Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

சுமந்திரனுக்கு, மாவைக்கோ, சரவணைபவனோ  யாழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் மூவரும் ஒரு மாபெரும் சதித்திட்டத்தின் ஊடாக கள்ளவோட்டின் (விருப்புவாக்கு மாறாட்டத்தின் மூலம்) தெரிவானவர்கள்.

மேலும் உதவாக்கரை என்று 50 வருடங்களாக அறியப்பட்ட சம்பந்தனை தொடர்ந்து தெரிவு செய்யும் விவேகமற்ற திருகோணமலைத் தமிழருடன் முதன்முறையாக களமிறங்கிய சுமந்திரனுக்கு வாக்களித்த அற்பசொற்ப யாழ் தமிழரை ஒப்பிடுவது மடமைத்தனம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

தமிழரின் உரிமைகள் அனைத்தையும் அடகுவைத்து  பிழைப்பு நடத்தும் சம்பந்தன் போன்ற உதவாக்கரைகளின் பிரதிநிதித்துவம் இருப்பதைவிட இல்லாதிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கு நன்மையானது என்பது வரலாற்று உண்மை.

திருகோணமலை மக்கள் இப்போதாவது நல்லதொரு மாற்று பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமது கறைகளை கழுவமுடியும்.

நீங்கள் குறிப்பிட்ட மூவரும் கள்ள ஓட்டு மூலம் மட்டும் தெரிவானது என்பது சுத்த மடைமைத்தனம்.

கடந்த தேர்தலில் சம்பந்தர் பெற்ற வாக்குகள் 33,834.

1977 ற்கு பிறகு தேர்தலில் தெரிவானது 2001. 2001 இல் தெரிவானதற்கான காரணம் உலகறிந்தது.

இன்று சம்பந்தருக்கு பின்னால் நிற்பது (பெரும்பாண்மை) யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள்.

திருகோணமலை மக்களை கறை படிந்தவர்கள் என்று குற்றம் சாட்ட யாழ் மக்களுக்கு அருகதை இல்லை.

சுமந்திரன் - 58,043

மாவை - 58,782

சரவணபவன் - 43,289

இதை கள்ள ஓட்டுக்கள் என்பது சுத்த முட்டாள்தனம்.

Edited by MEERA

  • தொடங்கியவர்
பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?
 

image_766a747258.jpgதமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம் என்று கருதப்பட்ட போதிலும், அப்பிரச்சினைகள் தீர்வதற்கான முதற்கட்ட சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் சார்பாக ஆராய்வதற்காக, தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும், டெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், கொழும்பில் நேற்று (06) மாலை 6 மணியளவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு தரப்பினரும், தத்தமது நிலைப்பாடுகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர் என அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வொன்றைக் காணுவதற்காக, நிபந்தனையுடனான இணக்கமொன்று, இருவருக்குமிடையில் எட்டப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட இணக்கத்தை, பின்னர் இரண்டு கட்சிகளின் உயர்பீடங்களும் கூடி ஆராய்ந்து, அந்நிபந்தனைகளுக்குச் சம்மதிக்கின், உறுதியான இணக்கப்பாடு ஏற்படுமென்பதே, இதன் எதிர்பார்ப்பாகும்.

இதனையடுத்து, இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விரையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது குறித்து, தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் கலந்துரையாடவுள்ளார். மறுபக்கமாக, டெலோவின் உயர்பீடத்திலும், இந்நிபந்தனைகளுடனான இணக்கப்பாட்டுக்குச் சம்மதம் ஏற்படுமாயின், தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கான நிலைமை ஏற்படும்.

இதுகுறித்த தகவல்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன், தமிழ்மிரர் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்தியது. இருவருமே, இவ்வாறான நிபந்தனைகளுடனான இணக்கப்பாடு ஏற்பட்டமையை உறுதிப்படுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த செல்வம் எம்.பி, "எங்களுடைய தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினேன். எங்களுடைய விட்டுக்கொடுப்புகள் தொடர்பாகவும் கூறினேன். அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, உயர்மட்டத்தின் முடிவுக்கு ஏற்ப, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப் பங்கீடு தொடர்பில், யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதாக இருந்த 3 கட்சிகளும், தனித்தனியாகப் போட்டியிடக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தது.
தற்போது, தமிழரசுக் கட்சிக்கும் டெலோவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த முதற்கட்ட இணக்கப்பாடு, இரு கட்சிகளின் உயர்பீடங்களாலும் அங்கிகரிக்கப்படுமாயின், கூட்டமைப்பின் ஒற்றுமை, காப்பாற்றப்படக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

குறிப்பாக, மூன்றாவது கட்சியான புளொட்டும், இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புகளுக்குத் தயார் போன்றவாறான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே, தற்போது இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பிரிவடையாது-கூட்டமைப்பு-நிலைக்கும்/150-208546

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

ஆனால் இதனால் சிங்கள கட்சிகள் தமிழருக்கு பாலும் தேனும் கொடுப்பினம் என்று தாயக மக்கள் ஒரு பொழுதும் நம்ப மாற்றார்கள் .....அப்படி சிங்களவர்கள் கொடுக்கப்போவதுமில்லை.....

ம்ம் கொடுக்க போவதில்லை ஆனால் இந்த ரசியல் வாதிகளை வைத்து என்ன தான் செய்வது நாலு அமைச்சு பதிவுகளை பெற்றால் கூட மக்களைன் தேவைகளை பூர்த்தி செய்திருக்கலாம் 

சிங்கள கட்சிகளால் தானே நாடே ஆளப்படுகிறது  ஓரளவு தேவைகளை சாதித்திருக்கலாம்  எனப்து எனது கருத்து   யானைக்கே  வெற்றிலைக்கும் வாக்கு போட ஆட்கள் இருக்கிறது தானே 

  • தொடங்கியவர்

த.தே.கூ பங்காளிக் கட்சிகளிடையே முறுகல்: ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்கிறார் சம்பந்தன்


த.தே.கூ பங்காளிக் கட்சிகளிடையே முறுகல்: ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்கிறார் சம்பந்தன்
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நீடிக்கின்றது.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் இன்று தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க முயற்சி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரண்டு பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

மக்களின் ஆணைக்கு புறம்பாக தமிழரசுக் கட்சி செயற்படுவதாகத் தெரிவித்து வௌியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட சில தரப்பினருடன் சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தமது கட்சியின் நிலைப்பாட்டில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சட்டத்தணி ஶ்ரீ காந்தா தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்திற்குச் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், சட்டத்தரணி ஶ்ரீ காந்தா, வீ. ஆனந்த சங்கரியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை மற்றுமொரு பங்காளிக் கட்சியான புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கூட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக அவர் பதிலளித்தார்.

ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் துவிச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அறிவித்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்திலும் இன்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

 

http://newsfirst.lk/tamil/2017/12/த-தே-கூ-பங்காளிக்-கட்சிகள/

22 hours ago, MEERA said:

நீங்கள் குறிப்பிட்ட மூவரும் கள்ள ஓட்டு மூலம் மட்டும் தெரிவானது என்பது சுத்த மடைமைத்தனம்.

கடந்த தேர்தலில் சம்பந்தர் பெற்ற வாக்குகள் 33,834.

1977 ற்கு பிறகு தேர்தலில் தெரிவானது 2001. 2001 இல் தெரிவானதற்கான காரணம் உலகறிந்தது.

இன்று சம்பந்தருக்கு பின்னால் நிற்பது (பெரும்பாண்மை) யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள்.

திருகோணமலை மக்களை கறை படிந்தவர்கள் என்று குற்றம் சாட்ட யாழ் மக்களுக்கு அருகதை இல்லை.

சுமந்திரன் - 58,043

மாவை - 58,782

சரவணபவன் - 43,289

இதை கள்ள ஓட்டுக்கள் என்பது சுத்த முட்டாள்தனம்.

அதாவது 2008, 2009இல் சொறிலங்கா அரசினால் தமிழர் யாருமே இல்லை என்று சொல்லவருகிறீர்கள். அதாவது  zero casuality.

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயல்வதே முட்டாள்தனமானது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

அதாவது 2008, 2009இல் சொறிலங்கா அரசினால் தமிழர் யாருமே இல்லை என்று சொல்லவருகிறீர்கள். அதாவது  zero casuality.

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயல்வதே முட்டாள்தனமானது.

உங்களுடன் விவாதம் செய்வது வீண் விரயம்.

முதலில் சம்ற்கு முட்டுக்கட்டை கொடுக்கும் யாழ்ப்பாணிகள் திருந்துங்கள்,பின்னர் திருமலை மக்களை திருத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது.... சிங்களத்திற்கு கிடைத்த வெற்றி.

தமது.... அரசியல் தலைமை, எது என்று.... இன்னும் இனம் காணாத இனம்,

35 வருடம்...  ஊன், உறக்கமின்றி போராடியும்,
திருந்தாத.... தமிழ் மக்கள், மிகவும் பாவப்  பட்ட  இனங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.