Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை

Featured Replies

அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை

 

Admiral Kawano Katsutoshiஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சீனக் கடற்படை தளது நடவடிக்கைகளை உறுதியாக விரிவுபடுத்தி வருகிறது.

இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது.  பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவின் முதலீட்டுடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் டிஜிபோட்டியில்,  சீனாவின் முதலாவது கடல் கடந்த கடற்படைத் தளம் திறக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அம்பாந்தோட்டை துறைமுகம், 99 ஆண்டு குத்தகைக்காக சீனாவுக்கு கடந்த டிசெம்பரில் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிபோட்டியில் உள்ள சீன கடற்படைத் தளம் இந்தியப் பெருங்கடலில், அந்த நாட்டின் கடல் நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாகவே உதவியாக இருக்கும்.

மெடிட்ரேரியன் கடலைச் சுற்றிய பகுதிக்கு இலகுவாகச் சென்றடையும் வகையில், சீன கடற்படை தனது செயற்பாடுகளை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு வர்த்தக கட்டுமானமே என்று சிறிலங்காவும், சீனாவும் கூறுகின்றன.

ஆனால், 99 ஆண்டு குத்தகை என்பது சீனாவின் இராணுவ முன்னெடுப்புக்கான காத்திரமான நகர்வாகவே மாற்றியுள்ளது.

சீனா தனது கடல் கடந்த இரண்டாவது தளத்தை தெற்காசியாவில் அம்பாந்தோட்டையில் கட்டியெழுப்பினால், சீன கடற்படையின் ஆற்றல்கள் புதிய மட்டங்களுக்கு அதிகரிக்கக் கூடும்.

இத்தகைய விநியோக வசதிகளை பயன்படுத்தினால், சீனக் கடற்படைக் கப்பல்கள்  தமது நாட்டுக்குத் திரும்பாமல் நீண்ட காலத்துக்கு இந்தியப் பெருங்கடலில் தங்கியிருக்க முடியும்.

சீனா தனது அணுசக்தி நீர்மூழ்கிகள் மற்றும் கடற்படைக் கப்பல்களை அண்மைய ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் தொடர்ச்சியாக நிறுத்தி வருகிறது.

எமது முக்கியமான கப்பல் பாதைகள் இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக்கடல் வழியாகவே இருக்கின்றன.

இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் ஜப்பான் இணைந்து பணியாற்றும்.

தற்போதுள்ளது போன்ற சீனாவின் இராணுவ செலவின விரிவாக்கம், தொடர்ந்தால், ஜப்பான் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். அந்தச் சூழலைக் கணிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/01/20/news/28572

  • தொடங்கியவர்

சீனாவின் கடற்­படை மூலோ­பா­யத்­துக்கு உதவும் வகையில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கமும் அமை­யலாம்

 

லியோ நிரோஷ தர்ஷன் 

இந்­திய - ஜப்பானிய பாது­காப்பு தரப்­புகள் எச்­ச­ரிக்கை
 

சீனாவின் கடற்­படை விரி­வாக்க மூலோ­பா­யத்­துக்கு உதவும் வகையில் பாகிஸ்­தானின் குவடார் துறை­முகம் செயற்­ப­டு­வது போன்று குறு­கிய காலத்­துக்குள் இலங்­கையின் தென் கட­லூ­டான அம்­பாந்­தோட்டை சீன துறை­மு­கமும் அமையும். தெற்­கா­சி­யாவில் சீன கடற்­ப­டையின் ஆற்­றல்கள் உயர் மட்­டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இலங்கை வாய்ப்­ப­ளித்­துள்­ளது என இந்­திய மற்றும் ஜப்பான் பாது­காப்பு தரப்­புகள் எச்­ச­ரித்­துள்­ளன.  

இந்த நிலை­மை­யா­னது இந்­தி­யாவைச் சுற்றி கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வதும் சீனக் கடற்­படைக் கப்­பல்கள் நீண்ட காலத்­துக்கு இந்­தியப் பெருங்­க­டலில் பாது­காப்­பாக தங்­கி­யி­ருக்கும் வகை­யி­லு­மா­கவே பிராந்­தி­யத்தில் சீனாவின் கடற்­படை விரி­வாக்­கத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

தெற்­கா­சிய நாடு­க­ளு­ட­னான சீனாவின் நெருக்­க­மான போக்கு இந்­தி­யா­வுக்கு அச்­சு­றுத்­த­லா­கி­யுள்­ளது. சீனா வலி­மை­யான நாடாக இருக்­கலாம். அதே வேளையில் இந்­தியா பல­வீ­ன­மான நாடு இல்லை என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்­திய எல்­லையை ஆக்­கி­ர­மிக்க சீனா கடும் முயற்சி மேற்­கொண்­டுள்­ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறி­ய­டிக்­கப்­படும். சீனாவை எதிர்­கொள்ளும் திறன் இந்­தி­யா­வுக்கு முழு­மை­யாக இருக்­கி­றது என இந்­திய இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பிபின் ராவத் ஊட­கங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போது தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே ,இலங்கை உள்­ளிட்ட அயல்­நா­டு­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்கும் கொள்­கையை இந்­திய அர­சாங்கம் காத்­தி­ர­மா­கவும் அவ­ச­ர­மா­கவும் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் கடற்­படை நட­வ­டிக்­கைகள் விரி­வ­டைந்து வரு­வது குறித்து ஜப்­பா­னிய கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி அட்­மிரல் கட்­சு­ரோஷி கவா­னோவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

புது­டெல்­லியில் நேற்று முன்­தினம் செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில் சீனக் கடற்­படை தெற்­கா­சி­யாவில் தனது நட­வ­டிக்­கை­களை உறு­தி­யாக விரி­வு­ப­டுத்தி வரு­வ­தாகக் குறிப்­பிட்டார்.

இந்­தி­யாவைச் சுற்றி கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்­காக சீனா தனது நிதியை முத­லீடு செய்து வரு­கின்­றது. பிராந்­தி­யத்தில் இரா­ணுவத் தளங்­களின் வலை­ய­மைப்பை சீனா உறு­தி­யாக விரி­வு­ப­டுத்தி வரு­கின்­றது. சீனாவின் கடற்­படை விரி­வாக்க மூலோ­பா­யத்­துக்கு உதவும் கட்­ட­மைப்­பு­க­ளுக்குள் பாகிஸ்­தானின் குவடார் துறை­முகம் காணப்­ப­டு­கின்­றது. இங்கு சீனாவின் முத­லீட்­டுடன் அனைத்து நட­வ­டிக்­கை­களும் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன .அதே போன்று டிஜி­போட்­டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் முத­லா­வது கடற்­படைத் தளம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

இவை நீண்ட காலத்­திற்­கான நட­வ­டிக்­கை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் இலங்­கையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் 99 ஆண்டு கால குத்­த­கைக்­காக சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முகம் ஒரு வர்த்­தக கட்­டு­மானம் மாத்­தி­ரமே என இலங்கை மற்றும் சீனா கூறு­கின்­றன. ஆனால், 99 ஆண்டு குத்­தகை என்­பது சீனாவின் இரா­ணுவ முன்­னெ­டுப்­புக்­கான காத்­தி­ர­மான நகர்­வா­கவே மாற்­றி­யுள்­ளது.

டிஜி­போட்­டியில் உள்ள சீன கடற்­படைத் தளம் இந்­தியப் பெருங்­க­டலில்,அந்த நாட்டின் கடல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கவே உத­வி­யாக இருக்கும். இதே போன்­ற­தொரு சூழல் இலங்­கையின் தென் கடற்­ப­ரப்­பிலும் எதிர்­கா­லத்தில் ஏற்­படும் என இந்­தியா மற்றும் ஜப்பான் பாது­காப்பு தரப்­புகள் எச்­ச­ரித்­துள்­ளன.

சீனா தனது கடல் கடந்த இரண்­டா­வது தளத்தை தெற்­கா­சி­யாவில் அம்­பாந்­தோட்­டையில் கட்­டி­யெ­ழுப்­பினால் சீனக் கடற்­ப­டையின் ஆற்­றல்கள் புதிய மட்­டங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்­படும். இவ்­வா­றா­ன­தொரு விநி­யோக வச­தி­களை பயன்­ப­டுத்­தினால் சீனக் கடற்­படைக் கப்­பல்கள் தமது நாட்­டுக்குத் திரும்­பாமல் நீண்ட காலத்­துக்கு இந்­தியப் பெருங்­க­டலில் பாது­காப்­பாக தங்­கி­யி­ருக்க முடியும்.

சீனா தனது நீர்­மூழ்­கிகள் மற்றும் கடற்­படைக் கப்­பல்­களை அண்­மைய கால­மாக இந்­தியப் பெருங்கடலில் தொடர்ச்சியாக நிறுத்தி வருகிறது. ஜப்பானின் முக்கியமான கப்பல் பாதைகள் இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக்கடல் வழியாகவே இருக்கின்றன. எனவே இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஜப்பான் இணைந்து பணியாற்றும் எனவும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-01-21#page-1

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2018 at 5:10 AM, நவீனன் said:

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர் எச்சரிக்கை விடுவதால் சீனா தான் நினைத்ததை நடத்தாமல் விடப்போவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

இவர் எச்சரிக்கை விடுவதால் சீனா தான் நினைத்ததை நடத்தாமல் விடப்போவதில்லை .

ஜப்பானுக்கு பக்கத்தில் ஒரு தீவை சீனா கட்டினாலும் கட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

Nuked Stockholm syndrome ஆல் கட்டுண்ட பலியாளும், எசமானனும் இது வரை செய்யாததையா சீனா செய்கிறது?

சீனாவது சுற்றி உங்கள் எஜமானன் ( அமெரிக்கா) வைத்திருக்கும் ராணுவ, கடட்படை தளங்கள் எத்தனை?

டிஜிபோட்டியில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் என்பவற்றின் படைத்தளங்கள் சீனாவின் படைத்தளத்துக்கு மிகவும் முன்பாகவே அமைக்கப்பட்டு விட்டது.

அது சரி நீங்கள் எல்லோரும் (ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், UK) எல்லோரும் வாரவாரம் டிஜிபோட்டியில் இருந்து சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும், சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து  டிஜிபோட்டி வரைக்கும் கடற்படை சண்டைக் குழுவாக (Armada Battle  Group) ஏன் தேவையில்லாத ரோந்தை செய்கிறீர்கள்?

சீனாவின் பொருளாதார வழங்கல் பாதையில் ஓர் ஊடுருவல் பதற்றத்தை ஏற்றப்படுத்துவதத்திற்குத்தானே?

நீங்கள் எல்லோரும் (அமெரிக்கா,  ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், UK) இவ்வளவு நாளும் பச்சைத்தண்ணியில் சிறிய நாடுகளின் தலையில் மிளகாய் அரைத்தீர்கள்.

சீன களத்தில் இறங்கியதும் அது உங்களால் முடியாமல் ஆகிவிட்டது. விளைவு, சிறிய நாடுகள் உங்களிடம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை அல்லது விரிவாக்களை  ரத்தமும் சதையுமாக விலையாக கேட்கின்றன. உங்களால் பொறுக்க முடியாடவுள்ளது.  

 சீனாவின் பொருளாதார கப்பல் பாதைகள் சூறையாடும் அமெரிக்காவின் carrier battle group களுக்குப் பார்வையின் கேலேயே உள்ளது. அப்படியான நிலையிலும் சீனா தனது பொருளாதாரத்தை உலகின் 2ஆம் படிநிலைக்கு உயர்த்தி அதனூடேயே தற்போதைய கடற்படை தள விரிவாக்கலை செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Nuked Stockholm syndrome ஆல் கட்டுண்ட பலியாளும், எசமானனும் இது வரை செய்யாததையா சீனா செய்கிறது?

சீனாவது சுற்றி உங்கள் எஜமானன் ( அமெரிக்கா) வைத்திருக்கும் ராணுவ, கடட்படை தளங்கள் எத்தனை?

டிஜிபோட்டியில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் என்பவற்றின் படைத்தளங்கள் சீனாவின் படைத்தளத்துக்கு மிகவும் முன்பாகவே அமைக்கப்பட்டு விட்டது.

அது சரி நீங்கள் எல்லோரும் (ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், UK) எல்லோரும் வாரவாரம் டிஜிபோட்டியில் இருந்து சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும், சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து  டிஜிபோட்டி வரைக்கும் கடற்படை சண்டைக் குழுவாக (Armada Battle  Group) ஏன் தேவையில்லாத ரோந்தை செய்கிறீர்கள்?

சீனாவின் பொருளாதார வழங்கல் பாதையில் ஓர் ஊடுருவல் பதற்றத்தை ஏற்றப்படுத்துவதத்திற்குத்தானே?

நீங்கள் எல்லோரும் (அமெரிக்கா,  ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், UK) இவ்வளவு நாளும் பச்சைத்தண்ணியில் சிறிய நாடுகளின் தலையில் மிளகாய் அரைத்தீர்கள்.

சீன களத்தில் இறங்கியதும் அது உங்களால் முடியாமல் ஆகிவிட்டது. விளைவு, சிறிய நாடுகள் உங்களிடம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை அல்லது விரிவாக்களை  ரத்தமும் சதையுமாக விலையாக கேட்கின்றன. உங்களால் பொறுக்க முடியாடவுள்ளது.  

 சீனாவின் பொருளாதார கப்பல் பாதைகள் சூறையாடும் அமெரிக்காவின் carrier battle group களுக்குப் பார்வையின் கேலேயே உள்ளது. அப்படியான நிலையிலும் சீனா தனது பொருளாதாரத்தை உலகின் 2ஆம் படிநிலைக்கு உயர்த்தி அதனூடேயே தற்போதைய கடற்படை தள விரிவாக்கலை செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.