Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு

Featured Replies

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு

மாகாணசபைகள் தொடர்பில் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணசபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றன.

இந்தநிலையில், 20 ஆவது திருத்தத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஊடகசந்திப்பு ஒன்றை நடத்திய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது எனவும், 

தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் எனவும் தெரிவித்ததுடன் ஆதரிக்க எடுத்த முடிவு தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு எனக் கூறி ஈபி.ஆர்.எல்.எப் 20 ஆவது திருத்தை நிராகரிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கிழக்கு மாகாணசபையில் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதன்போது ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் அவர்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கு உதவியிருந்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் ஈபி.ஆர்.எல்.எப் தவிர்ந்த வேறு சில உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து இருந்தனர். ஆனால் ஈபி.ஆர்.எல்.எப் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த நிலையில் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டமைப்பு பங்காளிக் கட்சியாகிய ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சியின் அடுத்த கட்டம் தொடர்பில் இரு அணிகளாக செயற்பட்டு வருவதாகவும் அறிய முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Split-into-the-EPRLF-party-20th-Amendment-Act

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதற்கு கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தினால் முடிந்தது பிரச்சினை. இதற்கு கட்சிக்குள் பிளவு அது இது என்பது பிரச்சினையை பெருப்பிக்குமேயன்றி தணிக்காது. பிளவு என்பதற்குப்பதிலாக கட்சிக்குள் கருத்து முரண்பாடு என்பதுதான் சரியான சொற்பிரயோகமாக இருந்திருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vanangaamudi said:

ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதற்கு கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தினால் முடிந்தது பிரச்சினை. இதற்கு கட்சிக்குள் பிளவு அது இது என்பது பிரச்சினையை பெருப்பிக்குமேயன்றி தணிக்காது. பிளவு என்பதற்குப்பதிலாக கட்சிக்குள் கருத்து முரண்பாடு என்பதுதான் சரியான சொற்பிரயோகமாக இருந்திருக்கவேண்டும். 

பிளவு படுத்த வேண்டும் என்றே சிலர் அலையினம் போலகிடக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.