Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு தீர்வு; ராஜித அதிரடி அறிவிப்பு

Featured Replies

அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு தீர்வு; ராஜித அதிரடி அறிவிப்பு

 

அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு தீர்வு; ராஜித அதிரடி அறிவிப்பு

இறுதிக்கட்ட போரின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென ஸ்ரீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தகவலை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் தான் உறுதியளித்ததுபோல் அடுத்துவரவுள்ள மே தினத்திற்கு முன்னர் காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 228ஆவது நாளாக தமது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் இறுதிக்கட்ட போரின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைதானவர்களது பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் ஏனைய பிரதேசங்களிலும் 200 நாட்களையும் கடந்து போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் பல்வேறு கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் எந்தவித தீர்வும் வழங்காதது இழுத்தடிப்பு செய்வது குறித்து இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் பேச்சாளரிடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன “அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். அவர்கள் தங்களது உறவுகளை தேடித்தருமாறு கோரவில்லை. மாறாக அவர்க்ள உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பதை அறிவிக்குமாறே கோருகின்றனர். அப்படியும் இயலாவிட்டால் சிறையிலிருப்போரின் எண்ணிக்கை என்பதை கூறுமாறு கோருகின்றனர். நானும் அதனையே வலியுறுத்துகின்றேன். ஜனாதிபதியுடனும் நான் அங்கு சென்று அவர்களை சந்தித்திருக்கின்றேன். காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தை கண்டறிதல் மற்றும் காணி மீளளிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறும். கடந்த மே தினத்தன்று வடக்கிற்குச் சென்று அவர்களை சந்தித்தபோது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத்தந்த பின்னரே அடுத்த மே தினத்திற்கு வருவதாக கூறியிருந்தேன்” என்று பதிலளித்தார்.

இதேவேளை இராணுவத்தினரது வசமிருக்கும் தங்களது காணிகளை மீளக் கையளிக்குமாறு முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் 200 நாட்களைக் கடந்தும் இராணுவ முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொட்டிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, இராணுவத்தினர் வசமிருக்கும் மக்களது காணிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இனவாத சாயம் பூசி அவற்றை எதிர்த்துவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரே மக்களது காணிகளை விடுவிக்குமாறு கூறும்போது அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கை எதுவாக இருக்குமென ஊடகவியலாளர்க்ள கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன “பெசில் ராஜபக்ச கூறியிருப்பதை நானும் கண்டேன். அது மிகவும் சிறந்த அறிவிப்பாகும். அனைவரும் காணிகளை மீளளிப்பதற்கே விருப்பப்படுகிறார்கள். இப்போது காணிகளை மீள வழங்குவதலே எஞ்சியிருக்கிறது. எதிர்ப்பு வெளியிட யாரும் இல்லைதானே. பெசில் ராஜபக்ச உள்ளிட்டோரே இவ்வளவு நாட்களாக அதற்கு தடையாக இருந்துவந்துள்ளனர். அரசிலிருக்கும்போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதேபோன்று இராணுவம் மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக பெசில் ராஜபக்ச இவ்வளவு காலமும் தெரிவித்துவந்த நிலையில் போரில் இராணுவம் குற்றம் புரிந்ததாக இப்போது அவரே ஏற்றக்கொண்டிருக்கின்றார். எனவே பெசில் ராஜபக்ச கூறுவதை மஹிந்த ராஜபக்ச கடைபிடித்திருந்தால் அந்த அரசாங்கம் இன்னும் ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால் கோட்டாபய ராஜபக்சவின் கதைகளைக் கேட்டே அவர்கள் செயற்பட்டதால் இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நாடு மட்டுமல்ல, கடலைக்கடந்தும் இன்னும் பல நாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து செயற்பட்ட ஒரேயொரு ராஜபக்சதான் பெசில் ராஜபக்ச” என்று தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/solution-to-north-before-next-may-day

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சம்பந்தர் புத்தகமே அடிச்சு விட்டு விட்டார் போல் உள்ளது  "தமிழ் மக்களை எப்படி ஏமாத்துவது" என்று .அவர் 2016கடைசி இவர் மேமாதம் நடத்துங்கோ 

2 hours ago, நவீனன் said:

பெசில் ராஜபக்ச இவ்வளவு காலமும் தெரிவித்துவந்த நிலையில் போரில் இராணுவம் குற்றம் புரிந்ததாக இப்போது அவரே ஏற்றக்கொண்டிருக்கின்றார். எனவே பெசில் ராஜபக்ச கூறுவதை மஹிந்த ராஜபக்ச கடைபிடித்திருந்தால் அந்த அரசாங்கம் இன்னும் ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால் கோட்டாபய ராஜபக்சவின் கதைகளைக் கேட்டே அவர்கள் செயற்பட்டதால் இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நாடு மட்டுமல்ல, கடலைக்கடந்தும் இன்னும் பல நாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து செயற்பட்ட ஒரேயொரு ராஜபக்சதான் பெசில் ராஜபக்ச” என்று தெரிவித்தார்.

நல்லா வெள்ளையடிக்கிறார் மகிந்தவுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதம் தேவை என்றால்..... தடுத்து வைத்திருப்பவர்களை எண்ணுவதற்கு தேவையான காலமா அது
அப்படியென்றால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எப்படியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

 வாக்குறுதிகள் என்னவோ ஒன்றுதான் ஆட்கள் மட்டும் வித்தியாசம். பாப்போம் யார் வாய்  வார்த்தை எப்போ பலிக்குதென்று. எல்லோருமே கிளி யோசியர்கள்தானோ.

  • தொடங்கியவர்
வடக்குப் போராட்டம் நியாயமானது’
 

image_b6787b24f5.jpgசிவநிரோஷனி

காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்பது நியாயமானதாகவே நான் கருதுகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“வடக்குக்கு, அண்மையில் சென்று அவர்களை சந்தித்த போது இதற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என கூறினேன். தொடர்ந்தும் இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனஞ்செலுத்தி வருகிறது” என அமைச்சர் குறிப்பிட்டார். 

வடக்கில் மக்களது காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்களே, அவர்களது பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காமல் இருப்பது ஏன்? என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், 

“பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் சென்றிருந்தபோது இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கூறியிருந்தார். உண்மையில் அவர் கூறியது வரவேற்கத்தக்கது தான். ஏனென்றால் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இபபோது அவற்றை விடுவிக்கக் கோருகின்றனர்” என்றார். 

“பசில் ராஜபக்ஷ கூறியதை மஹிந்த ராஜபக்ஷ அன்று செவிசாய்த்திருந்தால் மஹிந்தவின் ஆட்சி இன்று வரை தொடர்ந்திருக்கும். அவர் கோட்டாபய ராஜபக்ஷ கூறிய யோசனைகளைக் கேட்டதாலேயே இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, 

கேள்வி: மியான்மார் நாட்டிலிருந்து வருகைதந்த றோகிஞ்சா அகதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  

பதில்: றோகிஞ்சா அகதிகள் மட்டுமல்லாது நாட்டுக்கு வருகைதந்தவர்களில் 1,333 பேர் உள்ளனர். இவர்களில் அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்களும் புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர். இவர்களை ஐக்கிய நாடுகள் ஆணையகம் கவனித்து வருகிறது. 

ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பிலேயே அவர்கள் உள்ளனர். எல்லா நாடுகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் பல அவர்களை பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கேள்வி: மின்சார கட்டமைப்பை விரிவுபடுத்த 18 மில்லியன் ரூபாய் செலவில் புதிய ஜெனரேடர்கள் கொள்வனவு செய்ய வேண்டியதன் தேவைப்பாடு என்ன ,நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு அது அவசியமா?  

பதில்: நாட்டின் காலநிலையை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு அமையவே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. 

கேள்வி: ஸ்ரீலங்கன் எயார் விமான சேவைக்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்குவதாகக் கூறப்பட்டதே? 

பதில்: அப்படியொன்றும் இல்லை. 

கேள்வி: புகையிரத பாதைகளை விரிவாக்கம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எத்தனை குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வௌியெற்றப்படுகின்றனர், அவர்களை மீள குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? 

பதில்- இது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் . 

கேள்வி: புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறேவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறதா? 

பதில்- அரசமைப்பின் இடைக்கால அறிக்கையில், அரசியல் கட்சிகளின் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையைத் தக்க வைத்துக்கொள்வதாக அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தலா என்பது தொடர்பில் இதுவரை தீர்வு ஒன்றும் எடுக்கப்படவில்லை. அரசியல் கட்சிகளின் யோசனைகள் யாவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி ஆவணம் தயாரிக்கப்படும்.

1978ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் எனக் கூறிவந்தது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அவ்வாறே இருக்க வேண்டும் எனக் கூறியது. பின்னர் 2002ஆம் ஆண்டில் தமது கருத்தை ஐ.தே.க மாற்றிக்கொண்டது. 

மேலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையானது நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

கேள்வி: அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய பதவி விலகியமைக்குக் காரணம் என்ன? புதிதாக ஒருவர் எப்போது நியமிக்கப்படுவார்? 

பதில்: பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தனது தனிப்பட்ட பொருளாதார காரணங்களுக்காக பதவி விலகினார். அவர் ஒருவருடம் மாத்திரமே பதவி வகிப்பதாக கூறியிருந்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடக்குப்-போராட்டம்-நியாயமானது/175-205013

  • தொடங்கியவர்

ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே உச்­ச­பட்ச அதி­காரப் பகிர்வு

 

சொற்­பி­ர­யோ­கங்­களில் தங்­கி­யி­ருப்­பது முட்­டாள்­தனம் என்­கி­றது அர­சாங்கம் : இரண்டும்  கலந்த  முறை­மையே தற்­போ­தைய  உல­கப்­போக்கு

(ரொபட் அன்­டனி)

ஒற்­றை­யாட்­சியா ஐக்­கிய இலங்­கையா என்ற சொற்­பி­ர­யோ­கங்­களில் தங்­கி­யி­ருப்­பது முட்டாள்­த­ன­மாகும். மத்­திய அரசாங்­கத்­துக்கும் மாகாண அர­சாங்­கங்­க­ளுக்கும் எவ்­வாறு அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­கின்­றன என்­ப­தனை பார்ப்­பதே முக்­கி­ய­மாகும் என்று  அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித்த சேனா­ரட்ன தெரி­வித்தார்.  

ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என்ற அர்ப்­ப­ணிப்பில் தற்­போ­தைய ஜனா­தி­பதி இருக்­கிறார். சோபித தேரரின் தேகத்­திற்கு முன்­பா­கவும் அவர் அந்த வாக்­கு­று­தியை அளித்தார். அதனை அவர் நிறை­வேற்­றுவார் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

 அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கேள்வி: அர­சி­ய­ல­மைப்பு குறித்த இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ளது. இந்­நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றக்­கூ­டாது என ஜனா­தி­பதி தலைமை வகிக்கும் சுதந்­திரக் கட்சி தெரி­வித்­தி­ருக்­கி­றது. என்­னதான் நடக்கப் போகி­றது?

பதில்: இடைக்­கால அறிக்­கையில் யோச­னைகள் மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த யோச­னை­களைக் கொண்டு பாரா­ளு­மன்றம் இறுதி அறிக்­கையைத் தயா­ரிக்கும். இடைக்­கால அறிக்­கையில் உள்­ளவை எல்லாம் இறுதி அறிக்­கையில் வரும் என்று கூற­மு­டி­யாது.

கேள்வி: எனினும் சுதந்­திரக் கட்சி ஜனா­தி­பதி முறைமை இருக்க வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றதே?

பதில்: 1978 ஆம் ஆண்­டி­லி­ருந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை வேண்டாம் என சுதந்­திரக் கட்சி கூறி­வந்­தது. ஐக்­கிய தேசியக் கட்சி அதனை ஆத­ரித்து வந்­தது. ஆனால் தற்­போது நிலைமை மாறி­விட்­டது. எனினும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக கூறியே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வந்தார்.

கேள்வி: ஆனால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­காத ஜனா­தி­ப­தி­களின் பட்­டி­யலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இணைந்­து­வி­டு­வாரோ?

பதில்: அவ்­வாறு இருக்க முடி­யாது. ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என்ற அர்ப்­ப­ணிப்பில் தற்­போ­தைய ஜனா­தி­பதி இருக்­கிறார். சோபித தேரரின் தேகத்­திற்கு முன்­பா­கவும் அவர் அந்த வாக்­கு­று­தியை அளித்தார்.

கேள்வி: சிங்­க­ளத்தில் ஏக்­கிய என்ற சொற்­பி­ர­யோ­கமும் தமிழில் ஒற்­றை­யாட்­சிக்குப் பதி­லாக ஒரு­மித்த நாடு என்ற சொற்­பி­ர­யோ­கமும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதே. இது ஏன்?

பதில்: ஏக்­கியே என்ற சிங்­கள சொல்லின் தமிழ் மொழி பெயர்ப்பே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய இராச்­சி­யத்தில் இருப்­பதும் ஒற்­றை­யாட்சி முறைதான். ஆச்­சேவில் இருப்­பதும் ஒற்­றை­யாட்சி முறைதான். அங்கு தனிப்­பட்ட பாரா­ளு­மன்­றங்கள் கூட உள்­ளன. எனவே இங்கு நாடு பிரி­யாமல் அதி­கா­ரத்தைப் பகிர்­வதே முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. மல்­வத்த தேரரும் இத­னையே வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். அதா­வது நாட்டைப் பிரிக்­காமல் அதி­கா­ரத்தைப் பகி­ரு­மாறு தேரர் கூறி­யி­ருக்­கிறார்.

கேள்வி: நீங்கள் ஆரம்­பத்­தி­லி­ருந்து ஒற்­றை­யாட்சி குறித்து பேசி­வந்­தீர்­களா?

பதில்: எனக்கு எது­வென்­றாலும் பர­வா­யில்லை. ஆனால் சமஷ்டி முறை­மையில் நாடு பிரி­யாது என்­பதை உயர்­நீ­தி­மன்­றமும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. எனவே நாம் வார்த்­தை­களில் தொங்­கிக்­கொண்டு இருக்­கக்­கூ­டாது. இந்­தி­யாவில் ஒரு கலப்பு முறை­மைதான் காணப்­ப­டு­கி­றது. ஒன்­றை­யாட்­சியும் வரும் ஐக்­கி­யமும் வரும். இங்கு முக்­கி­யத்­துவம் பெறுவது என்னவெனில் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் எவவாறான அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதாகும். எனவே வசனங்களில் தொங்கிக்கொண்டு இருப்பது முட்டாள்தனதாகும். சில நேரங்களில் ஒற்றையாட்சியாகவும் இருக்கும் ஐக்கியமாகவும் இருக்கும்.

கேள்வி: சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா?

பதில் : உயர்நீதிமன்றம் அறிவித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.