Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு

Featured Replies

மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு

லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில்  மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

DSC_2894.JPG

DSC_2886.JPG

மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Local_News.jpg

 
 

http://www.virakesari.lk/article/25139

  • தொடங்கியவர்

“பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழ் மொழி இருப்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை”

 

 

“தமிழ் இனம் ஒன்று உள்ளது அதற்கும் வீர வரலாறு இருக்கிறது என்பதை உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே” என இயக்குனர் சிகரம் பாரதிராஜா மட்டு மாவட்ட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கூறியுள்ளார்.

Local_News.jpg

அங்கு உரையாற்றிய பாரதிராஜா மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பிரபாகரன் மட்டும் இல்லையென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலை இருந்திருக்கும். காலம் எமது முகத்தில் கோடு போட்டாலும் அந்த காலத்தில் கோடுகளை கலைஞர்கள் நிலத்தில் போட்டுள்ளனர். இந்த மண்ணில் எத்தனையோ கலைஞர்கள் கலைகள் அதன் அத்தனை அறுவடைகளும் இந்த மண்ணுக்கேயுரியது.

கலைஞர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, கலைஞர்களை காலங்கள் பேசும் இந்த கலைஞர்களின் படைப்புகள் பேசும், 76 வயதினை கடந்துள்ள நிலையிலும் கலையொன்றே மனிதனை தளர்ச்சியில்லாமல் வாழ வைக்கும் என்பதை உணர்ந்துள்ளேன்.

கலைஞர்கள் மட்டுமே சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்களாகவுள்ளனர். எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க கூடியவர்கள் தான் கலைஞர்கள் கலைஞர்களுக்கு வயதே கிடையாது, கலைகள் அவர்களை காப்பாற்றுகின்றது, அவர்களுடைய எண்ணங்களை கலைகள் என்றும் இளமையாகவே வைத்திருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்தமாக காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள், இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமிழ் மொழியை கட்டி காப்பது போல் தமிழ் நாட்டில் கூட யாரும் தமிழ் மொழியை கட்டி காக்கவில்லை.

அகநானூறு, புறநானூறு என்று எவ்வளவோ படைப்புக்கள் இருக்கின்றன ஆனால் உங்கள் படைப்புகளிலே தமிழ் இன்னும் சோர்ந்து போகாமல் இருக்கிறது அது உங்களுக்கு பெருமை தரும் விடயமாகும்.

மொழியின் மீதும் இனத்தின் மீதும் அழுத்தமான பக்தியை உங்களை விட யாரும் வைத்ததில்லை நான் இந்த பூமியில் கால் வைக்கும் போதேல்லாம் பெருமையாக உணர்ந்தேன்.

தமிழ் நாட்டில் தமிழர்களதும், தமிழச்சிகளதும், வீர வரலாற்றை புத்தகங்களிலும், ஏடுகளிலும் வாசித்துப் பார்த்திருக்கின்றோமே ஒழிய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்ததில்லை வீர வரலாற்றை வாழ்ந்த தமிழர்களும், தமிழச்சிகளும் ஈழத்தில் தான் இருக்கின்றார்கள்.

சுத்தமான தமிழ் உரையாடல் இங்கிருக்கின்றது இன்னும் நீங்கள் சோரம் போகவில்லை இங்கு ஏற்பட்ட நெருக்கடி கூட நல்லதற்கோ என நான் நினைத்ததுண்டு காரணம் அந்த நெருக்கடிகளினால் இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி அங்கும் முளைத்து விருட்சமாய் இருப்போம் என வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழனை அடையாளப்படுத்துவது ஈழமண் மட்டும் தான், கறுப்பாக ஒரு தமிழன் இருந்தான் அவன் வீர வரலாறு கொண்டவன் என அடையாளப்படுத்தியது பிரபாகரன் மட்டும் தான், அவர் இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமிழினத்தை உலகுக்க அடையாளம் காட்டியவர் பிரபாகரன் மட்டுமே.

மூத்த கலைஞர்களுக்கு நான் விருதுகள் வழங்குவதை விட அவர்களது கரங்களால் நான் ஆசிர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25140

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனுக்கு நல்லதொரு புகழாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் இருக்குமட்டும் உலகத்தில் இல்லாத பழி பாவம் சுமந்தது இல்லையே என்றபோது எதிரி துரோகி என்ற வேறு பாடு இல்லாமல் எல்லோருக்கும்  மரியாதைகுரியவராகி விட்டார் (அப்பன் இல்லாதவனுக்கு தெரியும் அப்பனின் அருமை போல் ) இல்லையென்றால் பாரதிராஜா இப்படி சொல்லிவிட்டு மட்டகளப்பை விட்டு வெளியேற முடியாது. 

  • தொடங்கியவர்

தமிழ் இனத்தின் வீரவரலாற்றை பிரபாகரனே உலகறியச் செய்தார்

p14-5dd7466b37643f5bca61a05ebf053f6bc90ac87f.jpg

 

பாரதிராஜா புகழாரம்
(பட்­டி­ருப்பு நிருபர்)

தமிழ் இனம் என்று ஒன்று உள்­ளது. அதற்கு வீர வர­லாறு இருக்­கின்­றது என்­பதை உல­க­றி­யச்­செய்­தவர் பிர­பா­கரன் மட்­டுமேயாவார். அவர் இல்­லை­யென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்­பதே தெரியாத நிலை­யி­ருந்­தி­ருக்கும் என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா

 தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள முது­பெரும் கலை­ஞர்கள்,இளம் கலை­ஞர்கள்,ஊட­க­வி­ய­லா­ளர்­களை கௌர­விக்கும் நிகழ்வு நேற் முன்தினம் சனிக்­கி­ழமை காலை மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்­றது.

லண்டன் அகிலன் பவுன்­டே­சனின் அனு­ச­ர­ணையில் புதுக்­கு­டி­யி­ருப்பு கதி­ரவன் கலைக்­க­ழ­கத்தின் ஏற்­பாட்டில் இந்த நிகழ்வு கிரான்­குளம் சீமூன் கார்­டனில் நடை­பெற்­றது.

புதுக்­கு­டி­யி­ருப்பு கதி­ரவன் கலைக்­க­ழ­கத்தின் தலைவர் கதி­ரவன் த.இன்­ப­ராஜா தலை­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் இயக்­குனர் இமயம் பத்­மஸ்ரீ பெ.பார­தி­ராஜா பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.

இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர்,

காலம் எமது முகத்தில் கோடு­போட்­டாலும் அந்த காலத்தில் நிலத்தில் கோட்டை கலை­ஞர்கள் இட்­டுள்­ளனர்.இந்த மண்ணில் எத்­த­னையோ கலை­ஞர்கள், கலைகள்.அதன் அத்­தனை அறு­வ­டை­களும் இந்த மண்­ணையே சாரூம்.பார­தி­ரா­ஜா­வினை அழைத்து பாராட்­டு­கின்­றீர்கள் என்றால் நான் ஏதோ ஒரு பதி­வினை செய்­துள்ளேன்.

கலை­ஞர்கள் சாதா­ரண மனி­தர்கள் அல்ல. கலை­ஞர்­களை காலங்கள் பேசும்.அந்த கலை­ஞர்­களின் படைப்­புகள் பேசும். 76 வய­தினை கடந்­துள்ள நிலை­யிலும் கலை­யொன்றே மனி­தனை தளர்ச்­சி­யில்­லாமல் வைக்கும் என்­பதை உணர்ந்­துள்ளேன்.

கலை­ஞர்கள் மட்­டுமே சாதா­ரண மனி­தர்­களில் மாறு­பட்­ட­வர்­க­ளா­க­வுள்­ளனர். எல்­லா­வற்­றையும் பார்த்து ரசிக்­கக்­கூ­டி­ய­வர்கள் தான் கலை­ஞர்கள். கலை­ஞர்­க­ளுக்கு வயதே கிடை­யாது. குலைகள் இவர்­களை காப்­பாற்­று­கின்­றது. அவர்­க­ளு­டைய எண்­ணங்­களை இள­மை­யாக வைத்­தி­ருக்­கின்­றது.

ஈழத்­த­மி­ழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்­த­மாக காப்­பாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இங்­கி­ருந்து புலம் பெயர்ந்­த­வர்கள் தமிழ் மொழியை கட்டிக் காப்­ப­து­போல தமிழ் நாட்­டில்­கூட யாரும் தமிழ் மொழியை கட்டிக் காக்­க­வில்லை. அக­நா­னூறு, புற­நா­னூறு என்று எவ்­வ­ளவோ படைப்­புகள் இருக்­கின்­றன. ஆனால் உங்கள் படைப்­பு­க­ளிலே தமிழ் இன்னும் சோர்ந்து போய்­வி­ட­வில்லை. அதுவே உங்­க­ளுக்கு பெருமை தரும் விட­ய­மாகும்.

மொழியின் மீதும் இனத்தின் மீதும் அழுத்­த­மான பக்­தியை உங்­களை விட யாரும் வைத்­த­தில்லை. நான் இந்த பூமியில் கால்­வைக்கும் போதெல்லாம் பெரு­மை­யாக உணர்ந்தேன். தமிழ் நாட்டில் தமி­ழர்­களும் தமி­ழச்­சி­களும் வீர வர­லாற்றை புத்­த­கங்­க­ளிலும் ஏடு­க­ளிலும் தான் வாசித்துப் பார்த்­தி­ருக்­கின்றோம். வாழ்க்­கையில் வாழ்ந்து பார்த்­த­தில்லை.

வீர வர­லாற்றை வாழ்ந்த தமி­ழர்­களும் தமி­ழச்­சி­களும் ஈழத்தில் தான் இருக்­கின்­றார்கள். சுத்­த­மான தமிழ் உரை­யாடல் இங்­கி­ருக்­கின்­றது. இன்னும் நீங்கள் சோரம் போக­வில்லை. இங்கு ஏற்­பட்ட நெருக்­க­டி­கூட நல்­ல­தற்கோ என நான் நினைத்­த­துண்டு. அந்த நெருக்­க­டி­களின் கார­ண­மாக இங்­கி­ருந்து புலம் பெயர்ந்­த­வர்கள் எங்கு வாழ்ந்து கொண்­டி­ருந்­தாலும் சரி அங்கு முளைத்து விருட்­ச­மாக இருப்போம் என்று வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நம்மை அடை­யா­ளப்­ப­டுத்­து­வது ஈழமண் மட்டும் தான். கறுப்­பாக ஒரு தமிழன் இருந்தான், அவன் வீர வர­லாறு கொண்­டவன் என அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது பிரபாகரன் மட்டும் தான். இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்கும் தொிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தை உலகிற்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் மட்டுமே.

இங்கிருக்கின்ற மூத்த கலைஞர்களுக்கு எனது கைகளால் விருது வழங்குவதைவிட அவர்களது கரங்களால் நான் ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-02#page-1

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2017 at 5:11 AM, பெருமாள் said:

அந்தாள் இருக்குமட்டும் உலகத்தில் இல்லாத பழி பாவம் சுமந்தது இல்லையே என்றபோது எதிரி துரோகி என்ற வேறு பாடு இல்லாமல் எல்லோருக்கும்  மரியாதைகுரியவராகி விட்டார் (அப்பன் இல்லாதவனுக்கு தெரியும் அப்பனின் அருமை போல் ) இல்லையென்றால் பாரதிராஜா இப்படி சொல்லிவிட்டு மட்டகளப்பை விட்டு வெளியேற முடியாது. 

ஏன் முடியாது நீங்கள் என்னத்தை  வைத்து எழுதுகிறீர்க்ள்  எங்களுக்கு எவர் பிரிந்தாலும் சரி விலகுனாலும் சரி தலைவன் என்பது ஒருத்தன் தான் 

ஏன் மட்டக்களப்பில் அப்படி என்ன இருக்கிறது  இவரை வைத்து என்ன செய்ய முடியும் ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் முடியாது நீங்கள் என்னத்தை  வைத்து எழுதுகிறீர்க்ள்  எங்களுக்கு எவர் பிரிந்தாலும் சரி விலகுனாலும் சரி தலைவன் என்பது ஒருத்தன் தான் 

ஏன் மட்டக்களப்பில் அப்படி என்ன இருக்கிறது  இவரை வைத்து என்ன செய்ய முடியும் ??

அங்கு பல்லின மக்களும் இருப்பதால் இனவெறி அரசு இலகுவாக காவு வாங்கிவிடும் சந்தர்ப்பம் கூட உதரணமாய் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சிவராம் படுகொலை களில் உண்மையான கொலைகாரர் யார் என்று தெரிந்தும் தண்டிக்க முடிந்ததா ? சாப்பிட்டுவிட்டு பல்லுக்குள் குச்சி விட்டு தட்டுவது போல் பதில்கள் அரசிடமிருந்து வந்தது கனக்க வேண்டாம் அக்சன் பாம் பாடுகொலைகள் என்னாச்சு ? அதுக்காக வடக்கு ஒன்றும் பாதுகாப்பு என்று சொல்லவரவில்லை யார் செய்தது என்று தெளியவே வருடங்கள் எடுக்கும் வடக்கில்  உடனே தெரியும் அவ்வளவுதான் வித்தியாசம். 

4 hours ago, நவீனன் said:

தமிழ் இனத்தின் வீரவரலாற்றை பிரபாகரனே உலகறியச் செய்தார்

இது உலகறிந்த உண்மை.

அதை பாரதிராஜாவின் வாயால் தமிழீழ மண்ணில் வைத்து கேட்பதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அங்கு பல்லின மக்களும் இருப்பதால் இனவெறி அரசு இலகுவாக காவு வாங்கிவிடும் சந்தர்ப்பம் கூட உதரணமாய் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சிவராம் படுகொலை களில் உண்மையான கொலைகாரர் யார் என்று தெரிந்தும் தண்டிக்க முடிந்ததா ? சாப்பிட்டுவிட்டு பல்லுக்குள் குச்சி விட்டு தட்டுவது போல் பதில்கள் அரசிடமிருந்து வந்தது கனக்க வேண்டாம் அக்சன் பாம் பாடுகொலைகள் என்னாச்சு ? அதுக்காக வடக்கு ஒன்றும் பாதுகாப்பு என்று சொல்லவரவில்லை யார் செய்தது என்று தெளியவே வருடங்கள் எடுக்கும் வடக்கில்  உடனே தெரியும் அவ்வளவுதான் வித்தியாசம். 

அப்படி பார்த்தால்  கிழக்கை விட பல கொலைகள் தெரியாமால் நடந்திருக்கிறது வடக்கில்  கண்டு பிடித்தார்களா இல்லையே யோசப்பை சுட்டதும் தெரியும் அதற்க்காக இன்னும் பிள்ளையானை தண்டிக்க வில்லை காரணம் அவர் அதற்கு துணையாக இருக்கலாம் என்ற சந்தேகமே அதே போல கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட  மகேஸ்வரனின் கொலைக்கு என்ன நடந்தது சொல்லுங்கள் சிவராம் கூட கொல்லப்பட்டது இதுவரைக்கும் யார் என தெரியவில்லை  ஒரு பாடசாலை மாணவியின்பாலியல் வல்லுறவு கொல்லைக்கு இப்பதான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது அரசாங்கம் அவர்களை கூட காப்பாற்ற துடிக்கும் எத்தனை சட்ட தரணிகள் இப்படி  இருக்க நிலமையை விளங்கி கொள்ள வேண்டும் 

இனி இந்திய பிரபலங்கள் இலங்கை விஜயம் நம்க்கு இனி நொருக்கு தீனியாக கிடைக்கும் இங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.