Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்

Featured Replies

மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்

batti.jpg

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று   மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு  செப்ரம்பர் 20ம் திகதி    சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று  27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  அத்துடன்  கொல்லப்பட்டவர்களுக்காக  விசேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.    நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உறவுகளை இழந்த குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

batti-2.jpgbatti3-1024x649.jpg

http://globaltamilnews.net/archives/42031

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் படுகொலைகள்  என்பது  அதிகமாக நிகழ்ந்தது  இன்னும் பல் கிராமங்கள் அழிந்தது 

கண்ணீர் அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மாருக்கு கண்ணீர் வடிக்கிற கூட்டம்... காத்தான்குடிக்கு கட்டி அழுகிற கூட்டம்.. அதுக்கு பக்கம் பக்கமா கட்டுரை எழுதிற எங்கட நடுநிலை வாசிகள்.. ஒருவரையும் இப்படியான தலைப்புக்களோடு காண முடிவதில்லை.  தாம் நினைச்சதை எல்லாம் வறுத்துக் கொட்டக் கூடிய..முகநூலிலும் கூட. :rolleyes:tw_angry:

இனப்படுகொலையில் வீழ்ந்தப்பட்ட எம் மக்களின் உயிர்களுக்கு ஆன்ம அஞ்சலி. 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் முசுலீமுகள்  வரவில்லை...அவர்கள் .... ***

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

மியான்மாருக்கு கண்ணீர் வடிக்கிற கூட்டம்... காத்தான்குடிக்கு கட்டி அழுகிற கூட்டம்.. அதுக்கு பக்கம் பக்கமா கட்டுரை எழுதிற எங்கட நடுநிலை வாசிகள்.. ஒருவரையும் இப்படியான தலைப்புக்களோடு காண முடிவதில்லை.  தாம் நினைச்சதை எல்லாம் வறுத்துக் கொட்டக் கூடிய..முகநூலிலும் கூட. :rolleyes:tw_angry:

இனப்படுகொலையில் வீழ்ந்தப்பட்ட எம் மக்களின் உயிர்களுக்கு ஆன்ம அஞ்சலி. 

ம் நானும் பார்த்தேன் நெடுக்கு ஒருத்தன்  வெளிநாட்டிலிருந்து வந்து  ஊருக்கு அதாவது காத்தான் குடி பள்ளி வாசல் , நூதனசாலை என்பவற்றை பார்த்து விட்டு முதலைக்கண்னீர் வரவழைத்ததை எவன்ட எச்சம் என தெரியவில்லை முகநூலில் அரசியல் சார்ந்த மதம்  சார்ந்த கருத்துக்களை எழுதுவதில்லை என்ற படியால எழுதவில்லை இல்லையென்றால் அவனுக்கு கிழக்கில் நடந்த அத்தனை படுகொலைகலையும் சுட்டிக்காட்டி இருப்பேன் ஆனால் அவன் சேர்ந்திருக்கிற கூட்டம் அதையும் நம்பாது 

இப்படி நம்க்குள்ள சில நயவஞ்சகம் பிடித்ததுகள் புலிகள் மீது கோபம் என்றால் ஒட்டு மொத்த தமிழர்களையும் வெறுப்பார்கலாம் எங்கோயோ பச்ச  மட்ட வேலை செய்திருக்கு என நினைத்தேன்

  • தொடங்கியவர்

அவசரப்பட்டால் நீதி கிடைக்காது என்கிறது இலங்கைத் தமிழரசுக் கட்சி

 

மட்டக்களப்பு உட்பட தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் அதேபோல் இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலிலும் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகளுக்கான நீதியை பெற்றுக்கொள்ளும் முயற்சியை அவசரமாக முன்னெடுக்க முனைந்தால் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

இதனாலேயே தமது கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை மிகவும் நிதானமாக முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசியக் கூடடமைப்பின் முக்கியஸ்தரான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கீ.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொறுப்புக்கூறல் விடையத்தில் ஸ்ரீலங்கா அரசு வேகமாக செயற்பட்டு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தும் தரப்பினர் கடும்போக்குவாதிகள் என ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நேற்றைய முன்தினம் சாடியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சவூக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய முன்தினம் புதன்கிழமை மாலை மிகவும் உணர்வூபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டால் நீதி கிடைக்காது என்கிறது இலங்கைத் தமிழரசுக் கட்சி

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி சவூக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் சிறிலங்கா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலையில் கொலைசெய்யப்பட்டவர்களுக்காக சவூக்கடியில் அமைக்கப்பட்டுள்ள  நினைவூத் தூபியில் மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்டியின்  தலைமையில் விஷேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சவுக்கடி கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை குழப்புவதற்கு முன்னாள் ஜனாதிபி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினரும் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளும் தருணம் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் கிழக்கு மாகாண அமைச்சர் இதனால் இந்தப் பணிகளை நிதானமாக செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவசரப்பட்டால் நீதி கிடைக்காது என்கிறது இலங்கைத் தமிழரசுக் கட்சி

இதேவேளை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலைகளை நினைவுகூறும் நிகழ்வுவொன்று நேற்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பொது மக்களுடன் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு உயிர் நீர்த்தவர்களுக்கான தமது அஞ்சலியை செலுத்தினர்.

புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி புகுந்த இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் அங்கிருந்த 17 பேரை மிகவும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்திருந்தனர்.

அவசரப்பட்டால் நீதி கிடைக்காது என்கிறது இலங்கைத் தமிழரசுக் கட்சி

இந்த கொடூரத்தின் 27 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை 6.30 க்கு ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வுகள், காலை 9:00 மணிக்கு மாணவர்கள் பிரதேச இளைஞர்களினாலும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மாலை படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தல்  அனுஸ்ட்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்னாலேயே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் அடங்களாக பலரும் கலந்து கொண்டு உயிர் நீர்த்தவர்களுக்கான தமது அஞ்சலியை செலுத்தினர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/27th-year-mullivaikkal-massacre

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.