­ர­ணை­களில், வஸீம் தாஜு­தீனின் கொலை­யுடன் டிபண்டர் வாகனம் ஒன்று தொடர்­பு­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. எனினும் அந்த டிபண்டர் வாகனம் எது என துல்­லி­ய­மாக தெரி­ய­வ­ராத நிலையில், 'சிரி­லிய சவிய' அமைப்பின் கீழ் இருந்த குறித்த டிபண்டர் வாக­னமே அது என பல தரப்­பி­ன­ராலும் சந்­தே­கங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 குறிப்­பாக 'சிரி­லிய சவிய' டிபண்டர் வாகனம் ஷிரந்­தியின் பாது­காப்பு பிரி­வி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை, வஸீமின் கொலை தொடர்பில் ஜனா­தி­பதி பாது­காப்பு பிரி­வினர் சிலர் மீது திரும்­பி­யுள்ள அவ­தானம், வஸீமின் கொலையைத் தொடர்ந்து குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை போன்ற விட­யங்­களை மையப்­ப­டுத்தி இந்த டிபண்டர் வஸீம் தாஜுதீன் கொலை­யுடன் இணைத்து பேசப்­பட்­டது.

 இந் நிலை­யி­லேயே நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்ட ஷிரந்­தி­யிடம் குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை மற்றும் அதன் நோக்கம் உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து தீவிர விசா­ரணை நடாத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

 ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­விடம் நேற்று சிறப்பு வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர், அவசியம் ஏற்படும் பட்சத்தில மீள் விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவர் விடுவிக்கப்பட்டதுடன், அவரது வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந் நிலையில் இன்று ஷிரந்தியின் இரண்டாவது மகனும், குறித்த டிபண்டர் வாகனம் தொடர்பில் தகவல் அறிந்தவர் மற்றும் அதனை சிறிது காலம் பயன்படுத்தியவர் எனவும் நம்பப்படும் யோஷித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரோஹித்தவிடம் 6 மணிநேர  விசாரணை
 (எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கனிஷ்ட புதல்­வ­ரான ரோஹித்த ராஜ­ப­க் ஷ­விடம் நேற்று நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சுமார் 6 மணி நேரம் விசேட விசா­ர­ணை­களை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்­து­கொண்­டது. 

சீனாவில் இருந்து விண்­ணுக்கு ஏவப்­பட்­ட­தாக கூறப்­படும் சுப்ரிம் செட் 1 எனும் செயற்கைக் கோள் 

தொடர்­பிலும் அந்த திட்­டத்தை முன்­னெ­டுத்த சுப்ரிம் செட் எனும் நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­பட்ட 320 மில்­லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் ஒன்று தொடர்­பிலும் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ளன. 

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் காலை 9.15 மணி­ய­ளவில் ஆஜ­ரான ரோஹித்த ராஜ­ப­க்ஷ­விடம் பிற்­பகல் 3.00 மணி­யையும் தாண்டி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில், அவ­சியம் ஏற்­படும் இடத்து மீள விசா­ர­ணைக்கு அழைப்­ப­தாக அறி­வு­றுத்­திய பின்னர் அவர் விடு­விக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 சீனாவில் இருந்து விண்­ணுக்கு சுப்ரிம் செட் 1 எனும் செய்­மதி ஏவப்­பட்­டி­ருந்­தது. இந்த செய்­மதி சுப்ரிம் செட் எனும் நிறு­வ­னத்தின் நட­வ­டிக்கை கார­ண­மாக ஏவப்­பட்ட நிலையில் அந்த நிறு­வ­னத்தின் நிறை­வேற்று பொறி­யி­லா­ள­ராக ரோஹித்த ராஜ­பக்ஷ கட­மை­யாற்­றி­யி­ருந்தார். அத்­துடன் அந் நிறு­வ­னத்தின் பங்கு தார­ரா­கவும் ரோஹித்த ராஜ­பக்ஷ செயற்­பட்ட நிலை­யி­லேயே, அவ­ரிடம் அது தொடர்பில் விசா­ரணை நடாத்த தீர்­ம­னைக்­கப்ப்ட்­டி­ருந்­தது. 

இந்த செய்­மதி திட்டம் 320 மில்­லியன் ரூபா வரை­யி­லான பெரும் தொகை பணம் கொடுக்கல் வாங்­கல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்ள நிலையில் அதன் போது இடம்­பெற்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் மோச­டிகள் தொடர்பில் ஆராயும் வித­மாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதன்­படி நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்­தவின் கட்­டுப்­பாட்டில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர பிரே­ம­ரத்ன தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டன.

நேற்று காலை, தனது தந்­தை­யான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த, தாயா­ரான ஷிரந்தி ராஜ­பக்ஷ, சகோ­த­ரர்­க­ளான நாமல் மற்றும் யோசித்த ஆகி­யோ­ருடன் கோட்­டையில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­துக்கு வருகை தந்த ரோஹித்த ராஜ­பக்ஷ, அவ­ரது சட்­டத்­த­ர­ணி­யான சம்பத் மெண்­டி­சுடன் விசா­ர­ணை­யா­ளர்­களை எதிர்­கொண்டார்.

இதன்­போது காலை 9.15 முதல் பிற்­பகல் மூன்று 15 வரையில் ரோஹித்த ராஜ­ப­க்ஷ­விடம் விசா­ர­ணை­யா­ளர்கள் சுப்ரிம் செட் 1 செய்­மதி திட்டம் தொடர்பில் கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­தனர். குறிப்­பாக அத்­திட்­டத்தின் பின்­னணி, அதற்­கான செல­வீ­னங்கள், பணம் திரட்­டப்­பட்ட முறைமை உள்­ளிட்­டவை தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்பான் உயர் அதி­காரின் ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 இந்­நி­லையில் ரோஹித்த ராஜ­ப­க்ஷ­வினால் நிதிக் குற்றப் புல­னாய்வு விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தக­வல்கள், மற்றும் வாக்கு மூலத்தை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ­சியம் ஏற்­படும் பட்­சத்தில் ரோஹித்­தவை மீள விசா­ரணை செய்ய எதிர்ப்­பார்ப்­ப­தா­கவும் அந்த அதி­காரி தெரி­வித்தார்.

 நேற்­றைய விசா­ர­ணை­களின் போது குறிப்­பாக 2012 நவம்பர் மாதம் அளவில் விண்­ணுக்கு ஏவப்­பட்ட குறித்த செய்­ம­தி­யினை தயா­ரிக்­கவும் ஏவவும் பாது­காப்பு அமைச்சு, தொலை­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழுவின் அனு­மதி பெறப்­பட்ட முறை­மைகள் மற்றும் நிதி கையா­ளப்­பட்ட விதம் தொடர்பில் அவ­தானம் செலுத்தப்பட்டிருந்ததாக எப்.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

 நேற்று ரோஹித்த மீதான விசாரணைகள் இடம்பெறும் போது அப்பகுதிக்கு, மஹிந்த - ஷிரந்தி தம்பதிக்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய, ஜீ.எல். உள்ளிட்ட பலர் பிரசன்னமகையிருந்தனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-16#page-1

  • தொடங்கியவர்

சிங்களத்தை மறந்த ஷிரந்தி ராஜபக்ஷ

 

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிட ஷிரந்தியிடம் கோரியுள்ளனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என ஷிரந்தி தெரிவித்துள்ளார்.

shiranthi.jpg

 

வஸீம் தாஜுதீன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிலிய சவிய எனும் அமைப்பின் கீழ் இருந்த டிபண்டர் வண்டி தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

விசாரணையின் போது விசாரணை அறைக்குள் ஷிரந்தியுடன் உடன் சென்ற மஹிந்த, சட்டத்தரணி ஜயந்த, தொலவத்த உளிட்ட எவரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந் நிலையில் விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிட ஷிரந்தியிடம் கோரியுள்ளனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என ஷிரந்தி கூறியுள்ளார்.

பதுளையில் பிறந்த ஷிரந்தி, சிங்களத்தை திடீரென மறந்தமை முழு குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் பிரபலமாக பேசப்படுகின்றது.

சிங்களம் தெரியாது என ஷிரந்தி கூறியதை தொடர்ந்து விசாரணை அறைக்கு வெளியில் இருந்த சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவை அழைத்த புலனாய்வுப் பிரிவு அவர் ஊடாக வாக்கு மூலத்தை வாசித்துக் காட்டியுள்ளது. 

எனினும் சட்டத்தரணி கோரும் திருத்தங்களுக்கு அங்கு வாய்ப்பில்லாமல் போயுள்ளது. ஏனெனில் விசாரணை முழுதையும் புலனாய்வுப் பிரிவு ஒலிப் பதிவு செய்துள்ளதால் ஷிரந்தி தரப்புக்கு ஏற்றாற்போல் வாக்கு மூலத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் போகவே, சி.ஐ.டி. பதிவு செய்த வாக்கு மூலத்தில் கையொப்பமிட்டு திரும்பியுள்ளார் ஷிரந்தி.

http://www.virakesari.lk/article/23231

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மொழியையே மறந்தவ.. சிங்களத் தாய் நாட்டுக்காக பயங்கரவாதிகளோடு போரிட்டு வென்றம் என்று எப்படித்தான் கதையளக்க முடியுதோ..??!  தங்களை.. துட்டகைமுனுக்கு நிகராகவேற எழுதி வைச்சிருக்கினம்.. புதிய மகாவம்சத்தில். :rolleyes:tw_angry:tw_blush:tw_cold_sweat:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிட ஷிரந்தியிடம் கோரியுள்ளனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என ஷிரந்தி கூறியுள்ளார்.

 வாசிக்கத்தெரியாது எண்டு சொல்லுற உந்த ரெக்னிக்கெல்லாம் இலங்கை இந்திய அரசியல்வாதிகளுக்கு அத்துப்படி.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தாய் மொழியையே மறந்தவ.. சிங்களத் தாய் நாட்டுக்காக பயங்கரவாதிகளோடு போரிட்டு வென்றம் என்று எப்படித்தான் கதையளக்க முடியுதோ..??!  தங்களை.. துட்டகைமுனுக்கு நிகராகவேற எழுதி வைச்சிருக்கினம்.. புதிய மகாவம்சத்தில். :rolleyes:tw_angry:tw_blush:tw_cold_sweat:

அவர் பறங்கியர் என்று தெரியாதோ, நெடுக்கர்? :grin: 

  • தொடங்கியவர்

விசாரணைகள் எந்தவித தடைகளுமின்றித் தொடரவேண்டும்

 

கூட்டரசின் கவனம் மீண்டும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை நோக்கித் திரும்பியுள்ளது. மகிந்தவின் குடும்பத்தவர்கள் நேற்று மீண்டும் விசா ரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அரச தலைவரின் குடும்பத்தவர்கள் மீதான விசாரணைகள் பல மாதங்களாக உறக்க நிலையிலிருந்த நிலையிலேயே மீண்டும் அரசு அதனைக் கையில் எடுத்துள்ளது.

முன்னைய அரசின் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான விசாரணைகள் முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட் டமை குறித்து சிவில் சமூகத்தினரும், பொதுமக்களும், அமைச்சர்களும் கூட அதிருப்தி வெளியிட்டு வந்துள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம்.

2015ஆம் ஆண்டில் ஆட்சிமாற்றத்துக்காக மக்கள் வாக்களித்த வேளை, அவர்கள் மனதில் முன்னைய அரசின் முக்கிய பிரமுகர்கள், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் ஊழல், மோசடிகளுக்காகவும் இன்னும் வெளியில் தெரியவராத குற்றங்களுக்காகவும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற பெருவிருப்பம் காணப் பட்டது. இன்றுவரை மக்களின் எதிர்பார்ப் பாகவும் அது உள்ளது.

தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்ப நாள்களில் கூட்டு அரசும் மக்களின் ஆணைக்கேற்ப இருட்டில் மறைக் கப்பட்ட பல விடயங்களைத் தோண்டியெடுத்தது. அவ்வாறான ஒரு விசாரணையின்போதே ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் படுகொலை பற்றி பல முக்கிய விட யங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. வெறும் விபத்து என மூடி மறைக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.

எனினும், பின்னர் முன்னைய அரசின் முக்கிய பிரமுகர்களை அம்பலப்படுத்துவதில் அரசு அக்கறை யிழந்தது.
இதற்குப் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த மாதம் அமைச்சரவைக் கூட்டமொன்றில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினர் மீது வெளிப்படையாக இதற்கான குற் றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

அதேவேளை, அரசின் முக்கிய அமைச்சர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே அரசு மீண்டும் மகிந்த குடும்பத் தினரை இலக்குவைத்து விசாரணைகளை முன் னெடுக்க ஆரம்பித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரை மையமாகக் கொண்டு ஆரம்பமாகியுள்ள இந்த விசாரணைகள் எந்தத் தடையுமின்றி இறுதி நீதி நிலை நாட்டப் படும் வரை தொடரவேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.

அரசு எந்த அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்த விசாரணைகளைப் பயன்படுத்தாமல் நீதி நிலை நிறுத்தப்படவேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் நிகழ்ந்த அந்த அதிசயம் இலங்கையிலும் நிகழவேண்டும்.

http://newuthayan.com/story/19815.html

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

அவர் பறங்கியர் என்று தெரியாதோ, நெடுக்கர்? :grin: 

 

உண்மையாகவா..?! இருந்தாலும் பதுளையில் பிறந்தவர் சிங்களம் கற்றிருக்கமாட்டார் என்பது நம்பக் கூடியதாக இல்லை. அப்ப மகிந்தவோடு ஆங்கிலத்தில் எழுதியா.. காதல் பண்ணினார். அந்தாளுக்கு ஆங்கிலம் மட்டே. tw_blush::rolleyes:

நல்லாட்சி அரச பயங்கரவாத இயந்திரத்தின் நாடகம் தீவிரமாக நடக்கிறது!

பொலநறுவையில் மைத்திரியின் குடும்பத்தினர், உறவினர் செய்த கொள்ளைகளின் விசாரணைகள் எதிர்காலத்தில் நடைபெறலாம் என்ற அச்சத்தில் உள்ள மைத்திரி போர்க்குற்றவாளிகளான  ராஜபக்ச கும்பலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கமாட்டார் என்பது கடந்த சில வருடங்களின் நிரூபணமான உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.